Posted in

கவிதை

This entry is part 27 of 44 in the series 16 அக்டோபர் 2011


 

இல்லாத எல்லைக்குள்

சொல்லாத சொல்லைத்

தேடும் யாத்ரீகனின்

கைவிளக்கு

 

எண்ண ஊடல்களின்

சொற்கூடல்

 

கடக்கும் காலனின் நிழல்

 

கனவுக் கடலை

கடக்கும் தோனி

 

சிந்தனை நிலங்களடியில்

கணக்கற்ற கனிகளின்

எதிர்காலம் தேக்கியிருக்கும்

ஒற்றை விதை

 

வாழ்வின் அர்த்தம் வேண்டும்

வார்த்தை யாகம்

 

கவிஞனின் இருப்பின் சாட்சி

 

அனைத்துமளித்த அகிலத்துக்கு

அவனது நினைவுப் பரிசு

 

ஒரு வாழ்க்கையில்

ஓராயிரம் வாழ்வை

வாழத் துடிக்குமவன்

பேராவலின் நீட்சி.

 

– வருணன்.

Series Navigationமுடிவுகளின் முன்பான நொடிகளில்…மழைப்பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *