SECOND THOUGHTS [ஸெகண்ட் தாட்ஸ்] கவிஞர் நீலமணியின் ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு

This entry is part 2 of 40 in the series 26 மே 2013

கடந்த 55 ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறவர் கவிஞர் நீலமணி. தமிழ் சிறுபத்திரிகைகளுக்கு நன்கு அறிமுகமானவர். சமூகவுணர்வு மிக்க அதேசமயம் கவித்துவம் குறையாத கவிதைகளை கணிசமான எண்ணிக்கையில் எழுதியிருப் பவர். அவருடைய கவிதைகளில் நிறைய நீள்கவிதைகளும் உண்டு. தமிழ் வளர்ச்சிக் கழகம் விருது, பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் வழங்கப்பட்ட பாவேந்தர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய வலைப்பூ தமிழ்க்கடலில் கவி அலைகள். www.kavineelamani.blogspot.com
 

neelamani 3ஆங்கிலமொழியிலும் தேர்ச்சிபெற்றவரான அவர் நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு SECOND THOUGHTS  என்ற தலைப்பில் சேகர் பதிப்பகத்தால் [சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை-600 078- தொலைபேசி 97890 72478] சமீபத்தில் வெளியாகியுள்ளது.

 

தாய்மொழியில் எழுதுவதில்தான் தனி இன்பம் என்றும், எனில் ஆங்கிலம் மூலம் நம் இலக்கிய வெளியிலும் வாசக வெளியும் விரிவடையும் என்பதால் இந்த முயற்சி என்று தன் முன்னுரையில் தெளிவுபடுத்தியுள்ளார் கவிஞர் நீலமணி.

 

“Language is a fetter. Language adds a wing as well. More doors open more ways. Knowingly or unknowingly English has given us a medium to converse with the world. We can have a global reach, almost. I really think that spreading opinions could take human civilizations into more matured heights”

என்கிறார்.

 

முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் ஆர்.கணபதி, திரு.ம.லெ.தங்கப்பா, வடமலய் மீடியா தலைவர் திரி. வி. ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் அடர் செறிவான முன்னுரைகளும் இந்தக் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கவிதைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றின் கருப்பொருள்கள் தமிழ்மண்ணுக்கும் தமிழ் மொழிக்குமே உரிய, அதேசமயம் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற அகண்ட மனிதநேயப் பார்வையைக் கொண்டதாக அமைந்துள்ளன.

 

முன்னுரையில் தன்னுடைய இந்த ஆங்கிலக்கவிதைத்தொகுப்பை கும்பகோணத் தில் தான் படித்த உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியருக்கு    சமர்ப்பணம் செய்துள்ளார் கவிஞர் நீலமணி.

 

“I am dedicating this book to my English teacher Mr.C.M. Parthasarathy Ayyangar of the Banadurai High School, Kumbakonam whose English has been my window into the world. I cherish the memories of his teaching and the care he had for his students”.

 

ஆசிரியப்பணியின் மகத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை!

 neelamani's poem-collection in english

மூத்த பதிப்பாளரான திரு. வெள்ளையம்பட்டு சுந்தரம் ஆங்கிலத்திலேயே கவிதைகள் எழுதி அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடும்படி தன்னை ஊக்கு வித்ததாகக் குறிப்பிட்டுள்ள கவிஞர் நீலமணி இந்தத் தொகுப்பில் எழுதப் பட்டுள்ள கவிதைகள் நேரடியாக ஆங்கிலத்தில் தன்னால் எழுதப்பட்டவை என்றாலும் ஏற்கனவே எழுதிய தமிழ்க்கவிதைகளில் இடம்பெற்றுள்ள சில கருப் பொருள்கள் அல்லது விவரிப்புகள் அவற்றில் இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு என்கிறார்.

 

முனைவர் திரு.அவ்வை நடராஜன் தன்னுடைய அணிந்துரையில் தனது வகுப்புத்தோழராக இருந்த கவிஞர் நீலமணியின் அறிவாற்றலையும் கவித்துவத் தையும் நினைவுகூர்ந்து வியந்து பாராட்டியிருப்பதோடு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சிலவற்றைப் பற்றி அக்கறையோடு தனது வாசகப் பிரதிகளையும் தந்துள்ளார்.

 

கவிஞர் நீலமணியின் உறுதியாக, வேராழ்ந்திருக்கும் நம்பிக்கைகளும் கொள்கை களும் அவருடைய கவிதைகளைக் கவிதையாக்குகின்றன என்கிறார் ஆங்கிலப் பேராசிரியரும் அமெரிக்க-ஆங்கிலத்தில் புலமை பெற்றவருமான முனைவர். ஆர்.கணபதி.

 

ஒரியா, கன்னடம், மலையாளம், வங்காளம் போன்ற இந்திய மொழிகளில் கவிஞர்கள் தங்கள் தாய்மொழியோடு ஆங்கிலத்திலும் கவிதை எழுதுகிறார்கள் அல்லது பரவலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறார்கள் என்று குறிப் பிடும் திரு.ஈசுவரமூர்த்தி தமிழில் இந்த நிலைமை இல்லை என்று ஆதங்கத் தோடு குறிப்பிடுகிறார். அந்த வகையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தன் வகுப்புத்தோழராக இருந்த கவிஞர் நீலமணியின் இந்த ஆங்கில கவிதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்கது என்று சுட்டிக்காட்டுகிறார்.

 

இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைச் சுட்டி அவற்றின் நேரிய அம்சங்களைக் குறித்துக்காட்டும் தமிழ்ப்பேராசிரியரும் அறிஞருமான திரு.ம.லெ.தங்கப்பா, கவிஞர் நீலமணியின் கவிதைகள் நிறைவான வாசிப்பனுபவம் தருபவை என்றும் ஒரு நல்ல கவிதை நம்மால் புரிந்துகொள்ளப்படுவதற்கு முன்பாகவே தன்னை உணர்த்திவிடுகிறது என்ற கூற்றை நீலமணியின் கவிதைகள் மெய்ப் பிக்கின்றன என்றும் தகுந்த சான்றுகளோடு எடுத்துக்காட்டுகிறார்.

 

தமிழில் தரமான கவிஞர்களுக்குப் பஞ்சமில்லை. மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பஞ்சமில்லை. இருந்தும், விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்க் கவிஞர்களே இதுவரை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனர். தரமான தமிழ்க் கவிதைகளும், தமிழ்க்கவிஞர்களும் ஆங்கிலத்தில் இன்னும் பரவலாக மொழி யாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம். அந்தவகையில் கவிஞர் நீல மணியின் ஆங்கிலத்தொகுப்பு ஒரு தமிழ்க்கவிஞரின் கவிதைப்போக்குகளை அடையாளங்காட்டுவதாக அமைந்துள்ளது.

 

 

இந்தக் கவிதைத்தொகுப்பை அன்புகூர்ந்து எனக்கு அனுப்பிவைத்திருந்த கவிஞர் நீலமணியிடம் தொலைபேசி மூலம் ஒரு குறும் பேட்டி எடுத்தேன். அது பிவருமாறு:

 

 

 neelamani 1

எப்பொழுதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? எது உங்களுக்குக் கவிதை எழுத உந்துதலாக இருந்தது?

 

தமிழ் என்னுடைய சிறப்புப் பாடமாக இருந்தது. தமிழ் மொழியின் மீது நான் கொண்ட தீராத நேசம், பற்று தான் என்னைக் கவிதையெழுதத் தூண்டியது. 1955இல் விந்தன் எழுத்தாளர் எழுதிய மனிதன்ங்கற கவிதை, சுரதா காவியம், என பல உந்துதல்கள். இலக்கிய இதழ்களில் கல்லூரி இதழ்களில் என்று எழுதத் தொடங்கினேன்.

 

அகவயமான கவிதைகளைத் தான் எழுதவேண்டும், புறவயமான, சமூகஞ்சார்ந்த கவிதைகளைத் தான் எழுதவேண்டும் என்று ஏதேனும் கோட்பாடுகள் வைத் திருந்தீர்களா?

 

அப்படியெல்லாம் கிடையாது. மனித வாழ்க்கையைக் கொண்டாடுதல், துன்பங்க ளுக்கான காரணங்களை அறிதல், தமிழ் நயங்களைப் பகிர்ந்துகொள்லுதல் ஆகிய மூன்று நோக்கங்களே நான் கவிதை எழுத முக்கியக் காரணங்களாக என் கவிதைகளின் கருப்பொருள்களாக அமைந்தன.

 

கவிதை எழுதுவதற்கான உந்துதல் அல்லது தாக்கம் உங்களுக்கு எதிலிருந்து கிடைக்கிறது?

 

பெரும்பாலும் செய்தித்தாளிலிருந்து. அதில் வாசிக்கக் கிடைக்கும் செய்தி அல்லது செய்திகள் மனதை உறுத்திக்கொண்டேயிருக்கும்போது கவிதை எழுத வேண்டும் என்ற வேகம் ஏற்படுகிறது.

 

ஒரு கவிதை குறுங்கவிதையாக இருக்கவேண்டும் அல்லது நீள்கவிதையாக இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு எழுவதுண்டா?

 

இல்லை. கவிதை அதன்போக்கில் தனக்கான வரிகளை நிர்ணயித்துக்கொள் கிறது என்பதே உண்மை.

 

 

இன்றைய கவிதைச்சூழல் குறித்து..?

 

இன்று கவிதை ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே சமயம் விற்பனையாகும் சரக்காகும்போது கவிதை மலினப்படுத்தப்படுகிறது.

 

மேலும் ஆங்கிலக்கவிதைதொகுப்புகள் கொண்டுவரும் உத்தேசமுண்டா?

 

அடுத்து என்னுடைய தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு.

 

 

 

கவிஞர் நீலமணியின் SECOND THOUGHTS தொகுப்பிலிருந்து சில குறுங்கவிதை கள் கீழே தரப்பட்டுள்ளன:

 

 

1.ENDLESS CHANT

 

Cell-phone mantras’ endless chant

Calling out a god non-existent.

 

When the century ends

Your ear would evolve into cell.

Human cells, perhaps.

 

Tears evaporate quicker under 3G.

 

Let us call connecting people ‘YESKIA’.

 

Air-conditioner silently brings in fresh air.

The only smile in the room

is on the artificial flower vase.

 

 

2.UNCLOCKED DAYS

 

I am not nameless

I am named in employment exchange register

My name has a serial number.

 

Now these are my subsistence days.

 

Language averts my tongue.

Dreams avoid my sleep.

 

Smothered in vacuum, confused in action.

Acid words are gunned at me.

Silence of neglect is more painful.

 

The town cancels me with quiet ease.

 

3.FAULTY LINE

 

blood freezing under the snows.

HIMALAYAN BLUNDER BURIED IN HISTORY.

INDS AND Chins wander over hills

Searching for the elusive line.

Both are shivering alike

But opposite flocks, warm with arms.

 

When the ice breaks

Laying stones bare

McMohan* can be seen by all

 

* McMohan: In the year 1962 China and India clashed over sovereignty on  certain Himalayan areas. Indians based their claims on the McMohan line, a boundary line drawn by the British officer, McMohan. A book titled The Himalayan Blunder has also been published on this episode by a former military officer. The dispute remains still unsettled.

 

 

4.SMALL SCALE GODDESSES

 

Education is alleged to be free.

Some students pay a heavy price.

 

Injuries are common in the battlefield.

Some schools inflict equal qounds.

 

‘Saraswathi* – is she a step-mother?

 

Expecting a soft treatment

Teaching has been allocated to women.

Alas! They claim equal rights to harm and maim!

 

Use of scales they have misunderstood.

 

Is it not an education tool?

How to use it my dear fool!

Bot as weapon, not at all.

 

You have become rulers in this supposed democracy.

 

Ring the bell, OK, not wring the child’s ear.

 

Instead of knowledge

These uncrowned queens

Dispense pain and punishment.

 

 

* Saraswathi _ the goddess of Learning.

 

 

Series Navigation“பொன்னாத்தா”ஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    கவிஞர் இராய செல்லப்பா says:

    தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஆங்கில நூல்களைத் தமிழர்களே அதிகம் படிப்பதில்லை என்பது தான். ஆங்கிலம் என்றாலே அமெரிக்க, பிரிட்டிஷ் ஆசிரியர்களைத் தான் அதிகம் ரசிக்கிறார்கள், தமிழர்கள். எத்தனை வீடுகளில் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது? இத்தனைக்கும், அவர்கள் வீட்டு மாணவர்கள் ஆங்கில மீடியத்தில் தான் படிக்கக்கூடும். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பிற்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகங்களும், செம்மொழி ஆய்வகங்களும் சிறப்பான முயற்சி மேற்கொண்டு தான் வருகின்றன. ஆனால், பொது மக்கள் போதிய ஆதரவு தருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. -–நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  2. Avatar
    லதா ராமகிருஷ்ணன் says:

    மதிப்பிற்குரியீர்,

    வணக்கம். மொழிபெயர்க்கப்படும்போது மூலநூலின் நடை சார்ந்த, உள்ளடக்கம் சார்ந்த நயமும் செறிவும் ஆழமும் பாதிக்கும் குறைவாகவே இலக்குமொழியில் பெறக்கிடைக்கின்றன என்பதே உண்மை. எனவே, தமிழ் அறிந்தவர்கள் தமிழ் படைப்புகளின் ஆங்கில மொழியாக்கங்களைத் தேடிப்படிக்க மாட்டார்கள். தமிழிலேயே படித்து அனுபவிக்கத்தான் விரும்புவார்கள். அது இயல்பு. மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கமும் தேவையும் மூலமொழியின் இலக்கிய, சமூக கலாச்சார வளங்களை தமிழறியாத பிற மொழியினருக்கு எடுத்துச்செல்வதுதான்.

    வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞன் எழுத்தா ளர் ஜெயகாந்தனின் படைப்புகளை ஆங்கிலத்தில் படிக்கநேர்ந்த போது இத்தனை ஆழமான படைப்புகள் தமிழில் வருகின்ற னவா என்று மலைத்துப்போய்க்கேட்டதாக டாக்டர். கே.எஸ். சுப்ரம ணியனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள ஜெயகாந் தனின் புதினமொன்றின் முன்னுரையில் இப்படி தமிழறியா தலைமுறைக்கு நம் மண்ணின் இலக்கிய வளத்தை உணர்த்தவும் ஆங்கில மொழிபெயர்ப்பு பயன்படுவதை அறிந்துகொண்டதாக எழுத்தாளர் எடுத்துரைத்திருக்கிறார்.

    இந்தி, வங்காள, மலையாள, ஒரியப் படைப்புகளோடு ஒப்பிட தமிழ் படைப்புகள் எழுத்தாக்கங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அரசு சார் துறைகள், அமைப்புகள் இந்தப் பணியை மேற்கொண்டுவருகின்றன என்றாலும் அவற்றின் மூலம் மொழிபெயர்ப்புக்கு எழுத்தாக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் நிறையவே ’அரசியல்’ இருக்கிறது என்பது நடப்புண்மை. அரசியல் செல்வாக்குடையவர்கள் எனில் ஒரு புத்தகம் எழுதியிருந்தாலும் மொழிபெயர்க்கப்பட்டுவிடுகிறது. அரசுத்துறைகளும் அமைப்புகளும் இதைத்தான் அதிகம் செய்துவருகிறது.

    சமகால எழுத்தாக்கங்களும் படைப்பாளிகளும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்யப்படுவது அரிதாகவே இருந்துவருகிறது. இதில் பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புத்தக நிலையம் போன்ற பதிப்பகங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளைக்கூட அரசு அமைப்புகள் கையிலெடுப்பதில்லை என்பதுதான் நடப்பு நிலவரம்.

    நன்றி

    தோழமையுடன்
    லதா ராமகிருஷ்ணன்

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      அரசாங்கத்தைக் குறை சொல்கிறார். மடிக்கணணி கொடுப்பதிலிருந்து மசாலா அரைத்துத்தருவது வரை அரசாங்கமே செய்துதரவேண்டுமென்று அம்மணி லதா இராமகிருஸ்ணன் அவர்கள் நினைக்கிறார்கள். என்னே இயற்கை!

      ஒரு சிறந்த நாவல் வெளிவந்து பெருவரவேற்பைப்பெற்றுத் இன்றைய தமிழ் இலக்கியத்துக்கு மெருக்கூட்டுகிறது; அல்லது அன்றைய இலக்கியத்துக்கு அணி சேர்ந்து இன்றுவரை இன்பம் தருகின்றது.

      இஃதேன் ஆங்கிலமொழி தெரிந்தோரூக்காக அம்மொழியில் பெயர்க்கப்படவில்லை? ஏன் தமிழருக்குள்ளேயே முடங்கிக்கொள்கிறது? என்று கேள்வி கேட்டால் பதில் என்ன வருகிறது தெரியுமா?

      அரசாங்கம் செய்யவில்லை.

      வங்க; ஒரியா, ஹிந்தி என்றெல்லாம் இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உலகளாவி செல்கின்றன. அங்கெல்லாம் உள்ளவர்கள் அரசாங்கத்தையா நம்பி இருந்தார்கள்?

      ஒளிந்து கொண்டுகிடக்கும் அல்லது மூடிமறைக்கப்படும் உண்மை என்னவென்றால், இன்றைய தமிழரிடையே ஆங்கிலப்புலமை உள்ளோர் அருகிவிட்டார்கள்; எனபதே.

      அப்படியே ஒரு சிலர் இருப்பின் அவர்கள் நினைப்பு இப்படிப்பட்ட இலக்கியச்சேவைக்காக தம் புலமையைத் தாரைவார்க்க வேண்டுமென்பதுதான். மொழிபெயர்ப்பில் என்ன கிடைத்துவிடும்?

      உண்மைதான். என்ன கிடைக்கும்? சொல்லுங்கள்.

  3. Avatar
    IIM Ganapathi Raman says:

    ஆங்கிலப்புலமை இருந்தால் மட்டுமே போதாது; அஃதுடன் இலக்கிய இரசனையும் ஒருவருக்கு வேண்டும். பின்னர், தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் என்ற உணர்வும், தம் தாய்மொழி இலக்கியம் பிறரால் பாராட்டவேண்டும்; தம்மொழியும் தம் கலாச்சாரமும் தம் இலக்கியமும் விதந்தோதப்படவேண்டும் என்ற தீரா தாஹமும் ஒருவருக்குத்தேவை

    இவையனைத்தும் இன்று எவருக்கு இருக்கின்றன? அப்படி தமிழர் இன்றுண்டா?

    இவற்றுள் ஓரிரண்டு இருந்தால் கூட போதும். செய்வார்கள். ஜி யு போப்பையர் செய்தார். தான் பெற்ற இன்பம் இவ்வுலகம் குறிபபாக தம்மொழியைத் தாய் மொழியாகக்கொண்ட ஆங்கிலேயர்களும் பெறட்டும் எனத் திருக்குறளையும் திருவாசகத்தையும் மொழிபெயர்த்தார். அ சீ ரா செய்தார்: க நா சு செய்தார். மஹாராஜன் செய்தார்.

    இன்று எவருமில்லை. எனவேதான் மொழி பெயர்ப்பு இயற்கை மரணம் எய்திவிட்டது. Non availability of competent translators has led to natural death of translation.

    அரசாங்கத்திடம் என்ன மந்திரக்கோலா இருக்கிறது. சூ மந்திரக்காளி என்றவுடன் தமிழருக்கு ஆங்கிலப்புலமையும் நான் சுட்டிய மேற்குணங்களும் வானத்திலிருந்து அவர் மேல் பொழிவதற்கு?

    பசு மாடு பால் தர மறுத்தால், காளைமாட்டின் மடுவையாவது இழுத்துப்பார்ப்போமே என்பதுதானே பொது மக்கள் ஜனத்தின் குணம்?

Leave a Reply to லதா ராமகிருஷ்ணன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *