முடவன் குட்டி
பின் வீட்டு மாடிக்கதவு திறந்தேன்
ஆரத்தழுவியது காற்று
விரிந்த கண்மாய்
வற்றும் குளம்
மரங்களூடே மறைந்து மறைந்து
தோன்றும்
தூரத்து தொடர்ச்சி மலை
குளக்கரை தொட்டுவிட
சரிந்து இறங்கும் வானம்
தவிப்போ தவமோ ஏதுமிலாது
சும்மா நிற்பது  போல்
காத்திருக்கும் கொக்குகள்
ஏதோ ஓர் வான் பறவை
கீழ் இறங்கி -குளம் தொட்டு- மேலேகும்
வாயில்  மீனுடன்
குளத்தின் பேரழகு
மலைத்து நின்றேன்
சாயுங்காலம் வரை
அழியுமோ இவ்வோவியம்..?
பார்வை  விலகி
குளக்கரை மேட்டில் விழுந்தது  
கால் விந்தி
பக்கவாட்டில் சாய்ந்து
அசைந்தது ஓர் உருவம்
அ..
இது அவனது நடையல்லவா..?
அவன் தானா..?
துரோகி
இரு  பத்து ஆண்டுகள்
கீழ்
மன ஆழத்தில் புதைந்து கிடந்த
துரோகத்தின் கரும்புகை
உயிர் கொண்டு மேலெழ
பற்றி எரிந்தது மனம்
சாயும்  வரை சாகாதென
சற்று முன் மனம் படிந்த
அழகு ஓவியமும் தான்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 6
 - தினம் என் பயணங்கள் – 19 இரண்டாம் நாள் தேர்வு
 - தோல்வியின் எச்சங்கள்
 - நம் நிலை?
 - பிடிமானம்
 - சுந்தோப சுந்தர் வரலாறு
 - திண்ணையின் இலக்கியத் தடம்-37
 - வால்ட் விட்மன் வசனக் கவிதை – 77 ஓர் அன்னியனுக்கு !
 - எரிந்த ஓவியம்
 - இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!
 - வீடு
 - சரியா? தவறா?
 - இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம் { நிகழ்ச்சி எண்—-147 }
 - பெருங்குன்றூர் கிழார் கவிதைகள் .
 - அரசியல் செயல்பாடுகளூடே கொஞ்சம் கவிதைகள் பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…
 - தொடுவானம் 18. அப்பாவின் ஆவேசம்!
 - ‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா
 - திரைப்படம் உருவாகும் கதை (மேதைகளின் குரல்கள். உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்கள். தமிழாக்கம். ஜா.தீபா நூல் திறனாய்வு)
 - மயிலிறகு
 - எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் -நூல் அறிமுகம்
 - வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 5
 - கா•ப்காவின் பிராஹா -3
 - ஆப்ரஹாம் லிங்கன் நாடக நூல் வெளியீடு
 - பயணச்சுவை ! 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !
 - நீங்காத நினைவுகள் – 48
 - பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை முரண்கோள்கள் பன்முறைத் தாக்கிய யுகத்தில், நுண்ணுயிர் மலர்ச்சி துவங்கியது