பணம்

பணம்

பணப்பையைப் பறித்து பறந்தது குரங்கு அறக்கப் பறக்க துரத்தியது மனிதக்கூட்டம் பையைக் கிழித்து பணங்களை  எறிந்தது குரங்கு பணம்!பணம்!பணம்! கட்டிச் சேர்த்தது காற்றில் பறக்கிறது பறத்தல்  கண்டதும் குரங்குகளாகிப்போன மனுஷப்பயலைப் பார்த்து இளித்தது குரங்கு அமீதாம்மாள்
ஒரு பெண்ணும், சில ஆண்களும்

ஒரு பெண்ணும், சில ஆண்களும்

அவளை அழைத்தார்கள்.  விளம்பர உலகின்  மாடலாக,  அவள் கைகள், கண்கள்  இடுப்பும், தொடையும்  வழியும் போதை  கண்களில் கண்டனர்  ஆண்கள்.  முதலில்  பியானோ மீது சரிந்தாள்  கைகளில், கால்களில்  தைலம் தடவினார் கேமிரா கண்களுக்கு  பொருந்தும் என்றனர்.  விழும் அருவியில்  குளியல்,…

இரு கவிதைகள்

(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது  தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ நாக்குகளாகின்றன. ஆயிரமாயிரம் சர்ப்பங்களாகி உன்மத்தம் கொள்கின்றன. சர்ப்ப மேனி ஜொலிக்க சதிராட்டம். நிலவு தெறிக்கிறது. ஒவ்வொரு  தீச் சர்ப்பத்திலும்…
நீ

நீ

ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன்  மலர்களின் மடியில்.  வாழ்க்கை என்ன  நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில்  நாம்தான் மண்டியிடுகின்றோம். ஒவ்வொரு பொழுதும்  ஒவ்வொரு கதைச்சொல்லும்  அதில்  ஆனந்தமும் வரும்  அழுகையும் வரும்  எங்கோ  தூரத்தில் தெரியும்  வெளிச்சம் சிலருக்கு. …

நிணம்

புரிபடாதவைகள்  ஆயிரம் புரிந்தவைகள்  சொற்பம் புரிந்தும்  புரியாமலும்  கடந்து  கொண்டிருக்கிறோம் காதல்  கொண்ட  இரு  உடல்  எந்திரங்கள் விடுதலைக்கான  யுத்தகளத்தில்  நிற்கின்றன ஆழ்ந்த  மானுடப்  புரிதலை  ஆயுதங்களாய்  ஏந்தியிருக்கின்றன கனவு  காண்பது  மனசுக்கு  நிம்மதி கவிதையில்  கரைவது  உயிருக்கு  சந்தோஷம் கடும் …
ஏழாவது சுவையின் இணக்கம்.

ஏழாவது சுவையின் இணக்கம்.

பொங்கும்அன்புநீருற்றாகநிற்காமல் இருந்ததுமனிதமெனவியாபித்து.அள்ளிச் சுவைத்ததில்மேவியநேசத்தைஅறியாமல்அடைத்துத் தாழிட்டவர்களைவெறுக்காமல்விரும்பச் சொல்கிறதுசான்றாக்கி மகிழ வைத்து.
  விடை தெரியா வினாக்கள்

  விடை தெரியா வினாக்கள்

                                                 -------வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால்  ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் வெண்மை பொழியத் தொடங்கிவிட்டன. உறவுகளின் கைவிடுதல்களுக்குப்பின் உள்ளம் எல்லாவற்றையும் குருதி நிறத்திலேயே காண்கிறது. குளுமையான இந்தக் காற்று கூட…
உப்பு, புளி,மிளகாய்

உப்பு, புளி,மிளகாய்

உப்பு, புளி,மிளகாய்.  (கவிதை) எஞ்சி நின்ற  நாலு வார்த்தைகளும்  வெளியேறிவிட்டன.  கதவிடுக்கில்  மாட்டிக்கொண்ட  வாழ்க்கை  உப்பு புளி மிளகாய்  எதார்த்தத்தை  பதார்த்த மொழியில் பேசின.  காலாற  நடந்து சென்று  காட்டைக்காண முடியவில்லை.  தொலைந்துப்போன  வில்லைத்தேடி  அர்ச்சுனர்களும்  அழவில்லை.  ஆகாயத்தை  அண்ணாந்துப்பார்க்க  அடுப்பங்கரை…
கூடுவதன் கற்பிதங்கள்

கூடுவதன் கற்பிதங்கள்

ரவி அல்லது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்களின் பேச்சுகளில் பகட்டுகளைத்தவிர வேறெதையும் காணமுடியாமல் இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் சலிப்பற்று  தேர்ந்த பயிற்சி எடுத்தவர்களாக பேசிக் கொண்டே இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் தன்னை அறிவாளியாக  காட்டிக் கொண்டது. ஆச்சரியமாகத்தான் இருந்தது.  அவர்கள் …

இரு கவிதைகள்

.பசுமையும் பதற்றமும்                    சில துளிகள் மழை பெய்தால் கூட  வந்துவிடுகின்றன  எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை  குதித்துத் தாவுகின்றன.  கும்மாளமிடுகின்றன. சிறிய முன்னங்கால்களால்  உடலைத் தாங்கும்  அவற்றின் மகிழ்வுக்கெல்லையில்லை. பழுப்பு நிறப் புள்ளிகளாய்  பாய்ந்து பாய்ந்து செல்லும். வாய்க்கால் மழைநீரில்…