கோ. மன்றவாணன் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த நான் “…………………க்கு ஒரு டிக்கெட்” என்று சொல்லிப் பணத்தை நடத்துநரிடம் கொடுத்தேன்.. அவர் தன் விரலால் நாவின் எச்சிலைத் தொட்டுப் பயணச்சீட்டை நனைத்து என் கையில் கொடுத்தார். அதை வாங்க அருவருப்பாக இருந்தது. யார் பயணச்சீட்டுக் கேட்டாலும் எச்சில் தொட்டுத்தான் கொடுத்தார். அவற்றை வாங்கும்போது சிலர் முகம் சுழித்தனர். பலர் எந்த முகக்குறியும் காட்டாமல் வாங்கிப் பைக்குள் பத்திரப் படுத்தினர். இப்படி எச்சில் தொடுவது சில நடத்துநர்களுக்கு […]
ஜனநேசன் 3 பாண்டியன் அன்றைய அஸ்ஸாம் மாநிலமாக இருந்த ஷில்லாங்கில் இந்திய ராணுவத்தில் துணைக் கேப்டனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 22 வயது. ஆறடி உயரத்தில் கறுப்பாக கட்டான தேகம். களையான முகம். ஞாயிற்றுக்கிழமை அன்று பகலில் நான்கு மணி நேரம் முகாமிலிருந்து வெளியே சென்று வர அனுமதி உண்டு. அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை முகாமுக்கு வெளியே சகவீரர்களுடன் நகரின் நடுவில் அமைந்திருந்த பூங்காவிற்கு வந்தனர். கனத்து வளர்ந்து விரிந்து நிழல்பரப்பிய […]
மணிமாலா மதியழகன், singapore இயற்கை ஆர்வலரான திரு. சுப்ரபாரதி மணியன் அவர்கள் தான் காணும் சமுதாயச் சிக்கல்களை, புறச்சூழலை, மனிதர்களின் அகவுணர்வுகளைத் தன் படைப்பில் வெளிப்படுத்துகிறார். இவரது படைப்புகளில் பெரும்பாலும் திருப்பூரே கதைக்களமாகவுள்ளது. பின்னலாடை தொழில் உற்பத்தியின் மூலம் அந்நியச் செலவாணியை அதிகளவில் ஈட்டி, ‘டாலர் சிட்டி’ என்னும் பெருமையுடன் விளிக்கப்படும் நகரம் திருப்பூராகும். இங்கே பஞ்சு மில், பின்னலாடை தொழிற்சாலை ஆகியவற்றில் மக்கள் படும் பாடுகள் இவரது கதைகளின் பாடுபொருளாகின்றன. தேநீர் இடைவேளை, புத்துமண், முறிவு ஆகிய நாவல்கள் இக்கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக […]
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன…. இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்… தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி….. மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில் மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. சில சமயம் வராத புறாவின் ஆயிரங் கால்களில் கட்டப்பட்டிருக்கும் காகிதத் துண்டுகள் அதை எப்படியோ தரையிறங்க வைத்துவிடுகின்றன. சில சமயம் தபால்காரர் வீசியெறிந்துவிட்டுச்செல்லாத சில நூறு பக்கக் கடிதங்களைப் படிப்பதுதான் எத்தனை சுவாரசியமாக இருக்கிறது! […]
Posted on May 14, 2022 Now that the Event 2019 ஆண்டில் எப்படி விஞ்ஞானிகள் முதன்முதலில் அசுரவடிவுக் கருந்துளையைப் படம் பிடித்தார் ? Posted on May 14, 2022 Now that the Event Horizon Telescope collaboration has released its image of the Milky Way’s black hole, the team is focusing on making movies of the two photographed black holes and finding […]
திரைப்பட இயக்குனர் புகழ் சிறப்புரை ஆற்றினார் . அப்போது அவர் “ இலக்கியமும் ,திரைப்படமும் இன்றைய கலாச்சாரத்தின் இரு கண்கள். இலக்கிய வாசிப்பு மனிதர்களை மேம்படுத்தும். சிந்தனத் தளத்தை விரிவாக்கும். வாசிப்பதும் எழுதுவதும் மனிதனை மேம்படுத்தும் முயற்சிகள் “ என்று குறிப்பிட்டார். திருப்பூரியம் என்றத் தலைப்பிலான திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் திருப்பூர் மையப்படைப்புகள் பற்றியக் கருத்தரங்கம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி திருப்பூர், தமிழ் உயராய்வுத்துறை நடத்தியது 11/5/222 அன்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி திருப்பூரில் […]
பின்னூட்டங்கள்