author

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023

This entry is part 13 of 14 in the series 19 மார்ச் 2023

அன்புடையீர்,                                                                                          12 மார்ச் 2023          சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: பாதாளத்தை வடிவமைத்தல்: பேயோவுல்ஃப், கிரெண்டல் – நம்பி தமிழ்ப் பண்பாட்டின் குரல் – கிருஷ்ணன் சங்கரன் (டி எம் சௌந்திரராஜன் பற்றி) அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம் – ஜெகன்நாதன் லண்டானா கமாரா – லோகமாதேவி மயக்கமா, கலக்கமா, அறிந்ததில் குழப்பமா, அறிவதே சிக்கலா? – உத்ரா பாபிலோனின் மாபெரும் பணக்காரர் -கேஷவ் கேதார்நாத் – லதா குப்பா  (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 7) மரத்தில் மறைந்தது மாமதயானை – பானுமதி ந. சக்குராவின் சலனம் – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் -20) சிறுகதைகள்: ரத்னா – வி. விக்னேஷ் […]

சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்

This entry is part 12 of 14 in the series 19 மார்ச் 2023

அண்ணாகண்ணன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.

கப்சா கதிர்வேல் x ஊர்தின்னி மாசிலாமணி

This entry is part 9 of 14 in the series 19 மார்ச் 2023

லாவண்யா சத்யநாதன் பம்பரமாய் சுழலும்தலையுடனிருந்த ஒருவன்உதார்கள் கப்சாக்கள் சவடால்கள்மற்றும் மாயங்களைநாற்சந்திக் கூட்டத்தில்எருமைக்குரலில் பரப்பிக் கொண்டிருந்தான்.பாதி உண்மைகளை, மெய்போலும் பொய்களைவரலாறாக்கும் ஒருவன்பிரசங்கியின் கப்சாக்களில் ஒன்றின் மீதானபுகாரை நிரப்பினான் தினசரியில்.காகிதம் தினம் தின்று கழிசடையான ஒருவன்ஊர்தின்னி மாசிலாமணியை உசுப்பிவிட்டான்.கடலின் உப்புக்கும் காற்றின் நச்சுக்கும்ஆண்மலடுக்கும் ஆன்லைன் ரம்மியாடிகளின் தற்கொலைக்கும்எருமைக்குரல் காரணமென்று தீக்குச்சியைக் கொளுத்திவேலாயுதம் தண்டாயுதம் இருவரிடம் தந்தான் ஊர்தின்னி.நகர்நடுவில் தடியர் கூட்டம் கூடலாச்சு.போக்குவரத்து நின்னு போச்சுகடைகள் சேதமாச்சு. கார்கள் எரிஞ்சு போச்சு.அப்பிராணிகள் இரண்டு சவமாச்சுஉடலில் பாதி தெரியும் உடையில்கடைவீதிக்குச் சென்ற ஆண்டிக்கு […]

உறவு

This entry is part 8 of 14 in the series 19 மார்ச் 2023

லாவண்யா சத்யநாதன் தாய் மகள் உறவிலும்தாவணிப் பரவும் மாறியபின் திரைகளுண்டு.வடிவும் வனப்பும்கூடதந்தை மகள் உறவில் திரைகளுண்டுசெழிப்புகூடி சேலையுடுத்தசகோதர உறவில் திரைகளுண்டு.ரத்த உறவுகளென்றாலும் அவைமனதளவிலான உறவுகளாய் மாறும்.நம் உறவு உடலும் உள்ளமும் இணைந்த உறவு.உயிருள்ளவரை மாறா உறவு.திரைகளில்லா உறவு.எச்சிலும் வேர்வையும் இன்னபிறவும் கலந்த உறவு.உன் ஒவ்வொரு மயிர்க்காலின் நினைப்பும்என்னாலறியமுடியும் உறவு.எவளைப் பார்க்கினும் ரம்பையாய் தெரியும்கிளியைவிட்டுக் குரங்கைத் தேடும்நடுவயதுக் கிறுக்கு உன்னைப் பிடித்திருப்பதைநானறியும் உறவு.மோரில் நனைத்த கரண்டியைபாலில் கலக்கமுடியாதென்றுஉன் காதைத் திருகிஉன்னைக் கட்டிப்போடும் உறவு.—-லாவண்யா சத்யநாதன்

குவிகம் ஒலிச்சித்திரம் 

This entry is part 7 of 14 in the series 19 மார்ச் 2023

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும்  புதிய ஓலிச்சித்திரம் வெளியீடுமார்ச் 19, 2023                                     மாலை 6.30 மணி          அளவளாவல் தொடர்ந்து                                              குவிகம் […]

எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.

