முருகபூபதி தனது வாழ்நாட்களில் பெரும்பாலான பொழுதுகளை பயணித்துக்கொண்டே கடந்து செல்லும் எழுத்தாளர், களப்பணியாளர், மனித உரிமை ஆர்வலர், மொழி பெயர்ப்பாளர், தேர்ந்த வாசகர், தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாதம் கற்றவர், அ. முத்துக்கிருஷ்ணன். எங்கள் அவுஸ்திரேலியாவின் நிரந்தர இலக்கிய விருந்தினர். மெல்பனில் வாசகர் வட்டம் அமைப்பதற்கு தூண்டுகோளாகவிருந்தவர். இன்றளவும் அதன் பணிகளில் இணைந்திருப்பவர். உறவாடுவதற்கு எளிமையானவர். இத்தனை சிறப்பியல்புகளை கொண்டிருப்பவரின் மற்றும் ஒரு வரவு, தூங்கா நகர் நினைவுகள். மதுரையின் முழுமையான வரலாற்றையே இதனைப் படித்து […]
குரு அரவிந்தன் வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. காலையில் எழுந்து நிலானி பள்ளிக்குச் சென்று விட்டாள். செல்லும்போது ஓடி வந்து வழமைபோல கட்டி அணைத்து முத்தம் தந்துவிட்டுச் சென்றாள். உடம்பு வளர்ந்து விட்டதே தவிர மனசளவில் எந்தவொரு கவலையும் இல்லாத குழந்தையாகவே இருந்தாள். தெளிந்த நீரோடையாய் நகர்ந்த எங்கள் குடும்ப வாழ்க்கையில் சிறு தடுமாற்றம், காரணம் சென்ற வாரம் மகள் வயதிற்கு வந்து விட்டாள் என்ற உண்மைதான். கற்பனை உலகிலிருந்த என்னை நிஜவாழ்க்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததும் […]
எஸ்ஸார்சி ’நட்சத்திரங்களைத்துணைக்கு அழைப்பவள்’ என்னும் சிறுகதை நூல் நெய்வேலி பாரதிக்குமார் ஆக்கத்தில் வெளிவந்துள்ளது. கதை சொல்லும் நேர்த்தியில் பாரதிக்குமாரின் சிறுகதைகள் வாசகனை நெகிழ்ச்சியுற வைக்கின்றன. பாரதிக்குமார் தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அரங்குகளில் தனது இலக்கியப்பங்களிப்புக்காகப் பாராட்டப் பட்டுள்ளார். அவர் தொடர்ந்து எழுத்துலகில் சாதித்துக்கொண்டிருப்பவர். வெற்றியாளர். பாரதிக்குமாரின் ‘நடசத்திரங்களைத்துணைக்கழைப்பவள்’ 23 சிறுகதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு. இதனை இருவாட்சி( இலக்கியத்துறைமுகம்) பெரம்பூர் சென்னை11 வெளியிட்டுள்ளது. இந்நூலை தனது சகோதரர் குறியாமங்கலம் செல்வத்திற்கும் திருமதி மீனாட்சி செல்வத்திற்கும் பாரதிக்குமார் சமர்ப்பித்துள்ளார். தனது வாழ்வில் அரிய மகிழ்வான நெகிழ்வான தருணங்களை உருவாக்கித்தந்தவர்கள் அவர்களே என்று எழுத்தாளர், வாசகர்க்கு அறிவிக்கிறார். பின்புலமாகி […]
செந்தில்… சந்தைக்குப் பல வழிகள்… தனியார் கடைப் பொருளுக்கு பொது வீதியன்றி… வேறுவழியில்லை… சன்னிதானத்திற்க்கு ஏது வழி? எதற்க்காக இத்தனை வழிகள்? தெற்க்கு வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி…சந்தை களைகட்டுகிறது…கோவில் சன்னிதானத்திற்க்கு செல்லும் வழிகள் ஆயினும்… கடை விரித்தும்கருத்துளம் கொள்வாரின்றிசந்தை விட்டு சயனக்கிரகம் வீற்றிருக்கும்உண்மைப் பொருள் ஓங்குயர்பெருமாள் நோக்கிதான் நகரும் எவ்வழியும்.. தனி வழி ஏதும் இல்லைவைகுந்தப் பெருமாளுக்கு என்றுணர்த்தத்தான்இப்படி பலப்பல பொது வழிகள்… உண்மைக்கு ஏது ஒரு வழி…படிகள் இல்லா உலகிற்க்குதிசைகள் இல்லா […]
அன்புடையீர், 9 ஜனவரி 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் 22 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: ’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம் – எஸ்ஸார்சி ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு– தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்-10] நேரம் எனும் கள்வன் – உத்ரா இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும்– ஒரு அரிசோனன் (சீனா-சீனா தொடர்- பாகம் 2) உத்தரகாசி– லதா குப்பா […]
வெங்கடேசன். ரா அது என் கல்லூரி காலம். நான் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்த காலமூம் கூட. நான் அனுதினமும் கல்லூரி சென்று வர, என் தந்தை எனக்கு தரும் பணம் இரண்டு ரூபாய். நான் காலையில் கல்லூரிக்கு புகைவண்டியில் செல்ல ஒரு ரூபாய் , திரும்பி பேருந்தில் வர ஒரு ரூபாய் என , ஆக மொத்தம் இரண்டு ரூபாய். சில நேரங்களில் அவரிடமே பணம் தட்டுபாடு ஏற்படும் போது , அன்றைய தினம் […]
பின்னூட்டங்கள்