Posted in

மரணம்

This entry is part 16 of 31 in the series 19 பிப்ரவரி 2012

இவள் பாரதி

நான் கொலையுண்ட நேற்றிலிருந்து
மழை முகிழ்க்கும் கார் மேகங்கள்
கலைந்துவிட்டிருந்தன..

நான் மண் சரிந்த கணத்திலிருந்து
பூமித்தாயின் ஓலம்
வானமெங்கும் எதிரொலிக்கிறது

நான் வெட்டப்பட்ட மாலையிலிருந்து
காற்றிலிருக்கும்
பிராணவாயு நின்றுவிட்டது..

என் உறுப்புகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியபோது
என்னைக் கடந்து சென்றோருக்கு
எந்த குற்றவுணர்வோ இரக்கமோ கூட
இருக்கவில்லை..

இதற்கு மேல்
ஒரு இனத்தின் மரணம் குறித்து பேச
ஒன்றுமில்லை

Series Navigationபழமொழிகளில் ஒற்றுமைஅகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *