This entry is part 21 of 23 in the series 6 ஜூன் 2021
தமிழ் மாநிலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எத்தனை முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் சாதனை என்ன என்று கணக்குப்போட்டுப்பார்த்து இருக்கிறோமா ? நமது. அரசுத்துறை தமிழ் வளர்ச்சியில் சாதித்தது என்ன என்று கணக்குக்கொடுக்கமுடியுமா ? அரசு நூலத்துறைக்கு புது ப்புத்தகங்கள் வாங்குவதை ஆராய்ந்து பார்த்தது உண்டா என்ன ? சம்பந்தப்பட்டவர்கள் தம் மனசாட்சியைத் தொட்டு நூலகத்திற்குப்புத்தகங்கள் வாங்குவதில் எத்தனை நேர்மையாக அவர்கள் நடந்துகொண்டார்கள் என்பதை வெளியில் சொல்ல வாய்க்குமா ? அப்படி இப்படி சில நூல்கள் அரசு நூலகத்துக்குத் […]
கல்யாண மண்டபங்கள் பத்து மாதமாய் மூடிக்கிடக்கின்றன தெருவில் தினம் தினம் வந்த சலவைக்காரன் மாதங்கள் பல ஓடிப்போயின ஆளைக்காணோம். சலூன்கடை பக்கம்தான் யார் போனார்கள் கழித்தலும் அந்த வழித்தலும் அவரவர் வீட்டுக்குள்ளேயே பாத்திரம் தேய்க்கும் வீடுபெருக்கும் பாப்பாவுக்கு எத்தனையோ மாதமாய் விடுப்பு பள்ளிகள் எல்லாம் சாத்தித்தான் கிடக்கின்றன. கோவிலும் இல்லை குளமும் இல்லை உண்மையுமாய் இன்மையுமாய் தானேயது. அவசியமாய் மட்டுமே கடைக்குப்போதல் அச்சப்பட்டுக்கொண்டே காரியம் பார்த்தல் முகக்கவசம் சமூக இடைவெளி உண்டென்றால் இவை உண்டு இல்லையென்றால் […]
எஸ்ஸார்சி விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள ஒரு அற்புதமான கவிதைத்தொகுப்பு. தமிழக அளவில் பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது இந்நூல். நல்ல கதாசிரியர் வளவதுரையன். பல சிறுகதைத்தொகுப்புக்களை வாசகர்களுக்குத் தந்தவர். புதினங்கள் சிலவும் சிறப்பாகப்படைத்துள்ளார். எழுத்தாளர் பாவண்ணனுக்கு மிக நெருக்கமானவர். வளவனூரார்.. வளவனூர் மண்ணை மறக்காமல் தன் பெயரோடு இணைத்துக்கொண்டு எழுத்துலகில் வெற்றி நடை போடுகிறார். பெருமிதமாகவே இது என்றும் எல்லோருக்கும் இருக்கிறது கடலூர் மண் அற்புதமான மக்களைப்பெற்றுப் பலபெருமை கொண்டுள்ளது தமிழ் .இலக்கியச்செல்வர்கள் அங்கு இன்றும் ஏராளமானவர்களே. நடு நாட்டு […]