Posted in

தலைமை தகிக்கும்…

This entry is part 8 of 38 in the series 20 நவம்பர் 2011

_____________

சூரியனை சூழ்ந்த கோளங்கள்
சுற்றி திரிகின்றன தனி சுதந்திரத்தோடு
தன்னை வட்டமடிக்கிற நிலா பெண்களோடு..

தலைமை பதவியின் தனிமையால்
கலகலப்பாய் பழக ஆளில்லாமல்
தனித்த தலைமை தகிக்க
சூரியனின் பெருமூச்சும் உஷ்ணமாய்

பூமியை நேருக்கு நேர்
நிறுத்தி கேள்வி கேட்டால்,
நிலா வருந்தி, கறுத்து விடுகிறாள்
கிரகண நோய் தாக்கி. !

பூமியை பின்னுக்கு தள்ளி
நிலாவை நேரே சந்தித்து
காதலை சொல்ல நினைக்கையில் – சூரியனுக்கே
கிரகணம் பிடித்து விடுகிறது..

மற்ற பால் வெளியில்
தன்னை போன்று திரியும்
சூரியன்களிடம் கேட்டு பாரக்கலாம்.
தகிக்காத தலைமை வசப்படுமா என ?

-சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationபா. சத்தியமோகன் கவிதைகள்நானும் அசோகமித்திரனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *