Posted in

நதியும் நானும்

This entry is part 13 of 31 in the series 2 டிசம்பர் 2012

 

 

பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை

எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க

ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை

அவசியமெனக் கருதுகிறேன் நான்

 

சற்று நீண்டது பகல் இன்னும்

மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை

அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது

 

வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம்

வந்த தூரமும் அதிகம்

எல்லையற்றது மிதந்து அசையும் திசை

இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி

 

எனினும்

கணத்துக்குக் கணம் மாறியபடியும்

ஆழத்தில் அதிர்ந்தபடியும் கிடக்கிறோம்

நதியும் நானும்

 

– ரொஷான் தேல பண்டார

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

Series Navigationநினைவுகளின் சுவட்டில்(104)விருப்பும் வெறுப்பும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *