வார்த்தையின் சற்று முன் நிலை

This entry is part 4 of 42 in the series 22 மே 2011

இதுவரையிலும் உனக்கு

சொல்லப்படாத வார்தையை

என் மனதில் தேடிகொண்டிருக்கிறேன்

அவை உனக்கு பல ரகசியங்களை

சொல்ல கூடும் சற்று சந்தேகி .

 

சில பொய்மையும் அதன் கண்ணீரும்

வடிந்தோடி கொண்டிருக்கும்

அதில் சற்று மூழ்கி எழுந்து விடு .

 

அவைகளை ஒரு சொல்லாகவே

நீ எதிர்கொள்ளவில்லை என்பதை

சற்று நிம்மதி அளிக்கிறது .

 

வாழ்வியலின் அடிப்படை பதிவிறக்கம் போல

உனக்கு சொல்லப்பட்டதை தகர்க்க செய்யும்

வார்த்தையாய் அவைகளை மேலும்

நம்பிக்கையாக்குகிறாய் .

 

கூடுமானவரை அந்த வார்தைகளை

எந்த கணத்தில் உருவானதோ அதே நிலையில்

அதே உயிர்ப்பில் உன்னிடமே வந்து சேர்க்கும்

என் கட்டமைப்பின் மனதின் விதையில்

விதைக்கப்படுகிறது ,சொல்லப்பட்டிருக்கிறது.

இது வெறும் செய்தி மட்டுமல்ல உயிரின் பகிர்வு .

 

அன்பின் எண்ணங்களும் அதன் செயலும்

வீற்றுக்கும் பிரதிபலிப்பை உன் இயல்பில்

இருப்பதை உன் மவுனமும் புன்னகையும்

சற்று காட்டி கொடுப்பதில் அந்த வார்தையின்

பிரபஞ்ச பூரணத்துவமாய் முனைப்பாகிறது .

 

இனி வார்தைகளை வெறும் சொற்களால் ஆவதை

சற்றும் உன்னால்  பொருத்து கொள்ள முடியாது .

-வளத்தூர் தி.ராஜேஷ்

 

Series Navigationஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *