அதீதம்

This entry is part 10 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

அதிகாலையிலேயே
மழை ஆரம்பித்துவிட்டது
காலையில் செய்வதற்கு
ஒன்றுமில்லை
சாப்பிடுவதைத் தவிர
விடுவிடுவென ஓடிப்போய்
கதவைத் திறந்தேன்
நினைத்தது போல்
நடந்துவிட்டது
நாளிதழ் மழைநீரில்
தொப்பலாக நனைந்துவிட்டது
புத்தக அலமாரியைத் திறந்தால்
சுவரெல்லாம் ஓதம்காத்துப் போய்
புத்தகத்தின் அட்டை
நமுத்துப் போயிருந்தது
கதவெல்லாம் அடைத்துவிட்டேன்
நொடிமுள் நகரும்
சப்தம் மட்டும் கேட்டது
நத்தை போல் நகர்ந்து
கொண்டிருந்தேன்
மரணத்தை நோக்கி
காத்திருத்தலே ஒரு
தவமல்லவா
மாத்திரை மருந்துகள்
எத்தனை நாள் கட்டுப்படுத்தும்
சித்ரவதையாகத் தான் இருக்கிறது
மருத்துவரைக் கேட்டால்
இது பயலாஜிக்கல் வார்
என்கிறார்
ஆண்டவன் பரீட்சித்துப் பார்க்கும்
சோதனை எலியாக
என்னை பயன்படுத்திவிட்டான்
விதியே என்று
சகித்துக் கொள்கிறேன்
வேறென்ன செய்ய.

Series Navigationபேச மறந்த சில குறிப்புகள்பேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *