நேரம்

This entry is part 40 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

எனக்கு நேரம் சரியில்லை
எனக்கணித்த
ஜோதிடகளுக்கு
நான் நன்றியே சொல்வேன்
நேரம் சரியில்லை
எனும்பொழுதெல்லாம்
நான் கடவுளாகிவிடுகிறேன்
ரொம்ப நல்லநேரம் எனும்பொழுதெல்லாம்
நான் இயந்திரமாகிவிடுகிறேன்
எது நல்லநேரம் என்று
குழப்பமாய் உள்ளது
கடவுளாய் இருப்பதைவிட
இயந்திரமாய் இருப்பதையே
மனித மனம் விரும்புவதாலோ.

=முத்துசுரேஷ் குமார்

Series Navigationஜென் ஒரு புரிதல் பகுதி 8மரத்துப்போன விசும்பல்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *