அவனேதான்

This entry is part 7 of 34 in the series 17 ஜூலை 2011

ஆட்டுக்கு புல்லைக்காட்டி
அழைத்துச் செல்கிறான்
கழுத்தை வெட்ட..
மீனுக்கு புழுவைக்காட்டி
தூண்டிலில் பிடித்து
துடிக்க வைக்கிறான்..
பசுவிடம் பால்கறக்க
போலியாய்க்
கன்றைக் காட்டி
காரியம் சாதிக்கிறான்..
இத்தனையும் தானாகி
இலவசத்தால் ஏமாந்து
ஜனநாயகம் என்ற பேரில்
சந்தியில் நிற்கிறான் !

-செண்பக ஜெகதீசன்..

Series Navigationநடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…ப மதியழகன் கவிதைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *