https://youtu.be/HNNrg-IhMh4 பாடல் : சி. ஜெயபாரதன், கனடா இசைப்பாடகி : வே.ரா. புவனா காட்சி அமைப்பு : பவளசங்கரி சி. ஜெயபாரதன், கனடா Attachments area Preview YouTube video தங்கத் தமிழ்நாடு
குரு அரவிந்தன் இந்த வருடம் ஒஸ்கார் விருது வழங்கும் விழா சென்ற 27 ஆம் திகதி மார்ச் மாதம், ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கோவிட் – 19 காரணமாக கடந்த வருடம் இந்த விழா சிறிய வட்டத்திற்குள் நடத்தப்பட்டது. இம்முறை, சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘கோடா’ படத்திற்குக் கிடைத்தது. போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த 10 படங்களில் இருந்து கோடா திரைப்படம் தெரிவானது. ‘த பவர் ஒவ் த […]
நடேசன் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும் திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின் தொழில்பாடு போன்றவை. வர்க்கம் ,சாதி, மதம் போன்ற தடைகளை மீறுதல், வன்முறைகளுக்கு எதிராகப் போராடுதல் அல்லது அதற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவது என்ற புறச்சார்பு அல்லது உலக நடைமுறை விடங்களைப் பிரதிபலிப்பவையே தமிழ்த்திரைப்படங்கள். இவற்றில் பெண்களை முக்கிய பாத்திரங்களாக கொண்ட சில படங்களும் […]
லதா ராமகிருஷ்ணன் பாடகனின் அநாதிகாலம்! ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்) (சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு) ’எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே’ என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன் மேடையில்….. காதல் என்று அவன் பாடுவது எனக்குக் காலம் என்பதாய் குழம்புகிறது. அவனை மாற்றியிருக்குமோ காதல்? ஒரு தேவதையிடம் மனுஷி நான் எப்படிக் கேட்பது? எதையும் மாற்றும் காதலை மாறாத ஒரே ராகத்தில் மீண்டும் […]
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கைப்பற்றுவதால் உண்மையான அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் கடந்த கால ஆட்சியின் போது பெண்கள் எதிர்கொண்ட கொடூரத்தை கருத்தில் கொண்டு, பெண்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பது குறிப்பாக கவலைக்குரியது. ஆப்கானிஸ்தானின் முதல் பெண் தெருக் கலைஞரான ஷம்ஸியா ஹசானி, தனது உணர்ச்சிகளை கலையாக மாற்றி, நெஞ்சை உலுக்கும் தொடர்ச்சியான படங்களை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஹசானி […]
சட்டத்தரணி செ. ரவீந்திரன் – அவுஸ்திரேலியா மேதகு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று பலரும் தொலைபேசியிலும் நேரடி சந்திப்பிலும் சொன்னார்கள். அத்துடன் இந்தத் திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேனா எனக்கேட்டவண்ணமிருந்தனர். அவர்களது கேள்வியில், அந்தப்படம் பற்றிய எனது அபிப்பிராயத்தை எதிர்பார்க்கும் தொனியே இழையோடியிருந்தது. மேதகு திரைப்படத்தை நானும் பார்த்தேன். அதுபற்றி சிலரிடம் பேசினேன். அத்துடன் அந்தத் திரைப்படம் தொடர்பான பல விமர்சனங்களையும் படித்தேன். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ ஏன் இந்தப்படம் […]
கா.ரபீக் ராஜா “தம்பி சிக்கன், மட்டன், மீன்ன்னு டெய்லி ஏதாவது வேணும். செவ்வாய், வெள்ளி மட்டும் சாம்பார் ரசம் ரெண்டு கூட்டு பொரியல்ன்னு சைவம் வைக்க சொல்லுங்க” முழுக்க முழுக்க 5D கேமராவில் எடுக்கப்பட்ட வழக்கு எண்: 18/9 திரைப்படம் குறைந்த செலவில் ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்கலாம் நம்பிக்கையை விட நாமும் ஒரு படம் எடுத்து பார்க்கலாம் போலேயே என்கிற நம்பிக்கையை ஊருக்கு ஒரு நாற்பது, ஐம்பது இயக்குனர்களை உருவாக்கி வைத்தது. அதில் […]
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – பெண்ணுடையாளன் (drag queen) என்ற, பெண்ணின் உடையணிந்து வந்து, நிகழ்ச்சிகள் நடத்தும் ஆண்கள், தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்றாலும், மேலைநாடுகள், இதுபோன்ற பெண்ணுடையாளன்களுக்கு, கொடுக்கும் ஒரு பெரிய வரவேற்பு, தமிழ்ப் பண்பாட்டில், அவ்வளவு இல்லை என்றே, நான் சொல்லுவேன். அந்தக் காலங்களில், தமிழ் நாடக மேடைகளிலும், தமிழ்த் தெருக்கூத்துக்களிலும், பெண் வேடம் இட்டு நடிப்பதற்கு, தமிழ்ப்பெண்கள், அவ்வளவு முன் வராத காரணத்தால், நல்லதங்காள் போன்ற நாடகங்களில், பெண் வேடம் இட்டு, சில ஆண்கள் நடித்து […]
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – ஒரு லெஸ்பியன் தாய், அவள் காதலி, இவர்கள் இருவரும், விந்து வங்கி மூலம் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள். அந்தப் பிள்ளைகள் பெறுவதற்குக் காரணமான தந்தை, இவர்களில் யார் மீது பிள்ளைகள் பாசம் காட்டும்? இது ஒரு முக்கோணம். ஒரு தாய், அவள் கணவன், அந்தக் கணவனுக்கு ஒரு காதலன், இவர்களில் யார் மீது ஒரு மகன் பாசம் காட்டுவான்? இது, இன்னொரு முக்கோணம். ஒரு கணவன், அவனுக்கு […]
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – தாய்லாந்து மொழிப்படமான இந்த மூன்றாம் பாலினத் திரைப்படம், 2004-இல், பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்படவிருது விழாவில் திரையிடப்பட்டபோது, படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களில், பாதிப் பேர், பாதிப் படத்திலேயே, எழுந்து போய் விட்டார்கள். படம் முழுக்கப் பார்த்த மக்களில், மீதிச் சிலரோ, படத்தைப் பார்த்துவிட்டு, ஒருவித சலிப்புக் குரலுடன் எழுந்து போனார்கள். ஆனால், இத்தனை சலிப்புக்களையும் தாண்டி, அந்த கேன்ஸ் திரைப்பட விழாவின், நடுவர் தேர்வுக்குழு, […]
பின்னூட்டங்கள்