தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“விடுதலை என்றால் பொறுப்பு, கடமைகள் என்பவை முன்வந்து தோன்றுகின்றன. அதனால்தான் பெரும்பான்மையான மனிதர் அதைக் கண்டு பயமடைகிறார்.”
மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :
வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா. ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா ! ஆயுத உற்பத்தியில் கோடிக் கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் ! போருக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள். ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள். ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை ! அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார். எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிடமிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார். நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.
மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter). சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள். அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்ஃபஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர். அடால்ஃபஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை, சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.
சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர் வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது. தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்கு மங்கும் மின்னல்போல் அடிக்கின்றன, பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார். ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
**********************
நாடக உறுப்பினர்:
1. மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft). ஆன்ரூவின் மூத்த மகள்.
2. ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.
3. மேடம் பிரிட்னி அண்டர்ஷாஃப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)
4. ஸ்டீ·பன் அண்டர்ஷாஃப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.
5. மிஸ். சாரா அண்டர்ஷாஃப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.
6. அடால்ஃபஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்
7. சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.
8. பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45
9. ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, வில்ல்யம் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.
மற்றும் பலர்.
************************
ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)
(இரண்டாம் அங்கம்)
அங்கம் -2 பாகம் – 3
இடம் : இங்கிலாந்து லண்டன் நகரம். வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)
நிகழும் ஆண்டு : ஜனவரி 1906
நேரம் : காலைப் பொழுது.
அரங்க அமைப்பு : ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி. புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது. கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன. முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார். மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன். வாயாடி மனிதன். பெண் நடுத்தர வயது மூதாட்டி. அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது. கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார். காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார். ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான். மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள். மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஸெர்லியும் நுழைகிறார். பீட்டருக்கு உணவு கொண்டு வருகிறாள் ஜென்னி. அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் [William Walker] சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் வேகமாய் நுழைகிறான்.
பிரைஸ்: ஜென்னி ! ஏழ்மைக் காப்பணி இல்லத்தின் தூண் போன்ற நீதான் மேஜர் பார்பராவின் வலது கை.
ஜென்னி: (பரிவோடு) பெருமைப் படுகிறேன் பிரைஸ் ! நீ பிரெட் சாப்பிட்டாயா ?
பிரைஸ்: ஆமாம் மேடம். பந்திக்கு முந்திக் கொள்வேன் ! ஆனால் படைக்குப் பிந்திக் கொள்வேன்.
(அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் ஆவேசமாய் நுழைகிறான். தோட்டத்தில் துணி காயப் போடும் ஜென்னியைக் கூர்ந்து நோக்குகிறான்.)
ஜென்னி: எனக்கு நிறைய வேலை இருக்கிறது. எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம்.
(இல்லத்துக்குள் நுழையத் திரும்பும் போது மூர்க்கன் வில்லியம் அவளுக்கு வழியை மறைக்கிறான்)
வில்லியம்: உன்னைத் தெரியும் எனக்கு. நீதான் என் ஆசை நாயகியை விரட்டி விட்டவள். அவளை எனக்கு எதிராய் மூட்டி விட்டுச் சண்டையிடச் செய்தவள். நான் அவளை விடப் போவதில்லை. நீ அவளை என்னிடம் கொண்டுவந்து சேர்த்திடு. இல்லாவிட்டால் உனக்கு உதை விழும் ! தெரிகிறதா ? (ஜென்னியைப் பிடித்துக் கீழே தள்ளுகிறான். பிரைஸ், ரம்மி இருவரும் ஓடி வந்து அவளைத் தூக்குகிறார்)
பிரைஸ்: உன் முரட்டுத்தனத்தை அவளிடம் காட்டாதே. அவள் உனக்கு எந்தத் தீங்கும் செய்ய வில்லை. (ஜென்னியின் பக்கத்தில் பாதுகாப்பாய் நிற்கிறான்)
வில்லியம்: நீ யார் அவளுக்கு ? மெய்க் காப்பாளியா ? தள்ளி நில்லடா ! அவளை விட்டு விலகிச் செல்லடா ! ஜென்னி மீது நீ ஒரு கண் வைத்துள்ளாயா ?
பிரைஸ்: எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கவனமாய்ப் பேசு ! கண்டபடிப் என்னிடம் பேசாதே !
ரம்மி: அடே முரட்டுப் பயலே ! உன் மிரட்டல் இங்கு செல்லாது ! போ வெளியே ! யார் உன்னை இங்கே அழைத்தது ?
வில்லியம்: (மூதாட்டி ரம்மியைக் கன்னத்தில் அறைகிறான். ஜென்னி ஓடிச் சென்று அவளை மறைத்துக் கொள்கிறாள்.) வாயை மூடு கிழவி !
ஜென்னி: கடவுள் உன்னை மன்னிப்பார். வயதான ஒரு மூதாட்டியை அடிக்க உனக்கு எப்படிக் கை நீண்டது ?
வில்லியம்: (ஜென்னி கூந்தலைப் பற்றி இழுத்துக் கொண்டு) உன்னைக் காப்பாற்ற நீ கடவுளைக் கூப்பிடு ! கடவுள் வருகிறாரா என்று நான் பார்க்கிறேன்.
ஜென்னி: (வில்லியம் கைப் பிடியில் மாட்டிக் கொண்டு) யாராவது ஓடிப் போய் மேஜர் பார்பராவை அழைத்து வாருங்கள். (பிரைஸ் இல்லத்தின் உள்ளே ஓடுகிறான்)
வில்லியம்: (ஜென்னியின் கூந்தலைப் பற்றிக் கொண்டு) நீ உன் மேஜர் ராணியிடம் என்னைப் பற்றிப் புகார் செய்யப் போகிறாயா ? என்ன சொல்லப் போகிறாய் ?
ஜென்னி: தயது செய்து என் கூந்தலை விட்டுவிடு ! நான் போகிறேன். விடுதியில் வேலை செய்ய வேண்டும், கடவுளே எனக்கு வலுவைக் கொடு !
வில்லியம்: என் காதலியை என்னிடம் அழைத்து வா ! நீ வேலை செய்யா விட்டால் சாவடியில் வேறு ஊழியர் இல்லையா ?
(தொடரும்)
***********************
தகவல் :
Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 11, 2011)
http://jayabarathan.wordpress.
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3
- தோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)
- கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)
- ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு
- நினைவுகளின் சுவட்டில் – (74)
- ஜென் ஒரு புரிதல் பகுதி 6
- தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்
- ஐ-போன் வியாதி
- வாக்குறுதியின் நகல்..
- நான்(?)
- ஒன்றாய் இலவாய்
- சிறு கவிதைகள்
- ஆதி
- பாசாவின் உறுபங்கம்
- எங்கோ தொலைந்த அவள் . ..
- சொல்வலை வேட்டுவன்
- குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி
- அறப்போராட்டமாம் !
- பூனையின் தோரணை
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- நானும் ஸஃபிய்யாவும்
- காற்றும் நிலவும்
- பொம்மை ஒன்று பாடமறுத்தது
- ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.
- வெறுமை
- எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)
- சகிப்பு
- கூடு
- மறைபொருள் கண்டுணர்வாய்.
- காலம்
- பிரசவ அறை
- தொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்
- பேசும் படங்கள்
- மகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு
- கலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்
- புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்
- பழமொழிகளில் வரவும் செலவும்
- சொல்
- பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2
- இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 44