கிறீச்சிடும் பறவை

This entry is part 10 of 34 in the series 17 ஜூலை 2011

 

நாள் தவறாமல்

வந்து என் ஜன்னல்

கம்பிகளில் அமர்ந்து

ஒரு சிறு பறவை

கிறீச்சிடுகிறது

என் கவனத்தைக்கவர.

 

எதை ஞாபகப்படுத்த ?

மறந்துபோன

இயற்கையுடனான

நட்பையா ?

அல்லது கடந்து சென்ற

காலங்களை

மீள் நினைவூட்டவா ?

 

எனினும்

நாளையும் வரும்

என்ற எதிர்பார்ப்பை

என்னில்

ஏற்படுத்துவதைத்தவிர.

அது வேறொன்றும்

செய்வதில்லை.

 

மேலும் அது

ஒரு இறகையும்

உதிர்த்துச்செல்வதில்லை

எனக்கென.

 

சின்னப்பயல்

– chinnappayal@gmail.com

Series Navigationஅழுகையின் உருவகத்தில்..!பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு
author

சின்னப்பயல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *