யார்

This entry is part 25 of 42 in the series 22 மே 2011

நேற்று பார்த்த முகங்களில்

ஒன்று கூட

நினைவடுக்குகளில் தங்கவில்லை

தோற்றப் பொலிவுக்கு

எத்தனை மதிப்பு

இவ்வுலகில்

எச்சில் இலை பொறுக்கும்

பிச்சைக்காரி்க்குத் தான்

தெரியும்

பசியின் விஸ்வரூபம்

குறளி வித்தைக்காரனிடம்

பணத்தை பறிகொடுத்து

நிற்பார்கள்

இரத்தம் கக்குவதற்குப்

பயந்து

சில அப்பாவிகள்

வன்முறையை எதிர்க்கும்

திரைப்படத்தில்

அரிவாள் தான்

கதாநாயகன்

பறவைகளின் எச்சத்தில் தான்

அந்தக் காடுகளில்

விருட்சங்கள் முளைத்தன

உடலில் நிழல் போலல்லாமல்

மனதின் நிழல்

மண்ணில் விழுந்தால்

நீங்கள் என்ன விலங்கென்ற

புதிர் அவிழ்ந்துவிடும்.

 

 

Series Navigationபிரதிபிம்ப பயணங்கள்..மூலக்கூறுக் கோளாறுகள்..:_
author

ப.மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *