author

அம்மனாய்! அருங்கலமே!

This entry is part 23 of 23 in the series 16 மார்ச் 2014

  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். இப்பாசுரத்தில் பெண்களெல்லாம் கிருஷ்ணனைக் கண்டு மயங்கும்போது, அவன் தன்னைக் கண்டு மயங்கும்படியான பெருமை கொண்ட ஒருத்தியை எழுப்புகிறார்கள். பல பிள்ளைகள் படிக்கும்போது ஒருவன் மட்டும் திறமையானவாய் இருப்பது போலே எல்லாப் […]

மனத்துக்கினியான்

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் பன்னிரண்டாம் பாசுரமான இதில் இராமபிரானுக்கு இளையபெருமாளைப் போலே கிருஷ்ணனுக்கு இடைவிடாமல் கைங்கர்யம் செய்து வருபவனின் தங்கையை எழுப்புகிறார்கள். அவன் எப்பொழுதும் கண்ணனுடனேயே சுற்றிக் […]

”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

    ஒரு பயண நூல் எழுதுவது என்பது எளிதான செயலன்று. அதை விட அதனை வாசிப்பது என்பதும் சாதாரண செயலன்று. ஏனெனில் பயண நூல் படிக்கும் போது அதை எழுதிய பயணியுடன்  சேர்ந்து நாமும் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லக் கூடிய மனப் பாங்கினைப் பெற வேண்டும். அதற்கு ஏற்றபடி அப்பயண நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏதோ போனோம் வந்தோம் என்றிராமல் தான் சென்ற இடங்களில் பார்த்த மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, அவர்களின் மொழி, பண்பாடு, […]

தூமணி மாடம்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூப[ம]ம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையில் இது ஒன்பதாம் பாசுரமாகும். மார்கழி நோன்பு நோற்பதற்காக ஒவ்வோர் இல்லமாகச் சென்று எழுப்பும் பெண்கள் இப்போது உடைமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உரிமை என்று […]

கீழ்வானம்

This entry is part 4 of 20 in the series 16 பெப்ருவரி 2014

கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு, மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும், போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து,உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்; கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய, தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால், ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். திருப்பாவையின் எட்டாவது பாசுரம் இது. இப்பாசுரத்தில் எல்லாராலும் விரும்பப்பட்ட, எல்லாரும் அவளிடத்தில் நெருங்கி வரக்கூடிய பெருமை உள்ள கிருஷ்ணனாலே விரும்பப் பட்டுக் கிருஷ்ணனைத் தன் வசத்தில் வைத்துள்ள ஒருத்தியை எழுப்புகிறார்கள். அவளை […]

பூக்களைப் பற்றிய புதுமைச் செய்திகள் [”கடல்” நாகராசனின் அதிசய மலர்கள்—1000 நூலை முன் வைத்து ]

This entry is part 22 of 24 in the series 9 பெப்ருவரி 2014

  கடல் நாகராசன் எப்பொழுதும் தேனீயைப் போல சுறுசுறுப்பாய் மிகவும் உற்சாகமாய் ஏதேனும் செய்துகொண்டே இருப்பவர். பல தலைவர்களின் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் பிறந்த நாள்களைத் தவறாமல் கொண்டாடி வருபவர். அந்த விழாக்களில் மாணவர்களுக்குப் போட்டி வைத்து பரிசுகள் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி வருபவர். அவர் தேனீ எப்படி ஒவ்வொரு மலராகச் சென்று சென்று தேனை எடுத்து வருமோ அதேபோல பல புத்தகங்களைப் படித்து அப்புத்தகங்களில் மலர்களைப் பற்றி உள்ள தகவல்களை எல்லாம் தொகுத்து இந்நூலாக ஆக்கித் […]

”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  ’செங்கிஸ்கான்’ என்பதே தவறான உச்சரிப்பு. சிங்கிஸ்கான் [chinkhis khan] என்பதே சரி. மங்கோலியர்க்கு மிகவும் விருப்பமான விலங்கு ஓநாய். Chin என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. வலிமையான, உறுதியான, அசைக்கமுடியாத, பயமற்ற, ஓநாய் எனும் பொருளில் ‘டெமுஜின்’ என்பவனுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடந்து எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை எல்லாம் மங்கோலியர் எனும் ஒரே பெயரில் கொண்டு வந்து அவர்களின் வீரத்தால் ஒரு பேரரசை அமைக்க வேண்டும் என்ற டெமுஜினின் கனவு […]

”ஆனைச்சாத்தன்”

This entry is part 4 of 18 in the series 26 ஜனவரி 2014

         கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே, காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து, வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ, நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி, கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ, தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய் திருப்பாவையின் ஏழாவது பாசுரமான இதில் பகவானின் பெருமையை அறிந்திருந்தும் மறந்து கிடப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். அவளோ ”உள்ளிருந்தே பொழுது விடிந்துவிட்டதா?” என்று கேட்கிறாள்.                          “       […]

”புள்ளும் சிலம்பின காண்”

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

    “புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ, பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும், மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம், உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையில் ஆறாம் பாசுரம் இது. மார்கழி நோன்பு நோற்பதற்காக விடியற்காலையில் எழுந்து புறப்படும் ஆயர் சிறுமிகள் ஒவ்வொரு வீட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புகிறார்கள். […]

அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

தயரதன் மதலையாய்த் தாரணிவருவேன் என்று தந்த வரத்தின்படி எம்பெருமான் இராமபிரானாக அவதரித்தார். அவர் ”மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ?” என்று சிற்றன்னையிடம் உரைத்து தம்பியுடனும் சீதையுடனும் வனம் புகுந்தார். அங்கு வந்த சூர்ப்பனகை தகாத சொற்கள் பேச அவள் இளைய பெருமாளால் தண்டிக்கப்பட்டாள். அவள் சென்று இலங்கை வேந்தனிடம் முறையிட அவன் சீதா பிராட்டி மீது ஆசை கொண்டான். இதைத் “தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்” என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுவார். மேலும் அவ்வாறு […]