This entry is part 13 of 37 in the series 18 செப்டம்பர் 2011



பின்பு ஒரு நாளில்
உன்னிடம்
கூடுத்து விடலாம் என்று
முன்பு ஒரு நாளில்
உன்னக்காக வாங்கப்பட்ட
பரிசு ஒன்றை
காலம் கடந்து
காத்து வருகிறது
என் பெட்டகத்தின்
உள் அறை….

பின்பு ஒரு நாளில்
சொல்லி விடலாம் என்று
முன்பு ஒரு நாளில்
தோன்றிய காதலை
காலம் கடந்து
காத்து வருகிறது
என் இதயம் ….

ச. மணி ராமலிங்கம் (smrngl@gmail.com)

Series Navigationஒரு கடலோடியின் வாழ்வுஎனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)