குதிரை வீரன்
பாட்டன் காலத்தில்
ஊரின் மையத்தை
தனக்கான இடமாக
ஆக்கிரமித்துக் கொண்ட
வரலாறில்லாத
குதிரைவீரன் இன்றும்
முன்கால்கள் தூக்கிய
குதிரையின் மீது
அமர்ந்திருக்கிறான்.
கருத்த அவன் தலையை
வெள்ளைப்படுத்தும்
போட்டியொன்றில்
காகமொன்று
கண்ணிழந்தும்
பருந்தொன்று
இறக்கை இழந்தும்
அவன் பாதத்தைச்
சிவப்புப்படுத்தின.
புதிதாய் அரசேற்ற
மந்திரிக்கு குலப்பெருமை
எழுதவென வீதியெங்கும்
அலைந்து திரிந்தவர்கள்
குதிரைவீரன் கதை
பற்றி பலஆராய்வு
நடத்தி சிலபுத்தகம்
வரையலாயினர்.
இல்லாத வெற்றிகளை
அவர்களின் பக்கங்கள்
நிரப்பிக்கொண்டிருந்தன
அவரவர் கற்பனைக்கும்
வெகுமதிக்கும் தக்கவாறு.
பாலத்தின் நிழல்
கடற்கரை காற்று
நடுத்தார்ச்சாலையென
காகத்துக்கும்
பருந்துக்கும் பயந்து
இருப்பிடம் மாற்றி
நிற்கும் குதிரைவீரன்
மந்திரியின் பாட்டனென்று
வெற்றிக் களிப்பை
சுமந்து கொண்டு
நிக்கலானான்.
-சோமா (sgsomu@yahoo.co.in)
- அன்புத் தம்பி புனைப் பெயருக்கு
- முள்வெளி – அத்தியாயம் -3
- சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
- ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்
- தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்
- தங்கம்
- தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு
- கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
- கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்
- சுணக்கம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5
- ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா
- சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘
- பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி
- Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து
- சோபனம்
- குதிரை வீரன்
- கடைசித் திருத்தம்
- தூக்கணாங் குருவிகள்…!
- யானைமலை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18
- அரிமா விருதுகள் 2012
- விளையாட்டு
- புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
- மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !
- “சூ ழ ல்”
- வார்த்தைகள்
- ஓ… (TIN Oo) ………….!
- உங்களில் யார் அடுத்த பிரபுதேவா
- அதுவே… போதிமரம்….!
- சவக்குழி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு
- தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.
- பழமொழிகளில் கிழவனும் கிழவியும்
- “சமரசம் உலாவும்……..”
- எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7
- Ku.Cinnappa Bharathy Award 2011
பின்னூட்டங்கள்