வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6

This entry is part 14 of 40 in the series 1 ஏப்ரல் 2012

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்  -6

சீதாலட்சுமி

 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனென்றோ ஆன்ற ஒழுக்கு

 

சீதாவுக்கு இரண்டு வயது .அம்மாவிடம் தன் அப்பாவைப் பற்றி விசாரிக்கின்றாள் .அவர் ஜெயிலுக்குப் போயிருப்பதாகக் கூறுகின்றாள் அவள் அம்மா சுப்புலட்சுமி. குழந்தைப் பதறிப்போய் அப்பா திருடினாரா என்று கேட்கின்றாள். இப்பொழுது அம்மா அவளுக்கு விளக்க வேண்டும். சீதாவின் கையில் ஓர் பொம்மை. அதனைச் சட்டென்று அம்மா பிடுங்கவும் உடனே குழந்தை அழுகின்றாள். .

உன் பொம்மையைப் பிடுங்கினதுக்கு உனக்கு அழுகை வர்ரதே. நம்ம ஊரை ஒருத்தன் பிடுங்கிண்டு உக்காந்திருக்கான். அவன் கிட்டே சண்டைப போடப் போறவாளை ஜெயில்லே பிடிச்சு போடறா,

உடனே குழந்தை சீதாவின் பதில் என்ன தெரியுமா ?

அம்மா நாமும் போகலாம். அவன் எப்படி நம்மளோடதைப் பிடுங்கலாம்? நாமும் ஜெயிலுக்குப் போகலாம்மா

காக்கா கதை கேட்டு வளரவில்லை. பிஞ்சுப் பருவத்திலேயே நாட்டுக் கதைகள் கேட்டு வளர்ந்தவள். இதனை அவள் தாயார் அவளிடம் பல முறை கூறியிருக்கின்றார்கள்..

அதுமட்டுமா ? வைத்தியநாத அய்யர் தலைமையில் ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசம். அப்பொழுது நடந்த ஓர் சம்பவம்.

அந்த வீட்டுக்கார மாமி அங்கே வந்து மிளகாய்ப் பொடி கேட்டார்கள். எதற்குத் தெரியுமா? கோயில் உள்ளே நுழைகின்றவர்கள் கண்ணில் தூவ மிளகாய்ப் பொடி. அந்த மாமி போகவிட்டு குழந்தை அவள் அம்மாவிடம் கேட்டது “சாதின்னா என்ன?” அத்துடன் முடியவில்லை. தாயும் மகளும் கோயிலுக்குக் கிளம்பினார்கள். மீனாட்சி கோயிலுக்குச் செல்ல வில்லை. ஹரி ஜனங்கள் நுழைந்து விட்டதால் மீனாட்சி கோயிலை விட்டுப் வெளியில் வந்து விட்டதாகக் கூறி அவளுக்காக ஓர் ஓலைப் பந்தல் அமைத்து அம்பாளை அங்கு வழிபட வைத்தவர். நடேச அய்யர்.

கோயிலுக்குள் அழைத்துச் சென்றவன் பிராமணன். சாதி பேசி தனிக் கோயிலை அமைத்தவனும் பிராமணன். வரலாற்றை வாய்மையுடன் பார்க்க வேண்டும்.

குழந்தை சீதா அவள் அம்மாவிடம் கேட்டது

“உம்மாச்சிதானே எல்லாரையும் படைச்சா. அப்புறம் அவளுக்கு ஏன் கோபம். எப்படி கோபம் வரும். “சாதி ரொம்ப கெட்டது”.

அடுத்தும் ஓர் சம்பவம் நடந்தது. ஜெயிலிருந்து அவள் அப்பா வந்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அப்பாவைப் பார்க்கின்றாள். ஆசையுடன் அப்பா மடியில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கின்றாள். . அப்பொழுது வீட்டுக்கார மாமி வந்து அவள் அப்பாவை வீட்டை விட்டு வெளியில் போகச் சொல்கின்றள். காரணம் மற்ற ஜாதியினர் சமைத்த சாப்பாட்டை அவர் சாப்பிட்டு விட்டாராம். அது ஆசாரமான வீடாம். அவர் அங்கே இருக்கக் கூடாதாம். அப்பொழுது அவள் அம்மாவின் வயது 22 ஐந்து ஆண்டுகளுக்குப் பின் வந்த கணவனுடன் ஒரு நாள் கூட ஒன்றாக இருக்க முடியாமல் தடுத்தது சாதியும் ஆச்சாரமும்.

குழந்தை சீதாவின் மனத்தில் முதலில் வேருன்றியது இந்த சாதிக் கொடுமை.

எப்பொழுதாவது அடிபட்ட காயங்களின் வலிகளில் இயக்கங்கள் தோன்றியதும் வரலாற்றின் வரலாறு.

குடும்பம் எட்டயபுரம் பெயர்ந்தது. அரண்மனைக்குப் பக்கம் வீடு. ராஜாஜி, கல்கி, காமராஜ் என்று எத்தனை பெரிய மனிதர்களை அவளால் பார்க்க முடிந்தது. அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை அவள் அப்பாவிற்கு கொடுத்திருந்தார் ராஜா. அவள் அப்பா ஒரு காங்கிரஸ்காரரும் கூட. . அவள் குடியிருந்த வீட்டுக்கருகில் உள்ள கோயிலில் ராஜாஜி, எட்டயபுர மன்னருடன் ஆலயப் பிரவேசம் செய்த பொழுது குழந்தையும் அவர்களுடன் சென்றாள். இன்னும் நாடு விடுதலை அடையவில்லை. பாரதி பாடிய பாடல்களை அவளுக்குப் பாடச் சொல்லிக் கொடுத்தது பாரதியின் தாய்மாமன் சாம்பவசிவ அய்யர். பாரதி அப்பொழுது உயிருடன் இல்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி அவள் வீடு இருந்தது. கல்கியைப் பார்த்த முதல் அவள் அப்பா பல வார இதழ்கள் , மாத இதழ்கள், செய்திதாள்கள் வாங்கிப் போட்டார். சிறு வயதிலேயே சீதா பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்துவிட்டாள். படித்தது மட்டுமல்ல. பிள்ளைப் பிராயத்திலேயே எழுத ஆரம்பித்தாள். அவைகளுக்கு ஓவியம் தீட்டியவளும் அவளே.

அவள் அப்பா அரண்மனை வேலையை விட்டுச் சொந்தமாக ஓர் ஹோட்டல் வைத்தார். குடும்பமும் அதற்கு அடுத்து இருந்த வீட்டிற்குக் குடி பெயர்ந்தது. அங்கும் குறைந்த காலமே இருந்தவர்கள் சினிமா தியேட்டரை ஒட்டி இருந்த இடத்தில் ஹோட்டல் வைத்தார். பக்கத்தில் தியேட்டர். எதிரே ஓர் குளம் அதையொட்டி பள்ளிக்கூடம். அதில்தான் அவள் படித்தாள்.

அங்கும் ஓர் பாரதியார் இருந்தார். அவர் பெயர் கே.பி. எஸ் நாரயணன்.  அவர் ஓர் ஆசிரியர். அவர்தான் மாணவ மாணவிகள் இரத்தத்தில் பாரதியைக் கலந்தவர். மேடைப் பேச்சுக்குப் பயிற்சி அளித்தவர். மாணவ மாணவிகளை மேடை ஏற்றுவார். பின்னர்தான் தலைப்பு கொடுப்பார். இவர்கள் பேச வேண்டும். மாணவனை பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என பேசச் சொல்வார். மாணவிகளை சம உரிமை வேண்டாம் என்று பேசச் சொல்வார். சிந்தனைக்கு அவ்வளவு வேலை கொடுத்தவர். அவர் பயிற்சியில் தேர்ந்து முதலில் வந்தவர்களில் முத்து கிருஷ்ணனும் சீதாவும். முத்து கிருஷ்ணன் தினமலர் அலுவலகத்திற்கு வேலைக்குப் போனதாகக் கேள்வி. சீதா கிராமப் பணிக்குப் போய்ச் சேர்ந்தாள். பள்ளி மாணவியாக இருக்கும் பொழுதே காந்திஜியின் சத்திய சோதனையும் காரல்மார்க்ஸின் சிந்தனைகளையும் படிக்கச் சொன்னவர் அவள் அப்பா. சங்கீதம் கற்றாள். மகளைச் சுதந்திரமாக வளர்த்தவர் அவள் அப்பா.

அந்த சீதாதான் நான். சஷ்டி விரதம் இருந்து சங்குப் பால் குடித்து முருகனை வேண்டியதற்கு அவன் போட்ட பிச்சை நான். இதனை என் அம்மா சொன்ன நாள் முதல் என் இதய சிம்மாசனத்தில் ஒய்யாரமாக முருகன் உட்கார்ந்துவிட்டார். அறிஞர் அண்ணாவின் புத்தகங்கள்,தந்தை பெரியாரின் சிந்தனைகள் படிக்கவும் நாத்திகமும் நுழைந்தது.

அது எப்படி? முருகனைக் கும்பிடுவேன் புராணங்களைக் குறை சொல்வேன். இப்படி ஓர் இரட்டை நிலையும் ஆனேன்.

என்னுடைய இன்னொரு பக்கமும் பார்க்கலாம்.

நினைத்துப் பார்க்கும் பொழுது நெருடும் சில காட்சிகள்

வரலாறு பற்றி இப்படி விரிவாக எழுத வேண்டுமா என்று தோன்றலாம். வரலாற்றுப் புத்தகத்தில் படிப்பதைவிட வாழ்க்கைச் சரித்திரத்தில் வரும் பொழுது  செய்திகளின் உயிர்நாடிகளை உணரமுடியும். பல நிகழ்வுகளின் வேர்களின் காலம் புரியும். வாழ்வியலில் பல இயல்புகள் தொடர்கதை

நான் புரண்டு உருண்டு விளையாடிய கரிசல் மண்ணின் கதையைப் பார்க்கலாம்.

அந்த ஊர் ஓர் மன்னருக்காக உண்டாக்கப்பட்ட ஊர். மல்லனை வென்றதற்கும் சிலரைத் தன் பிள்ளைகளா ஏற்றுக் கொண்டதற்கும் கிடைத்த சிறப்புப் பட்டம் எட்டப்பன். அந்த சிறப்புப் பெயரில் அவர் நினைவாக அந்த ஊருக்கு எட்டயபுரம் என்று பெயர் வந்தது. எத்தனை புலவர்கள் ! எத்தனை கலைஞர்கள் ! தமிழ் கொஞ்சி விளையாடியது. இசை தாலாட்டியது. புதுமைப் பெண்ணைப் படைத்து பாடல்களாக்க் குவித்த பாரதியின் ஊர். அங்கே பெண்ணின் நிலை இருந்தவித மென்ன? அந்தக் காலத்தில் அரண்மனை மனிதர்களில் சிலருக்கு விளையாட்டிற்குப் பொம்மைகள் வேண்டாம். அரண்மனையைச் சுற்றி சில தெருக்கள்தான் ஊர். அங்கே வசிக்கும் சில பெண்கள் விளையாட்டு பொம்மைகளாக மாறவேண்டிய நிலை வரும். விளையாட்டிற்கு ஊதியம் உண்டு. வீடும் கொஞ்சம் சொத்தும் கிடைக்கும். அந்த வீட்டார் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரண்மனைக் குழந்தை அவர்கள் வீட்டில் வளர்கின்றது என்ற திருப்தி போதும் . அந்த ஊரில் மட்டுமா இந்த நிலை ?

தமிழ் அமுதினும் சுவையானது.

இலக்கியமோ என்றும் நிலைத்துவாழும் தன்மை கொண்டது.

இந்தப் போர்வைகளுக்குள் நுழைந்து கொண்டு நாம் பெருமை கொள்கின்றோம்.

பிறன்மனை நோக்கார் பற்றி நமக்கு வாழ்வியலில் கூறப் பட்டுள்ளது. ஆனால் வீரம் பேசி பிற நாடுகளுக்குப் போருக்குச் சென்ற பொழுது பொன்னும் பொருளும் மட்டும் கொண்டு வரவில்லையே? அங்கிருந்த பெண்களையும் அள்ளிக் கொணர்ந்து மாட்டைக் கொட்டிலில் அடைப்பது போல் அடைத்து, பிறன் மனையாளாயிருப்பினும் இன்பம் அனுபவித்தது வரலாற்று உண்மை. அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு என்ன உரிமை கொடுக்கப்பட்டது? ஒரு தகப்பனுக்குப் பிறந்த இருவரில் ஒருவன் ஆட்சியில் இருப்பான், இன்னொருவன் அவனுக்குக் குற்றேவல் செய்பவனாக இருப்பான். இவன்தான் என் தந்தை என்று சொல்லக் கூட அவனுக்கு உரிமையில்லை. வீரத்தில் விளைந்த வேளங்கள் பெண்ணினத்திற்கு அவமானச் சிறை.

மாமன்னர் இராஜ ராஜனுக்கு 14 மனைவியர்கள் ! அவர் மகன் இராஜேந்திரனுக்கு 17 மனைவியர்கள். மன்னர்கள் தேடிப் பிடித்து மணக்கவில்லை. சிற்றரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள பெண்களை மன்னருக்கு மணமுடித்து வைத்தனர். இத்தனை பெண்களை மணக்கும் ஓர் ஆடவனால் எந்த அளவு பெண்ணுக்குத் திருப்தியான வாழ்க்கை தர முடியும்?

பெண்களை யாரும் கேட்கவில்லை. மனிதர்களுக்கு வேண்டியது கவுரவம். அதிகார வாழ்க்கைக்கு அவர்கள் கொடுத்த விலைபொருட்கள் பெண்கள் ! பெண் உணர்வுக்கு மதிப்பில்லாத மண உறவுகள்.

மன்னர் ஆட்சியிலும் வாழ்ந்தவள் நான். அரண்மனைப் பெண்டிர் அந்தப்புரத்தை விட்டு வெளி வரமாட்டார்கள். கோயில்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் மூடு பல்லக்குகளில் திரைகள் மூடியிருக்க பவனி. எங்கள் ராஜாவுக்கு இரு மனைவிகள் இருந்தனர். அவர்கள் ஒரே அரண்மனையில் இருந்தனர். மூத்த ராணிக்குக் குழந்தை இல்லை. இரண்டாம் தேவிக்குக் குழந்தைகள் உண்டு. எங்கள் ராஜா இன்னொரு பெண்ணை மணந்துகொண்டு அவரைச் சிங்காரத்தோப்பு அரண்மனையில் வைத்தார். அந்த அம்மையாருக்கு உதவிக்கு வந்த ஓர் பெண்ணையும் மணந்தார். அவரைத் திருநெல்வேலி அரண்மனையில் வைத்தார். பெண்கள் எல்லோரும் மிக நல்லவர்கள். இந்தக் காலத்தில் கூட தங்கள் கணவனைக் குறை கூறாதவர்கள்.. அந்த காலத்தில் கண்ணகி எப்படி பேசி இருப்பாள் ? பெற்றோரும் தன்னைப் பெற்றவர்களும் செல்வம் மிக்க வராயினும் அவர்கள் உதவியை நாடவில்லை. எத்தனை வருடங்கள் கண்ணகி தன் கணவரைப் பிரிந்திருந்தாள் ? தெய்வத்திடம் கூடப் புலம்பவில்லை. பத்தினிக்கு இலக்கணம், பெண் வாய் திறக்கக் கூடாது.

சங்க இலக்கியத்தில் பெண் புலவர்கள் இருந்திருப்பதைக் காண்கிறோம். அரசியலில் தூது சென்ற ஒளவைப் பிராட்டியையும் அறிவோம். அக்காலத்தில் பெண் கல்வி இருந்தற்குச் சான்றாக இவர்களைச் சுட்டிக் காட்டிப் பேசுகின்றோம். இதன் விகிதாச்சாரம் என்ன? ஒற்றை இலக்கம். பேசுவதில் கூட தோழிக்கு இருந்த சலுகை தலைவிக்கு இல்லை. நான் எதையும் குறையென்று சொல்ல வேண்டுமென்பதற்காக இவைகளை எழுதவில்லை. இதுதான் நம் சமுதாயம். தாய்வழிச் சமுதாயமும் சில இடங்களில் இருந்திருக்கின்றன. இருப்பினும் உடல் வலிமை கொண்டு ஆண் முன் சென்றுவிட்டான்.

வேட்டையாடிப் பிழைத்த மனிதன் விவசாயத் தொழிலில் இறங்கவும். நிலையான வீட்டை நினைத்தான். தான் ஈட்டும் பொருளைக் கொடுக்க தன் வாரிசை நினைத்தான். பிள்ளை பெறுபவளை வீட்டிற்குள் வைத்தான். அக்காலத்தில் பெண் வெளியில் தனித்து இயங்க முடியாது

காந்திஜி சொன்னதை நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது.

ஓர் பெண் நள்ளிரவில் தனியாக நடந்து சென்று எவ்விதமும் பாதிக்கப் படாமல் வருகின்றாளோ அன்று தான் நாடு சுதந்திரம் அடைந்தது என்று கூறலாம்.

இதனைப் பார்த்தால் உலகில் எந்த நாடும் சுதந்திரம் அடைய வில்லை யென்றே கூற வேண்டும். இக்காலத்திலேயே இந்த நிலையென்றால் அக்காலத்தில் பெண்ணின் நிலை பற்றிக் கூற என்ன இருக்கின்றது? முதலில் பிள்ளைக்கு என்று பெண்ணை அடிமைப் படுத்தினாலும், குடும்பம் என்ற கூட்டிலே அன்பும் அரவணைப்பும் உணரவும் பெண்ணை வெளியில் விட மனமில்லை. அன்பின் காரணமாக அடக்குமுறை அதிகமாகியது. ஆணாதிக்கம்  என்பதைவிட அப்பொழுது குடும்பப் பாதுகாப்பிற்கு அவன் எடுத்துக் கொண்ட உரிமை. பெண்ணிற்கும் அது பாதுகாப்பாக இருந்ததால் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தாள். ஆனால் அதுவே தொடர்ந்து வரும் பொழுது மாற்றங்கள் தோன்றிய காலத்திலும் இந்நிலை நீடித்ததால் பெண் சீறி எழ ஆரம்பித்தாள். இது வாழ்வியல் வரலாற்றின் சுழற்சியே

அக்காலத்தில் ஆண்மகன் தொழிலுக்காக வெளியே செல்ல வேண்டும். போருக்காகவும் செல்ல வேண்டும். வீடு திரும்ப மாதங்கள், வருடங்கள் ஆகலாம். வயிற்றுப் பசிபோல் உடல் பசியும் இயற்கையே எனவே அவன் தனக்குச் சில சலுகைகளை வைத்துக் கொண்டான். பிற பெண்களிடம் தன் வேட்கையைத் தீர்த்துக் கொண்டான். கால மாற்றத்தில் தன்னை மாற்றிக் கொள்ளாத பல ஆண்களால்தான் பிரச்சனைகள்.  ஒட்டு மொத்தச் சாடலும் ஏமாற்றத்தின் வெளிப்பாடே.

வாழ்வியலைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் எளிது. ஆனால் அனுபவம் என்று வரும் பொழுது மனம் படுத்தும் பாட்டிற்கு யாரும் விதி விலக்கல்ல.

என்னுடைய காலத்திலேயே நான் கண்ட சில காட்சிகள். காதுகளில் வைரக் கடுக்கன், கைகளில் மோதிரம். சரிகை அங்கவஸ்திரம், மல்லுவேட்டி. இவைகளுடன் பணக்கார மைனர் வில்வண்டியில் சின்ன வீட்டிற்குச் செல்வது அவனுக்கு பெருமை.  நாடியில் விரல் வைத்து வேடிக்கை பார்ப்பார்கள் மக்கள். கொத்தமங்கல சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் கதை கற்பனை யென்று கூறிவிட முடியாது. அன்று நடந்தவைகளின் நகல்தான் அந்தக் கதை.

இலக்கியமே வாழ்க்கையின் கண்ணாடிதானே.

மன்னர் ஆட்சி முடிந்தது. காலம் மாறியது. வாழ்வு முறையும் மாறியது.

எட்டயபுரத்து அரண்மனை பிள்ளைகளில் மூத்தவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. துறவியாக வாழ்கின்றார். மற்ற பிள்ளைகளும் இல்லற வாழ்வில் கட்டுப்பாடுடன் வாழ்கின்றனர். முன்பு  பேரரசுகளும் சிற்றரசுகளும் கவுரவப் போட்டியில் எடுத்துக் கொண்ட சலுகையை சமுதாயமும் மவுனமாக ஏற்றுக் கொண்டி ருந்தது. மன்னர் வாழ்க்கையிலிருந்து உழைக்கும் கூட்டம் வரை வாழ்வியல் சில நடைமுறைகளில் இயங்கி வந்தன. இதுதான் வரலாறு. காலம் மாறவும் அரண்மனை வாழ்க்கை யும் மாறியது. காலத்திற்கேற்ப மக்கள் வாழ்க்கையிலும் மாறுதல்கள் !

இப்பொழுது என்னைப்பற்றி கூற வேண்டும்.

ஒரு மனிதனின் குணம் எப்படி அமைகின்றது? கரு உருவனது முதல் ஆரம்பமாகி விடுகின்றது. பெற்றோரின் அணுக்களின் தாக்கம், குழந்தைப் பருவத்தில் ஆறுவயது வரை அவர்கள் வளர்க்கப்படும் விதம். குழந்தைகள் விளையாட்டுகள் மூலம்கூட பல கற்றுக் கொள்ளும் , பின்னர் சூழல் அதாவது வீட்டுக்கு வெளியே, பள்ளிவாழ்க்கை முதல் வெளியில் பழகும் மனிதர்கள், ஊடகத் தாக்கங்கள் இப்படி பலவற்றால் உருவாக்கப் படுகின்றான்…

இந்த சமுதாயத்தைக் கோபத்துடன் பார்க்க வைத்த கசப்பான சம்பவங்கள் தொடர்ந்தது. வீதிகளில் மனைவியை எட்டி மிதித்து அடித்ததை கண்டிருக்கின்றேன். வெளியில் சுற்று வதும் இல்லாமல் கட்டிய மனைவியை வெளித் தள்ளிப் பிற பெண்ணுடன் அதே வீட்டில் உல்லாசம் புரியும் வீடுகளைப் பார்த்திருக்கின்றேன். வகுப்புத் தோழியைக் காணச் சென்ற பொழுது தாயும் மகளும் அழுது கொண்டு வாசலில் உட்கார்ந்திருப்பார்கள். அதே வீட்டுக்குள் வேறு ஒரு பெண்ணுடன் கொஞ்சிவிளையாடிக் கொண்டிருப்பான் அந்த வீட்டுக்காரன்.

சிந்தனை செய்து சீர்தூக்கிப் பார்க்கும் வயதல்ல. என் மனத்தில் அன்று ஆழப் பதிந்தது. ஆண்கள் கொடூரமான வர்கள் பெண்களை அடிப்பார்கள். பொல்லாதவர்கள் என்பதே. சாதிப் பிரிவினையும் ஆணாதிக்கமும் என் நெஞ்சத்தில் ஆறாத தணலாய்த் தங்கிவிட்டது. பல குணங்களின் மொத்த வடிவாய் ஆனேன். (multiple personility)

இந்த எண்ண்ணங்களுடன்தான் என் பணிக்காலம் தொடங்கி யது. பின்னர் அனுபவங்கள் மூலம் தான் இந்த சமுதாயத்தின் பல கோணங்களை உணர முடிந்தது. இதனை எழுதுவதற்குக் காரணம் என்னிடம் இருந்த முரட்டுக் குணத்திற்கும் கோபத்திற்கும் மூல காரணங்களாகும். அல்லது ஏதோ மிகைப்படுத்தி கதை எழுதுகின்றார்கள் என்று தோன்றிவிடும். எனது பணியில் எனக்குக் கிடைத்த பெயர் கத்தற ஆபீஸர். ஆம் என்னால் அந்தக் குறையை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அடுத்து தவறு செய்யும் ஆண்களைக் கண்டால் அடித்துவிடுவேன். இந்தக் குறையை மாற்ற போராடினேன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இந்தக் குணங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. பெண்மையின் நளினம் இல்லாத ஒருத்தியாய் வளர்க்கப்பட்டவள்.

ஆமாம், நான் ஓர் போராளி. போராளியாக்கப்பட்டவள்.

போராட்ட களத்திற்கு அடுத்து அழைத்துச் செல்லப் போகின்றேன்.

எந்த மனிதனும் நூறு சதவிகிதம் நல்லவர்களல்ல. குறையும் நிறையும் கலந்த ஓர் கலவை. இதுதான் உண்மை.

மாற்ற முடிந்தவர் அமைதியான வாழ்க்கை பெற்றனர். முடியாதவர்களின் வாழ்க்கை அல்லல்களும் ஏமாற்றங்களும் நிறைந்தைவையே.

உலகத்தின் சோதனைகளுட்படாமலும் அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.

— ஷேக்ஸ்பியர்

(பயணம் தொடரும்)

 

 

 

Series Navigationபர்த் டேமனனம்
author

சீதாலட்சுமி

Similar Posts

30 Comments

  1. Avatar
    punai peyaril says:

    தொடர் நன்று. இப்படி உருவான விதை, பின் , ”பிறன்மனை நோக்கா” என்னும் குறள்படி வாழாத , ஆனால் குறளுக்கு ஓவியம் என்று கிறுக்கிய கருணாநிதி மேடையில் பின்னாக புன்னகைத்து நின்றது ஏன் ( முதல் அத்தியாய ஃபோட்டோவில் பிரபலங்களுடன் தொடர்பை சிலாகித்து வந்தது )…? அதுவும் செங்கை மாவட்ட பெண் மாநாடாம்… ம்ஹீம்…. பாரதியார் பாட்டில், பாதகம் செய்பவரைக்…… அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்ற பாட்டை மறந்தது ஏன்…? எங்கே தடுமாறி உருமாறினார் என்பதையும் தொடரில் எழுதினால் நன்று…

  2. Avatar
    punai peyaril says:

    அவன் எப்படி நம்மளோடதைப் பிடுங்கலாம்? நாமும் ஜெயிலுக்குப் போகலாம்மா –>>. இப்படி வளர்ந்தவர் எப்படி செவ்விந்தியர்களை விரட்டி எதேச்சிகாரமாக அமைக்கப்பட்ட அமெரிக்காவின் சுகத்தில் திளைக்கிறார் என்பதையும் சொல்ல வேண்டும். இந்த தொடர் எப்படி வீரிய விதைகள் கூட போகன்வில்லா மாதிரி ஆகிப் போகின என்பதை உணர்த்தும்….

  3. Avatar
    jayashree shankar says:

    பாக்கியசாலி சீதாம்மா…
    வணக்கம். தொடர்கள் தொடர்ச்சியாக நன்றாக விறுவிறு வென்று வருகிறது.
    ஒரு குழைந்தை பிறக்கும் இடமும், வளரும் சூழலும், யாருடன் கூட வளர்ந்து
    வருகிறார்கள் என்பதும், நல்ல ஆசானும், முதல் ஆசிரியையான பெற்ற தாயும்..
    மட்டுமே அந்தக் குழந்தை பின்னாளில் வாழும் வாழ்க்கைக்கு அஸ்திவாரம்
    என்பதை மிகவும் அழகாகவும்..பொருத்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.
    திண்ணையில் சிறுமி…”சீதா” அழகான, அமைதியான குட்டிப் பெண்ணின் படம்
    அருமை.

    உங்கள் சம காலத்தில் எத்தனையோ பெண்கள் குழந்தைகள் வளர்ந்தாலும்..
    இறைவன் உங்களை மட்டும் தேர்ந்தெடுத்து இது போன்ற ஒரு மகத்தான
    சூழலை கொடையாகத் தந்திருக்கிறார்.

    .துன்பங்கள் நேர்ந்திருக்கலாம் என்றாலும் அத்தோடு கூட நீங்கள் பெற்ற
    அனுபவங்கள் தான் இப்போதும் பசுமரத்தாணி போல் பதிந்து போன தங்களின்
    இதயப் பலகையில் இருந்து வாழ்வியலை எத்தனை பேருக்குச் சொல்லித் தருகிறீர்கள்.

    பெருமையாக இருக்கிறது. பாரதியின் தாய் மாமனிடம் இருந்து கற்றுக்
    கொண்ட பாரதியார் பாடல்…!அத்தனை எளிதாக கிடைத்துவிடக் கூடிய
    பாக்கியமா? தொடருங்கள்..உங்கள் வாழ்க்கையே ஒரு பொக்கிஷம் போல் தெரிகிறது.

    நமஸ்காரத்துடன்,
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  4. Avatar
    punai peyaril says:

    ஜெயசிரி, உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுத்தாளரைத் தெரியும் என்று நினைக்கிறேன்… துதிபாடுதல் உங்களுக்கு உரிமையுண்டு. இவர் மட்டுமல்ல… இறைவன் இது போன்ற பலருக்கு அனுபவங்களைத் தந்துள்ளார். எனது கேள்வி, பாரதியாரின் தாய்மாமனிடமே பயின்றவர், மேக்கப்புடன் கருணாநிதி மேடையில் புன்சிரித்து நின்றது பாரதிக்கு அவமானம் என நான் கருதுகிறேன்… வழக்கம் போல எழுத்தாளர் மௌனமாக இருப்பார், நீங்களாவது கேட்டுச் சொல்லுங்கள்… பாரதியார் பாடலை,அவர் வாயாலேயே கேட்டிருந்தால் கூட ஒரு பெருமையும் கிடையாது… சுண்டல், கடலை மடிக்கும் பேப்பரில் பாரதியார் பாடல் படித்தாலும் அது படி நடத்தலே பெருமை. கருணாந்தியின் பிறன்மனை நோக்கா நிலை பற்றி, தமிழகம் அறியும்… பிரபலங்கள் சூழலில் வளர்ந்தால் வார்ப்பு சிறப்பு என்றால்,இதே பாரதி எத்தனை பிரபலங்களுடன் வளர்க்கப்பட்டார்…? தாய் புதினம் தந்த மாக்ஸிம் எத்தனை பிரபலங்கள் சூழ வார்க்கப்பட்டார்…? இவர் காந்திகிராம சூழலில் வளர்ந்தாலும் – உங்கள் முன் கடிதம் படி – அமெரிக்காவில் தானே இருக்கிறார்..? வெயிலும் வேட்கையும் , கருவேலம்காடுமான இந்த ஊர் மாற என்ன செய்தார்…? இல்லை, சௌந்திரம் அம்மாளின் ஔவை இல்லத்தில் இருந்து சேவை செய்திருக்கலாமே…? இப்படி வளர்ந்தவர் இதயம் பேசுகிறது மணியனை பாராட்டும் போது இடர்கிறதே…? இவரது வயது ஒத்த ஒரு பெண்மெணி , வெண்மணி துய்ரம் கண்டு , அந்த ஊர் சென்று செட்டில் ஆகி சேவை செய்துள்ளார். இவரை மட்டுமே ஆண்டவன் தத்தெடுத்து வார்த்தார் என்பது எவ்வகையில் சரி. சீதா அவர்கள் நல் அனுப்வம் பகிரப்பட வேண்டியது தான்… ஆனால், துதிபாடுதல் தேவையில்லை.. கருணாந்தி மேடைப் போட்டோவை போடுவபவர் மனநிலை பற்றி எனக்கு கேள்விகள் நிறைய இருக்கு…..

  5. Avatar
    jayashree shankar says:

    திரு.புனைப் பெயரில்….அவர்களுக்கு,
    வணக்கம்….நீங்கள் கேட்டிருப்பது போல் எனக்கு தனிப்பட்ட முறையில்
    இவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இவரின் எழுத்தில் எனக்கு
    பரிச்சயம் உண்டு. இவரது வலைப்பூ..ஒரு பெண்ணின் பயணம்..மூலமாக.
    அது போகட்டும். ஒரு கட்டுரையைப் படித்ததும்…நீங்கள் உங்கள் மனதில்
    என்ன கேட்க வேண்டும் என நினைத்தீர்களோ அதை உங்கள் பின்னூட்டத்தில்
    கேட்டீர்கள். நானா படித்து எனக்கு என்ன தோன்றியதோ…பாராட்டத் தோன்றியதால்
    அதைப் பற்றி..என் சிற்றறிவுக்கு எட்டியதை நான் எழுதினேன். இதில் தவறு எங்கு.?
    உங்கள் சந்தேகமே எனக்கும் எழ வேண்டும் என தாங்கள் நினைப்பதும்….
    நான் மகிழ்வது போலவே இன்னொருவரும் மகிழ்வாக எண்ண வேண்டும் என்று
    நான் நினைப்பதும்…நியாயமில்லை. ஒருவரைத் தனிப்பட்ட முறையில்
    தெரிந்திருந்தால் தான் முடியும் என்று நீங்கள் நினைப்பதும் முறையல்ல.
    திண்ணைக்கு நான் புதியவள்.இங்கிருக்கும் யாரையும் எனக்குத் தெரியாது.
    அதற்கு அவசியமும் இல்லை. கட்டுரையை தொடர்ந்து படிக்கிறேன்..எனது
    எண்ணத்தை பகிர்கிறேன். தனிப்பட்ட முறையில் அவரைத் தெரிந்திருந்தால்
    தனி மடல் போட்டிருப்பேன். எழுத்து சுதந்திரம் கூட இல்லையே என்று வருந்துகிறேன்.

    துதி பாடுதல் என்று சொல்வது…சரியல்ல. அவரைத் துதிபாடி எனக்கொன்றும்
    ஆகப் போவது கிடையாது.ஒரு நிஜமான உணர்வுகளுக்கு எழுத்து ஒரு வடிகால்…!!
    இது புரியாதா?.

  6. Avatar
    Dr.G.Johnson says:

    VAAZHVIYAL VARALAATRIL SILA PAKKANGAL by SEETHALAXMI is a useful recollection of her past written in a systematic manner. This week she has written a short quip about her childhood about how she learnt about the freedom struggle, temple entry, caste, poet Bharath and learning to read papers and weeklies at a very tender age. She has also recollected her admiration for RAJAJI, KALKI and KAMARARAJ whom she had seen as a school girl at the ETTAIYAPURAM PALACE. She has impressed the fact that the formative years of a person has much influence on the thought and motivation in later life. From such an early years of her life, she has already developed a flair for reading, writing , oratory, patriotism, social service, and the formation of a casteless society. The readers of this column are given the benefit of knowing the difficult path the writer her treaded in her illustrious life as a successful writer and a staunch social worker. ” KAAKAI KATHAI KETTU VALARAVILLAI,NAATU KATHAI KETTU VALARNTHAVAL.” ” KAAYANGALIN VALIKALIL IYAKKANGAL THONDRUKINDRANA “. ” SAATHI ROMBA KETTATHU.” paaratugal! Sutti penn SEETHA padam arumai! Dr.G.JOHNSON.

  7. Avatar
    jayashree shankar says:

    திண்ணை வாசகர்களுக்கு…
    வணக்கங்கள்.
    இந்தத் திண்ணையில் வந்தமர்ந்து இளைப்பாறி சொற்பக் காலமே தான் ஆகிறது. இந்த வாரப் பத்திரிகை எங்கிருந்து..யாரால் வெளியிடப் படுகிறது என்றெல்லாம் இதுவரை நான் அறிந்திருக்கவில்லை.என்னையும் யாரும் அறிந்திராத நிலையிலும் எனது படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதற்க்கான பின்னூட்டங்களும் படித்துக் கொண்டிருக்கிறேன். எனது எழுத்தார்வத்தை ஊக்குவித்து வாய்ப்பளிக்கும் திண்ணைக்கு என் பணிவான நன்றியை இத்தோடு சொல்லக் கடமை பட்டிருக்கிறேன்.

    இந்தப் பரந்தப் பொதுத் திண்ணை மேடையில் அரங்கேறும் அனைத்துப் படைப்புகளும் பலவிதமான நல்ல கருத்துக்களக் சுமந்து வருகிறது….சிறப்பானது..நிறைவானது.
    இந்த மடலின் முக்கிய காரணம். எந்த ஒரு பின்னூட்டமும் அதை படித்தவரின் அப்போதைய மனநிலையைப் பொறுத்தே பெரும்பாலும் அமைந்து விடும்.
    என் தாய்…வயது எழுபத்தி ஐந்து. சொல்லப்பானால்…ஏறத்தாழ சீதாம்மா பிறந்த வருடங்களுக்கு அருகே பிறந்திருப்பவர். முன்பெல்லாம் அவர் எப்போதும் ஏதோ ஒரு வலி..இயலாமை, தனக்கு வயதாகி விட்டது இனி இந்த உலகத்தில் தனக்கென ஒன்றும் இல்லை என்ற எண்ணம்…இவையனைத்தும் மேலோங்க ஒருவிதமான உணர்வில் வளைய வருவார். நான் சீதாம்மாவின் ஒவ்வொரு கட்டுரையையும் படித்தது காண்பிப்பேன். படிக்க சொல்லுவேன்..பார்க்க சொல்லுவேன்..நாளடைவில் என்னைப் போலவே என் தாயும்..இந்த வாரம் என்ன…எழுதி இருக்கிறார் என்று ஆவலோடு காத்திருப்பதோடு அல்லாமல்…ஒரு புது சிந்தனையோடு…இவரது அனுபவங்கள் பலவற்றைப் பாராட்டி தனது வயதில் பல வருடங்கள் குறைந்தது போன்ற உணர்வோடு..மாறிவரும் போது….என் தாயைப் போல் இன்னும் பலர் இருக்கலாம். சமயத்தில் எனக்குள் நானே …பல விஷயங்கள் கற்றுக் கொண்டு வருகிறேன். என் அன்னை படித்து விட்டு சொன்ன சில வரிகளோடு கூட எனது உணர்வையும் சேர்த்து பின்னூட்டமாக எழுதி உள்ளேன். துதி பாடுகிறேன் என்று யார் நினைத்தாலும்…அதற்கு சீதாம்மா தகுதியானவர் என்பதால் மட்டுமே நெஞ்சார வாழ்த்துகிறேன்.
    வணக்கத்துடன்.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  8. Avatar
    Paramasivam says:

    Punaipeyaril used to criticise some people all the time.We saw vaitherichal vaithi in Thillaana Mohanambal.He is the reincarnation of that Vaithi.Mrs Seethalakshmi is sharing several priceless experiences.This perverted person is sore about Karunanidhi”s photo.Even if you put him in an uninhabited island,even without food, this man will vomit his hatred.Mrs Seethalakshmi has perfect right to put any person”s photo in her article.Who is this person?Is he the monitor of Thinnai?

  9. Avatar
    ஜெயபாரதன் says:

    திண்ணை வாசகரே,

    சீதாம்மா படைப்பு -6 முழுவதும் ஏனோ திண்ணையில் வரவில்லை. அவரது அனுமதில் அவர் அனுப்பிய முழுப் படைப்பும் இதோ படியுங்கள் :

    வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6
    சீதாலட்சுமி

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனென்றோ ஆன்ற ஒழுக்கு

    சீதாவுக்கு இரண்டு வயது .அம்மாவிடம் தன் அப்பாவைப் பற்றி விசாரிக்கின்றாள் .அவர் ஜெயிலுக்குப் போயிருப்பதாகக் கூறுகின்றாள் அவள் அம்மா சுப்புலட்சுமி. குழந்தைப் பதறிப்போய் அப்பா திருடினாரா என்று கேட்கின்றாள். இப்பொழுது அம்மா அவளுக்கு விளக்க வேண்டும். சீதாவின் கையில் ஓர் பொம்மை. அதனைச் சட்டென்று அம்மா பிடுங்கவும் உடனே குழந்தை அழுகின்றாள். .
    உன் பொம்மையைப் பிடுங்கினதுக்கு உனக்கு அழுகை வர்ரதே. நம்ம ஊரை ஒருத்தன் பிடுங்கிண்டு உக்காந்திருக்கான். அவன் கிட்டே சண்டைப போடப் போறவாளை ஜெயில்லே பிடிச்சு போடறா,
    உடனே குழந்தை சீதாவின் பதில் என்ன தெரியுமா ?
    அம்மா நாமும் போகலாம். அவன் எப்படி நம்மளோடதைப் பிடுங்கலாம்? நாமும் ஜெயிலுக்குப் போகலாம்மா
    காக்கா கதை கேட்டு வளரவில்லை. பிஞ்சுப் பருவத்திலேயே நாட்டுக் கதைகள் கேட்டு வளர்ந்தவள். இதனை அவள் தாயார் அவளிடம் பல முறை கூறியிருக்கின்றார்கள்..
    அதுமட்டுமா ? வைத்தியநாத அய்யர் தலைமையில் ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசம். அப்பொழுது நடந்த ஓர் சம்பவம்.
    அந்த வீட்டுக்கார மாமி அங்கே வந்து மிளகாய்ப் பொடி கேட்டார்கள். எதற்குத் தெரியுமா? கோயில் உள்ளே நுழைகின்றவர்கள் கண்ணில் தூவ மிளகாய்ப் பொடி. அந்த மாமி போகவிட்டு குழந்தை அவள் அம்மாவிடம் கேட்டது “சாதின்னா என்ன?” அத்துடன் முடியவில்லை. தாயும் மகளும் கோயிலுக்குக் கிளம்பினார்கள். மீனாட்சி கோயிலுக்குச் செல்ல வில்லை. ஹரி ஜனங்கள் நுழைந்து விட்டதால் மீனாட்சி கோயிலை விட்டுப் வெளியில் வந்து விட்டதாகக் கூறி அவளுக்காக ஓர் ஓலைப் பந்தல் அமைத்து அம்பாளை அங்கு வழிபட வைத்தவர். நடேச அய்யர்.
    கோயிலுக்குள் அழைத்துச் சென்றவன் பிராமணன். சாதி பேசி தனிக் கோயிலை அமைத்தவனும் பிராமணன். வரலாற்றை வாய்மையுடன் பார்க்க வேண்டும்.
    குழந்தை சீதா அவள் அம்மாவிடம் கேட்டது
    “உம்மாச்சிதானே எல்லாரையும் படைச்சா. அப்புறம் அவளுக்கு ஏன் கோபம். எப்படி கோபம் வரும். “சாதி ரொம்ப கெட்டது”.
    அடுத்தும் ஓர் சம்பவம் நடந்தது. ஜெயிலிருந்து அவள் அப்பா வந்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அப்பாவைப் பார்க்கின்றாள். ஆசையுடன் அப்பா மடியில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கின்றாள். . அப்பொழுது வீட்டுக்கார மாமி வந்து அவள் அப்பாவை வீட்டை விட்டு வெளியில் போகச் சொல்கின்றள். காரணம் மற்ற ஜாதியினர் சமைத்த சாப்பாட்டை அவர் சாப்பிட்டு விட்டாராம். அது ஆசாரமான வீடாம். அவர் அங்கே இருக்கக் கூடாதாம். அப்பொழுது அவள் அம்மாவின் வயது 22 ஐந்து ஆண்டுகளுக்குப் பின் வந்த கணவனுடன் ஒரு நாள் கூட ஒன்றாக இருக்க முடியாமல் தடுத்தது சாதியும் ஆச்சாரமும்.
    குழந்தை சீதாவின் மனத்தில் முதலில் வேருன்றியது இந்த சாதிக் கொடுமை.
    எப்பொழுதாவது அடிபட்ட காயங்களின் வலிகளில் இயக்கங்கள் தோன்றியதும் வரலாற்றின் வரலாறு.
    குடும்பம் எட்டயபுரம் பெயர்ந்தது. அரண்மனைக்குப் பக்கம் வீடு. ராஜாஜி, கல்கி, காமராஜ் என்று எத்தனை பெரிய மனிதர்களை அவளால் பார்க்க முடிந்தது. அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை அவள் அப்பாவிற்கு கொடுத்திருந்தார் ராஜா. அவள் அப்பா ஒரு காங்கிரஸ்காரரும் கூட. . அவள் குடியிருந்த வீட்டுக்கருகில் உள்ள கோயிலில் ராஜாஜி, எட்டயபுர மன்னருடன் ஆலயப் பிரவேசம் செய்த பொழுது குழந்தையும் அவர்களுடன் சென்றாள். இன்னும் நாடு விடுதலை அடையவில்லை. பாரதி பாடிய பாடல்களை அவளுக்குப் பாடச் சொல்லிக் கொடுத்தது பாரதியின் தாய்மாமன் சாம்பவசிவ அய்யர். பாரதி அப்பொழுது உயிருடன் இல்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி அவள் வீடு இருந்தது. கல்கியைப் பார்த்த முதல் அவள் அப்பா பல வார இதழ்கள் , மாத இதழ்கள், செய்திதாள்கள் வாங்கிப் போட்டார். சிறு வயதிலேயே சீதா பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்துவிட்டாள். படித்தது மட்டுமல்ல. பிள்ளைப் பிராயத்திலேயே எழுத ஆரம்பித்தாள். அவைகளுக்கு ஓவியம் தீட்டியவளும் அவளே.
    அவள் அப்பா அரண்மனை வேலையை விட்டுச் சொந்தமாக ஓர் ஹோட்டல் வைத்தார். குடும்பமும் அதற்கு அடுத்து இருந்த வீட்டிற்குக் குடி பெயர்ந்தது. அங்கும் குறைந்த காலமே இருந்தவர்கள் சினிமா தியேட்டரை ஒட்டி இருந்த இடத்தில் ஹோட்டல் வைத்தார். பக்கத்தில் தியேட்டர். எதிரே ஓர் குளம் அதையொட்டி பள்ளிக்கூடம். அதில்தான் அவள் படித்தாள்.
    அங்கும் ஓர் பாரதியார் இருந்தார். அவர் பெயர் கே.பி. எஸ் நாரயணன். அவர் ஓர் ஆசிரியர். அவர்தான் மாணவ மாணவிகள் இரத்தத்தில் பாரதியைக் கலந்தவர். மேடைப் பேச்சுக்குப் பயிற்சி அளித்தவர். மாணவ மாணவிகளை மேடை ஏற்றுவார். பின்னர்தான் தலைப்பு கொடுப்பார். இவர்கள் பேச வேண்டும். மாணவனை பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என பேசச் சொல்வார். மாணவிகளை சம உரிமை வேண்டாம் என்று பேசச் சொல்வார். சிந்தனைக்கு அவ்வளவு வேலை கொடுத்தவர். அவர் பயிற்சியில் தேர்ந்து முதலில் வந்தவர்களில் முத்து கிருஷ்ணனும் சீதாவும். முத்து கிருஷ்ணன் தினமலர் அலுவலகத்திற்கு வேலைக்குப் போனதாகக் கேள்வி. சீதா கிராமப் பணிக்குப் போய்ச் சேர்ந்தாள். பள்ளி மாணவியாக இருக்கும் பொழுதே காந்திஜியின் சத்திய சோதனையும் காரல்மார்க்ஸின் சிந்தனைகளையும் படிக்கச் சொன்னவர் அவள் அப்பா. சங்கீதம் கற்றாள். மகளைச் சுதந்திரமாக வளர்த்தவர் அவள் அப்பா.
    அந்த சீதாதான் நான். சஷ்டி விரதம் இருந்து சங்குப் பால் குடித்து முருகனை வேண்டியதற்கு அவன் போட்ட பிச்சை நான். இதனை என் அம்மா சொன்ன நாள் முதல் என் இதய சிம்மாசனத்தில் ஒய்யாரமாக முருகன் உட்கார்ந்துவிட்டார். அறிஞர் அண்ணாவின் புத்தகங்கள்,தந்தை பெரியாரின் சிந்தனைகள் படிக்கவும் நாத்திகமும் நுழைந்தது.
    அது எப்படி? முருகனைக் கும்பிடுவேன் புராணங்களைக் குறை சொல்வேன். இப்படி ஓர் இரட்டை நிலையும் ஆனேன்.
    என்னுடைய இன்னொரு பக்கமும் பார்க்கலாம்.
    நினைத்துப் பார்க்கும் பொழுது நெருடும் சில காட்சிகள்
    வரலாறு பற்றி இப்படி விரிவாக எழுத வேண்டுமா என்று தோன்றலாம். வரலாற்றுப் புத்தகத்தில் படிப்பதைவிட வாழ்க்கைச் சரித்திரத்தில் வரும் பொழுது செய்திகளின் உயிர்நாடிகளை உணரமுடியும். பல நிகழ்வுகளின் வேர்களின் காலம் புரியும். வாழ்வியலில் பல இயல்புகள் தொடர்கதை
    நான் புரண்டு உருண்டு விளையாடிய கரிசல் மண்ணின் கதையைப் பார்க்கலாம்.
    அந்த ஊர் ஓர் மன்னருக்காக உண்டாக்கப்பட்ட ஊர். மல்லனை வென்றதற்கும் சிலரைத் தன் பிள்ளைகளா ஏற்றுக் கொண்டதற்கும் கிடைத்த சிறப்புப் பட்டம் எட்டப்பன். அந்த சிறப்புப் பெயரில் அவர் நினைவாக அந்த ஊருக்கு எட்டயபுரம் என்று பெயர் வந்தது. எத்தனை புலவர்கள் ! எத்தனை கலைஞர்கள் ! தமிழ் கொஞ்சி விளையாடியது. இசை தாலாட்டியது. புதுமைப் பெண்ணைப் படைத்து பாடல்களாக்க் குவித்த பாரதியின் ஊர். அங்கே பெண்ணின் நிலை இருந்தவித மென்ன? அந்தக் காலத்தில் அரண்மனை மனிதர்களில் சிலருக்கு விளையாட்டிற்குப் பொம்மைகள் வேண்டாம். அரண்மனையைச் சுற்றி சில தெருக்கள்தான் ஊர். அங்கே வசிக்கும் சில பெண்கள் விளையாட்டு பொம்மைகளாக மாறவேண்டிய நிலை வரும். விளையாட்டிற்கு ஊதியம் உண்டு. வீடும் கொஞ்சம் சொத்தும் கிடைக்கும். அந்த வீட்டார் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரண்மனைக் குழந்தை அவர்கள் வீட்டில் வளர்கின்றது என்ற திருப்தி போதும் . அந்த ஊரில் மட்டுமா இந்த நிலை ?
    தமிழ் அமுதினும் சுவையானது.
    இலக்கியமோ என்றும் நிலைத்துவாழும் தன்மை கொண்டது.
    இந்தப் போர்வைகளுக்குள் நுழைந்து கொண்டு நாம் பெருமை கொள்கின்றோம்.
    பிறன்மனை நோக்கார் பற்றி நமக்கு வாழ்வியலில் கூறப் பட்டுள்ளது. ஆனால் வீரம் பேசி பிற நாடுகளுக்குப் போருக்குச் சென்ற பொழுது பொன்னும் பொருளும் மட்டும் கொண்டு வரவில்லையே? அங்கிருந்த பெண்களையும் அள்ளிக் கொணர்ந்து மாட்டைக் கொட்டிலில் அடைப்பது போல் அடைத்து, பிறன் மனையாளாயிருப்பினும் இன்பம் அனுபவித்தது வரலாற்று உண்மை. அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு என்ன உரிமை கொடுக்கப்பட்டது? ஒரு தகப்பனுக்குப் பிறந்த இருவரில் ஒருவன் ஆட்சியில் இருப்பான், இன்னொருவன் அவனுக்குக் குற்றேவல் செய்பவனாக இருப்பான். இவன்தான் என் தந்தை என்று சொல்லக் கூட அவனுக்கு உரிமையில்லை. வீரத்தில் விளைந்த வேளங்கள் பெண்ணினத்திற்கு அவமானச் சிறை.
    மாமன்னர் இராஜ ராஜனுக்கு 14 மனைவியர்கள் ! அவர் மகன் இராஜேந்திரனுக்கு 17 மனைவியர்கள். மன்னர்கள் தேடிப் பிடித்து மணக்கவில்லை. சிற்றரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள பெண்களை மன்னருக்கு மணமுடித்து வைத்தனர். இத்தனை பெண்களை மணக்கும் ஓர் ஆடவனால் எந்த அளவு பெண்ணுக்குத் திருப்தியான வாழ்க்கை தர முடியும்?
    பெண்களை யாரும் கேட்கவில்லை. மனிதர்களுக்கு வேண்டியது கவுரவம். அதிகார வாழ்க்கைக்கு அவர்கள் கொடுத்த விலைபொருட்கள் பெண்கள் ! பெண் உணர்வுக்கு மதிப்பில்லாத மண உறவுகள்.
    மன்னர் ஆட்சியிலும் வாழ்ந்தவள் நான். அரண்மனைப் பெண்டிர் அந்தப்புரத்தை விட்டு வெளி வரமாட்டார்கள். கோயில்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் மூடு பல்லக்குகளில் திரைகள் மூடியிருக்க பவனி. எங்கள் ராஜாவுக்கு இரு மனைவிகள் இருந்தனர். அவர்கள் ஒரே அரண்மனையில் இருந்தனர். மூத்த ராணிக்குக் குழந்தை இல்லை. இரண்டாம் தேவிக்குக் குழந்தைகள் உண்டு. எங்கள் ராஜா இன்னொரு பெண்ணை மணந்துகொண்டு அவரைச் சிங்காரத்தோப்பு அரண்மனையில் வைத்தார். அந்த அம்மையாருக்கு உதவிக்கு வந்த ஓர் பெண்ணையும் மணந்தார். அவரைத் திருநெல்வேலி அரண்மனையில் வைத்தார். பெண்கள் எல்லோரும் மிக நல்லவர்கள். இந்தக் காலத்தில் கூட தங்கள் கணவனைக் குறை கூறாதவர்கள்.. அந்த காலத்தில் கண்ணகி எப்படி பேசி இருப்பாள் ? பெற்றோரும் தன்னைப் பெற்றவர்களும் செல்வம் மிக்க வராயினும் அவர்கள் உதவியை நாடவில்லை. எத்தனை வருடங்கள் கண்ணகி தன் கணவரைப் பிரிந்திருந்தாள் ? தெய்வத்திடம் கூடப் புலம்பவில்லை. பத்தினிக்கு இலக்கணம், பெண் வாய் திறக்கக் கூடாது.
    சங்க இலக்கியத்தில் பெண் புலவர்கள் இருந்திருப்பதைக் காண்கிறோம். அரசியலில் தூது சென்ற ஒளவைப் பிராட்டியையும் அறிவோம். அக்காலத்தில் பெண் கல்வி இருந்தற்குச் சான்றாக இவர்களைச் சுட்டிக் காட்டிப் பேசுகின்றோம். இதன் விகிதாச்சாரம் என்ன? ஒற்றை இலக்கம். பேசுவதில் கூட தோழிக்கு இருந்த சலுகை தலைவிக்கு இல்லை. நான் எதையும் குறையென்று சொல்ல வேண்டுமென்பதற்காக இவைகளை எழுதவில்லை. இதுதான் நம் சமுதாயம். தாய்வழிச் சமுதாயமும் சில இடங்களில் இருந்திருக்கின்றன. இருப்பினும் உடல் வலிமை கொண்டு ஆண் முன் சென்றுவிட்டான்.
    வேட்டையாடிப் பிழைத்த மனிதன் விவசாயத் தொழிலில் இறங்கவும். நிலையான வீட்டை நினைத்தான். தான் ஈட்டும் பொருளைக் கொடுக்க தன் வாரிசை நினைத்தான். பிள்ளை பெறுபவளை வீட்டிற்குள் வைத்தான். அக்காலத்தில் பெண் வெளியில் தனித்து இயங்க முடியாது
    காந்திஜி சொன்னதை நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது.
    ஓர் பெண் நள்ளிரவில் தனியாக நடந்து சென்று எவ்விதமும் பாதிக்கப் படாமல் வருகின்றாளோ அன்று தான் நாடு சுதந்திரம் அடைந்தது என்று கூறலாம்.
    இதனைப் பார்த்தால் உலகில் எந்த நாடும் சுதந்திரம் அடைய வில்லை யென்றே கூற வேண்டும். இக்காலத்திலேயே இந்த நிலையென்றால் அக்காலத்தில் பெண்ணின் நிலை பற்றிக் கூற என்ன இருக்கின்றது? முதலில் பிள்ளைக்கு என்று பெண்ணை அடிமைப் படுத்தினாலும், குடும்பம் என்ற கூட்டிலே அன்பும் அரவணைப்பும் உணரவும் பெண்ணை வெளியில் விட மனமில்லை. அன்பின் காரணமாக அடக்குமுறை அதிகமாகியது. ஆணாதிக்கம் என்பதைவிட அப்பொழுது குடும்பப் பாதுகாப்பிற்கு அவன் எடுத்துக் கொண்ட உரிமை. பெண்ணிற்கும் அது பாதுகாப்பாக இருந்ததால் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தாள். ஆனால் அதுவே தொடர்ந்து வரும் பொழுது மாற்றங்கள் தோன்றிய காலத்திலும் இந்நிலை நீடித்ததால் பெண் சீறி எழ ஆரம்பித்தாள். இது வாழ்வியல் வரலாற்றின் சுழற்சியே
    அக்காலத்தில் ஆண்மகன் தொழிலுக்காக வெளியே செல்ல வேண்டும். போருக்காகவும் செல்ல வேண்டும். வீடு திரும்ப மாதங்கள், வருடங்கள் ஆகலாம். வயிற்றுப் பசிபோல் உடல் பசியும் இயற்கையே எனவே அவன் தனக்குச் சில சலுகைகளை வைத்துக் கொண்டான். பிற பெண்களிடம் தன் வேட்கையைத் தீர்த்துக் கொண்டான். கால மாற்றத்தில் தன்னை மாற்றிக் கொள்ளாத பல ஆண்களால்தான் பிரச்சனைகள். ஒட்டு மொத்தச் சாடலும் ஏமாற்றத்தின் வெளிப்பாடே.
    வாழ்வியலைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் எளிது. ஆனால் அனுபவம் என்று வரும் பொழுது மனம் படுத்தும் பாட்டிற்கு யாரும் விதி விலக்கல்ல.
    என்னுடைய காலத்திலேயே நான் கண்ட சில காட்சிகள். காதுகளில் வைரக் கடுக்கன், கைகளில் மோதிரம். சரிகை அங்கவஸ்திரம், மல்லுவேட்டி. இவைகளுடன் பணக்கார மைனர் வில்வண்டியில் சின்ன வீட்டிற்குச் செல்வது அவனுக்கு பெருமை. நாடியில் விரல் வைத்து வேடிக்கை பார்ப்பார்கள் மக்கள். கொத்தமங்கல சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் கதை கற்பனை யென்று கூறிவிட முடியாது. அன்று நடந்தவைகளின் நகல்தான் அந்தக் கதை.
    இலக்கியமே வாழ்க்கையின் கண்ணாடிதானே.
    மன்னர் ஆட்சி முடிந்தது. காலம் மாறியது. வாழ்வு முறையும் மாறியது.
    எட்டயபுரத்து அரண்மனை பிள்ளைகளில் மூத்தவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. துறவியாக வாழ்கின்றார். மற்ற பிள்ளைகளும் இல்லற வாழ்வில் கட்டுப்பாடுடன் வாழ்கின்றனர். முன்பு பேரரசுகளும் சிற்றரசுகளும் கவுரவப் போட்டியில் எடுத்துக் கொண்ட சலுகையை சமுதாயமும் மவுனமாக ஏற்றுக் கொண்டி ருந்தது. மன்னர் வாழ்க்கையிலிருந்து உழைக்கும் கூட்டம் வரை வாழ்வியல் சில நடைமுறைகளில் இயங்கி வந்தன. இதுதான் வரலாறு. காலம் மாறவும் அரண்மனை வாழ்க்கை யும் மாறியது. காலத்திற்கேற்ப மக்கள் வாழ்க்கையிலும் மாறுதல்கள் !
    இப்பொழுது என்னைப்பற்றி கூற வேண்டும்.
    ஒரு மனிதனின் குணம் எப்படி அமைகின்றது? கரு உருவனது முதல் ஆரம்பமாகி விடுகின்றது. பெற்றோரின் அணுக்களின் தாக்கம், குழந்தைப் பருவத்தில் ஆறுவயது வரை அவர்கள் வளர்க்கப்படும் விதம். குழந்தைகள் விளையாட்டுகள் மூலம்கூட பல கற்றுக் கொள்ளும் , பின்னர் சூழல் அதாவது வீட்டுக்கு வெளியே, பள்ளிவாழ்க்கை முதல் வெளியில் பழகும் மனிதர்கள், ஊடகத் தாக்கங்கள் இப்படி பலவற்றால் உருவாக்கப் படுகின்றான்…
    இந்த சமுதாயத்தைக் கோபத்துடன் பார்க்க வைத்த கசப்பான சம்பவங்கள் தொடர்ந்தது. வீதிகளில் மனைவியை எட்டி மிதித்து அடித்ததை கண்டிருக்கின்றேன். வெளியில் சுற்று வதும் இல்லாமல் கட்டிய மனைவியை வெளித் தள்ளிப் பிற பெண்ணுடன் அதே வீட்டில் உல்லாசம் புரியும் வீடுகளைப் பார்த்திருக்கின்றேன். வகுப்புத் தோழியைக் காணச் சென்ற பொழுது தாயும் மகளும் அழுது கொண்டு வாசலில் உட்கார்ந்திருப்பார்கள். அதே வீட்டுக்குள் வேறு ஒரு பெண்ணுடன் கொஞ்சிவிளையாடிக் கொண்டிருப்பான் அந்த வீட்டுக்காரன்.

    சிந்தனை செய்து சீர்தூக்கிப் பார்க்கும் வயதல்ல. என் மனத்தில் அன்று ஆழப் பதிந்தது. ஆண்கள் கொடூரமான வர்கள் பெண்களை அடிப்பார்கள். பொல்லாதவர்கள் என்பதே. சாதிப் பிரிவினையும் ஆணாதிக்கமும் என் நெஞ்சத்தில் ஆறாத தணலாய்த் தங்கிவிட்டது. பல குணங்களின் மொத்த வடிவாய் ஆனேன். (multiple personility)

    இந்த எண்ண்ணங்களுடன்தான் என் பணிக்காலம் தொடங்கி யது. பின்னர் அனுபவங்கள் மூலம் தான் இந்த சமுதாயத்தின் பல கோணங்களை உணர முடிந்தது. இதனை எழுதுவதற்குக் காரணம் என்னிடம் இருந்த முரட்டுக் குணத்திற்கும் கோபத்திற்கும் மூல காரணங்களாகும். அல்லது ஏதோ மிகைப்படுத்தி கதை எழுதுகின்றார்கள் என்று தோன்றிவிடும். எனது பணியில் எனக்குக் கிடைத்த பெயர் கத்தற ஆபீஸர். ஆம் என்னால் அந்தக் குறையை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அடுத்து தவறு செய்யும் ஆண்களைக் கண்டால் அடித்துவிடுவேன். இந்தக் குறையை மாற்ற போராடினேன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இந்தக் குணங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. பெண்மையின் நளினம் இல்லாத ஒருத்தியாய் வளர்க்கப்பட்டவள்.
    ஆமாம், நான் ஓர் போராளி. போராளியாக்கப்பட்டவள்.
    போராட்ட களத்திற்கு அடுத்து அழைத்துச் செல்லப் போகின்றேன்.

    எந்த மனிதனும் நூறு சதவிகிதம் நல்லவர்களல்ல. குறையும் நிறையும் கலந்த ஓர் கலவை. இதுதான் உண்மை.
    மாற்ற முடிந்தவர் அமைதியான வாழ்க்கை பெற்றனர். முடியாதவர்களின் வாழ்க்கை அல்லல்களும் ஏமாற்றங்களும் நிறைந்தைவையே.

    உலகத்தின் சோதனைகளுட்படாமலும் அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.

    — ஷேக்ஸ்பியர்

    (பயணம் தொடரும்)

  10. Avatar
    ஜெயபாரதன் says:

    திண்ணை வாசகரே,

    ஒருசில இறுதிப் பகுதிகள் காணப்படாத சீதாம்மாவின் படைப்பு -6 முழுவதும் பின்னூட்டத்தில் இடப்பட்டுள்ளது.

    சி. ஜெயபாரதன்.

  11. Avatar
    Punai peyaril says:

    Paramasivam, i need not get vayitherichal. I have also moved with so called big names and gone big places. We all know the damage done by karunanidhi, idayam Manian. Seetha lak may had good exp but she consider great for her karunanidhi stage.thats what bothered me. Have u seen the film dhagam by puttana kanagal, it shows the other side of Gandhigramam. Only such things will keep the great efforts to be in track. Does’nt mean that puttana kanagal is a kind of Vaithee. I respect Malarmannan, Ve.Sa, articles in thinnai bcaz it has 360 degree view, which Seetha article doesnt have. People like Seetha should ALSO show the real colors of so called big bs to save the future kids from popular devils.

  12. Avatar
    Punai peyaril says:

    Jayashree, i respect your views and go ahead. One of the reasons I visit Thinnai is to see two extremes views in all areas. I read both Malarmannan and Kavya and both contribute to shape my thinking. Eventhough i make harsh comments on Kavya i read his views fully bcaz i feel i need that perspective and it contributes to my thinking.

  13. Avatar
    Punai peyaril says:

    Paramasivam, u must be knowing what happened with SSR and MuKa in DMK and the rwason for it. Also , when MLA AnandaNayaki asked about Manila Suyatchi in TN Assembly Karunanidhi replied ” pavadai. – in nadavai thiranthu parthal therivathu than manila suyatchi”. And I just want to know ur words on this. If u had been groomed by great people would u tolerate this person and give a happy smile in a stage ,in which he is of center attraction…?That too In a women conf…? Bharathiyar songs are not just for rhythams. But for doing bravery acts… against such people. I have respect for Seetha’s age, and only if she writes 360degree view i will have respect for her article.

  14. Avatar
    Paramasivam says:

    Kalaignar would not have commented like that too in Assembly.As I said Punalpeyaril is having some ill feeling about Kalaignar.No body can cure him.Some mental rehabilitation is required for him.

  15. Avatar
    punai peyaril says:

    the whole world knows that karunanidhi said that in assembly. I request M Mannan to clarify this. if you support mu ka then people know your standard. mu ka used to talk like this….

  16. Avatar
    Paramasivam says:

    Sane people will listen to leaders for their advice and appreciate what good things have been done by them to the society.They will not peep through the keyholes and attack them personally.I am not interested to talk to shit collectors anymore

  17. Avatar
    punai peyaril says:

    everyone carry shit in their tummy, but you always think about that, bcaz of the kind of people you admire… there is something called Brain but the distance is more than 2 feet from ur tummy. may be thats the reason you are not able to use it.

  18. Avatar
    Paramasivam says:

    Every one who read these exchanges will know who thinks about shit all the time.There used to be a story about two young Zen monks.Once when crossing a river,one of the monks helped an young woman to cross the river by lifting her at her request.After crossing the river,the other monk looked very morose.The monk who helped the young woman asked him why he is so thoughtful.The other told that he is thinking about how an young monk could lift an young woman.The first one said that he himself has forgotten about the episode and asked the other why he still remember the incident.Nehru is remembered all over the world for his contribution to the development of modern India.But our friend here will remember only Nehru”s alleged affair with Edwina Mountbatten.

  19. Avatar
    Punai peyaril says:

    When people talk about Nehru, i think of Great Patel. Nehru only thought of mid night masala with lady Mount instead of freedom related talks, like ur other leader, who said the blood in Ayya Nedumaran white khadar dress was nothing but Indra gandhi!s MenStural blood ( when she was attacked by DMK rowdies in madurai ). If u think we have to worship this kind of dirty donkey’s then ur path is diff……

  20. Avatar
    Punai peyaril says:

    Instead of wasting ur time on attacking me – like ur mentor- check and tell about anandanayaki and indira episode

  21. Avatar
    admin says:

    இனி ஆங்கிலத்தில் எழுதப்படும் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

  22. Avatar
    admin says:

    வார்த்தைகளை அளந்து எழுத வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறோம்

  23. Avatar
    Dr.G.Johnson says:

    Dear Sirs, I am very sorry and disapopointed to note that in future writing in English is prohibited in this column. For people like me who have not installed Tamil in the lap-top it will be a great drawback.At the same time the contributors are to be blamed for this drastic precautionary measure by the able administration of popular THINNAI. All this is because of some mentally deranged persons mixing politics with literature. They go astray and try to show their political and personal grudges against political parties and political leaders. This is regrettable. They should find other platforms for their abuses on prominent figures.They should have the decency to concentrate on the core subject and not divert the readers’ attention to their political hatred.These people should be more decent and cultured in what they write in THINNAI. I hope THINNAI would reconsider its decision and allow decent readers to voice their opinion in English also.Thanking You, Yours Sincerely Dr.G.Johnson.

  24. Avatar
    punai peyaril says:

    ஜான்சன், இலக்கியமும் அரசியலும் பின்னிப் பிணைந்தவை. நாங்கள் மேட்டுக்குடி இலக்கியம் மட்டுமல்ல, அந்த்ராய் தார்க்கோவஸ்கி, மாக்ஸிம் கார்க்கி போன்ற புதினங்கள் படித்து வளர்ந்தவர்கள். சீதாம்மா சொல்வது போல் காக்கை கதை கேட்டு அல்ல, நெஞ்சில் வழியும் நினைவுகளின் காயங்களின் நிஜங்களின் வழியே தான் எங்கள் பார்வை வரும். தமிழகத்தில் கூட தேசிய உணர்வும், திராவிட கட்சி வளர்ச்சியும் இலக்கியம் மூலம் வளர்ந்தவையே. நீங்கள் சொல்லும், some mentally deranged persons நாங்களல்ல, நீங்கள் தான். பிரஞ்சு புரட்சியை, ரஷ்ய புரட்சியை கொண்டு சேர்ப்பது இலக்கிய வடிவங்கள் தான், வெறும் ஸ்டேண்ட்மெண்ட்கள் அல்ல. அதுவும் போக இலக்கியம் போன்றே அரசியலும் உன்னதமானதே… நேருவின், i dont believe in excuses….ம், கென்னடியின் Ask what you have done to…. ம், மார்டின் லூதரின், I have a dream… ம், விவேகானந்தரின் Arise Awake…, ம், இலக்கியம் கலந்த அரசியல் புத்துணர்ச்சி வரிகள். They should find other platforms for their abuses on prominent figures –> அதன்ன பிராமினண்ட் பிகர் , அப்புறாம் ஆர்டினரி பிகர். எல்லோரும் இந்நாட்டு மன்னர்… நாமார்க்கும் குடியல்லோம்.. என்பது அறியுங்கள். காமராஜர், ராஜாஜி, அண்ணா தங்கள் பதவி தங்களுக்கு கொடுக்கப்பட்ட மக்கள் சேவைக்கான வாய்ப்பு என்று நினைத்தவர்கள். இன்றோ அப்பதவியால் எஸ்டேட்டும், பெண்சுகம், பொன்சுகம், மண்சுகம் என்றல்லவா அதீதம் பேர் வாழ்கிறார்கள்… நாகரீகம் என்பதை நம் பாரதி, “மோதி மிதித்து விடு பாப்பா…அவர்தம் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா…”என்றல்லவா சொல்லிக்கொடுதுள்ளார். வேலைப் பளுவின் சுமை குறைக்க இளைப்பார பப்போ பாரோ போகலாம்.. இலக்கியம் , தணன்று கொண்டிருக்கும் என் தேசத்தில் சுகத்திற்கு சொரிந்து கொள்ள அல்ல… வருடம் ஒரு முறை வந்து, ஒய் திஸ் கண்ட்ரி இஸ் லைக் திஸ் என்று கேட்பது, தாயின் கருவறையை கிண்டல் செய்வது போல்… நாங்கள் அல்லாடுகிறோம்… அத்தி புத்தாற் போல் வரும் அப்துல்கலாம் கூட இங்கு விரட்டப்படும் வீணர்கள் நிறைந்த நிலை. இலக்கியத்தை வீரியம் கொண்ட தீப்பந்தமாக நினைக்கும் நாங்கள் வேறு இடம் போகத் தேவையில்லை… அதும் போக, ஐ பாடில் கூட இலகுவாக தமிழில் அடிக்க முடியும். அது அறிய தயவு செய்து , கூகுள் செய்யுங்கள்…. டை கட்ட கத்துக் கொடுத்தான், ஷூ போட்டு கோட் போட்டு ஷோக்க்கா துரை கணக்கா இருக்கட என்று சொல்லிக் கொடுத்தவன், ஒரு கொள்ளையன் என்றே எங்கள் பார்வை செல்லுகிறது. அது அரசியல் … ஆனால் அவன் இலக்கியங்களில் ஆங்கில இலக்கியங்கள் தான் மேன்மை என்ற எண்ணம் ஏற்படுத்தியே நம்மை அடிமையாக்கினான்… ஆனால், ஜப்பான், சைனா, தாய்லாந்து ஆங்கிலத்திற்கு அடிமையாகாமலேயே இன்று கோலோச்சுகின்றன… இருந்த ஓட்டையில் புகுந்து பலரும் வெளியேற காலச் சல்லடையில் மிஞ்சிய நாங்கள், கசடுகள் அல்ல என்று காலம் சொல்லும். காவ்யா, மமன்னன், எல்லோரும் எனக்கு ஒன்று தான்…. ஹார்ஸ்ஸாக எழுதினாலும்… அவர்கள் போராளிகள்…. அவர்கள் அவர்களின் தளநிலையில்…..

  25. Avatar
    Paramasivam says:

    I also second the views expressed by Dr.Johnson.Simply banning writing in English will not be the right solution.Admin should keep watch on the utterances of each and every one.Some people having prejudiced views about some political leaders are misusing this platform.

  26. Avatar
    Dr.G.Johnson says:

    To Mr.Paramasivam: Thank you for your support for the continuation of English in this forum.
    To Punai Peyaril:
    ” AVAIYARINTHU AARAAINTHU SOLLUGA SOLLIN
    THOKAIYARINTHU THOOIMAI YAVAR. “…KURAL 711.

  27. Avatar
    paandiyan says:

    பரமசிவம் என்ன சொல்ல வருகின்றீர்கள் நீங்கள் – சட்டசபையில். கருணானிதியின் நாடா அவிழ்ப்பு பற்றி அனந்தனாயகியிடம் பேசிய … இரு பொருள்பட பேசியது பொய் என்று பொய் சொல்லி என்ன சாதிக்க போகின்றீர்கள்

  28. Avatar
    punai peyaril says:

    தமிழின் முதல் இணையப் பத்திரிக்கை , தமிழில் இருப்பதே சரி. அட்மின் சொவது போல் இனி ஆங்கில கலந்துரையாடல்கள் அனுமதிக்கத் தேவையில்லை என்பது நல்ல முடிவே… கஷ்டப்பட்டு திருக்குறளை ஆங்கிலத்தில் படிக்க தேவையில்லை… இது உணர்வு நிலை கலந்துரையாடல்… தாய்மொழியில் கற்பது போல் இது என் தாய்மொழியிலேயே இருத்தல் வேண்டும் என்றே வருகிறோம். ஜெயபாரதன் போன்ற இலக்கியம் அறிவியலில் கற்றுணர்ந்த பெரியவர்களே இலகுவாக தமிழில் எழுதும் போது மற்றவரும் பின்பற்றலே நன்று. KARKA KASADARA…. என்று போதிக்க நினைப்பது நமது கடைசி அடையாளமான மொழி வடிவையும் அழிக்க நினைக்கும் நிலையே… காதலிக்க நேரமில்லை நாகேஷ் சொல்வதாய, வீ ஒன்லி டைப் டமில் லெட்டர்ஸ் இன் இன்கிலிஷ் என்றால் இங்கு தங்கலீஷே மிஞ்சும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *