தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்

This entry is part 41 of 41 in the series 13 நவம்பர் 2011

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்
அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.)

ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை) காலச்சுவடு மே 2007 இதழில் வெளிவந்துள்ளது.

எஸ். இராமச்சந்திரன்

கட்டுரையின் முடிவில், “தமிழ்ப் புலமை உலகில் க.கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்” என்று வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார்.

இதில் கண்மூடித்தனமான வழிபாடு எங்கிருந்து வந்துள்ளது எனப் புரியவில்லை. ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல் நிலைப்பாட்டை உருவாக்கி அதற்கு ஒரு சித்தாந்த வடிவத்தைக் கற்பித்தவர்கள் தமிழக வேளாளர்களே என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தவர் க.கைலாசபதி ஆவார். அதற்காகத் தமிழியல் ஆய்வுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது. இந்தக் கடமை உணர்வை வழிபாட்டு மனப்பான்மை என்று சொல்வது கட்டுரை ஆசிரியரின் வேளாளச் சார்பு நிலையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்துக்கும் உரியவர்கள் வேளாளர்களே என்ற பம்மாத்து வேலை மறைமலை அடிகள் போன்றவர்களால் தொடக்கி வைக்கப்பட்டு க.ப.அறவாணன் போன்றவர்களால் இன்று வரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

கால்டுவெல் எந்தவித உள்நோக்கமும் அற்ற உண்மையான ஆய்வாளர் அல்லர். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற அவரது நூல் மிகச் சிறப்பான ஆய்வு நூல் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் இந்தியப் பண்பாட்டு, மரபு பற்றிய ஏளனமான பார்வையும், கிறிஸ்தவத்தை இந்த மண்ணில் வேரூன்றச் செய்ய வேண்டுமென்றால் தம்முடைய மரபு குறித்த பெருமித உணர்வை இந்த மண்ணின் மைந்தர்களிடமிருந்து நீக்கிவிட வேண்டுமென்ற நோக்கமுமே அவருடைய செயல்திட்டத்துக்குப் பின்புலமாக அமைந்த அம்சங்களாகும்.

கால்டுவெல் எழுதிய History of Tinnevelly என்ற நூலின் மூலமும், சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மண்டல வரலாற்றுத் தொகுப்பு நூல்களின் மூலமும் தமிழர்களின் வரலாற்று உணர்வு குறித்து கால்டுவெல் கொண்டிருந்த ஏளனமான கண்ணோட்டம் புலப்படுகிறது. பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கிழக்கிந்தியக் கும்பினியின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸியால் 1803ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டன. இவ்வம்சாவளி வரலாறுகள் குறித்துக் “கட்டுக்கதையைவிட மோசமான புனைவுகள்” என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1980ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் இவ்வரலாறுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை சில இடங்களில் சற்று மிகைப்பட எழுதப்பட்டிருப்பினும் நம்பகமான வரலாற்று அடிப்படையைக் கொண்டவையே என்பதில் ஐயமில்லை. அவ்வாறிருக்க, இவ்வளவு கடுமையான விமர்சனத்தை இவ்வரலாறுகள் குறித்துக் கால்டுவெல் முன்வைத்ததன் நோக்கம் என்ன? இந்தியர்களுக்கு வரலாற்றுப் பார்வை அறவே இல்லை என்ற எண்ணம் கொண்டவர் கால்டுவெல் என்பதுதான் இதற்குப் பதில்.

அ. கணேசன்

காலின் மெக்கன்ஸி, பிரான்சிஸ் வைட் எல்லிஸின் நெருங்கிய நண்பர் என்பதோடு இவ்விருவரும் ஆய்வுப் பணிகளிலும் தம்முள் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஆவர். காலின் மெக்கன்ஸியும் எல்லிஸ¤ம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் நிர்வாக அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் ஆவர். அவர்களுக்குக் கால்டுவெல்லைப் போல கிறிஸ்தவ மதப்பரப்பல் நோக்கம் இருந்ததில்லை. நல்ல நிர்வாகிகள் என்ற பெயரெடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இருந்ததால் அவர்கள் இந்த மண்ணின் மரபுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளில் காலனி ஆதிக்க மனப்பான்மை சிறிதும் இருந்ததில்லை என்பதல்ல எமது வாதம். ஆளப்படுவோரின் வாழ்வியலை அனுதாப உணர்வுடன் புரிந்து கொள்ள வேண்டுமென்ற முயற்சி அவர்களிடம் இருந்தது என்பதைத்தான் குறிப்பிட விழைகிறோம். கள ஆய்வு அனுபவங்கள் அவர்களுடைய கண்ணோட்டத்தைச் செழுமைப்படுத்தின.

கால்டுவெல்லுக்கோ மதமாற்றக் களத்தில் அமோக மகசூலை அள்ளிவிட வேண்டுமென்ற உள்நோக்கம் இருந்த அளவுக்கு இந்த மண்ணின் மரபுகள் குறித்து அனுதாபத்தோடு கூடிய புரிந்துணர்வு இல்லை. Tinnevelly Shanars என்ற அவருடைய நூல் நெல்லைச் சீமைச் சான்றோர் சமூகத்தவர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தை விசுவாசத்தோடு பின்பற்றி வந்த சான்றோர் சாதியினரே அவர் மீது கடும் சீற்றம் கொண்டனர். ஞானப்பிரகாசம் நாடார் என்ற புராடஸ்டண்ட் கிறிஸ்தவர் 1883ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் இங்கிலாந்துப் பிரதமர் கிளாட்ஸ்டனுக்கு இந்த நூலைத் தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்படாது போய்விட்டாலும்கூட, நெல்லைச் சீமையில் தம்மால் நிம்மதியாகத் தொடர்ந்து வாழ முடியாது என்று உணர்ந்துகொண்ட கால்டுவெல் கோடைக்கானலுக்குச் சென்று தம் இறுதிக்காலம் வரை, சற்றொப்ப இருபது ஆண்டுகள் அங்கேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது சான்றோர் சமூகத்தவரின் பெருமிதம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ இயலாத வண்ணம் அவருடைய பார்வையில் படிந்து போய்விட்ட, கிறிஸ்தவ மதம் சார்ந்த ஐரோப்பிய இன மேன்மை என்ற காமாலைக் கண்ணோட்டம்தான்.

திராவிட மொழிகள் குறித்த பிரான்சிஸ் வைட் எல்லிஸின் முன்னோடிப் பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரத்தைக் கால்டுவெல் வழங்கவே இல்லை. எல்லிஸ் கிறிஸ்தவ மதத்தின்பால் விசுவாசம் உடையவர் அல்லர். பெளத்த சமயம் குறித்த அனுதாபத்தோடு கூடிய புரிதல் அவரிடம் இருந்தது. திருவள்ளுவர் உருவத்தைப் பொற்காசில் பொறித்து வெளியிடும் அளவிற்கு திருக்குறளை நேசித்தவர் எல்லிஸ். சென்னைப் பட்டிணத்தின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக 27 கிணறுகள் வெட்டுவித்து வார திதி, நக்ஷத்திர யோக கரணம் (பஞ்சாங்கம்) பார்த்துப் புண்யாஹவாசனம் செய்தவர் எல்லிஸ். (திருமலை நாயக்கர் அரண்மனைக் காட்சிக்கூடத்திலுள்ள கல்வெட்டு வாசகம்.) இப்படிப்பட்ட ‘பாசண்டி’யை கால்டுவெல் போன்ற விசுவாசமான கிறிஸ்தவரால் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இதுதான் கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் இருந்த அடிப்படைப் பிரச்சினை ஆகும்.

பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கட்டுக்கதையைவிட மோசமானவை எனக் குறிப்பிடும் கால்டுவெல் தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் குறிப்பிடும் ஓர் அபத்தமான கதையினை வரலாற்றுக் குறிப்பு என்ற பெயரில் தொகுத்துள்ளார்.

மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் பற்றிய புராணக் குறிப்பு சிலப்பதிகாரத்தில் முதன் முதலில் இடம்பெறுகிறது. புதிய கற்காலப் பண்பாட்டு நிலையிலிருந்து இரும்பு யுக நாகரிகத்திற்குத் தமிழ்ச் சமூகம் மாற்றம் அடைந்தபோது, நீரைத் தேக்கி பிரம்மாண்டமான நீர் நிலைகளை உருவாக்கிக் குடிநீர் மற்றும் நீர்ப் பாசன வசதிகளைப் பாண்டிய மன்னர்கள் மேம்படுத்தி அதன்மூலம் மழை பொய்த்த வறட்சிக் காலங்களிலும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வகை செய்தனர் என்ற வரலாற்றினை இது உணர்த்தக்கூடும் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் கரிகால் சோழன் என்றும், அவன் மேகத்தைச் சிறை செய்தது மாவு விற்கும் கிழவியின் வியாபாரத்தைக் காப்பதற்குத்தான் என்றும் தோன்றியிருக்கின்றன. தமிழக வரலாறு பற்றிய கால்டுவெல்லின் வரலாற்றுக் கண்ணோட்டம் இதுதான்.

பாளையப்பட்டுகளின் ஆதாரபூர்வமான வரலாற்றைக் கட்டுக்கதையைவிட மோசமானதென்று குறிப்பிடும் கால்டுவெல் “மாவு விற்கும் கிழவி” போன்ற சிறுபிள்ளைத்தனமான கதைகளை வரலாறு என்று குறிப்பிடுவதன் உட்பொருள் என்ன? கால்டுவெல் ஆய்வுக் கண்ணோட்டமில்லாத அடிமுட்டாள் அல்லர். மிகச் சிறந்த அறிஞர். ஆனால், ஆங்கிலேயர்களை எதிர்த்து இன்னுயிர் ஈந்த கட்டபொம்மன் போன்ற திராவிட வீரர்களை (பாளையக்காரர்களை) இந்த மண்ணுக்கு உரிமையற்றவர்கள் என்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களே உண்மையான திராவிடர்கள் என்றும் ஒரு சித்திரத்தைத் தீட்ட முயன்றவர் கால்டுவெல். அவர் தமிழர்களை முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாவும் கருதியதால்தான் மாவு விற்கும் கிழவி பற்றிய அபத்தமான கதையை வரலாற்றுக் குறிப்பாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை. திராவிட இயக்கத்தாரின் தொடக்க கால கோஷங்களுக்கும், ‘தீ பரவட்டும்’ போன்ற இயக்கங்களுக்கும் கால்டுவெல் ஒரு முன்னோடியான உந்துசக்தியாக இருந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. இதைத்தான் திராவிட இயக்கத்தின் “அறிவுலக வேர்கள்” என்று வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார் போலும்.

“ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழியாத் தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்து மனோன்மணியத்திற்குத் தமிழ்த் தெய்வ வணக்கம் இயற்றிய பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை, கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் என்று எழுதுவதில் இப்புலமைக் கருத்தாக்கத்தின் அழகியல் / அரசியல் வெளிப்பாட்டைக் காணலாம்” என வேங்கடாசலபதி குறிப்பிடுவதில் ‘அழகியல்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால் பொருத்தமாக இருக்கும்.

மகாபாரதத்தைத் தமிழில் இயற்றிய வில்லிபுத்தூராரின் மகனும், திருமுனைப்பாடி நாட்டுச் சனியூர் வீரராகவாச்சாரியார் பேரனுமான வரந்தருவார்,

ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்றேனையது
தன்னேரிலாத தமிழ்

– என்று பாடியுள்ள வாழ்த்துப்பாவில் இடம்பெறும் தமிழ்த் தெய்வ வழிபாடு ஆரியத்தோடு ஒட்டியும் உறழ்ந்தும் தன்மயமாக்கியும் வளர்ந்த தமிழின் திறத்தை வியந்ததே தவிர ஆரியம் உலக வழக்கு ஒழிந்த மொழி என ஒப்பிட்டுப் பெருமைப்படவில்லை. வெங்கதிரோனுக்கு நிகரான கோள் எதுவும் இல்லாதது போலத் தமிழுக்கு நிகரான வேறொரு மொழி (சமஸ்கிருதம் உட்பட) உலகில் இல்லை என்று வரந்தருவார் பெருமிதத்தோடு கூறுவது வெளிவேஷம் என்று சொல்லிவிட முடியுமா? தன்னேரில்லாத தமிழைப் போற்றிய வரந்தருவார் போன்றவர்களைக்கூட ஆரியர்கள் என்று பட்டங்கட்டி இருட்டடிப்புச் செய்துவிட்டுத் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்களைத் தமிழர்களின் தந்தையாகப் போற்றியதுதான் திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனை. பிராம்மணர் எதிர்ப்பு / வேளாண் தலைமை ஏற்பு / அன்னிய-ஐரோப்பிய ஆதரவு ஆகிய அடிப்படைகளே திராவிட இயக்க அறிவுலக வேர்கள் ஆகும். மனோன்மணியம் சுந்தரனாரைத் திராவிட இயக்க அறிவுலகப் பிரதிநிதிகளுள் ஒருவராக வேங்கடாசலபதி முன்மொழிவதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனால் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் போன்ற திராவிட மொழிகள் தொடர்பான ஆய்வு முன்னோடிகளிடத்து திராவிட இயக்க அறிவுலக வேர்களைக் காண்பது அரைகுறையான புரிதலின் விளைவாக இருக்க வேண்டும் அல்லது ஆய்வு நேர்மை இன்மையின் வெளிப்பாடாக வே இருக்க வேண்டும். தாமஸ் டிரவுட்மனின் சொற்களிலேயே இதனைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

“திராவிடச் சான்றோடு திராவிட இயக்கத் தோற்றத்தை நேரடியாகத் தொடர்புபடுத்துவது இரண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த பல வரலாற்று நிகழ்வுகளின் தாக்கத்தைப் புறக்கணிப்பதாகும். மேலும், திராவிட இயக்கம், தமிழ்நாட்டோடு நின்றுவிட்டது மட்டுமல்ல, அது பிராமண எதிர்ப்பையும் தன் தோற்றத்துக்கான முக்கியக் காரணமாகக் கொண்டிருந்தது. இவை திராவிடச் சான்றிலிருந்து நேரடியாக முகிழ்த்தவை அல்ல; மேலும், திராவிடச் சான்று குறித்த ஆய்வில் எல்லிஸ¤டன் ஈடுபட்ட சங்கரய்யா, பட்டாபிராம சாஸ்திரி ஆகியோர் தெலுங்கு பிராமணர்களாவர் என்பதும் மனங் கொள்ளத்தக்கது.” (பக்கம் 224.)

ஆ.இரா.வேங்கடாசலபதி

மொழியியல் கண்ணோட்டத்தில் திராவிட மொழிகள் என்ற அடையாளத்தைக் காணும் முயற்சியின் ஆரம்பகட்டத்தை தாமஸ் டிரவுட்மன் (மொழிபெயர்ப்பாளரின் சொற்களில்) “அடிமுடி காணும் கதையின் மகிழ்ச்சியான பகுதி” (பக்கம் 221) என்கிறார். “அதை (திராவிட மொழிகள் என்ற கருத்தாக்கத்தை) சங்கரய்யா எல்லிஸிடமிருந்து பெற்றாரா, எல்லிஸ் அவரிடமிருந்து பெற்றாரா என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. 1800ஆம் ஆண்டிலேயே – அதாவது எல்லிஸ¤க்கும் சங்கரய்யாவுக்கும் தொடர்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கும் காலத்திற்கு முன்பே – திராவிடக் கருத்தையொத்ததொரு எண்ணத்தை எல்லிஸ் வெளிப்படுத்திவிட்டார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் முடிவாகச் சொல்லக் கூடியது என்னவென்றால் திராவிடக் கருத்து என்பது சென்னையில் வாழ்ந்த பல அறிஞர்களினுடைய சிந்தனைகளின் இணைவின் விளைவு என்பதேயாகும்” (பக். 221-222) என்று டிரவுட்மன் சிறிதும் குழப்பமின்றித் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்க அறிவுலக வேர்களுள் ஒருவரான மனோன்மணியம் சுந்தரனார் குறிப்பிடுவது போல, கன்னடமும் களி தெலுங்கும் துளுவும் தமிழிலிருந்து உதித்தவை அல்ல. திராவிட மொழியியல் நிபுணர்கள் திராவிட மொழிகளின் பரிணாம வளர்ச்சி பற்றி வகைதொகைப்படுத்தி ஆராய்ந்துள்ள கருத்தின்படி தமிழ் மொழி திராவிட மொழிகளிலேயே மிகவும் செம்மையான மொழியாகும். இந்தோ-ஆரிய மொழிகளில் சமஸ்கிருதம் பெற்றுள்ள இடத்தையொத்த நிலை இதுவாகும். சமஸ்கிருதத்தைவிட முற்பட்டது வேத கால ஆரிய மொழி. வேத கால ஆரிய மொழிக்கு முற்பட்டவை இந்தோ-ஆரியப் பிராகிருத மொழிகள். இது போன்றே, முந்து-தென் திராவிட மொழியிலிருந்து (அம்மொழி காலப்போக்கில் சிதைந்து வழக்கொழிந்துவிட்டது) துளு தனி மொழியாகவும் தமிழ், கன்னடம், மலையாளக் கூறுகள் கலந்த முந்து-தமிழ் (proto-Tamil) தனி மொழியாகவும் பிரிந்திருக்க வேண்டுமென்றும் முந்து-தமிழிலிருந்து கன்னடம் தனி மொழியாகவும், தமிழ்-மலையாள மொழிக் கூறுகள் கலந்த முந்து-தமிழ் மொழி தனி மொழியாகவும் பிரிந்திருக்க வேண்டுமென்றும் கி.பி. 5ஆம் நூற்றாண்டளவில் இதிலிருந்து மலையாளம் பிரிந்து சென்றுவிட்டதால் முந்து-தமிழ் மொழி தமிழ் மொழியாக நீடித்ததென்றும் மொழியியலாளர்கள் கருதுகின்றனர்.

வேறொரு சித்திரமும் சில திராவிட மொழியியல் அறிஞர்களால் தீட்டப்பட்டுள்ளது. துளுவும் தமிழும் கி.மு. 1000இல் முந்து-தென் திராவிடத்திலிருந்து பிரிந்திருக்க வேண்டுமென்றும் அதனையொட்டி முந்து-மத்திய திராவிடத்திலிருந்து தெலுங்கு கிளைத்திருக்க வேண்டுமென்றும் துளுவும் தெலுங்கும் உறவாடிக் கன்னடம் காலப்போக்கில் தனிமொழியாக உருவாகியிருக்க வேண்டுமென்றும் மொழியியல் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (தெ.பொ.மீனாட்சிசுந்தர கிராமணியார்), செக்கஸ்லோவேக்கியத் தமிழறிஞர் கமில் சுவலபில் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறிருக்க, வட இந்தியப் பிராகிருதம் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்துதான் தோன்றின என்று கூறுவது எத்தகைய அபத்தமான, மொழிகளின் பரிணாம வளர்ச்சி முறைக்கு நேர்மாறான கண்ணோட்டமாக இருக்குமோ அது போன்றதே மனோன்மணியம் சுந்தரனாரின் கருத்தும் ஆகும். மனோன்மணியம் சுந்தரனாரையும் கால்டுவெல்லையும் கண்மூடித்தனமாக வழிபடும் திராவிட இயக்கத்தாருக்குத் தற்காலத்து திராவிட மொழியியல் நிபுணர்கள் குறிப்பிடும் கருத்துகள் உவப்பானவையாக இரா. இக்கருத்துகளைப் படிப்பதால் அவர்களுக்கு ஓர் ஒவ்வாமைகூட ஏற்பட்டுவிடக்கூடும். அதற்காக எல்லிஸ் துரைமகனாரின் போற்றத்தக்க தமிழ்ப் பணிகளை வரிசைப்படுத்திக் கூறிவிட்டு போகிற போக்கில் திராவிட மாயைக்கு எதிரான கருத்தியலைப் பழித்து எழுதியுள்ளது வேங்கடாசலபதியின் ஆழ்மன அரிப்புகளை வெளிப்படுத்துகிறதே தவிர வேறொன்றுமல்ல.

வள்ளுவம் பற்றிய அயோத்திதாசப் பண்டிதரின் சில குறிப்புகளை மேற்கோள் காட்டும் வேங்கடாசலபதி, வள்ளுவர் குலத்தவர்கள் இன்றைக்குப் பறையர் சமூகத்தின் ஒரு உட்பிரிவாக இருப்பதையும், அவர்களே வானநூல், சோதிடம், மருத்துவம், இசை போன்ற துறைகளில் வல்லுனர்களாக இருப்பதையும், சமயத் தலைவர்கள் என்ற பொருளில் தரங்கம்பாடி ஆவணம் ஒன்றில் அவர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதையும் அறிவாரா? இப்போது பறையராகக் கருதப்படும் அவர்களிடையே நிலவுகின்ற தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதற்கும், தமிழ்ப் பண்பாட்டின் விழுமியத்திற்குச் சொந்தம் கொண்டாடும் உரிமை படைத்தவர்கள் அவர்கள் என்ற உண்மையை நிலைநாட்டுவதற்கும் ஆயத்தமாக உள்ளாரா? அயோத்திதாசப் பண்டிதர் பெளத்தராக மாறுவதற்கு மூல காரணமாக இருந்த பிரம்ம ஞான சபைத் தலைவர் ஹென்றி ஆல்காட் சிங்கள பெளத்தர்கள்பால் கொண்டிருந்த அளவுக்கு இலங்கைச் சைவத் தமிழர்கள்பால் பரிவு கொண்டிருக்கவில்லை. இலங்கைச் சைவத் தமிழர்களிடையே நிலவுகின்ற சாதி வேறுபாடு சிங்கள பெளத்தர்களிடையே இல்லை. வள்ளுவத்தையும், அயோத்திதாசரையும் போற்றுகின்ற வேங்கடாசலபதி போன்றவர்கள் இத்தகைய உண்மைகளை ஏற்றுக்கொள்ளத் தயாரா?

Series Navigationஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்
author

அ. கணேசன்

Similar Posts

79 Comments

  1. Avatar
    Malarmannan says:

    உள் நோக்கத்துடன் கிறிஸ்தவ மதப் பிரசாரகர் கால்டுவெல் செய்த துவேஷப் பிரசாரத்தை ஆய்வு எனக் கொண்டாடும் போக்கை அம்பலப் படுத்தியுள்ள கட்டுரை ஆசிரியர்கள் பாராட்டுக்குரியோராவர். கூடவே எல்லீஸின் சிறப்பையும் பதிவு செய்திருப்பது நன்று. எல்லீசன் என்றே பாராட்டுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவர் எல்லீஸ். அவருக்குச் சரியான நினைவுச் சின்னம் ஏதும் இல்லை, சென்னையில் எல்லீஸ் சாலை என்கிற ஒரு குறுகலான தெருவின் பெயரைத் தவிர!
    -மலர்மன்னன்

  2. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    ஆ.இரா வேங்கிடாசலபதி அவர்களுக்கு இலக்கிய, கலை உணர்வுகள் தான் கிடையாது, ஆனால், தீவிர ஆராய்ச்சியாளர் என்று நினைத்தேன். கோஷங்களையே அறிந்தவர்களாயும், அதிலேயே திளைத்து வெற்றிகண்டவர்களாயும் உள்ள திராவிட இயக்கத்தார் சார்பு கொண்டவராயினும், அவர்களுக்கு ஒத்து வராத ஆராய்ச்சி மனம் இவரிடம் எப்படி வந்தது என்று ஆச்சரியப்படுவேன். சரி வந்த வரைக்கும் சந்தோஷப்படுவோம் என்று இதுகாறும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நான் மதிக்கும் ஆராய்ச்சியாலர் ராமச்சந்திரன் அதுவும் சொத்தை உள்ளே சத்து இல்லை என்கிறாரே. என்ன செய்ய இந்த சிகாகோ புகழ் ஆராய்ச்சியாளரை?

  3. Avatar
    vedamgopal says:

    ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல் நிலைப்பாட்டை உருவாக்கி அதற்கு ஒரு சித்தாந்த வடிவத்தைக் கற்பித்தவர்கள் தமிழக வேளாளர்களே என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தவர் க.கைலாசபதி ஆவார்.

    தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்துக்கும் உரியவர்கள் வேளாளர்களே என்ற பம்மாத்து வேலை மறைமலை அடிகள் போன்றவர்களால் தொடக்கி வைக்கப்பட்டு க.ப.அறவாணன் போன்றவர்களால் இன்று வரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

    Is there any reference articles to support the above said statement.

  4. Avatar
    களிமிகு கணபதி says:

    கல்வெட்டு ராமச்சந்திரன் போன்ற உண்மையான ஆராய்ச்சியாளர்களை விட, “கொள்கை” அடிப்படையில் வாதாடுபவர்களின் கருத்துக்கள் விதந்தோதப்படும் இழிநிலையில்தான் தமிழ்நாடு (ஏன் இந்தியாவுமே) இருக்கிறது.

    கல்வெட்டு ராமச்சந்திரனின் இந்த மறுப்பைக் காலச்சுவடு வெளியிடுமா ?

    காலச்சுவடின் வாசகர்கள் இந்த மறுதரப்புக்குக் கருத்துச் சுதந்திரம் தரப்பட வேண்டும் என எண்ணுகிறார்களா ?

    நல்லோர் ஒருவர் உளரேல், உளறேல் எனச் சொல்வார்கள்.

    பார்க்கலாம்.

    .

  5. Avatar
    SV says:

    It looks like even the Pudhu Thinnai has fallen prey to casteist elements.

    While i do not hold brief to either Dravidan Movement or
    Mr.Venkatachalapahy as both can be faulted for their biases, the same holds good for the authors Mr.A.Ganesan and Mr.S.Ramachandran.

    First of all, they should come out of their own caste bias and then write about others. I do not know how many of Thinnai readers are aware that Kailasapathy himself was a vELaLar. While they conveniently refer Maramalai Adigal and Aravanan by their caste, they skillfully hide this fact.

    At the same time, Mr.A.Ganesan calls himself as A.Ganesan Nadar in many Pro-Hindu websites and he is a leading member of their caste association. Similarly, all of Mr.Ramachandran’s researshes are either towards belittling vELaLars or inventing a false Kshatriyahood for his caste. Them calling others with ‘names’ and caste biases, is like pot calling kettle black. Even their opposition to Caldwell is primarily due to the book he wrote their caste.

    While Caldwell may have been ignorant and had his own agenda, the same can be said of the authors. Similarly, just because Caldwell mixes up a Pandya with Chozha in a reference story, they wish to rubbish him. Same can be said about the authors too.

    For example, they write, that there were no caste differences among Buddhist Singhales.

    “இலங்கைச் சைவத் தமிழர்களிடையே நிலவுகின்ற சாதி வேறுபாடு சிங்கள பெளத்தர்களிடையே இல்லை”

    Any lay reader of Sri Lankan society would know that the caste system among Tamils and Singhalese were allmost the same. Govigama and vELaLar were considered equivalent. Govigama supported a Tamil vELaLar, against an Sinhala speaking Karava during an election in British times. Though wiki is not authority, one can get an understanding of the same in this link.

    http://en.wikipedia.org/wiki/Caste_system_(Sri_Lanka)

    If one wants, one can rubbish all that written by Mr.Ganesan and Mr.Ramachandran if they can make such a sweeping statement about a society so close by.

    Similarly, it is a myth that these kind of people want to propagate that DM was a vELaLar oriented movement. While it had its own share of vELaLar leaders, it also had its own share of Telugu, Kannada and Malayali leaders, due to the inclusion of these language speaking areas in the then Madras State. These non-tamil leaders, including,
    E.Ve.Ra.Periyar had much more stake in DM, than the Tamil Saiva vELaLars.

    Mr.Venkatachalapathi has extensively written on the relationship between Tamil Saiva vELaLars and Dravidian Movement, putting in public all their pull and push. It can be clearly seen from that and other available material that the leading ligts of vELalar and other related castes like Mukkulathors and Nagarathars were not part of DM. They might have been sympathetic to selected views or agitations, but on the whole they were more Tamil Nationalists, than DM. The seeds of this Tamil Nationalism was sown and nurtured also by Tamil speaking Brahmins, like The Greats Ragha Ayyangar and U.Ve.Sa. It is unfortunate that the Tamil Nationalism was swallowed by Dravidian Movement later leading to the alienation of Tamil speaking Brahmins from other tamil castes.

    Otherwise, one can not quote any know animosity among these upper groups till the beginning of 20th century.
    I agree that there were some local competition among these upper classes and bad treatment of poor and certain caste groups, it was never a caste consolidation. Though the anti-brahmin propaganda has stuck and still has few followers, the tamil society always chose leaders who were able to rise above their caste and generally who had no ill will to other castes. People who were closer to him would know that Karunanidhi would occasionally get into Anti-brahmin rhetoric only due to his own inferiority complex or personal agenda and that had very little impact even in his own personal matters. He is in fact rumoured to have much bigger complex with reference to other tamil upper castes like Saiva Pillais and Mudaliars.

    Sorry about this digression. It shared this for the benefit of some people who had gleefully commented for this article.

    Otherwise, Mr.Ganesan and Mr.Ramachandran have no business to keep propogating their hatred and platforms like Thinnai should not allow their platform to be misused. These people are no less than Periyarists. It is just that the targets are different.

  6. Avatar
    களிமிகு கணபதி says:

    SV,

    The right way is to bring out authentic evidences against arguments posed by Kalvettu Ramachandran or Ganesan.

    Simply blaming each other of malicious intention will not do.

    .

  7. Avatar
    anbuselvan says:

    திரு கணேசனும், ராமச்சந்திரனும் குமரியில் இருந்து பீட்டர் என்ற ஆய்வாளர் வைத்த கேள்விகளுக்கு இதுவரை பதிலளிக்க வில்லையே..

  8. Avatar
    காவ்யா says:

    தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை என்பது என்ன அமைப்பு? இதை நடாத்துபவர்கள் யார்? இவர்களின் நோக்கமென்ன ? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவர்களே தங்களின் பதிவில் அறிமுகப்படுத்துகிறார்கள்;
    //South Indian Social History Research Institute’ is a Chennai (India) based private research institution studying the history of south India.
    We need a multi-disciplinary approach to understand the south Indian history. Our research team currently comprises of historians, epigraphists, archaeologists, social scientists and technocrats. We are planning to recruit members from other disciplines also.
    Our aim is to deconstruct the false theories and pseudo Messiahs dominating the study of South Indian social history and to rewrite a more sensible one.// from http://www.sishri.org/aboutus.html

    பொய் பரப்பும் ஆராய்ச்சிகளை தடுத்து உண்மைகளை வெளிக்கொணர்வதே இவர்கள் நோக்கம். அப்படி பொய் பரப்பும் ஆராய்ச்சிகள் எவையென்று இவர்கள் சொல்வதெல்லாம் இந்துத்வாவினருக்கு எதெல்லாம் ஒவ்வாததோ அவையெல்லாம் பொய் பரப்பும் ஆராய்ச்சிகளாகும். தென்னிந்திய ஆராய்ச்சியைப் பொறுத்தவரை, எவராக இருந்தாலும் இவர்கள் கொள்கைகளே உண்மையென நிரூபிக்கும் ஆராய்ச்சி முடிபுகளைத் தவிர மற்றெல்லாம் பொய்கள். எனவேதான், கேரள நம்பூதிரிகள் நல்லவர்கள்; அவர்களை எதிர்த்த நாடார்கள் மிசுனோரிகள் தூண்டுதலால் செய்த போலிப்பிரச்சாரமே தோல்சீலைக்கழகம் என்ற கட்டுக்கதை என்று சொல்லும் நூல். இன்னூல் இக்கழகத்தாரால் வெளியிடப்பட்டு, அது மலர்மன்னனால் திண்ணையில் விமர்சனம் (அதாவது புகழாரம்) பண்ணப்பட்டது.
    ஆராய்ச்சிகள் பண்ணக்கூடாது; முடிபுகள் இந்துத்வாவினர் வரவேற்கும்படி இருக்கக்கூடாதென்பதல்ல நான் சொல்வது. மாறாக, இவர்களே ஆராய்ச்சிகள் செய்து, இவர்களுக்கு சாதகமான முடிபுகளைத் தரும் முன் முயற்சிகளைச் ஆராய்ச்சிக்கட்டுரைகளாக ஜோடித்து , பின்னர் இவர்களே பதிப்பித்து வெளியிட்டு, விமர்சனம் என்ற பேரில் இவர்களே புகழ்ந்து கொண்டால் இந்த ஆராய்ச்சிகளை என்ன சொல்ல? எவர்தான் நம்புவார் ?
    இவர்களின் ஆஸ்தான ஆராய்ச்சியாளர்கள் ‘ஆராய்ச்சிகள்’ பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். இந்த ஒரு தலைபட்சமான ஆராய்ச்சிகள் என்ற பெயரில் நட்த்து நாடகங்களை இவர்கள் நடாத்தும் வலைபதிவுக்ளில் போட்டு கைதட்டிக்கொள்கிறார்கள். தமிழிந்து. காமில் அப்படிச்செய்து கொண்டு வருகிறார்கள்.
    ஆராய்ச்சி என்ற சொல்லுக்கு ஒரு புதிய பொருளைத்தான் நாம் கண்டிபிடிக்கவேண்டும்.

    திண்ணையில் செய்வது இவ்விணைய தாளின் தரத்தைக் குறைக்கும் முயற்சியே.

    Let this Hindutva group who is camping here, say how many historians of repute have accepted the findings of your Society?

    There are so many in India and aborad, who have no leanings or biases, and are admired for their independent convictions. Let the Hindutva group here cite a single historian who has endorsed the findings of your resident ‘historians’ like Ramachandran

    In the absence of such citation, I would dare say that this essay is a cheat.

  9. Avatar
    vedamgopal says:

    This article in the starting charged the vellalar community and I posted my comment asking for the reference article from the author and got no reply. Here I want to share my experience with the vellaar (Mudaliar) community and except readers to accept or deny my views and post comment.

    Starting from EVR, all the Dravidian parties funded by church for dividing the society to create unrest everywhere. Partisan group like VCK gets enormous amount of funds for publicity and it is clearly visible going through the costlier digital banner display throughout Tamilnadu. They always run for the dog biscuit thrown by this church group and claim that they are self respected Tamilians and always act as per “pakutharivu”. The actual fact is they are all brainwashed number one idiots’ and ready to sell the mother land. Having witnessed the horrible genocide in Sri Lanka due to long term conspiracy of church these crooks not learned any lesson and do not want to come out of the Christian trap. Having looted the 2G money by both DMK and Congress and putting all the blame on DMK one sided still MK unable to come out of the alliance. It is such a dangerous trap and very difficult to escape. If things continue like this in TN the same Lankan type rivet will be applied at their back very soon.

    In 1967 election since Rajaji supported the DMK I do engaged in election work and wrote voter slip day & night for canvassing .The candidate for MLA is Rama Arankanal & for MP Murasoli Maran. Rajaji wanted to make a Ganesa Idol but landed in making a monkey idol. He realized it very soon and changed his stand in the next election. But some learned people misjudge on many time like Mr..Cho. In the current election the learned Cho Ramasawamy instead of convincing Vijayakanth to align with BJP he favoured alliance with Jaya. Just look at Jaya, she has the capacity and skill to rule the state like Mr.Narendra Modi but she do not want to change her attitude and fall prey to Dravidian policy, unwanted relationship with underground gang (Sasikala & Co), changing the policy according to situation with sole aim of retaining power and minority appeasement. Etc.,

    Even though Brahmin anti-Brahmin enmity was artificial creation of British divide and rule policy through out India but it has taken a worst shape only in Tamilnadu. Even to-day in North people is giving respect to Brahmin priest calling them Panditji. Here in TN it is opposite. I strongly of the opinion that particularly the Mudaliyar community’s hatred towards Brahmin is very worst mainly due to jealousy. Dravida Munetra Khazhagam is actually Mudaliar Munetra Khazhagam. Starting from CNA the party is crowded with only Mudaliars. Many of this community leaders mostly favored British rule to continue. Many of them are Dharmakartha of temples and looted temple property to the maximum. C.P.Ramaswamy Iyer brought these temples under Government control and put a break of their loot. All are owners of a minimum 3 or 5 houses in the city and urban area and they mostly survived through rent from these houses. Buidting shops spaces infront of the residential houses practice is started by them only. Even to-day they are the number one culprit giving room for all sort of division to achieve their selfish goal

    I know very well that Mudaliars are half Brahmin in all their routine activities & true followers of Hindu Saiva or Vaishnav tradition. Still from their group only many of them supported the Dravidian cult. Raised voices against Brahminism, separate identity for Tamil and Tamilians. I am residing here in Chennai for the past 60 years and moved with many people during my School, College and Office days. Particularly this community people always tease “papara puthiai kamikaraya”. Also in villages this community people mostly fight with dalit. Wearing Karai doti started by them. You can invariably notice these people always hold “Murasoli” in their arm pit. In Tamilnadu in the forward community list except for Brahmin rest of the identified forward community people has got several sub cast which denotes them as OBC. To my knowledge particularly from this group many of them shifted their status to OBC by changing the blirth certificate and education certificate and got reservation in education and employment. Fortunately most of my friends are Mudaliyars only even to-day. Inspite of all these they always like to have friendship with Brahmins, let out their houses specifically for Brahmin, number of intercast marriage with Brahmin is more in their community

    After Mr.MK has taken the stronghold of DMK these people not given proper recognition. Slowly they have shifted their loyalty to AIADMK. Even here things were not favorable to them. Also started to realize the dangers posing Hinduism to-day due to the raise of minority strength and worried more than Brahmin. Some of them already shifted their loyalty to BJP. Normally I am not interested to dig out the differences within Hindu community and always want to unite them. Please visit this site to know more about Mudaliars written by their own folk. http://mudaliars.110mb.com/index.html

    Anti Brahminism seed sowed has grown up like a banyan tree and the roots are gone very deep. Still the non-brahmin TN masses not realized a tinge of it and supporting the Dravidian parties and ready to fish in the troubled waters. That is why the BJP is clueless and unable to form alliance. Christianization of all the Government organs is taking place in a rapid speed up to Judiciary level and corruption also gone beyond controllable limit. To-day in Kerala Congress contestant none of the candidate is Hindu.

  10. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    பீட்டர் முன் வைத்த கேள்விகள் தான் என்ன என்று சொல்லியிருக்க வேண்டும். இங்கு அதைச் சொல்ல வேண்டிய காரணம், இங்கு பேசப்படுபவையோடு சம்பந்தம் உண்டாஎன்பது தெரியவேண்டும். இப்படி மொட்டையாக ஏதோ சொல்லி மூக்கை ஆகாயத்துக்கு உயர்த்திக்கொண்டால் என்ன அர்த்தம்?

  11. Avatar
    Kavya says:

    இந்த ‘ஆராய்ச்சிகள்’ ஜெயமோகனால் புகழப்பட்டிருக்கிறது. படித்து வியப்படவில்லை. ஏனெனில் அவர் எதையுமே காய்தல் உவத்தலின்றி அணுகுபவரல்லர். ஆக, இந்த ஆராய்ச்சிக்கு நற்சான்றிதழ் இந்துத்வா பாசறை எழுத்தாளரிடமிருந்துதான் வருகிறது. மற்றெவரிடமிருந்தாவது வந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். அவர்கள் திராவிட இயக்கத்தையோ, இந்துத்வா கூட்டத்தையோ சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது.

    வரலாற்று ஆராய்ச்சிகளை எவரும் முன்முடிபுகளோடு செய்ய மாட்டார். விஞ்ஞான ஆராய்ச்சிகள் அப்படி நடக்கலாம். அதாவது, தான் எய்ட்ஸ் நோயுக்கு மருந்து கண்டுபிடிக்கவே ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு முயற்சிக்கலாம். இப்படி போனால் அப்படி வரும் என்று நினைத்தும் செய்வர். With certain fixed aim, a scientist perseveres day and night all his life to find a cure for the incurable disease like AIDS. He may fail; but the next person will take up where he has left off. Thus, with preconceived ideas, a scientific research is possible. My point is not strictly that; rather, such a preconception does not vitiate the research.

    “தமிழகத்தில் ஆதிதமிழர்கள், 10000 ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே ரிக் யஜூர் சாம அதர்வண வேதத்தையும் வடமொழி மந்திரங்களையுமோதியே தாலி கட்டினார்கள் இதுவே என் முன்முடிபு. இதை உண்மையென நிரூபித்து
    ஆதி தமிழர்களுக்கு சம்சுகிருதம் தெரியாது என்று சொல்லும் பித்தர்களின் மூக்கை அறுப்பேன் என்று ஆராய்ச்சிகளில் இறங்குதபவர்கள் ஆராய்ச்சியாளர்களர்கள் அல்ல; அரசியல்வாதிகள். My rival is saying that; he is quoting this and that; I should expose his theory false by hook or by crook. It is with this political aggrandizement that the current essay by Ganesan startles us.

    இந்துத்வா ஆராய்ச்சியாளர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அதற்குப்பெயர் தென்னிந்திய ஆராய்ச்சிக்கழகமாம்.

    திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் செய்தது பம்பாத்து வேலை என நிரூபிப்பதென்றால், அதை நேருக்கு நேர் அமெச்சூராகச் செய்யலாம். அதுவே சரி. அதை ஒரு ஆராய்ச்சி செய்கிறேன் என்று பந்தா காட்டியும்கூட செய்யலாம். ஏனெனில், அது பந்தா என்று படிப்பவருக்குத் தெரியும். படிப்பவர்கள் பொழுது போக்குக்காக படிப்பர்.
    எஃது எப்படி இருந்தாலும், நீங்களும் அவர்களும் இயங்கும் தளம் அறிஞர்களின் தளமல்ல. பாமரர்களின் தளம் என்பதே என் வாதம். All fun for us, the readers ! I don’t want to use the word buffoonery although it is more appropriate. Or gimmicks to attract attention.

    ஏனென்றால், உண்மையறிஞர்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார். உண்மையிலே உங்களது தாகம் ஆராய்ச்சிகள் செய்து உண்மையைத்தேடுவதாக இருந்தால், நீங்கள் முழுக்க முழுக்க ப்ரொஃபசனலாக உங்கள் செயல்பாடுகளில் காட்ட வேண்டும். ப்ரொஃபசனல்கள் அதைக் காட்ட மாட்டார்கள். தானாகவே தெரியும்.

    நீலகண்ட சாஸ்திரியையோ மசும்தாரையோ சுப்ரமணியனையோ படிக்கும்போது அவர்கள் ஒரு தேர்ந்த வரலாற்றாயவாளர்கள் என்று தெரியும். அவர்கள் ஒருபோதும் இன்னொரு ஆராய்ச்சியாளனின் முடிபுகளை கீழ்த்தரமான மொழியில் எள்ளி நகையாட மாட்டார்கள், கண்ணியமான மொழியில் எவ்வாறு தம்மாராய்ச்சியின் முடிபு அவர்களின் முடிபுகளிலிருந்து மாறுபடுகிறது என்று மட்டுமே சொல்லி நிற்பர். அவர்களால் நம் சிந்தனையின் தரமும் நாட்டின் கல்வியின் தரமும் உயர்கின்றன‌.

    திராவிட பம்மாத்து என்பது கீழ்த்தரமான மொழி. அதை நீங்கள் எழுதலாம். ஆனால் வரலாற்றாராய்ச்சியாளனாக இருந்து கொண்டு செய்யக்கூடாது. அவ்வாராய்ச்சி முடிபுகளை கட்டுரை மூலம் தெரிவிக்கும்போதும் செய்யக்கூடாது. கணேசனின் தலைப்பு அவர் எங்கு நிற்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

  12. Avatar
    suvanappiriyan says:

    //“தமிழகத்தில் ஆதிதமிழர்கள், 10000 ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே ரிக் யஜூர் சாம அதர்வண வேதத்தையும் வடமொழி மந்திரங்களையுமோதியே தாலி கட்டினார்கள் இதுவே என் முன்முடிபு. இதை உண்மையென நிரூபித்து
    ஆதி தமிழர்களுக்கு சம்சுகிருதம் தெரியாது என்று சொல்லும் பித்தர்களின் மூக்கை அறுப்பேன் என்று ஆராய்ச்சிகளில் இறங்குதபவர்கள் ஆராய்ச்சியாளர்களர்கள் அல்ல; அரசியல்வாதிகள்.//

    ஆரியர்கள் எகிப்து தேசத்திலிருந்தும் அதைச் சார்ந்த பகுதிகளிலிருந்தும் நமது நாட்டுக்கு வந்தவர்கள் என்றும் அவர்களின் தூதராக நோவா(நூஹ்) இருந்ததாகவும் அவருக்கும் அவருக்க முன்னால் உள்ள தூதர்களுக்கு அருளப்பட்ட வேதங்களின் தொகுப்புகளே ருக், யஜூர்,சாம,அதர்வண வேதங்கள் என்றும் முன்பு நான் படித்துள்ளேன். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தற்போதய இந்து மத வேதங்கள் இந்தியாவில் உதித்திருக்க வாய்ப்பில்லை. ஆரியர்கள் எகிப்திலிருந்து வரும்போது அவர்களோடு கொண்டு வந்தவைகளாக இருக்கலாம். இங்குள்ள திராவிடர்களுக்கு திருக்குறளும் சித்தர் பாடல்களும் மற்றைய தமிழ் பண்டைய நூல்களும் வழிகாட்டிகளாக இருந்திருக்கலாம்.

    இந்த வகையில் யாரும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

  13. Avatar
    vedamgopal says:

    நான் 18 ஆம் தேதி அனுப்பிய கமண்டிற்கு ஏன் யாரும் இதுவரை மறுமொழி செய்யவில்லை. பார்பானை திட்டவேண்டும் எனில் வரிந்துகட்டி வரும் காவ்யா பரமசிவம் எல்லாம் எங்கே ஒருவேளை இவர்களும் அந்த வெள்ளாளர் கூட்ட வாரிசுகளா ?

    1. Avatar
      காவ்யா says:

      ரொம்ப நீளமா இங்கிலீசில இருக்கு. எனவே நான் படிக்கப் பயந்து போய் உட்கார்ந்திருக்கேன்.

      மாற்றுக் கருத்துகளை “பார்ப்பன எதிர்ப்பு” என்று சொல்வதை நிறுத்திக் கொண்டு அக்கருத்துகளுக்கு பதில் கருத்துகளை வைக்கவும். நல்லது.

  14. Avatar
    admin says:

    வேதம் கோபால்,
    ஆராய்ச்சிரீதியாக எழுதுவது வேறு, இங்கே அவதூறாக எழுதுவது வேறு. தவறான வார்த்தைகளை பிரயோகம் செய்யவேண்டாம்

  15. Avatar
    GovindGocha says:

    இன ரீதியாக நமது டி என் ஏ கூறுகள் கொண்டு ஆராய்ச்சி காண்பது ஒரு வகை. ஆனால், இங்கு பெரும்பாலும் தகுதி முன்நிறுத்த உழைக்காமல் அவதூறு தொணியே அதிகமாக இருக்கிறது. நான் நேற்று ரிடையர் ஆன – மிக தமிழக அர்சு உயர்பதவியில் இருந்து – என் மாமாவைப் பார்த்த போது, அவர் சொன்னது – தமிழகத்தில் அரசியலில் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் அதிகமாக இருப்பினும் அதிகார மையம், மலையாளி வேறு மாநிலத்தவர் ஆதிக்கத்தில் தான் உள்ளது. அதனால் தான் ஒன்று மலையாளியோ இல்லை தாழ்த்தப்பட்டவரோ தான் சீப் செக்ரட்ரியாக முடிகிறது என்றார். பிற்படுத்தப்படவர்களில் அதிகமான எம் எல் ஏ மந்திரி கொண்ட தேவர் ஜாதியினர் கூட மேல் அரசு பதவி வர முடிவதில்லை என்றார். மேலும், அதிகாரவர்க்கத்தின் ஊழல் முறை விஷயங்கள் அதிர்ச்சித் தரத் தக்கவையாக இருந்தது. நாம் இங்கு தெரு நாய் போல் சண்டை போடுவதால் யாருக்கு லாபம்….? இல்லை நமது சண்டைக்குத் தீர்வு என்று அயல்நாட்டு இறக்குமதி தத்துவங்களை தழுவுதல் என்ன புத்திசாலித்தனம். நேற்று கூட பெண்களின் கண்களும் மறைக்கப்பட வெண்டும் என்ற ஆண் ஆதிக்க சட்டம் கொண்டு வரும் நிலையில் இருப்பவர்களை சார்ந்த்து அதற்கான குறைந்தபட்ச கண்டனம் கூட தெரிவிக்காமல், மிக அதிக சகிப்ப்புத்தன்மையுள்ள இந்திய மதக் கோட்பாடுகளை கேவலமாக பேசுவது கோழைத்தனத்தின் உச்சம். நமது கருத்துகளில் அடிப்படை அர்த்தம் இல்லாத போது நாளை நமது கருத்துக்களில் எச்சில் துப்பும்…. எதுவாயினும், கருத்து பரிமாற்றத்தில் தரம் வேண்டும்.

  16. Avatar
    paramasivan says:

    Mr Vedam Gopal sees the ghost of Christan conspiracy everywhere.His accusations against EVR and VCK are atrocious.He has gone to the extent of saying that Srilankan crisis to be the result of christian conspiracy.
    He says that Brahmin-Anti-Brahmin enemity is the creation of the British.But according to him,it has grown like a “Banyan Tree”.How it has grown after the British left?

  17. Avatar
    paramasivan says:

    Mr Vedam Gopal targets Mudaliyar community for creation of hatred against Brahmins.He says that their hatred is due to jealousy.But the facts potray a diiferent picture.During Rajaji”s rule between 1952-53,due to his jealousy against able non-brahmin officers,several of them were replaced by Brahmin officers in their key posts.Some of them were superceded at the time of promotions.The post of Economic Adviser was abolished since that post was occupied by a Non-Brahmin.

  18. Avatar
    paramasivan says:

    A full paragraph of Vedam Gopal”s comment is devoted to the lifestyle of Mudaliyars.It seems that he is jealous of them.What is wrong in holding Murasoli in their armpit?He says that C.P.Ramasamy Iyer brought temples under Govt control to remove Mudaliyar Dharmakarthaas.Why Mr Iyer has not brought Chidambaram temple under Govt control?Why the South Gate in that temple is permanantly closed?Why Subramaniyam Swamy opposes the Govt control over that temple?

  19. Avatar
    vedamgopal says:

    திரு.பரமசிவம்

    நான் அபிரகாமிய மதங்கள் உலகில் நிகழ்திய கோடிக் கோடி கோரமான படுகொலைகளைப் பற்றியும் சிதைதொழித்த பழைமையான கலாசாரங்கள் பற்றியும் சரித்திரம் இங்கே சொல்ல வரவில்லை. இவை எல்லாம் அண்மையில் நிகழ்ந்தவை. இவர்கள் மீத தோளோடு தோள் போட்டு உறவாடுவதில் ஆனந்தம் கொள்வது ஏன் என்று விளங்கவில்லை

    ஈராக்கில் சாதாம் ஹுசைனை கொன்று அங்கே எண்ணெய் வளத்தை சுரண்டியது – ஈஸ்ட் தைமோரை பிரித்து கிருஸ்துவ நாடாக மாற்றியது – தெற்கு சுடானை பிரித்து கிருஸ்துவ நாடாக உருவாக்கியது – இலங்கையில் தமிழர் படுகொலைகளை செய்தது –கலவரம் ஏற்படுத்தி கடாபீயை கொன்று எண்ணை வளத்தை சுரண்ட முயற்ச்சி செய்து கொண்டிருப்பது – சோனியா என்ற கிருஸ்துவ பெண் கைதடி மூலம் செயல் படும் காங்கிரஸ் ஊழல் செய்வதில் உலகசாதனை படைத்து – விலைவாசியை கட்டுகடங்காமல் செய்தது – அரசாங்க உயர் பதிவிகள் அனைத்திலும் கிருஸ்துவர்களை அமர்தியது – இந்திய மூன்று படை தளபதிகளையும் கிருஸ்துவராக இன்று நியமித்திருப்பது – மணிபூரில் அரசாங்கமே செயல்படாமல் வைத்திருப்பது -அணுஆலையை செயல்பட விடாமல் செய்து கொண்டிருப்பது – இவையெல்லாம் யாருடைய சூழ்சி – சற்று கண்ணை திறந்து பாருங்கள் – கண்ணைமூடிக்கொண்டு பார்பானையும் இந்து மதத்தை ஏசுவதையும் மெய்யை திரித்த பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மை என நிலை நாட்டுவதில் காலம் கழித்தால் நம் நாடு விரைவில் கிருஸ்துவ நாடாக மாற்றபடும் என்பது உருதி.

    அது சரி நான் சுட்டிகாட்டிய வலை தளம் சென்று வாசித்தீர்களா ??? !!!!!

  20. Avatar
    suvanappiriyan says:

    //இல்லை நமது சண்டைக்குத் தீர்வு என்று அயல்நாட்டு இறக்குமதி தத்துவங்களை தழுவுதல் என்ன புத்திசாலித்தனம். நேற்று கூட பெண்களின் கண்களும் மறைக்கப்பட வெண்டும் என்ற ஆண் ஆதிக்க சட்டம் கொண்டு வரும் நிலையில் இருப்பவர்களை சார்ந்த்து அதற்கான குறைந்தபட்ச கண்டனம் கூட தெரிவிக்காமல், மிக அதிக சகிப்ப்புத்தன்மையுள்ள இந்திய மதக் கோட்பாடுகளை கேவலமாக பேசுவது கோழைத்தனத்தின் உச்சம்.//

    இப்படி ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டால் அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    முகத்தை மூடச் சொல்லி நேரிடையான குர்ஆன் வசனங்களும் இல்லை.

    சவுதி அரேபியா இப்படி ஒரு சட்டத்தை இயற்றினால் அது அந்நாட்டின் சட்டமாகத்தான் கருத முடியும். ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தை இந்த கட்டளை ஒன்றும் கட்டுப்படுத்தாது.

    மேலும் சவுதி பெண்களை தவிர வெளி நாட்டு பெண்கள் அனைவருமே இன்று வரை முகத்தை திறந்து கொண்டுதான் வெளியில் வருகிறார்கள். எந்த தடையும் இல்லை.

  21. Avatar
    vedamgopal says:

    திரு.பரமசிவம்

    தி.மு.க. அமைச்சர் நேருவிடம் கருனாநிதி கேட்டாரம் இப்படி ஊரை பட்டாபோட்டுகொண்டு இருக்கிறாயே மலைகோட்டையாவது விட்டு வைப்பாயா என்று, என்னமோ சிதம்பரத்தை பிராமிணர்கள் பட்டாபோட்டு வாங்கிவிட்டது போல் கூறுகிறீர்கள்.

    நான் யாரையும் டார்கட் செய்வில்லை. பலர் பல பம்மாத்து வேலைகளை செய்கிறார்கள் இந்த கட்டுரை ஆசிரியர் வேளாளர்களை தமிழனின் தொன்மைக்கு (இங்கே தொன்மை என்று சொன்னதால் காவ்யா கோபிக்க கூடாது) ஒட்டு மொத்த காரணம் அவர்கள் தான் என்பதை சாடியுள்ளார். ஆகையால் அவர்களது மற்ற பம்மாத்து வேலைகள் என்ன என்று என் அனுபவத்தை வைத்து கூறினேன். மாற்று கருத்துகள் தெரிந்து கொள்ளாலாம் என்றுதான்.

    பிராமிணர்கள் அரசாங்க உத்தியோகதில் அதிகமாக அன்று இருந்ததற்கு காரணம் அவர்களில் எல்லோருமே நன்கு படித்திருந்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் தான் அவர்களை பணியில் அமர்தியது. அரசியலிலும் அவர்களுக்கு செல்வாக்கு இருந்ததால் அவர்களை தக்க வைத்து கொள்வதோ பணி உயர்வு அளிப்பதோ பணியில் அமர்துவதோ சாத்தியமாக இருந்தது. எல்லாம் சட்டபடிதான் செயல் பட்டனவே அன்றி இப்பொழுது நடப்பதுபோல் சட்டத்திற்கு புரம்பாக அல்ல.

    பல திராவிட பம்மாத்து வேலைகளில் தேசிய சிந்தனையை தமிழர்கள் தொலைத்து விட்டார்கள் என்பதும் ஒன்று அதனால் தான் இங்கே பி.ஜே.பி செல்வாக்கு எடுபடவில்லை என்ற கூறினேன்.

  22. Avatar
    knvijayan says:

    to.vedam gopal.what was the compellsion for rajaji to support DMK in 1967?Was it for national interest or satisfying his personnal ego of defeating kamaraj?

  23. Avatar
    vedamgopal says:

    @ knvijayan
    எனக்கு அப்பொழுது ஓட்டு போடும் வயதுதான். அரசியலை பற்றி முழுமையாக தெரியாது. ஆனால் காங்கரசின் செயல்பாடுகளில் வெறுப்புற்றுதான் சுதந்திரா கட்சியே துவக்கப்பட்டது. அதற்க்கு முக்கியமான காரணம் பல ஐந்தாண்டு திட்டங்கள் போட்டு அதன் பெரும் பங்கை வடநாட்டிலேயே முதலீடு செய்ததுதான் என்று எண்ணுகிறேன். சுதந்திரா கட்சி காங்கிரஸிற்கு எதிரா செயல் பட்டதால் இங்கேயும் எதிர்க வேண்டிய கட்டாயத்தினாலும் அன்று தமிழகத்தை ஆண்ட பக்தவச்சலம் காலத்தில் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்ப்பட்டதாலும் தனியாக போட்டியிட்டு வெல்லமுடியாத காரணத்தாலும் தான் தி.மு.க. உடன் கூட்டு சேர்ந்தார் அன்றி தனிபட்ட முறையில் காமராசரிடம் விரோதம் எதுவும் கிடையாது என நினைக்கிறேன். ஆனால் அடுத்து நடந்த தேர்தலிலேயே தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டு விட்டார். பின் நாட்களில் அதைபோல் காங்கிரஸின் செயல்பாடுகள் பிடிகாதனால்தான் காமராஜரும் வெளியேறினார்.

    அன்றே ராஜாஜி கோஷ்டி சத்தியமூர்தி கோஷ்டி என்று இரண்டு இருந்தது. இதில் காமராஜர் 2 வது கோஷ்டி இவர்கள் முதல் கோஷ்யை போல் பிடிவாத குணம் கொண்டவர்கள் அல்ல மத்தியில் உள்ளவர்களுடன் சற்று இணக்கமாக போகக்கூடியவர்கள். அதனாலேயே அவர் முன் நிறுத்தப்பட்டார். இங்கேயும் அவர் முறையாகவே ஆட்சி செய்தார். மத்திய சர்காருடன் இணக்கமாக இருந்தாலும் பல சமயங்களில் பிரச்சனை முற்றும் போது முட்டுகட்டையும் போட்டு வந்தார். ஆனால் அந்த முட்டு கட்டை பின் நாளில் உடைந்துவிட்பின் வெளியே வந்தார். ராஜாஜி முன்கூட்டீயே செய்த்தை இவர் பின்நாளில் செய்தார்.

  24. Avatar
    Paramasivam says:

    Even now by sitting in all the media,only brahmins are creating problems for the country.TN Assembly elections,2011 was fought only on the basis of jealousy towards a particular family.What do you call Desiya Sinthanai?Supporting Hindvtha?If total control over Chidambaram temple is not required by Brahmins,why a case is going on?I will give details of favouritism and nepotism practiced in 1952-53,a little later.

  25. Avatar
    ப்ரவாஹன் says:

    Similarly, all of Mr.Ramachandran’s researshes are either towards belittling vELaLars or inventing a false Kshatriyahood for his caste.

    தமிழக வரலாறு எழுதுதலில் முன்னோடியாகக் குறிப்பிடப்படும் கனகசபைப் பிள்ளையில் தொடங்கி கே.கே. பிள்ளை என்றறியப்படும் கனகசபாபதிப் பிள்ளை வரையிலும், ‘நடுநிலை’ ஆய்வாளரிலிருந்து நவீன ‘முற்போக்கு’ ஆய்வாளர்கள் வரையிலும் தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இருந்ததில்லை என்று வரலாற்றுத் தரவுகளையே திரித்துச் சொல்லும் பாங்கைக் காண்போம். தமிழர்களின் வரலாற்றை எழுதிய முன்னோடியாகக் கருதப்படும் கனகசபைப் பிள்ளை சொல்வதைப் பாருங்கள்:

    “நான் விவரித்துக் கொண்டிருக்கும் காலத்திற்கு குறைந்தது ஐந்தாறு நூற்றாண்டுகள் முன்னதாகத் தமிழகத்தில் குடியேறத் தொடங்கிய பிராமணர்கள் தங்களின் சாதி முறையைத் தமிழர்கள் மீது சுமத்த முயன்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில், தொல்காப்பியன் என்ற பெயர்கொண்ட ஒரு பிராமணரால் இயற்றப்பட்ட, நடப்பிலுள்ள முற்பட்ட இலக்கணப் பிரதியில் அறிவர் அல்லது துறவிகள் குறித்து அடிக்கடி சுட்டப்படுகிறது. ஆனால், சமூகத்தின் வகுப்புகள் குறித்து விவரிக்கின்ற அத்தியாயத்தில், அறிவர் பற்றி குறிப்பிடுவதெதையும் விடுத்து, பூணூல் அணிகிற பிராமணர்களை அவர் முதலிடத்தில் வைக்கிறார். போர் வீரர்கள் என்று சொல்லாமல், ஏதோ சேரர், சோழர், பாண்டியர் என்ற மூன்று அரசர்களே ஒரு சாதியாக ஆகிவிட முடியும் என்பதைப் போல எச்சரிக்கையுடன் அரசர்கள் என்பதாக புனித சாதியைச் சொல்கிறார்; வணிகத்தின் மூலம் வாழ்க்கை நடத்துகிறவர்கள் மூன்றாவது சாதியாகிறார்கள். அரசர்களோ அல்லது வணிகர்களோ பூணூல் அணிந்திருந்தனரா என்று அவர் சொல்லவில்லை. பிறகு வேளாளரைத் தனிமைப்படுத்தி, நிலத்தில் பயிரிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு தொழிலில்லை என்கிறார். இங்கே அவர் வேளாளர்களைச் சூத்திரர் என்று சொல்லவில்லை, ஆனால், சாதாரண வேளாளர்களைச் சூத்திரர்களாகவும், அரசர்களாக இருந்த வேளாளர்களை க்ஷத்ரியர்களாகக் கௌரவிக்க வேண்டும் என்றும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இதுதான் தமிழர்களைத் தங்களின் சாதியமைப்பின் கீழ் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் தமிழகத்தில் இல்லாததனால், அவர்களால் வெற்றிபெற முடியவில்லை; மேலும், தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி வீட்டிலோ அல்லது வைசியர் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டிலோ இன்றுவரையிலும் வேளாளர்கள் உணவருந்தவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்”. (The Tamils 1800 Years Ago, Kanakasabai Pillai, 1904)

    தமிழகத்தில் க்ஷத்ரியர்களே இல்லை என்று சொன்ன இவர், அரசர்களாக உள்ள வேளாளர்களை க்ஷத்ரியர்களாக கௌரவிக்க வேண்டும் என்று தொல்காப்பியர் சொன்னதாகத் தம்போக்கில் அவிழ்த்து விடுகிறார். அதாவது தங்களுக்கு ‘க்ஷத்ரிய’ (அரச) அந்தஸ்து கோருகிறார். க்ஷத்ரியப் பிரிவு என்ற ஒன்று இருந்தால்தான் இவர்கள் அதைக் கோரமுடியும் என்பதற்காக, ‘அரசர்களாக உள்ள வேளாளர்களை க்ஷத்ரியர்களாக கௌரவிக்க வேண்டும்’ என்று தொல்காப்பியர் கூறியதாகச் சேர்த்து கொள்கிறார். இவர்களின் நான்கு வர்ணம் இல்லை; ஆனால் அது வேண்டும் என்பது எப்படிப்பட்டதென்றால், தமிழ்த் திரைப்படங்களில் பிரபலமாகிவிட்ட ‘வரும்… ஆனா வராது…’ என்ற வசனத்திற்கு ஒப்பாகச் சொல்லலாம்.

    இவருக்குப் பிறகு சுமார் 60-70 ஆண்டுகள் கழித்து, ‘சாதியற்ற ஒரு சமுதாயமும் மனித சகோதரத்துவமுமே எனது இலட்சியம்’ என்று சொல்லிக்கொண்ட, வரலாற்றாசிரியர் எனப் பெயர்பெற்ற முனைவர் கே.கே.பிள்ளை எழுதுவதைப் பாருங்கள்:

    “பிராமணிய (ராஜ)தந்திரத்திலான கில்லாடி வேலை என்னவெனில், இந்தியாவிற்கு வந்த காட்டுமிராண்டிகள் மற்றும் சமூக மேம்பாட்டைத் தேடிக்கொண்டிருந்த பூர்வகுடி சூத்திரர்கள் ஆகியோரிலிருந்து இருபிறப்பாளர்களாக தீக்ஷை அளித்து, க்ஷத்ரியர்கள் என்ற புதிய ஒரு வகையினைப் படைத்ததுதான். நாம் பின்னர் பார்க்கவிருப்பதைப் போல, இத்திட்டமானது கடைக்கோடி தெற்கில் முறையாகச் செயல்படவில்லை. அங்கே நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு க்ஷத்ரியர்கள் வகுப்பு இல்லை.”

    “புறநாநூறில் நாற் சாதிகள் (வர்ணங்கள்) குறித்த ஒரு குறிப்பு உள்ளது, அது ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்’ என்பதாகும். வெளிப்படையாகவே இது மரபார்ந்த இந்திய நான்-மடி சாதி அமைப்புமுறையைக் குறிப்பிடுகிறது. ஒருக்கால், இன்னும் மிக முன்னதாகவே, அதாவது, கடைச் சங்க செவ்வியல் நூல்களுக்கு முன்னரே யாக்கப்பட்டதாகத் தெரிகின்ற தொல்காப்பியத்தில், நாற் சாதிகள் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் அவற்றை அந்தணர், அரசர், வைசியர் மற்றும் வேளாளர் என்று குறிப்பிடுகிறார். வேளாளர்கள் சூத்திரர்களோடு சமன்படுத்தப்பட்டனரா இல்லையா என்பது சர்ச்சைக்குரிய ஒரு விஷயம்; பிற்காலங்களில் வேளாளர்கள், சூத்திரரில் ஒரு பிரிவினராக மட்டுமே இருந்தனர். ஒருக்கால், வட இந்தியாவின் சூத்திர வகுப்பின் வகைப்பாடு முழுவதுமே பின்னர் தமிழகத்தில் வேளாளர் என விவரிக்கப்பட்டனர். எப்படியிருப்பினும், வகைப்பாட்டிலான இந்த வேறுபாடு காரணபூர்வமானதல்ல.”

    “உள்ளபடியே க்ஷத்ரியர் என்போர் தமிழகத்தில் ஒருபோதும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (க்ஷத்ரியர்களுக்கான) தமிழ் ஒப்புமையான வேந்தர்கள், சில நேரங்களில் வைசியர்களையும் கூட உள்ளடக்கிய ஒருங்கு சேர்ந்த ஒரு வகுப்பாகும்; வட இந்திய வழக்கிலிருந்தான இவ்வேறுபாடும் காரணபூவமானதல்ல.”

    “க்ஷத்ரியர்களாகக் கருதப்பட்ட அரசர்கள், வேளாளர் சாதியிலிருந்து மணம் புரிந்துகொண்டதுடன், சில வேளாளர்கள் அரசர்களாகவும் ஆகியுள்ளனர்”. ( Chapter XV of Studies in the History of India with special reference to Tamil Nadu, K.K. Pillai, 1979)

    பிராமணர்கள், க்ஷத்ரிய என்றொரு வகுப்பைப் படைத்தனர்; புறநாநூறில் நான்கு வர்ணங்கள் பற்றிய குறிப்பு உள்ளது; வேளாளர்கள் சூத்திரரா இல்லையா என்பது சர்ச்சைக் குரியது; க்ஷத்ரியர் என்போர் தமிழகத்தில் ஒருபோதும் தோன்றவில்லை; க்ஷத்ரியர்களாகக் கருதப்பட்ட அரசர்கள் வேளாள சாதியிலிருந்து மணம் புரிந்து கொண்டனர்; வேளாளர்கள் அரசர்களாகவும் ஆகியுள்ளனர், என அடுத்தடுத்து ஏறுக்குமாறாகக் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் க்ஷத்ரியர்கள் இல்லையென்றும் அதே நேரத்தில் தாங்களே க்ஷத்ரியர்கள் என்றும் சொல்வதற்குப் படுகின்ற பாட்டைப் பாருங்கள்.

    க்ஷத்ரிய வர்ணம் ஒன்று தமிழகத்தில் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால், இவர்கள் கட்டமைத்துள்ள தமிழக வரலாறு மணல் கோட்டையைப் போலச் சரிந்துவிடும். திராவிட அரசியலுடன் நேரடித் தொடர்பு இல்லாத இவர்களைப் போன்றவர்கள் பிராமண எதிர்ப்பு திராவிட அரசியலுக்கு அமைத்துக் கொடுத்த அடித்தளம் இப்படிப்பட்டதெனில், திராவிட இயக்கம் செல்லம் கொஞ்சியவர்கள் எப்படிச் சொல்லியிருப்பர் என்பதை எவரும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம். அடுத்ததாக, அடித்தள, விளிம்புநிலை மக்களின் வரலாற்றை ஆய்வு செய்கின்ற நவீன முற்போக்கு ஆய்வாளரின் முகத்திரையை நாம் பதிப்பிக்கின்ற இந்நூலின் பின்புலத்தில் கொஞ்சம் விலக்கிப் பார்க்கலாம்.

    “திருவாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் இருந்தபோது பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மார்பை மறைக்கும் உரிமையற்று இருந்தனர். அரை நிர்வாணக் கோலத்திலேயே இப்பெண்கள் பொது இடங்களில் நடக்கவேண்டிய அவலம் நிலவியது. அக்காலத்தில் ஆதிக்கச் சக்திகளாக விளங்கிய நாயர்களும் வெள்ளாளர்களும் இந்த விதிமுறையை நிலநிறுத்துவதில் உறுதியாக நின்றனர். இக்கொடுமையை எதிர்த்து, கி.பி. 1822,1828-1928,1858 என மூன்று கட்டங்களில் தென் திருவிதாங்கூர்ப் பகுதி நாடார் சமூகத்தினர், கிறித்தவ மிஷனரிகளின் ஆதரவோடு போராட்டம் நடத்தி வெற்றிபெற்றனர்.

    தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் வாழ்ந்த நாடார் சாதியினருக்கு, கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை இல்லாதிருந்தது. இதை எதிர்த்து 1872,1874 ஆம் ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், 1878 ஆம் ஆண்டில் திருத்தங்கலிலும், 1897 இல் கமுதியிலும், 1899 இல் சிவகாசியிலும் கோவில் நுழைவுப் போராட்டங்களை இச்சமூகத்தினர் தாங்களாகவே முன்னின்று நடத்தினர். கோவில் நுழைவுப் போராட்டங்களை இந்தியத் தேசிய காங்கிரஸ் அறிவிப்பதற்கு முன்னரே இப்போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.”

    முதல் பார்வையில் மிகவும் நியாயமானது போலத் தோற்றமளிக்கும் இவரது எழுத்தில் உள்ள திரிப்புகளை நாம் காண்போம். ‘பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மார்பை மறைக்கும் உரிமையற்று இருந்தனர்’ என்று சொல்வதன் மூலம் தொடக்கத்தில் இருந்தே சான்றோர்/நாடார் சமூகத்தினரும் அவ்வாறு இருந்ததாகச் சொல்லப்படுகிறது; உண்மையில் அவர்களிடம் வெகு இயல்பாக இருந்த உரிமை நாயர்களாலும் வெள்ளாளர்களாலும் திட்டமிட்டு திடீரென வலிந்து பறிக்கப்பட்டது. தாங்கள் இயல்பாக அனுபவித்துவந்த உரிமை திடீரெனப் பறிக்கப்பட்டதை எதிர்த்துத் தன்னெழுச்சியாகப் போராடிய நாடார்/சான்றோர் சமூகத்தினருடன், ஏற்கெனவே கிறித்தவத்துக்கு மாற்றியிருந்த நாடாரில் ஒரு பிரிவினரும் சேர்ந்து போராடியதை முன்வைத்து, சாதிய இந்து சமூகத்தில் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு கிறித்தவர்களே உய்வளிக்க வந்தவர்கள் என்பதான ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது.

    ”போலி க்‌ஷத்ரியத் தகுதி” என்று எஸ்.வி. குறிப்பிடுவதில்தான் சூட்சமம் அடங்கியுள்ளது என்பதை மேற்படி மேற்கோள்களிலிருந்து எவரும் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் தமிழகத்தில் ஷத்ரியர் என்ற ஒரு பிரிவு இருப்பதை அங்கீகரித்துவிட்டால் பார்ப்பனர்களுக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து நிறுத்துவது இயலாமற் போய்விடும்.
    அதனால் அதை மறுப்பதை திராவிட இயக்கம் தலையாய நோக்கமாகக் கொண்டது.
    இலக்குவனார் போன்ற திராவிட இயக்கத்தின் பால் பரிவு கொண்ட ‘தமிழறிஞர்’ தொல்காப்பியத்தை மொழிபெயர்த்த போது அதில் வருகின்ற நான்கு வர்ணம் குறித்த பகுதிகள் இடைச்செருகல் என்று ஒரேயடியாகக் கூறி அதை மொழிபெயர்க்காமல் விட்டு ஆங்கிலத்தில் பதிப்பித்தார். இவர்களின் நான்கு வர்ணம் குறித்த நிலைபாடுகள் இவர்களின் ஞானத் தந்தையான கால்டுவெல்லின் கருத்தை ஒட்டியிருப்பதில் ஒரு வியப்புமில்லை. அந்தக் கால்டுவெல்தான் ‘அறியாதவர்’ (ignorant) என்று எஸ்.வி. சான்றளிக்கிறார்.

  26. Avatar
    காவ்யா says:

    Welcome Pravaahan!

    I hope this discussion will stick to historical viewpoints only, instead of current political scene.

    Vedam Gopal and Suvanapriyan may kindly stop if they cant write about ancient history of Tamilnadu.

  27. Avatar
    paramasivan says:

    Mr Vedam Gopal says that Britishers appointed well read Brahmins and retained them.I was talking about the position in 1952-53,much after the British have left.He also certifies that everything were done legally.I can point out many lapses during the above period.Is Vedam Gopal ready to face the facts?

  28. Avatar
    ப்ரவாஹன் says:

    “The seeds of this Tamil Nationalism was sown and nurtured also by Tamil speaking Brahmins, like The Greats Ragha Ayyangar and U.Ve.Sa. It is unfortunate that the Tamil Nationalism was swallowed by Dravidian Movement later leading to the alienation of Tamil speaking Brahmins from other tamil castes.”

    see this sweeping statement by Mr. SV that “seeds of tamil nationalism was sown and nurtured by greats like Raghava Iyengar and U.ve.Sa.” Whereas he charges Ganesa Nadar of making sweeping statements.
    They did their service to the tamil history and especially U.Ve.Sa collected volumes of palm scripts of sangam literature and published them. Even such painstaking great work was mocked by the Dravidian Movement oriented people saying that he interpolated certain things and revised certain things. But, contrarily the Dravidian movement supporters have only revised many many things in history and the important one is that there is no kshatriyahood in tamil country.

  29. Avatar
    காவ்யா says:

    //They did their service to the tamil history and especially U.Ve.Sa collected volumes of palm scripts of sangam literature and published them. Even such painstaking great work was mocked by the Dravidian Movement oriented people saying that he interpolated certain things and revised certain things.//

    These are also sweeping statements.

    உவேசா தமிழ் இலக்கியத்துக்குச் செய்த தொண்டு மகத்தானது என்று எவருமே மறுக்கவில்லை. அதே வேளையில் அவர் பார்ப்ப்னீயத்தைத் பழந்தமிழ் இலக்கியவுரைகளில் ஆங்காங்கே திணித்தார் என்று ஆதாரத்தோடு காட்டி மறுத்தார்கள் திராவிடச் சாயலையுடைய தமிழறிஞர்கள். அவர்கள் செய்தவை தவறென்றால், அதை ஆதாரத்தோடுதான் ப்ரவாஹன் இங்கே எழுத வேண்டும். மாறாக பொத்தாம் பொதுவாக தூரத்தில் நின்று கல்லெறியக்கூடாது. உவேசாவின் ஜாதிப்பற்றி நன்றாக வெளியே தெரிந்த ஒன்று. பார்ப்ப்னரல்லாதோருக்கு தமிழ் கற்றுக்கொடுக்க மாட்டேன் என அவர் சொன்னதாக ஒரு பார்ப்பனரல்லாத தமிழறிஞர் (நாரண துரைக்கண்ணன்) எழுதியுள்ளார். இவரே பார்ப்ப்னரல்லா தெ.பொ.மீயிடம் தமிழ்கற்றவர். ஆனால் பார்ப்ப்னரல்லாருக்குக் கற்றுக்கொடுக்க மட்டாராம்!!

    தனித்தமிழ் இயக்கத்தினரை பகடி பண்ணியே வாழ்ந்தார் உவேசா. வடமொழியில்லாமல் தமிழில்லை என்பதே அவரின் நிலைபாடு. தமிழ் தானாகவே நிற்கும் என்பது மறைமலையின் நிலைபாடு. உவேசாவின் மேடைப் பேச்சும் உரைநடையும் வடமொழிச்சொற்களின் விரவலே வெகு இலகுவாக. அச்சொற்களுக்கு பாமர்ர்களுக்கறிந்த தமிழ்ச்சொற்களிருக்க அவர் அவைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை என தமிழறிஞர்கள் வருந்தினார்கள்.
    எங்கெங்கெல்லாம் உ வே சா பார்ப்பனீயக் கருத்துக்களைத் திணித்தார் என்று சுட்டிக் காட்டியே அவருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
    அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்க எவரேனும் விரும்பினால் தகுந்த ஆதாரங்களைக்காட்டித்தான் திண்ணையில் எழுத வேண்டும். How can you say that they mocked at UVeSa whenn they cited instances where the great man fell victim to paarpaneeya aggrandizement. Is it mocking to point out the fall of a great man ?

    If MuKa does a thing which is very bad, and if I point out that, will you call me mocking at MuKa? You wont. Why double standards here?

    Let people call a spade a spade, not a shovel !

    இப்படிப்பட்ட பெரிய மனிதர்களே ஜாதிவுணர்வுக்கடிமையாக இருப்பதைப்பார்க்கும்போது தமிழ்மக்களுக்கு விடிவேயில்லை.

  30. Avatar
    SV says:

    Welcome Mr.Pravahan!

    There is a difference between myself and Mr.Ganesan or You. I am neither a researcher, nor claim to be one. I am putting forward my observations and not proclaiming them as Gospels. Just because i reject his view point, i do not try to belittle him, his caste or any other caste. Also i am no apologist for any fundamentalist Movements, including Dravidian Movement. I am also unhappy about the alienation of Tamil Brahmins caused by DM, where as Ganesan’s and your hatred for vELaLars is there on the net every where. I also do not take a position that So and So wrote such a thing and hence all of their castemen should be held responsible for that and their writings are part of a big consipiracy.

    I have always believed that the notion of ‘Kshatriya by birth’ is false as history demonstrates that we have had kingdoms formed by people from all kinds of back ground. Valour was not a birthright. The Indian history has always been a struggle between those who wanted to establish an Order and those who wanted to get in. The successful ones got assimilated and failed ones were pushed to fringes. I hope this point is understood before you make any comment on what i meant as ‘false Kshatriyahood’.

    Me stating that “Caldwell may have been ignorant and had his own agenda” was clearly towards giving a benefit of doubt to people who are very cut up with him due to his presentation on their caste and also because he was involved in proselytisation. His other contributions to Dravidian Linguistics can not be belittled just because he could have been ignorant on certain matters. I guess that applies to most of us. Like how Mr.Ganesan and Mr.Ramachandran tripped about Sinhalese society.

    Coming to your point about me making a sweeping statement where as i do not allow the same luxury to Mr.Ganesan. I had mentioned that “seeds of tamil nationalism was sown and nurtured by greats like Raghava Iyengar and U.ve.Sa.” Without U.Ve.Sa’s yeomen effort, the proud literary heritage of Tamils would not have come out into lime light in such a coherent manner and that was skillfully utilised by Tamil and Dravidian Movements. Similarly, Raghava Iyengars (two of them) of Ramanadhapuram were pioneers in tamil research and institution building. Hence i mentioned that they sowed the seeds, as these efforts contributed enormously towards building the intellectual framework for the tamil identity and heritage, which was necessary for its self confidence, as Tamils were under the rule of other linguistic groups for more than 600 years. I do not see where i have gone wrong in this statement.

    Sincere apologies to extending this discussion in this direction and this contribution in English. My only point was that their arguments exposes them as the mirror image of the hard core supporters of Dravidian Movement, with different targets.

  31. Avatar
    vedamgopal says:

    Jeymohan – ஒரு வலை தளத்தில் வெ.சா அவர்களின் இலக்கிய மதிப்புரை பற்றி பலர் கருத்துக்கள் கூறியுள்ளார்கள். அதன் மறுமொழியில் ஜெயமோகன் – ருத்திரா காவ்யா என்றெல்லாம் பலவேசமாகி வரும் அண்ணன் இளைய வடிவேலு பேராசிரியர் பரமசிவம் அவர்களுக்கு ஜே – உண்மை என்றால் இதுவும் திராவிட பம்மாத்து வேலைகளில் ஒன்று போலும்

    1. Avatar
      காவ்யா says:

      கோபால் சார்

      ஜெயமோகனின் சொற்களை வேத வாக்காக எடுக்கக்கூடாது. அவர் மனிதர்; தெய்வமன்று. அவர் அப்படி எழுதியது ஆர் வி என்பவரின் வலைபதிவில். அதற்கு அங்கு என் மறுமொழி போடப்பட்டிருக்கிறது. பரமசிவம் என்பவரும் காவ்யா என்பவரும் வேறானவர்கள். இருவரும் ஒன்றென அவர் பொய் கதை புனைகிறார். நீங்கள் வழி மொழிகிறீர்கள். அவர் பொய் சொன்னால் நீங்களுமேன் அதைச் செய்யவேண்டும் ஈயடிச்சான் காப்பி போல ?

      ஏற்கனவே இங்கு, “வாதம் செய்பவர்களைப் பார்க்காதீர்கள்; வாதங்களைப்பாருங்கள்” என்று எழுதியிருக்கிறார்களே ! படிக்கவில்லையா ?

  32. Avatar
    பா. ரெங்கதுரை says:

    அதாவது உங்கள் கருத்துப்படி, வேளாள ஜாதி வெறியரான ஆ.சிவசுப்பிரமணியனும் வேளாள அடிவருடி ஆ. இரா. வேங்கடாசலபதியும்தான் இன்று உண்மையான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். மற்ற ஜாதிக்காரனுக்கெல்லாம ஆய்வில் இடமில்லை. அப்படித்தானே எஸ்.வி?

  33. Avatar
    ப்ரவாஹன் says:

    “There is a difference between myself and Mr.Ganesan or You. I am neither a researcher, nor claim to be one.” நான் ஒரு ஆய்வாளர் அல்ல என்பதாகவே இருக்கலாம்… அதில் ஒன்றும் நான் குறைந்துவிடப் போவதில்லை… சாரமான விஷயம் என்னவெனில், வரலாற்று ஆய்வாளராகக் கருதப்படும் -அநேகமாக நீங்களும் கருதுகிற- திரு. கே.கே. பிள்ளை என்கிற கனகசபாபதிப் பிள்ளை, ஷத்ரியர்கள் இல்லையென்றும், புறநானூற்றில் நான்கு வர்ணம் பற்றி வருகிறதென்றும், ஷத்ரியர்களாகக் கருதப்பட்ட அரசர்கள் வேளாள சாதியிலிருந்தும் மணம் புரிந்து கொண்டார்களென்றும் கூறி அதன் மூலம்.. அதாவது பெண் கொடுத்ததன் மூலம் நாங்களும் ஷத்ரியர்கள்தான் என்று சொல்லவருவதை எஸ்.வி. ஆராய்ச்சிக் கருத்தாக ஏற்கிறாரா இல்லையா… அவர் கே.கே. பிள்ளையைப் பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் என நினைக்கிறாரா இல்லையா?
    இது ஒரு பக்கமிருக்க…
    கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதியதை கட்டுரையாளர்கள் திரு. அ. கணேசன் மற்றும் சீ. இராமச்சந்திரன் ஆகியோர் ”திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற அவரது நூல் மிகச் சிறப்பான ஆய்வு நூல் என்பதில் ஐயமில்லை” என்று சொல்லியிருப்பதை கவனிக்காமல் ஏதோ கால்டுவெல்லை அனைத்து வகையிலும் மோசமாகச் சித்தரித்துள்ளதைப் போன்று “His other contributions to Dravidian Linguistics can not be belittled ” என்று எஸ்.வி. எழுதுவதன் நோக்கம் என்ன?

    “notion of kshatriyahood” என்று எழுதுவதன் மூலம்.. ஒரு சமூக நிறுவன வகைப்பாடாக/தகுதியாக இருந்த ஒன்றை ஏதோ வெறும் கருத்துருவாக மட்டுமே காட்ட நினைப்பதில்தான் சிக்கல். தமிழகத்தில் நான்காம் வர்ணமாக இருந்த வேளாளர்கள் என்பதை ஒப்புக் கொள்வதில்தான் அவர்களுக்கு இருக்கின்ற சிக்கல்… அதை எஸ்.வி.யிடமும் பார்க்க முடிகிறது. இது அவர்களை சிறுமைப்படுத்துவதன்று. மாறாக வரலாற்றில் எது எது என்னவாக இருந்ததோ அதை அதை அப்படியே பார்ப்பது.. மாற்றி இல்லாததாகச் சொல்ல விழைவதில்தான் சிக்கல்.

    அடுத்து காவ்யா அவர்கள் கூறியுள்ளவற்றிற்கு சில விளக்கங்கள்:

    ”அவர் பார்ப்பனீயத்தைத் பழந்தமிழ் இலக்கியவுரைகளில் ஆங்காங்கே திணித்தார் என்று ஆதாரத்தோடு காட்டி மறுத்தார்கள் திராவிடச் சாயலையுடைய தமிழறிஞர்கள்” இதற்கு ஆதாரமென்ன என்பதைச் சொல்லாமல் நான் ஆதாரம் காட்டவில்லை என்று கேட்கின்ற காவ்யா செய்கின்ற வேலை… கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல்லெறிவது.
    பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்ததில் எத்தனை சுவடிப் பிரதிகள் கிடைத்தனவோ அத்தனையிலும் உள்ள பாட பேதங்களுடன் உ.வே.சா. பதிப்பித்துள்ளதை என்றைக்கேனும் பார்த்ததுண்டா? பதிப்பு நெறி என்றால் அதை உ.வே.சாவிடம் கற்கவேண்டும் என்ற அளவுக்குப் பலரும் கூறியுள்ளனர். அநேகமாக ஆ.இரா. வேங்கடாசலபதியும் கூட அக்கருத்தைப் பதிவு செய்துள்ளதாக நினைக்கிறேன்.
    திராவிட இயக்கச் சார்புள்ள இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பில் வர்ணம் குறித்த பகுதிகளையெல்லாம் இடைச்செருகல் என்று கூறி விடுத்திருக்கின்ற ஒரு ஆதாரத்தை நான் ஏற்கெனவே சுட்டியிருக்கிறேன். அப்படி இருக்க நான் ஆதாரமின்றிப் பேசுவது போல காவ்யா எழுதுவதை என்னவென்று சொல்ல?

    மறைமலை பற்றி ”தமிழ் தானாகவே நிற்கும் என்பது மறைமலையின் நிலைபாடு.” என்று கூறுகின்ற காவ்யா… அந்த மறைமலை தனது தமிழ் நூல்களுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை வரைந்தார் என்பதை நோக்கியதுண்டா?

    தமிழ்ச் சமூகம் குறித்து, தமிழ்ப் பண்பாடு குறித்து மறைமலை எழுதியவற்றை ஒழுங்காகப் படித்துப் பார்த்ததுண்டா? ஈ.வே. ரா வின் திராவிட இயக்கத்தினை “வைணவக் குறும்பு” என்று மறைமலை கூறியதாவது காவ்யாவுக்குத் தெரியுமா?

    கிராமக் கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதை மறைமலை இழித்து எழுதியிருப்பது காவ்யாவுக்குத் தெரியுமா?

    இன்னும் இப்படி நிறைய கூறமுடியும்… எனவே விவரம் தெரிந்து பேசவும். மேலும் மையமான விஷயத்தைவிட்டுவிட்டு சலசலப்புகளை அடியொற்றி நான் அதிகம் போக விரும்பவில்லை.

  34. Avatar
    பா. ரெங்கதுரை says:

    மறைமலை அடிகள் ஒரு ஜாதி வெறியர். இவர் பிறப்பினால் ஒரு தெலுங்கர் (24 மனைத் தெலுங்குச் செட்டியார்) என்றாலும், சைவ வேளாளப் பெண் ஒருவரை மணந்து வேளாளராக ஜாதி மாறினார். தன் தாய்மொழி தெலுங்கு என்பதை மறைத்துக் கொள்வதற்காகவே தனித் தமிழ் வேடம் கட்டி ஆடியவர். ஆனாலும், தம் பூர்வாசிரம உறவினர்களுடன் பேசும்போது உள்ளூர்த் தமிழர்களை அரவாடு என்றே இழிவாகக் குறிப்பிடுவார்.

  35. Avatar
    vedamgopal says:

    @ ருத்திர காவ்ய பரமசிவம் What is wrong in holding Murasoli in their armpit? நீங்களே சொல்லி விட்டீர்கள் நான் அவர்களின் ஸ்டைலை பற்றி கூறுவதாக. அக்கிளில் முரசொலியை பேப்பரை இடுக்கிகொண்டு கரை வேட்டி கட்டி – இதனால்தான் இப்படி பாடினார்களோ ” வெறும் வேட்டி வெள்ளை சட்டை சோம்பலில் (பம்மாத்து வேலைகளில்) எதையோ வளர்த்தால் சுதந்திரம் என்ன செய்யும் என்று ? (Paramasivam is a different person. He has no relationship with Kavya,Rudhra etc.If you can answer my queries,answer.Why you are suffering from phobia,MrVedam Gopal? ) போபியா ஈகோ ஜலசி இன்பிரியாரிடி சுபிரியாரிடீ காம்ளக்ஸ் ஜாதி புத்தி இவை எல்லாம் எல்லோரிடமும் உடலோடு ஒட்டி பிறந்த கு.நா. இது பண்பாளர்களிடம் ஐந்து சதவிகிதம் இருந்தால் பம்மாத்து காரர்களிடம் 95 சதவிகிதம் இருக்கும். பம்மாத்து துவேஷங்களால் வெறுப்பு ஏத்தினால் பண்பாளர்களிடமிருந்து இது வெளிபடுவது இயற்கை. இதை சரி செய்து பண்பாளர்களாக மாறுவது அவர் அவர் கையில்தான் இருக்கிறது.i

    ஜெ.மோ. அவர்களின் வலை தளத்தை சில மாதங்களாகத் தான் படித்து வருகிறேன். கூடியமட்டும் மற்றவர் மனம் கோணாமல் சொல்லும் செய்தியை எழுதும் பாங்கை பார்த்து எப்படி இப்படி என்று ஆச்சிரிய பட்டிருக்கிறேன். அவரே இப்படி செல்லமாக சாடியுள்ளது இயற்கை. நீங்களும் நானும் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது நமக்கே தெரியும்.

    1. Avatar
      காவ்யா says:

      ஜெயமோகன் காவ்யாவை பரமசிவன் என பொய்யாகச் சொன்னது ஆர்.வி என்பவரின் வலை பதிவில். அங்கே போய் படித்தீர்களா ? அதற்கு என் மறுமொழியை வாசித்தீர்களா?

      பொய் சொல்வது ஒரு பெரிய எழுத்தாளருக்கு அழகா ?

  36. Avatar
    GovindGocha says:

    கூடியமட்டும் மற்றவர் மனம் கோணாமல் சொல்லும் செய்தியை —- பாம்புகள் நெளியும் பிரதேசத்தில் பாம்பு சாகாம்ல் அதை தட்டி சூழலை சரி செய்வார், என்று சொல்வது பேடித்தனம். வேடிக்கை இலக்கியங்களும், வியாக்கின இலக்கியங்களுமே இங்கு அதிகம்… அதனால் தான் சில மேலை நாடுகளில் மாற்றம் கொண்டு வந்த இலக்கிய வழித் தடம் இங்கு வீரியமற்ற விஷயமாக வீணாகப் போகிறது. அழகிப்போட்டியில் நான் ஜெயித்தால் சமூக சேவை என்பது போல் தான் இவர்களின் படைப்புகள்… வரலாறு போல பதிவும் இருக்காது, கிளர்ந்தெழுப்பும் வீச்சும் இருக்காது… இரண்டுக்கும் நடுவே இவை… செல்லமாக சாடுதல் என்பது என்ன இழவோ…..

  37. Avatar
    vedamgopal says:

    // கூடியமட்டும் மற்றவர் மனம் கோணாமல் சொல்லும் செய்தியை —- பாம்புகள் நெளியும் பிரதேசத்தில் பாம்பு சாகாமல் அதை தட்டி சூழலை சரி செய்வார், என்று சொல்வது பேடித்தனம். // செத்த பாம்மை அகற்றியும் தண்ணீர் பாம்மை தட்டியும் தான் சூழலை சரிசெய்யவேண்டும். செக்யூலரிசம் சிறுபான்மைஇஸம் என்ற விஷப்பாம்புகளை தோளில் போட்டுக்கொண்டு அதை பற்றி ஒரு சுய சுய நினைவுகூட இல்லாமல் மீண்டும் மீண்டும் செத்த பாம்மை அடி விஷமில்லா பாம்மை விரட்டு என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தால் விஷப்பாம்பு ஒருநாள் உங்களை கடித்து அருகில இருக்கும் என்னையும் கடிக்கும் என்பது உருதி.

  38. Avatar
    SV says:

    Dear Mr.Pravahan,

    I have only glimpsed through what K.K.Pillai has written. For me, he is another serious researcher or author, whose all words need not taken as Gospel. I hope you would agree no research is static and finite. With new evidences and discoveries, one need to continously update the earlier thesis and proceed. I hold no brief for either K.K.Pillai or Marai Malai Adigal. FYI, both Kailasapathy and Vaiyapuri Pillai were also vELaLars, who could take diamterically opposite view from some of their castemen. And Mr.A.Sivasubramanian takes only a leftist view on most matters. I am surprised to note that some one is calling him as well as Venkatachalapathy also as casteist. I am also surprised that some one is ascribing Telugu Origin to Maraimalai Adigal. I shall be thankful if he could share some references.

    I guess there is no end to this digression. For the benefit of many who are not familiar with the relationship between DM and Saiva vELaLars, Mr.Venkatachalapathy’s article could be a good beginning. Similarly another article by Prof.Vijaya Ramasamy on Neelambikayar, Maraimalai Adigal’ daughter could throw more light about those days.

    Please visit these URL for that article:
    http://www.jstor.org/pss/4402599
    http://www.docstoc.com/docs/51514234/GENDER-LANGUAGE-AND-THE-QUEST-FOR-A-TAMIL-IDENTITY

    Please also note my disclaimer that i need not blindly subsribe to whatever is said in these articles.

  39. Avatar
    காவ்யா says:

    போச்சுடா போச்சு. கோவிந்தா…கோவிந்தா !!

    மறைமலையின் பிறந்த ஜாதகம் எதற்காக ஆராயப்பட வேண்டும்?

    தனித்தமிழ் என்பது ஒரு கொள்கை. அதைச் சிலர் தமிழ்நாட்டில் ஏற்றுக்கொண்டு மக்களிடையே பரப்பத் தொடங்கினார்கள். அவர்கள் எவராயிருந்தாலென்ன? அக்கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கும், பரப்புவதற்கும் கண்டிப்பாகத் தமிழ்நாட்டில் பிறந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று திரு அரங்கத்துரையார் எப்படிச் சொல்கிறார்? எவரேனும் இன்னார்தான் தனித்தமிழ்க் கொள்கையுடையோராக இருக்க வேண்டும் என்று வரைபாடுகள் போட்டிருக்கின்றனரா ? உள்ளேயிருந்தே குழிபறிக்கும் எட்டப்பன்களை விட வெளியேயிருந்து வந்து தமிழுக்கு வாழ்த்துப்பா பாடும் குட்டப்பன்களும் சுட்டப்பன்களும் ரொம்ப ரொம்ப ரொம்ப மேலே!

    சூரியநாராயண சாஸ்த்திரியார் இந்த தனித்தமிழ் இயக்கத்துத் தலைவர்களுள் ஒருவர். தெரியுமா ? அவர் ஜாதகத்தையும் தோண்டுவீர்களா அப்பு? ஏன், ‘அப்பு? சாஸ்திரியாருக்கு ஊர் நான் வதியும் மதுரையே. தெரியுமா? அன்னாரின் தனித்தமிழ் திரு அரங்கத்துரைக்குப் பிடிக்கா அபச்சாரத்தையும் செய்யத் தூண்டுமளவுக்குப் போனது. அய்யகோ என் சொல்வேன்!!! அதான். நல்ல சமசுகிருதப்பெயரைக் குதப்பல் பண்ணி பரிதிமால் கலைஞர் என்று வைத்துக்கொண்டு அபச்சாரம் பண்ணினாளே..பகவான் சும்மா விடுவானா ? என்று சமசுகிருத ஆசாமிகள் புலம்பும்படி வெறுப்பைச் சம்பாதித்தவராயிற்றே !
    அவரின் தனித்தமிழ் ஆர்வமும் செயல்பாடுமல்லவா “பார்ப்பன எதிர்ப்பு புகழ்” முத்துவேல் கருனானிதியை, சாஸ்திரியாரின் வீட்டை அரசு நினைவகமாக மாற்றிப் பேண வைத்தது! அடடே சொல்ல மறந்துட்டேனே! சாஸ்திரியாரும் ஒரு பார்ப்ப்னரே. அவருக்குச் சிலையாம். அதுவும் மதுரை வீதியிலாம் ? அதுவைவிட கொடுமை பார்ப்ப்ன புகழ் கர்னானிதி வைத்தாராம்!

    கலிமுத்திப்போச்சு! என்ட குருவாயூரப்பா ஞங்களைக் காப்பாத்து !!

  40. Avatar
    பா. ரெங்கதுரை says:

    பரிதிமால் கலைஞர் தெலுங்கு அல்லது சங்கதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவரா? மறைமலையைப் போல சுய ஜாதியை மறைத்துக்கொண்டு வேளாள வேடம் பூண்ட ஜாதி வெறியரா? உள்ளூர்த் தமிழர்களை அரவாடு என்று இழிவாகப் பேசியவரா?

    1. Avatar
      காவ்யா says:

      எனக்கு நாகை வேதாசலத்தின் (மறைமலையடிகள்) பயோ டேட்டா நன்றாகத் தெரியாது. ஒருவேளை அவரின் தாய்மொழி தெலுங்கென்றால், அது எப்படியொரு குறையாகும்? என்பதே என் வியப்பு.
      அவர் எங்கு தமிழையும் தமிழர்களையும் இழிவு படுத்தினார் என்பதை இங்கு எடுத்துக்காட்டுங்கள்.

  41. Avatar
    களிமிகு கணபதி says:

    //..மறைமலையின் பிறந்த ஜாதகம் எதற்காக ஆராயப்பட வேண்டும்? ..//

    நியாயமான கேள்வி காவ்யா அவர்களே. உ.வே.சா போன்ற சுவடிகளைத் தேடி அலைந்த தமிழ்ப் பைத்தியத்தினைப் பற்றி மட்டுமே இங்கு பேச வேண்டும். அதுவும் இழிவாக மட்டுமே பேச வேண்டும். ஆதாரம் எல்லாம் தேவையே இல்லை.

    .

    1. Avatar
      காவ்யா says:

      உவேசாவின் தமிழறிவும் தாகமும் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த தொண்டும் பணியும் கேள்விகளாக்கப் படவில்லை. அவை வேறு; நான் சொன்னது வேறு. உவேசாவைப்பற்றி ப்ரவாகன் சொன்னதே தவறு எனக்காட்டவே சில விடயங்கள் என்னால் சொல்லப்பட்டன.அவர் சொன்னார்: சிலர் உ. வே.சாவின் பணியைக் கிண்டல் பண்ணினார்கள் என்றார். நான் சொல்லவந்தது: உ வே சா, தமிழ்ச்சுவடிகளைக் கண்டுபிடித்தது மட்டுமில்லாமல். அப்பண்டை இலக்கியங்களுக்கு விளக்கவுரைகளும் எழுதினார். பலவிடங்களில் ‘பார்ப்ப்னீயக் கருத்துகளைத்’ திணித்து, பண்டைத் தமிழர்களிடையே பார்ப்பனீயம் போற்றப்பட்டது எனக் காட்டினார். இது பொய். எங்களின் கருத்தின்படி அவ்விளக்கவுரைகள் உள்ளோக்கம் கொண்டவை. தன் ஜாதியை உயர்வாகக் காட்ட அவர் செய்த சூழ்ச்சி.” என
      அவர்கள் ஆதாரத்தோடு சொல்கிறார்கள். இவற்றை மறுப்பவர்கள் பதில் ஆதாரத்தோடுதான் எழுதவேண்டும். மாறாக, எதிர்த்தவர்கள் உ வே சா வைக்கிண்டல் பண்ணினார்கள் என்றுமட்டும் எழுதுவது சரியா ?
      கருனானிதி ஒரு செயலைச் செய்ய அது நமக்குப் பிடிக்கவில்லையென்றால், பிடிக்கவில்லையென்கிறொம். அப்படிச்சொன்னால் கருனானிதியைக் கிண்டல் பண்ணவே என்றால் எப்படி?
      உ வே சாவின் பார்ப்பனீயப்பற்று வேறு; அவரின் தமிழறிவு வேறு. அவர் ஒரு மகத்தான பார்ப்பனீயர்; வாழ்க்கையில் கடைபிடித்தவர். எனவேதான் நாரண. துரைக்கண்ணனுக்கு பார்ப்பனரில்லையென்ற காரணத்தால் தமிழைக் கற்றுக் கொடுக்க மறுத்தார். கண்ணனின் சுயசரிதையில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
      தனித்தமிழையும் அதன் பற்றாளர்களையும் மறுத்தார். அவர் மேடைப்பேச்சு வடமொழி விரவியேயிருக்கும். சங்கத்தமிழோடு வடமொழி கலந்தனாலேயே தமிழுக்கு அழகு வந்தது என்ற தீவிர கொள்கையையுடைவர். இதைத்தானே உங்கள் ஹிந்து.காமில் எழுதிவருகிறீர்கள். ஜெயசிரி சாரநாதனின் கட்டுரைகளைப் படியுங்கள்.
      இப்படிப்பட்டவரை எப்படி தனித்தமிழாளர்களோ, அல்லது ‘சொல்லின் உயர்வு தமிழ்ச்சொல்லே’ ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணேம்” என்ற பாரதியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களும், தமிழ் என் தாய்மொழி என்று பீடுடன் சொல்பவர்களும் ஏற்றுக்கொள்ள முடியும்?
      அறிவும் குணமும் சேர்ந்தால் நல்லது. ஆனால் அப்படி எப்போதுமே சேர்ந்திருப்பதில்லை. தம் மாணவர்களிடமே தவறாக நடக்கும் எத்தனைப் பேராசியர்களைப்பற்றிப் படிக்கிறோம் ?
      உ.வே.சாவின் தமிழ்ப்பணியைப் போற்றுவோம். அவரின் தனிப்பட்ட பார்ப்பனீயத்தை விமர்சிக்கவேண்டிய நேரத்தில் செய்வோம். பிரவாகனின் சொற்றொடர் அப்படியொரு நேரத்தை எனக்குத் தந்தது.
      “பெரியோரை வியத்தலும் இலமே,
      சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
      சங்க்காலத்து தமிழனுக்கு இருந்த நெஞ்சுரம் நக்கில்ல்ல்லையே ஏன்? பற்றுக்களே. “என் ஜாதி, என் ஜாதிமக்கள். எங்கள் ஜாதிக்கார்ர்ர அவரைப்பற்றி சொன்னால் நாங்கள் ‘வன்மையாக்க் கண்டிப்போம்’ என்ற பற்றுகள்.
      உத்தபுரங்களும் கூட ஒருநாள் திருந்திவிடும். நீங்கள் ?

  42. Avatar
    களிமிகு கணபதி says:

    காவ்யா,

    //…தென்னிந்திய ஆராய்ச்சியைப் பொறுத்தவரை, எவராக இருந்தாலும் இவர்கள் கொள்கைகளே உண்மையென நிரூபிக்கும் ஆராய்ச்சி முடிபுகளைத் தவிர மற்றெல்லாம் பொய்கள். எனவேதான், கேரள நம்பூதிரிகள் நல்லவர்கள்; அவர்களை எதிர்த்த நாடார்கள் மிசுனோரிகள் தூண்டுதலால் செய்த போலிப்பிரச்சாரமே தோல்சீலைக்கழகம் என்ற கட்டுக்கதை என்று சொல்லும் நூல்…//

    நெஞ்சுக்கு நீதி, முரசொலி தவிர மற்ற விஷயங்களையும் நீங்கள் படிப்பவர் என்று நினைத்தேன். :(

    உங்கள் பயணம் திராவிடர் கழகத்தில் இருந்து தோல்சீலைக்கழகத்திற்குத்தான் போகும் போல.

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மதிப்பிற்குரிய ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் மீது சுமத்தி உள்ளீர்கள். வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    .

    1. Avatar
      காவ்யா says:

      உங்களது ஆராய்ச்சிக்கழகத்தின் மீது எனக்கொன்றும் வெறுப்புணர்வில்லை அவர்கள் எந்த முன்முடிபுகளுடன் தங்கள் ஆராய்ச்சிகளைச் செய்ய்யாதிருப்பின். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்பதை அவர்கள் தங்கள் வலைபதிவிலேயே சொல்லிவிட்டார்களே !
      வரலாற்று ஆராய்ச்சிகளை யாரும் இந்த முடிபுக்குத்தான் கொண்டு செல்லவேண்டுமென்று நிர்பந்திக்கமுடியாது. மாறாக, அவ்வாராய்ச்சிகள் எங்கு கொண்டுபோய் நம்மை விடுகிறதோ அதுவே முடிபாகும்.

      “இல்லை…இல்லை. எங்களது ஆராய்ச்சிக்கழகம் முன்முடிபோடு செல்வது சரியே!” என்று என்னிடம் வாதம் செய்வீர்களானால், திரு கணபதி, நீங்கள் உங்கள் எதிராளிகளின் ஆராய்ச்சிக்கொள்கையையும் ஏற்றுத்தான் தீரவேண்டும். எடுத்துக்காட்டாக, அவர்கள், “
      தமிழ்ப்பார்ப்ப்னர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்கள்; பின்னர் தமிழகத்தில் வந்தேறினார்கள் என்று நிரூபிக்கவே எங்களது கழகம் ஆராய்ச்சி செய்கிறது”
      என்று சொன்னால் நீங்கள் எப்படி அதைத் தவறென வாதிட முடியும்?
      நீங்கள் சரியென்றால் அவர்களும் சரி.
      பார்த்தீர்களா ஆபத்தை? எனவேதான் சொல்கிறேன். இப்படிப்பட்ட ஆராய்ச்சிக்கழகங்களை நாம் ஒதுக்கித்தள்ளவேண்டும்.

  43. Avatar
    Paramasivam says:

    One person will throw mud on one group of people.If there is reaction and counter arguments,these people are not able to reply.Anybody who has read the exchanges will know who is Panbaalar and who is a vetti pammatthu.

  44. Avatar
    பா. ரெங்கதுரை says:

    ஆ. சிவசுப்பிரமணியன், ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோர் எழுதியவற்றை ஒழுங்காகப் படித்துள்ள எவருக்கும் அதில் வெளிப்படும் வேளாள ஜாதி வெறியும், சான்றோர் சமூகத்தின் மீதுள்ள வெறுப்பும் புலப்படும். எஸ்.வி. தவிர. 24 மனைத் தெலுங்குச் செட்டியார் சமூகப் பெரியோர்கள் எவரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். மறைமலை அடிகள் எந்த ஜாதி என்பதை அவர்கள் சொல்வார்கள். உங்களைப் போலவே தமிழ் விக்கியில் வேறு பெயரில் வக்கிரமாக எழுதிவிட்டு அதையே ஆதாரமாகக் காட்டினால்தான் நம்புவீர்களா?

  45. Avatar
    ப்ரவாஹன் says:

    Mr. SV
    I fully agree with your words: “I hope you would agree no research is static and finite. With new evidences and discoveries, one need to continously update the earlier thesis and proceed.”
    But what I wanted to convey to you is about “the dilemma” in which these vellala authors submerged in… That dilemma is that not to negate kshatriyahood when they get a chance to claim that -by all ill gotten ways- and to refute the kshatriya claim of others by saying that, there are no kshatriyas in the tamil country and all others, save brahmins are sudras.
    Here I wish to point out the fact that Mr. A.Sivasubramaniam do fall in line with the vellala author and his left leaning is a mask to prevent his dilemma from being exposed. And I could well quote many of his writings where he tries to convey that the Nadars were the people whose women folk didn’t possess the right to wear upper cloth & the christian crusaders were the saviors who got that right for them.
    As for ARV is concerned, what i find in him is not the castiest feel… rather would covertly try to belittle brahmins, whenever he gets an occasion. In his write-up on Ash, the british collector of Tinnevely, he has done this subtly and I have exposed it in my rejoinder in Kalachuvadu monthly.

  46. Avatar
    vedamgopal says:

    @ பரமசிவம்
    // There is no point in arguing with people who say that secularism is a poisonous snake.Thanks for the clarification. //
    உலகில் உள்ள அத்தனை செக்யூலர் நாடுகளில் பெரும் பான்மையாக உள்ளவர்களின் மதத்தை ஸ்டேட் ரிலிசன் என்று அருவித்து அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். மத அடிப்படையில் எந்த நாட்டிலுமே சிறுபான்மை பிரிவு கிடையாது. நம் நாட்டில் மட்டும் தான் செக்யூலரிசம் என்பது பெரும்பான்மையான இந்துக்களையும் இந்து மதத்தையும் இழிவு படுத்தி சிறுபான்மையினரை கட்டி தழுவுவது என்ற நிலைபாட்டை கொண்டு உள்ளார்கள. எனவே இந்த போலி செக்யூலரிசம் தொலைய வேண்டும். நான் சொல்ல வந்தது என்ன என்று நன்றாக உங்களுக்கு தெரிந்தும் வேண்டும் என்றே இப்படி ஒரு கேள்வி.

  47. Avatar
    knvijayan says:

    to .காவ்யா,உ.வே.சாமிநாத அய்யரின் குரு மகாவித்வான்,திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.தெ.போ.மீ அவர்களோ பிற்கால தமிழறிஞர்,காந்தியவாதி,சென்னை,அண்ணாமலை,மதுரை காமராஜ் பல்கலை கழகங்களில் தமிழ்த்துறை தலைவராக சிறப்பாக பணியாற்றியவர்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆரம்ப,உயர்நிலை கல்விநிலையங்களில் தமிழே பயிற்றுமொழியாகவேண்டும் என்று கடுமையாக உழைத்து அதில் வெற்றிகண்டவர்.

  48. Avatar
    பா. ரெங்கதுரை says:

    அத்துடன், தெ.பொ.மீ. அவர்கள் கிராமணி பட்டம் கொண்ட சான்றோர் சமூகத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை இங்கு சொல்லவில்லை என்றால் அவரையும் ஒரு வேளாளர் என்று எஸ்.வி. போன்றவர்கள் திரித்து எழுதி சான்றோர் சமூகத்தில் தமிழறிஞர்களே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

  49. Avatar
    GovindGocha says:

    உலகத்தின் அப்பக்கம் இப்பக்கம் என்று பல நாடுகள் பார்த்தாச்சு… அதில் ரோட்டில் வெளிக்கு போற ஒரே இனம் நம் இனம் தான்…. கேட்டா இவங்க தான் உலகின் நாகரீகத்தின் முன்னோர்களாம்… நம்புற மாதிரியா இருக்கு….

  50. Avatar
    ப்ரவாஹன் says:

    Hello Mr. Govind Gocha..
    இந்திய நாகரிகம், அதிலும் தமிழர் நாகரிகம்தான் வளர்ச்சியடைந்த ஒன்று என்பதில் எந்த ஐயமுமில்லை. நாகரிகத்திற்கான உங்களின் அளவுகோல் ரோடில் வெளிக்கி போவது… அதற்குப் பல்வேறு காரணங்களைச் சுட்டலாம்…. போதுமான எண்ணிக்கையில் பொதுக் கழிப்பிடங்களின்மை…. பொதுக் கழிப்பிடங்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை… அங்கே வசூலிக்கப்படும் கட்டணம் சராசரி மனிதனுக்கு செலுத்த ஏலாததாக உள்ளது..
    நாகரிக வளர்ச்சிக்கான வேறுபல அளவுகோல்கள் உள்ளன… சமூகவியல் மற்றும் மானுடவியல் துறைகளில் உள்ளவர்களைக் கேட்டுப் பாருங்கள்..
    மாற்று சகோதர மணவுறவுக்கு முதலில் வளர்ச்சியடைந்தவர்கள் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினர்… வெகு காலம் வரையிலும் சகோதர சகோதரிகளுக்குள்ளேயே மணம் செய்து கொண்டவர்கள்தான் நீங்கள் ‘புகழ்’கின்ற மேலை நாட்டவர்கள். சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்கான அடிப்படையான அளவீடுகளில் இது முக்கியமானது.
    சாலைகளில் கட்டிப் பிடித்து ஆணும் பெண்ணும் முத்தம் கொடுத்துக் கொள்வது நாகரிகத்தின் அடையாளமல்ல… அது வளர்ச்சியின்மையின் சின்னம்.
    கூட்டம் கூட்டமாக நீச்சல் உடைகளில் பொது இடங்களில் திரிவது நாகரிக வளர்ச்சியல்ல… தனியறையில் செய்ய வேண்டியவற்றை பொது இடங்களில் செய்பவர்கள்தான் நீங்கள் புகழ்கின்ற மேலைத் தேயத்தார்..
    பெற்றோர்களை வயோதிக காலத்தில் கவனித்துக் கொள்வது என்பது பண்பட்ட ச்மூகத்தின் அடையாளங்களுள் ஒன்று… நீங்கள் சொல்கின்ற மேலைத் தேயத்தில் தாய் தந்தைய்ர்கள் கவனித்துக் கொள்ளப்படுவதில்லை என்பது பெருங்குறை…
    தத்துவஞானத் தளத்தில் கீழைத் தேய… அதிலும் குறிப்பாக இந்திய தத்துவஞானம் எங்ஙனம் மேம்பட்டது என்பதை சுவாமி விவேகானந்தர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்…
    எனவே உங்கள் விருப்பத்திற்கு எதைவேண்டுமானாலும் பேச நினைக்காதீர்…
    மேலும் பலவற்றை நான் பட்டியலிடமுடியும்… ஆனால் நீங்கள் எடுத்துக் காட்டியுள்ள விஷயம் உங்களின் தராதரத்தைக் காட்டுகிறதாகவே கருதுகிறேன்.. எனவே இந்த விளக்கம் பெரிதும் மற்றவர்களுக்கானதேயன்றி உங்களுக்கானதல்ல…

  51. Avatar
    GovindGocha says:

    சாலைகளில் கட்டிப் பிடித்து ஆணும் பெண்ணும் முத்தம் கொடுத்துக் — ஆஹா என்ன ஒரு சமுதாய கலாச்சாரம் இவர்களுடையது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கண்ட பெண்/ஆண்களுடன் கூத்து, இதில் அரசியல்வாதிகளும் சரி சாமியார்களும் சரி ஒன்றே. முறை தவறிய உறவின் கண்டுபிடிப்பாளர்கள் இவர்கள். அது சரி, “வாட்டர்” திரைப்படம் பார்த்தீர்களா…? என்னை விட அந்த இயக்குனர் தரம் உயர்ந்தவர் என்றாவது ஒத்துக் கொள்வீர்கள்…அதனால், அப்படம் பற்றி உங்கள் கருத்தென்ன…? உங்களின் தரம் கூத்தடிக்கும் சாமியார் காலில் குடும்பத்தோடு விழுந்து கும்பிடுவதாக இருக்கலாம்…

  52. Avatar
    GovindGocha says:

    கூட்டம் கூட்டமாக நீச்சல் உடைகளில் பொது இடங்களில் — ஆமா ஆமா குளத்தங்கரை ஆத்தக்கரை கிணற்றடியில் சீன் காட்டுவது யார்…? பெண்களை ஜாக்கெட் போட்டால் சாமி குத்தம் என்று சீன் பார்த்து திரிந்தது யார்…? பேறுகாலத்தின் போது பொண்டாட்டி தங்கையை கை வைப்பது எந்தக் கலாச்சாரம்..? கோவில் கோபுரங்களில் பல வித உடலுறவு காட்சிகளை வைத்திருப்பது யார்…?

  53. Avatar
    பா. ரெங்கதுரை says:

    ஆமாம். வெள்ளைக்கார பாதிரிமார்கள் வருகைக்கு முன்னால் இங்கு வேளாளர்கள் அல்லாத பிற தமிழர்கள் எல்லாம் நாகரீகமின்றிக் காட்டுமிராண்டிகளாக நிர்வாணமாகத்தானே திரிந்து கொண்டிருந்தோம். வேளாளர்கள்தானே கால்டுவெல் பாதிரியை அழைத்துவந்து கோவணம் கட்டக் கற்றுக் கொடுத்தார்கள்? அப்புறம் ஈ.வெ.ரா.வைக் கர்நாடகத்திலிருந்து அழைத்துவந்து லுங்கியும் சட்டையும் போடக் கற்றுக்கொடுத்தார்கள்? வேளாளர்களையும், கால்டுவெல்லையும், ஈ.வெ.ராவையும் இப்படியா நன்றி இல்லாமல் பேசுவது?

  54. Avatar
    GovindGocha says:

    அரசர்கள் கோவில் கட்டிய அளவு பள்ளிகூடங்களை கட்டியிருக்கலாம், மருத்துவமனையை கட்டியிருக்கலாம். சக மனிதனின் தேவைக்கான விஷயம் எதையுமே செய்யாமல் ஹீப்ருவானாலும், அரபிக் ஆனாலும், சமஸ்கிருதம் ஆனாலும் புரியாத பாசையில் பூஜை மட்டும் செய்தால், அப்ப கடவுள் என்னைப் படைத்தாரென்றால் அவருக்கு இந்த 3 மொழிகள் தவிர எதுவும் தெரியாதா…? இப்போது கூட பள்ளிகள் கல்லூரிகள் அதிகமாக இந்துக்கள் கட்டலாமே…? யார் தடுத்தது. லிட்டர் லிட்டராக பாலாபிஷேகம், கயமைத்தனம் செய்து பின் சன்னதி சென்று கன்னத்தில் போட்டால் எல்லாம் ஓகேயா…? முஸ்லீம், கிறிஸ்துவரக்ள் நுழைய இடம் கொடுத்தது எது…? யார்…?

  55. Avatar
    ப்ரவாஹன் says:

    கோவில் கோபுரங்களில் பல வித உடலுறவு காட்சிகளை வைத்திருப்பது யார்?

    In this regard (for others and not the one who raised this question) lots of studies have been published. great psychoanalytic authors have studied this subject from various perspectives…
    people who need can search and find…

  56. Avatar
    GovindGocha says:

    ஹா…. ஹா… ஆராய்ச்சியாளர்கள் எல்லாவற்றையும் தான் ஆராய்கிறார்கள். அதற்காக உங்கள் கருத்தைச் சொல்ல மாட்டீர்களா…? இந்து சாமியார்கள் மட்டும் தான் அவர்கள் மடங்களில் ஓம், பிறை, சிலுவை அது இது என்று அனைத்து அடையாளங்களையும் செதுக்கியிருப்பார்கள்… காரணம், தங்கள் நிலைப்பாட்டின் விமர்சனம் குறைக்கவே… ப்ரவாஹன் – பெயர் புரியவே நாம் ஒரு மொழியை படிக்க வேண்டும் என்றால் , இவர்கள் அந்நியர்கள் தானே… :)

  57. Avatar
    ப்ரவாஹன் says:

    அற்பர்களுக்கெல்லாம் நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. அதனால்தான் வினா எழுப்பியவருக்கு இந்தக் குறிப்பு இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

  58. Avatar
    காவ்யா says:

    ஒவ்வொரு மதமும் தனக்கென தனிக்கோட்பாடுகளை வைத்திருக்கிறது. மதங்கள் மண்ணிலிருந்து வந்தவை. Like water, they take on the color of the soil. கலாச்சாரங்களிலிருந்து வந்தும், பின்னர் அக்கலாச்சாரங்களை விரிவுபடுத்தியும் போந்தவை. எனவே இந்துமதம், பிற இந்திய மதங்களோடுதான் ஒத்துப்போகுமே தவிர பிற தேயத்து மதங்களோடு ஒத்துப்போகாது. மதங்கள் கடவுளைப்பற்றிச் சொல்வன. அவைகளின் அடிப்படை நோக்கம் எங்கும் ஒன்றாகத்தான் இருக்கும். எனினும், அவற்றின் வழிமுறைகள் அவையுதித்த மண்ணையொட்டியே வரும். எனவே இந்து மதத்தை சீக்கியம், ஜைனம், பவுத்தம் போன்ற மதங்களோடு மட்டுமே ஒப்பிடப்பட வேண்டும். பாரசீக மதம்(பார்ஸி), இசுலாம், கிருத்துவம் போன்றவைகளோடு கூடாது.
    இந்து மதம் ஒரு பரவலான நோக்கத்தை மக்களிடையே கொண்டு செல்ல என்கிறார்கள். அன்னோக்கத்திற்குப் பல பெயர்கள் அவரவர் எண்ணத்தை வைத்துவிட்டுக் கொள்கிறார்கள். நான் ஏற்கனவே எழுதியது போல, அவரவர் எண்ணப்படியே இம்மதம் எடுத்துக் கொள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது.
    வெறும் மதமாக இஃது இல்லாதிருப்பதால், மனித இக வாழ்க்கையில் ஊடுருவி, அவ்விக வாழ்க்கைக்கு இன்றியமையாதவைகளைப்போற்றி – பஞ்சபூதங்கள் – அவ்வாழ்க்கை வழியாக – விண்ணுலக வாழ்க்கைக்கு வழி தேடுகின்றபடியாலே, இக வாழ்க்கையின் கூறுகளை இம்மதம் அரக்கபரக்க பேசுகிறது. எல்லா இயற்கைப்பொருட்களையும் ஒருவித மிரட்சியோடும், மதிப்போடும் பார்க்கிறது: கல்லை, மண்ணை, காற்றை, நெருப்பை, வானை, மரங்களை, செடிகளை, மனிதனைவிட கீழான உயிர்களை (பாம்பு, பறவை போன்றவை), இப்படி ஒன்றா இரண்டா ? – ஆயிரக்கணக்கானவைகளை – இப்பார்வைகளின் வழிவந்த ஒரே ஒரு தோற்றமே நீங்கள் பார்த்த கோயில் சுவர்களில் இருக்கும் சிலைகள். கஜராஹாவோவுக்குச் சென்றால் – கண்டிப்பாகச் சென்று வாருங்கள் – அங்கு இந்துக்கோயில்களுக்கிடையே ஜைனக்கோயில்களும் உண்டு – அஜ்ஜைனக்கோயில்கள் சுவர்களிலும் இம்மாதிரியான சிலைகள் உண்டு.
    பிறமதத்தினருக்குத் திகைப்பாக இருக்கும். ஆனால் இந்துமதத்தை இம்மதத்தின் ஈதோஸ்களை ethos வைத்துப் பார்க்கும் போது – அப்படித்தான் பார்க்க வேண்டும் – வியப்பாகாது. புரிதல் நேரும்.

    இறைவனையே காதலனாக வரித்து அவனிடம் ஓருயிராக்க கலந்து– அல்லது ஓருடலாக – இங்கு நீங்கள் ஹா…ஹா…போட்டுக்கொள்ளலாம் !! – இணைவது இதன் வெளிப்பாடுகளில் ஒன்று. ஆண்டாளின் பாசுரங்கள் – திருமங்கையாழ்வாரின் நாயகி பாவம் போன்றவை இவ்வகை. திருமங்கையாழ்வார் – பரகால நாயகியாக, பெருமாளோடு ஒரு தோட்டத்திலேயே – இங்கு ஒரு அடல்ட்ஸ் ஒன்லி சீன் பண்ணியதாகவும் எழுதுகிறார். அதன் உட்பொருளைய்யுத்துணர கொஞ்சம் மனம், (Willingness and patience) மனமுதிர்ச்சி வேண்டும். நம்மால் முடியாவிட்டால் வைணவ சம்பிராதியிகளிடம் விட்டுவிட்டு நமக்குப் பிடித்தவாறு இறைவனைத் தொழலாம். அல்லது நிந்திக்கலாம்.

    I said, cultures.

    Like cultures, religions differ. All people, from whichever country or clime they come from, have same needs and do the same things day in and day out, but lead different cultural lives, don’t they? Similarly, only in the ways and procedures, religions differ.

    In Anthropology, it is said – indeed, it is a quote from the Czarina of Anthropology Madam Margaret Mead – that THERE ARE NO INFERIOR OR SUPERIOR CULTURES, BUT ONLY DIFFERENT CULTURES.

    She said it in order to snub the nose of the white man who held arrogantly that he brought cultures to ancient tribes, but Mead felt that the cultures of the ancient tribes are in no way inferior to that of the White man.

    We must adopt the same view in all our discourses of all religions.

  59. Avatar
    ப்ரவாஹன் says:

    எஸ்.வி அவர்களே!
    உங்களுடனான விவாதத்தைப் பொறுத்தவரையிலும் எந்த விதத்திலும் தரம்தாழ்ந்த நிலையில் எந்தக் கருத்துகளும் முன்வைக்கப்படவில்லை. வேறு சில அற்பர்கள்தான் விவாதத்தை, விஷயத்தின் சாரத்திற்குத் தொடர்பற்றவகையில் இழுத்துச் சென்றுள்ளனர்.

  60. Avatar
    GovindGocha says:

    ப்ரவாஹன், நீங்கள் உலகத்திலேயே அதி அற்புத பிறவியாக இருக்கலாம். எனக்கு காவ்யா, பரமசிவம், கே என் விஜயன் கருத்தில் உடன்பாடு இல்லை. ஆனால், அவர்களின் அனுபவ வெளிப்பாடே அவர் தம் கருத்துக்கள். யாரும் இங்கே அற்பர்கள் அல்ல… இந்த மனநிலையே இந்துமதம் இங்கே கேள்விக்குறியானது… வடக்கே டில்லி, உபியில் , தமிழகத்தினரை அவர்கள் மதத்தில் -இந்து – இணைந்தவர் போல் தான் பார்க்கிறார்கள். அந்த எண்ண ஓட்டமே நாம் அந்நியப்பட்டுப் போனர்து. அதே மாதிரி தான் சௌதி அரேபியாவிலும் , லெபனான கிறிஸ்துவரக்ளிடமும் நம்மூர் முஸ்லீம், கிறிஸ்துவரக்ள் பற்றிய அபிப்பிராயம். உங்களின் தரம் தெரியாது… ஆனால், என் மாமியார் மிக உயர்ந்த பிறாமணால் குடி பிறந்தவர். அவரே என்னிடம், அய்யர்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்வார். தனது இனம் பற்றி மேன்மை உணர்வு இருந்தும் யாரையும் அற்பராக அவர் சொன்னதில்லை… உங்கள் பார்வை உங்கள் மனநிலையே….

  61. Avatar
    களிமிகு கணபதி says:

    //என் மாமியார் மிக உயர்ந்த பிறாமணால் குடி பிறந்தவர். அவரே என்னிடம், அய்யர்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்வார்.//

    கோவிந்த் கோச்சா,

    அவர் ஏன் அப்படிப்பட்ட ஒரு புரிதலுக்கு வந்தார் என்பதைத்தான் ப்ரவாஹன் சொல்கிறார்.

    ஆடு எனக்கூறி வளர்க்கப்பட்ட சிங்கம் புல்லைத் தின்று மே என்று கத்தி வளர்ந்த கதை உங்களுக்குத் தெரியும்தானே.

    .

  62. Avatar
    பா. ரெங்கதுரை says:

    //என் மாமியார் மிக உயர்ந்த பிறாமணால் குடி பிறந்தவர். அவரே என்னிடம், அய்யர்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்வார்.//

    உங்கள் மாமியார் அய்யங்காரா அல்லது மாத்வரா?

  63. Avatar
    gopi says:

    inthiyargal pondra oru inam ulagil veru entha natilum illai india thunai kandathai thavira appuram enna vantheri kudigal.tharka arive satrum illatha manam pirazhiya madayargalin vasagame ithu.vendumanal sila thazhthapatta pirpaduthapatta sathi makkalidam africa karupina moolakurugal athigamaga ullana avargal vendumanal africavil irunthu vantheriya kudigalaga irupargal.muslimgalum christiangalum vaikum peyarai therinthukoll kooda oru mozhi padithalthan theriyum atharkaga avargal vantherigala. computerlil type adika therivathanaleye pala madayargal inge karuthu solla varugiragal.

  64. Avatar
    gopi says:

    sangakala pulavargal kapilar, baranar. muthal parimelazhagar, u.ve.sa, sundarar,sambandar muthal bharathi indraya vali varai brahmanargal vantheri endral avargal valartha tamizhukku intha manilam kadamai pattu irukirathu ondrum ariyath mundangalana govindgocha pondravargal thelivana vasipaiyum vivathathaiyum nigazhthivitu ingu vanthu eluthattum. athuvarai pothi kondu irukkattum.

  65. Avatar
    suvanappiriyan says:

    திரு கோவிந்த் கோச்சா!

    //அரசர்கள் கோவில் கட்டிய அளவு பள்ளிகூடங்களை கட்டியிருக்கலாம், மருத்துவமனையை கட்டியிருக்கலாம். சக மனிதனின் தேவைக்கான விஷயம் எதையுமே செய்யாமல் ஹீப்ருவானாலும், அரபிக் ஆனாலும், சமஸ்கிருதம் ஆனாலும் புரியாத பாசையில் பூஜை மட்டும் செய்தால், அப்ப கடவுள் என்னைப் படைத்தாரென்றால் அவருக்கு இந்த 3 மொழிகள் தவிர எதுவும் தெரியாதா…?//

    ‘வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.’ – குர்ஆன் 30 :22
    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.’ – குர்ஆன் 14 :4

    மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.

    குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.

    உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.

    “மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்”

    மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.

  66. Avatar
    kalai says:

    சமஸ்கிருதத்தை கோவில் பூஜைகளில் தவிர்க்க வேண்டும் தமிழில் பூஜை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பது போல அரபி மொழியை விலக்கி தமிழில் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று முஸ்லிம்கள் கோருகிறார்களா?

  67. Avatar
    GovindGocha says:

    கலை, இவர்களின் வீரம் எல்லாம் இந்து மற்றும் இந்திய மதங்களிடம் மட்டும் தான். அங்க பேசுனா…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *