அகழ்நானூறு‍  91

This entry is part 10 of 10 in the series 6 ஜனவரி 2025

சொற்கீரன் ஓங்கு பருதி செந்நெல் குப்பை பழனந்தோறும் அணிமலி காட்சியின் சோறுடைத்து வளனே நீரொடு கலித்த‌ வளவன் நாட்டு திண் தோள் மறவன் கையொடு கோர்த்து இலம் நீங்கு தோகை கண்ணொடு கண்ணிணை கசிய வாங்கு நுதலி கருவிழியாளும் வரு நிலை கலங்கா வண்ணம் சேர்த்து கதழ்பரி கலிமா அன்ன விரைஇ கடும் சுரம் எதிர்த்தும் கால் பதித்தனளே. ஆறு அலையுநர் பசுங்குடை பொதிந்த‌ வெண்ணிய சோறு மறிப்ப போலும் பசி உழல யாங்கும் நோன்றல் இல்லாள் […]

கடைசி ஆள்

This entry is part 7 of 10 in the series 6 ஜனவரி 2025

ஜெயானந்தன்  எல்லா  அறைகளையும் பூட்டி  சாவி கொத்தை  சிங்கார வேலர்  எடுத்து விட்டு  ஒவ்வொரு பூட்டையும்  இழுத்துப்பார்த்தார்.  ஸ்டேசன்  அடைவதற்குள்  மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்  பறந்துவிட்டது.  பிளாட்பார ஓரத்தில்  எட்டணா டீயோடு  காத்திருப்பார்  அடுத்த வண்டிக்கு. இடையே  மூன்றாவது  அறையை  பூட்டினோமா  சந்தேகம் வரவே  கால்கடுக்க ஓடினார்  வீட்டுக்கு.  எல்லா அறைகளும்  பூட்டித்தான் இருந்தன.  ஸ்டேசன்  அடைவதற்குள்  அடுத்த வண்டியும் சென்றுவிட்டது.  காலியான  ஸ்டேசனில்  அடுத்த வண்டிக்காக  காத்திருக்கும்  கடைசி ஆள்  இவரோ. – ஜெயானந்தன் 

பருகியதன் பித்து.

This entry is part 3 of 10 in the series 6 ஜனவரி 2025

ரவி அல்லது. உன்னைத்தவிர்த்தயாவையும்உதாசீனம்செய்கிறேன்உயர்த்திப்பார்க்கும்உலகம்ஓயாது போற்றுமெனதெரிந்தும். சுற்றிச் சுற்றியேதிளைக்கின்றேன்மகிழ்வில்சுய கௌரவஇழுக்கென்றாலும்நீஇருக்குமிடமேசொர்கமெனலயித்து. பித்தனென்றேப்பேசட்டும்பழகிய பதர்கள் பழக்கத்தில்.பின்னொரு நாள்பேரின்ப வாழ்வைகாணும் வரை. பற்றி எரிகிறதுபார்க்கும்பொழுதுபரவச அன்புதீக்காடாய்இல்லாமல்திகட்டாத சுவையாகஎப்பொழுதும்உன் அணுக்கத்தில். வேடிக்கைப்பார்க்கிறதுவெறுப்பின்பரிகாசமாய்பாழாய்ப்போனசம்பிரதாய சங்கடங்கள்பசி மறந்தும்படும் துயரைஉனக்கெனப்புரியாமல். நெஞ்சம்நெகிழ்கிறதுகாதலாகக் கசிந்துநினைக்கும் நொடியேஉணரும்உன்னதப் பரவசமாக உன்னோடு மட்டும். உணர்ந்திட்டக் காதலைபுரியாமல்.உயிர் மூச்சு நின்றுவிடும்கேள்வியைஒரு பொழுதும்கேட்க வேண்டாம்விளையாட்டாகவேனும்எவரும்நீயற்ற பொழுதுநிம்மதியா எனக்கெனநீச்சமாக. -ரவி அல்லது.ravialladhu@gmail.com

பூர்வீக வீடு

This entry is part 2 of 10 in the series 6 ஜனவரி 2025

ஆதியோகி கை விட்டுப் போன பூர்வீக வீட்டைப் புதிதாய் வாங்கியவர் இடித்து உடைத்து வெளியே கொட்டும் இடிபாடுகளில் அடர்ந்து படிந்து கிடக்கிறது எங்கள் பால்யகால வாழ்க்கை நிகழ்வுகள்.

இல்லறப் பேரவை

This entry is part 8 of 8 in the series 29 டிசம்பர் 2024

வளவ. துரையன் சிவன் கோயில்மணி கேட்டுவிழிப்பு வந்தது; இனிசிவனே என்றிருத்தல் ஆகாது என்றெழுந்தேன்.காப்பி கொடுக்கும்போதே நாளைகாப்பிப்பொடி இல்லை;மனைவியின் அவசரத் தீர்மானம்.செய்தித்தாள் படிக்கப் படிக்கச்செக்கச் சிவந்த வானமாயிற்று முகம்;பாலியல் வன்முறை, கடத்தல்,கொலை கொள்ளை, இலஞ்சம் கைதுவாகனவிபத்து எனக் கவன ஈர்ப்புகள்தலையில் தண்ணீர் ஊற்றிமனத்தை உடலைக்குளிரச் செய்தேன்.பெட்ரோல் விலை ஏறுவதால்இருசக்கர வாகனமில்லை;பேருந்தில் பிதுங்கி வழிந்துஅலுவலகம் அடைதல்அதிகாரத்திடம் மல்லுக்கட்டிவிட்டுகோப்புகளில் மூழ்கிவிட்டுக்கரையேறி இல்லறக் கரையில்தரை தட்டினேன்.வீடுவந்தால்மனைவி நினைவூட்டினாள்தான் கொடுத்தஅவசரத்தீர்மானத்தைஆளும் கட்சியால்தள்ளுபடி என்றேன். இப்படித்தான் இன்றுஇல்லறப் பேரவை நிகழ்ச்சிகள்இனிதே நிறைவு

அணையா நெருப்பு

This entry is part 7 of 8 in the series 29 டிசம்பர் 2024

வளவ. துரையன் அன்று வெள்ளை ஆடைஅணிந்த மகான் ஏற்றியது.இன்றும் அணையவில்லையாம்.வழிவழி வந்தவர்கள்தொடர்கிறார்களாம்.வாய்ச்சொல்லில் மட்டுமன்றுவள்ளன்மையிலும்இருக்கிறார்கள்.நாளாக நாளாகமரங்கள் பட்டுப் போகின்றன.குளங்கள் வற்றிப் போகின்றனமனங்கள் மரத்துப் போகின்றனசாலை ஓரத்தில்கையேந்துவரைப் பார்த்தால்கண்களை மூடுகிறார்.இன்றும்அணையா நெருப்புஅவரவர் வயிற்றுள்ளே!

உடைந்து போன நிலா

This entry is part 5 of 8 in the series 29 டிசம்பர் 2024

ஜெயானந்தன் உடைந்து போன  ஞாபக கண்ணாடிகளில்  நழுவி சென்றது  சித்திரை நிலா.  போன நித்திரையில்  ராமகிருஷ்ணன்  வீடகன்று போனான்.  போனவன்  வெளிச்சத்தையும்  கொண்டு போய் விட்டான்.  வீடு  இருளாகத்தான்  காய்ந்து கிடக்கின்றது.  இன்று வந்த  நிலாவும்  அவனைத்தான் தேடியது  கூடவே அவனது கவிதைகளும்.  பெட்டி நிறைய  தழும்புகிறது  அவனது  இலக்கிய தாம்பத்யம்  எதிர் வீட்டு  சன்னலிலிருந்து  எட்டி பார்க்கும்  பத்மனி  குட்டிக்கூட  என்னை பார்க்க வருவதுபோல்  அவனை  ஓரக்கண்ணால்  பார்த்து சென்றது  என் கடந்த போன  யவனத்திற்கு […]

மையச் சுழற்சியின் மாண்புகள்.

This entry is part 4 of 8 in the series 29 டிசம்பர் 2024

ரவி அல்லது வாய்கள் தான்தீர்மானிக்கிறது.வார்த்தைகளின்வாசனைகளைமுகருமாறும்முகம் சுழிக்குமாறும்.அதன்ஏற்ற இரக்கசுதியில்தான்இயங்குகிறதுஉலகம்பிடி கயிற்றின்பின்னால்ஓடுவதாகமாடுகளற்றபொழுதும்மாறாமல்.கலைத் தோய்ந்துகாத்தமௌனத்தின் பொழுதானகண்டெடுப்பிற்குவடிவமிட முடியாதலயித்தலின் வாழ்க்கைதான்தள்ளிக் கொண்டேஇருக்கிறதுவார்த்தைகளைநோக்கிவாஞ்சைகள் கொண்டுவாழ்தலில் மகிழச்சொல்லி. -ரவி அல்லது.20/12/24.01:46ம.

வணிகமேயானாலும்

This entry is part 3 of 8 in the series 29 டிசம்பர் 2024

ஆர் வத்ஸலா நடைபாதையில் காய்கறி வியாபாரம்கிழவிக்குடிரைவர் பொறுக்கிய காய்க்குகேட்ட பணத்தைவீசினார்காரில் வந்த கனவான்பொறுக்கி எடுத்த காசைசுருங்கிய கையால்டிரைவர் கையில் வைத்து விட்டுஅடுத்த ஆளை கவனித்தாள்கிழவி

சிறகசைப்பில் சிக்காத வானம்.

This entry is part 2 of 8 in the series 29 டிசம்பர் 2024

ரவி அல்லது இரவெல்லாம்இருந்துவரைந்தேன்வண்ணமற்றுவாஞ்சையின்தூரிகையில்.வடிவமற்றேஒளிர்ந்ததுஇரவுபகலாகஅதனழகில். இப்படியிருந்தால்எப்படிக் காண்பதென்றார்கள்பகலைப்பார்வைக்குருடர்கள். பார்க்கும்பகலாக்கிக்கொண்டிருந்தேன்இவர்களுக்காகஇரவைபார்க்குமாவல் மேவ. விடிந்து விட்டதேஎன்றார்கள்எப்பொழுதும்போலகலக்கத்தில் . ம்ம்மபார்க்கலாம்என்றேன்பரவசம் சூழ. மறுபடியும்சொன்னார்கள்.இப்படி இருந்தால்எப்படிக்காண்பதென்றார்கள். நான்மறுபடியும்வரைந்தேன்.அவர்கள்பார்ப்பதாகமுயன்று கொண்டேஇருந்தார்கள்விழிகளுக்குதிரையிட்ட வண்ணமொருவினோதப்போக்கில்என்னை விளையாட விட்டு. -ரவி அல்லது.ravialladhu@gmail.com