கண்ணீர் மறைத்தார்

This entry is part 1 of 5 in the series 21 ஜூலை 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                        வெள்ளைப் பளிங்கில் நெடிதுயர்ந்த அந்தத் திருமண மண்டபம் அரண்மனைபோல் வண்ண விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைச் சீருடையில் பணியாளர்கள் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருந்தனர். காணொளிகள் நேரலையாக ஆங்காங்கிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் இல்லாமல் இனிய இசையொலி மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது.பளீரென ஒளிவெள்ளம் பரவாமல், இதமாக மெல்லிய விளக்கொளி தவழ்ந்து கொண்டிருந்தது.முகப்பில் செயற்கை நீரூற்று, நான்கு புறமும் நான்கு மயில்கள் நீரை உமிழ்ந்துகொண்டிருந்தன. நடுவில்  ஒயிலாக மணிமுடி தரித்த வெண்சிறகுத் […]

பத்துப் பொருத்தம்

This entry is part 1 of 2 in the series 7 ஜூலை 2024

விஜயலட்சுமி கண்ணன் கலாவுக்கு வயது இருபது நிறைந்து விட்டது.பி.காம் முடித்து நல்ல வங்கி வேலையும் கிடைத்தது. கலாவின் தந்தை ரவிக்கு ஜோசியம், ஜாதகம் இதில்  எல்லாம் நம்பிக்கை அதிகம்.கலாவின் தாய் சுஜாதாவுக்கு இதில் சிறிதும் நம்பிக்கை கிடையாது. “ஆமா,, எங்கப்பாவும் ஜாதகமும் கையுமாக அலைந்து ஒரு ஜோசியர் பத்துப் பொருத்தத்தில் எட்டு பொருத்தமும் அமைந்த ஜாதகம் என்று சொன்னதனால் தானே ரவிக்கு கழுத்தை நீட்டினாள். என்னத்தை சாதிக்க முடிந்தது? காலம் ஓடியது. அதோடு நாமும் ஓடியது தான் […]

என் தாய் நீ

This entry is part 1 of 6 in the series 30 ஜூன் 2024

               ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                 .                 வேப்ப மரத்துக் குயில் கூவியது. அலாரமே தேவையில்லை. இதையாவது நிறுத்தி விட்டுத் தூக்கத்தைத் தொடரலாம் ஆனால் இந்த பொல்லாத பூங்குயிலை ஒன்றும் செய்ய முடியாது. சரியாக ஐந்து மணிக்கெல்லாம்  கச்சேரியை ஆரம்பித்துவிடும். யாராவது கேட்கிறார்களா, இரசிக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பதில்லை.ஆளில்லாத டீக்கடையில் டீ ஆற்றுபவர் போல என்று சொல்லலாமா? ரஞ்சனிக்கு என்னவோ அது தன்னை எழுப்புவதற்கே நாள் தவறாமல் வருவதாக எண்ணம். எந்தபக்கமும் திரும்ப முடியாதபடி ஆளுக்கொரு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு கையைப் […]

வாசல் தாண்டும் வேளை

This entry is part 4 of 6 in the series 16 ஜூன் 2024

ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி இருள் அப்போதுதான் விலக ஆரம்பித்திருந்தது. வாசு போர்வையை நன்றாகஇழுத்து முகத்தை மூடிக் கொண்டான். மார்கழி மாதக் குளிருக்கு சுகமான தூக்கம்தொடர்ந்தது. வள்ளி  கதவைத் திறந்தாள். இரவு வெகு நேரம் கழித்து வந்து  திண்ணையில் உறங்கிக் கிடந்த முனியனைப் பார்த்தாள். வெறுப்பு முகத்தில் தொற்றியது.வாசல் தெளித்து கோலமிட்டு நிமிர்ந்தாள்.வேப்ப மரத்தடியில்  நின்றிருந்த ஆட்டோவில் பாட்டிலும், குப்பம்மா கிழவியிடம் வாங்கிவந்து தின்றது போக மீதமிருந்த மிளகாய் பஜ்ஜிகளும்  சிதறிக் கிடந்தன. பக்கத்து வீட்டுநாய் பின்புற இருக்கையில் சுருண்டிருந்தது. […]

தனிமையின் இன்பம்

This entry is part 6 of 7 in the series 9 ஜூன் 2024

சசிகலா விஸ்வநாதன் பத்மநாபன் நன்றாய் தூங்கி கண்விழிக்கும்போதுதான் நினவில் வந்தது;சங்கேஸ்வரி, சிறு மனஸ்தாபத்தில், பிறந்தகம் போயிருப்பது. ஆஹா! இன்று விடுமுறை நாள் என்று நினைப்பே வெறுப்பாய் இருந்தது.             வாயில் கதவைத் திறந்து செய்தி தாளை எடுப்பதற்குள், வெள்ளை பூனை ஒன்று உள்ளே வந்து மிக உரிமையாக சாப்பாட்டு மேசை மேல் தாவி உட்கார்ந்தது.           காபி அருந்தும் வேளையில் பூனைக்கும் ஒரு தட்டில் […]

சாதனா எங்கே போகிறாள்

This entry is part 6 of 6 in the series 2 ஜூன் 2024

வி. ஆர். ரவிக்குமார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இரவு மணி ஏழு.  கார்த்திகை மாத காரிருள்,  சீக்கிரமே இருட்டிவிட்டது.    வெளியில் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. பிளாட்பார்ம் எண் ஆறிலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸ்  இன்னும் இருபது நிமிடங்களில் ஹைதராபாத்திற்கு  புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் கவனத்திற்கு என்று ஒலி பெருக்கியில் மீண்டும்  மீண்டும் அறிவிப்பு முழங்கிக்கொண்டிருந்தது. பல பெட்டிகளுடனும் லக்கேஜ்களுடனும் பயணிகள் வேக வேகமாக அவரவர் கம்பார்ட்மெண்டை நோக்கிச்  சென்று கொண்டிருந்தனர்.      இருக்கை உறுதி ஆகாதவர்கள் […]

சந்தைக்குப் போனால்…

This entry is part 5 of 6 in the series 2 ஜூன் 2024

                                                                                          மீனாட்சி சுந்தரமூர்த்தி                    விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது.வேலம்மாளுக்கு அப்போதுதான் நல்ல தூக்கமே வந்திருந்தது.புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை.  கந்தப்பன் மீது காலைப் போட்டுக் கொண்டு பெரியவனும் , கழுத்தைக் கட்டிக்கொண்டு சின்னவனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.அலாரம் ஐந்துமுறை அடித்ததும் விழித்துக் கொண்ட கந்தப்பன் பிள்ளைகளைச் சரியாகப் படுக்கவைத்துப் போர்வையைப் போர்த்திவிட்டான்.ஏழு மணிக்கெல்லாம் கிளம்பினால்தான் ஷிப்டுக்குச் சரியாக இருக்கும். குளித்து முடித்துத் தயாராகி , முன்பக்கத்து அறையில் மர ஸ்டேண்டில் வைத்திருந்த பிள்ளையாரைக் கும்பிட்டு திருநீறு இட்டுக்கொண்டிருந்தபோது […]

விழிகளிலே வெள்ளோட்டம்

This entry is part 1 of 3 in the series 12 மே 2024

17 ஆண்டுகால வகுப்பறை வாழ்க்கையின் கடைசி நாள். 30 ஏப்ரல்,1971.  முதுகலை. மாநிலக் கல்லூரி. சென்னை. பொறுப்பாசிரியர், ஜேபிஎஸ் என்கிற ஜே. பாலசுப்ரமணியம். அவர் சொன்னார் ‘நாளை முதல் விடுமுறை. ஆனாலும் மே 15வரை செய்முறை தேர்வுக்கு நீங்கள் தயாராக, சோதனைக்கூடம் தினமும் திறந்திருக்கும். உதவியாளர்கள் இருப்பார்கள். நாங்களும் இருப்போம். நீங்கள் வந்து எல்லா சோதனைகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துபார்த்துக் கொள்ளலாம். கல்லூரிக்குப் பக்கத்திலேயே உள்ள நல்லதம்பி முதலித் தெருவில்தான் என் இருப்பிடம். ஓர் அறையில் நான்கு […]

நாளைய சொர்கம்

This entry is part 2 of 3 in the series 5 மே 2024

ஆர். சீனிவாசன் 11.12.3123 அன்று வெளிவந்த நாளிதழ்களின் சில முக்கிய செய்திகளின் தொகுப்பு. தமிழ்நாட்டு செய்திகள்: நாட்டின் செய்திகள்: சர்வதேச செய்திகள் : விளையாட்டு செய்திகள்: வணிக செய்திகள்: சமையல் பொழுதுபோக்கு மற்றும் சினிமா செய்திகள்: ஞால செய்திகள் :**அரை மணிநேரம் அன்றய தலைப்பு செய்திகளை கைபேசியில் தூக்கம் கலையா கண்களுடன் படித்த சக்திவடிவேலிற்கு அடுத்தது என்ன செய்யலாம் என தெரியவில்லை. ஞால பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருடங்கள் ஆனா பிறகு, போன மாதம்தான் அவன் வேலையும் […]

சித்ர குப்தனின் டிவி விளம்பரம்

This entry is part 3 of 4 in the series 28 ஏப்ரல் 2024

தாரமங்கலம் வளவன் திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படி பேசினார்கள். ’பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்கு சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும் பாவங்கள் செய்யாதீர்கள். ’ அந்த மூன்று மனிதர்கள் பேசும் போது அவர்கள் இயல்பாக இல்லை. ஏதோ வலி தாங்க முடியாமல் முனகிக் கொண்டே பேசுவது போல் தெரிந்தது. வளைந்து, நெளிந்து கொண்டே […]