தொலைந்து போன ஒத்தை கொலுசில்தான் ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது. முந்தானை முடிச்சில் தொங்கும் பத்து ரூபாயில்தான் சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது. வறண்டுபோன திண்ணைகளில்தான் தாத்தாக்களின் பெருமூச்சு கேட்கின்றது. பலூன்காரனுக்கு- எப்போதும் பத்துவீதிகளே போதும். பஞ்சு மிட்டாய்க்காரனிடம் எப்போதும் குழந்தைகள். சிவன்கோயில் அய்யருக்கு தட்டுகளில் ஜீவனம். பலாச்சுளை விற்பவனுக்கு பத்து ஈக்கள் சொந்தம். குருட்டு பிச்சைக்காரிக்கு கோவில் வாசலே சுவர்க்கம். வரும்போகும் வாழ்கைக்கு யாரிடம் கேட்பது முகவரி!. […]
தோப்பின் நடுவே ஒரு செல்ல மரம் அணில்கள் குருவிகள் பூச்சிகள் வாழ்த்தின கும்மியடித்தன குறுஞ்செடிகள் ஆரத்தி சுற்றின மற்ற மரங்கள் செல்ல மரத்தின் பூக்கள் சிரித்ததில் சுரந்த தேனை வண்டுகள் மேய்ந்தன வழிந்த தேனை எறும்புகள் செரித்தன-அதன் பிள்ளை பேரர்கள் காடுகள் வளர்த்ததில் மழைகள் வாழ்த்தின ஒரு பொட்டல் வெளியில் தனிமரம் ஒன்று ஒத்தையாய் நின்று ஒத்தையாய் செத்தது அமீதாம்மாள்
வெங்கடேசன் நாராயணசாமி யுகள கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா.10.35.2,3] இடது கன்னம் இடது தோளில் சாய்த்து வில்லாய் புருவம் வளைத்தசைத்து மெல்ல உதட்டைக் குழலில் வைத்து தளிர் திருவிரல்கள் துளைகளில் பரவ முகுந்தனின் இன்னிசை திசையெலாம் நிறைய, ஆய்ச்சிகாள்! வானுறை வனிதையர் வல்லினரொடு வானளாவி வியந்து வேணு காணமதில் மயங்கி காமன் கணையொறுத்த சித்தம் கலங்கி வெள்கி அரையிடை அழுக்காடை அவிழ்வதையும் அறியாதசையா நின்றனரே! [ஶ்ரீம.பா.10.35.4,5] நங்கைமீர்காள்! இந்நந்தகுமாரர் நலிந்தோர்க்கு நலம்பல செய்து தேற்றும் வெண்முத்துச்சர சிரிப்பழகர், […]
—-வளவ. துரையன் மௌனத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன். அதற்குச் சைகை மொழிதான் பிடிக்கும். எப்பொழுது அழைத்தாலும் வந்து சேர்ந்துவிடும். எதிர்வார்த்தைகள் ஏதும் பேசாது. ஆழத்தைக் காட்டும் தெளிவான நீர்போல மனம் திறந்து காட்டும். சில நேரம் ஆர்ப்பரிக்கும் அலைகள் போலவும் கூக்குரலிடும். அதன் செயல்களுக்குக் காரணங்கள் கேட்பது அறிவீனம். விளைவுகளுக்குப் பின் […]
வளவ. துரையன் வேண்டும் வேண்டும் வேண்டும் வாழ்க வாழ்க வாழ்க ஒழிக ஒழிக ஒழிக இவை போன்று ஒவ்வொரு இடங்களிலும் தனித்தனியாகக் கூட்டங்கள் கோஷங்கள் போட்டார்கள். பேருந்துகளில் மனிதர்கள் மிகக் கவனத்துடன் பார்த்தபடிச் செல்கின்றனர். பிச்சைக்காரர்கள் நின்று நோக்கியபின் நகர்ந்து போகிறார்கள். அங்கங்கே தேநீரும் குளிர்பானமும்தான் போட்டிபோட்டுக்கொண்டு அழைக்கின்றன. கூட்டங்களில் […]
வெங்கடேசன் நாராயணசாமி கோபிகைகளின் இனிய கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா. 10.31.1] வெல்க இவ்விரஜ பூமி இங்கு நீர் பிறந்ததால் தங்கினாள் திருமகள் இங்கு நிரந்தரமாக. உம்மிடமே உயிரை வைத்து உம்மையே சாரும் உன்னடியார் உம்மையே தேடுகின்றார் உள்ள திக்கெலாம் உற்று பாரும் அன்பரே! [ஶ்ரீம.பா. 10.31.2] குதிர்காலக் குளத்தில் பூத்த பங்கயத்தைப் பழிக்கும் செங்கமலக் கண்ணா! வரதா! கூலியில்லாக் கொத்தடிமைகள் எம்மை கொல்லாமல் கொல்கிறாயே நின் கடைக்கண் பார்வையாலே எமதன்புக் காதலா! [ஶ்ரீம.பா. 10.31.3] யமுனையின் […]
வெங்கடேசன் நாராயணசாமி ஒரு கூட்டில் சிறு பறவையாகப் பிறந்தேன். அன்பின் இழைகளாலும், பாதுகாப்பின் கிளைகளாலும் பின்னப்பட்ட கூடு. இவ்வாறே வாழ்வின் பரந்த வலிமைமிக்க மரத்தில் வளர்ந்தேன். நோய்ப் பாம்புகள் மற்றும் விதிக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பாக வளர்ந்தேன். ஆகாயத்திலிருந்து மரத்திற்கும், மரத்திலிருந்து ஆகாயத்திற்குமாகப் பறந்து பறந்து வளர்ந்தேன். மரத்தின் இனிமையான பழங்களை உண்டு நான் விரைவில் வளர்ந்தேன். விழைவு மற்றும் ஆசையின் சிறகுகள் என்னை விசும்பெனும் வாழ்வில் பறக்க உதவின. நான் காட்டின் பிற பகுதிகளுக்குப் பறந்தேன் – […]
சசிகலா விஸ்வநாதன் தரையில்விழுந்தவளை தாங்கியது பல கரங்கள். கரங்கள் ஒவ்வொன்றும் சொன்னது ஒரு செய்தி. நாளை அடுக்களை வேலை, எனக்கா? அலுப்புடன்! மருத்துவர் என்ன செலவு சொல்கிறாரோ? அச்சம்! என்றைக்கு சொல் பேச்சை கேட்டாள், இவள்? ஆயாசம்! பேசாமல் படு; இரண்டு நாள்கள்!கனிவு! என் கரம் பற்றியது; எந்தக் கரத்தை? சசிகலா விஸ்வநாதன்
ரவி அல்லது பறித்தாலும் பழகாத அறம். அவர்கள் ஏற்படுத்திய வலிகள் இருக்கிறது தழும்புகளாக வெறுப்புகள் சூழ. தண்ணீர் விடாமல் தவிக்கவிட்ட ஆற்றாமை அடங்கவே இல்லை இப்பொழுதும். மேலூட்டமிடாத கலைப்பு தருகிறது மேனி வாடுமாறு. அனவரத ரணத்திலும் பூத்தலை நிறுத்தவே முடியவில்லை இச்செடிகளால் யாவுமதன் இயல்பில் இருப்பதால். *** எதிர்பாராதது. பார்வை தூரத்தில் பலரிடம் கையேந்தி வரும் முக்காடிட்ட கிழவிக்கு நான் உதவிட காத்து நிற்கிறேனென்பது தெரியாது இலக்கு நானாக இல்லாமல் இருப்பதால். அதன் புறக் கணிப்புகள் தாண்டி […]
எந்த மரத்திலோ எந்தப் பூவும்பூச்சியும் முயங்கியதில் இந்தக் கனியோ அந்தக் கனியை எந்தக் காக்கையோ கொத்தி விழுங்கி கழித்த மலத்தில் விழித்த விதையில் முளைத்து வந்ததோ இந்த மரம் உயிர்களுக்கு வீடாய் குடை நிழலாய் அடடா! மரம் அறியும் எங்கிருந்து எப்படி ஏன் வந்தோமென்று அமீதாம்மாள்