மாமதயானை
( சென்ரியு கவிதைகள்)
கனமான பையை
எப்படி சுலபமாக தூக்கினான்…
திருடன்
**
அன்னதானம் வாங்க தூக்க முடியாமல்
தூக்கிக் கொண்டு ஓடினான்….
தொப்பையை
**
குடிசை வீட்டிற்குள்
விரும்பிப் போய் குடியிருக்கும்…
அன்பு
**
ஆஞ்சநேயர் வாயில்
வெண்ணெய் அடித்தார்கள்…
ஏழையின் வயிற்றில் அடித்தவரகள்
**
தொட்டியில் பால்நிலா
குடித்து விட முயலும்…
பூனை
**
புரட்சி வெடிக்கட்டும்
மறுகணத்தில் வெடித்தது…
குழந்தையின் பலூன்
**
உலக வாழ்க்கையை வெறுத்து
பக்தி மார்க்கத்திற்கு மாறினான்…
பத்து பிள்ளைக்கு தகப்பன்
**
பிள்ளையார் சுழிபோட்டவன்
எழுதத் தொடங்கினான்…
திருட்டுக்கணக்கு
- அன்னி எர்னோவின் இலக்கியப் புலம்தான் அவரது வாழ்க்கை
- நிழல் தேடல்
- தாய்
- நூற்றாண்டின் நினைவில் எனது ஆசான் – தமிழருவி த. சண்முகசுந்தரம்
- இந்தக் கோமாளிகளுக்குஉங்களைப்பற்றித் தெரியாது