This entry is part 5 of 14 in the series 19 மார்ச் 2023

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ +++++++++++++ காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் மையத்தில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை இயங்கிகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருக்கருவை இடையேபெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நிறுத்தம் அடைந்தும்விட்டு விட்டு வேலை செய்வது !வெளிக் கருவிலேகனல் குழம்பைச் சமைத்துக்கொதிக்க வைக்குது !  கனல் குழம்புகுவல யத்தைக்குத்தூசி போல் குடைந்துபீறிட்டெழும் எரிமலைகள் !தாறு மாறாய்ஏறி, இறங்கி ஊர்ந்திடும்தாரணியின் குடல் தட்டுகள் !அங்கிங் கெனாதபடிபொங்கிப் பீறிடும்பூதக் கனல் எரிமலைகள் […]

படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் என். செல்வராஜா ஆவணப்படுத்தியிருக்கும் வீரகேசரியின் பதிப்புலகம்

This entry is part 4 of 14 in the series 19 மார்ச் 2023

முருகபூபதி மலர்ந்துள்ள 2023 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வந்தால், இலங்கையின் தமிழ்த்தேசிய தினசரியான வீரகேசரி பத்திரிகைக்கு 93 வயது பிறந்துவிடும்.இலங்கைத் தமிழ் இதழியலில் காத்திரமான சேவையை மேற்கொண்டுவந்திருக்கும் வீரகேசரி சமூக, அரசியல் செய்தி ஏடாக மாத்திரம் துலங்காமல், கலை, இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும் காத்திரமான பணிகளை தொடர்ச்சியாக வழங்கியது. வீரகேசரி பாசறையில் வளர்ந்த பலர், பின்னாளில் சிறந்த ஊடகவியலாளர்களாகவும், படைப்பிலக்கியவாதிகளாகவும் உருமாறினர்.எண்ணிலடங்கா சிறுகதைகள், தொடர்கதைகள் , அரசியல் ஆய்வுகளை வெளியிட்டு வந்திருக்கும் வீரகேசரி […]

அகழ்நானூறு 19

This entry is part 2 of 14 in the series 19 மார்ச் 2023

சொற்கீரன். எருத்தத்து இரீஇ வன் தொடை மணிவில் ஏந்து அலைஞர் வெறிகொள் வன்சுரம் கடவு எறி செலவின் நுழைபடுத்தாங்கு பொருள்சேர் உலகம் புகுவதுள்ளி நற்றிழை நலிய இறை ஊர்பு அறுவளை  வளையின் நெகிழ நோதல் நன்றோ? குளவிப்புதற் கண் அரவுஎறி அஞ்சி பூவின் வள்ளிணர் விடுப்ப விழையா அந்தொகை அவிர்க்குரல் அகவல் வரித்து விரித்த பூவுள் நின் முகன் நோக்கும். கறிமுறி இவரிய கழைமுனை ஓடி கடுவன் வேர்க்கும் மந்தி நகை ஊட‌ அஃதே ஒக்க அவனும் […]

குழந்தையாகி நல்கி

This entry is part 1 of 14 in the series 19 மார்ச் 2023

எப்படி அகம் மலர்ந்துமுகமெல்லாம் சிரிக்கும்கைக்குழந்தையைத் தன்இடுப்பிலேந்தி அவள்கையேந்தும் முன்,குறிப்புணர்ந்து அவன்,குலையிலோர் ’இளநி’யைச் சீவிஅவள் இரவாதது போல் ஏற்கஅவன் ஈயாதது போல் அளிக்கிறான்ஈதலும் இரத்தலுமின்றிஉயர்ந்தென்றும் இழிந்தென்றுமின்றி?ஆச்சரியமாய் அதை நான்கண்டபோது தான் கண்டேன்அவ்வளவு அது ஆச்சரியமில்லையென்று,எவ்வளவு அழகாய்அவள் குழந்தை தன்அமுதமெனும் கொள்ளைச் சிரிப்பைபிறர் இரந்து தான் ஈயாததாயும்தான் ஈந்து பிறர் ஏற்காததாயும்யாவருக்கும் –ஒருவருக்கல்ல-வாரி வழங்குதலைக் கண்டு-ஒருவேளை எனக்கு முன்னமேயேஅவன் குழந்தையை நான்கண்டது போல் கண்டுஆச்சரியமாகி ஒரு கணம்தானே குழந்தையாகிக்குழந்தையைப் போல்யாவருக்கும் இல்லையாயினும்குழந்தையின் தாய்க்குஅப்படிஇளநியை நல்கினானோ?ஆனால்வெறுமனே குழந்தையைக்கொஞ்சுவதை விடஎவ்வளவு இயல்பாய்எவ்வளவு மேலானது […]

ஆப்பிரிக்காவில் இந்தியா: தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் மாறிவரும் முகம்

This entry is part 11 of 13 in the series 12 மார்ச் 2023

மீரா வெங்கடாசலம் மற்றும் டான் பானிக் உலக விவகாரங்களில் அதிக செல்வாக்குமிக்க பாத்திரத்தை வகிக்கும் குறிக்கோளுடன் செயல்படும் புது தில்லியின் வெளியுறவுக் கொள்கை, அதன் உத்தியாக வெளிநாடுகளில் உதவி மற்றும் முதலீட்டுக் கொள்கைகளை வகுக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் நீண்டகால பிரச்சாரத்திற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவு முக்கியமானது என்பதால், இந்தியாவின் திட்டங்களில் ஆப்பிரிக்க கண்டம் எப்போதும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது . அதிகமான இந்திய நிறுவனங்கள் உலகளாவிய இருப்பை நிறுவ முயல்வதால், […]