author

”முந்தானை முடிச்சு.”

This entry is part 23 of 47 in the series 31 ஜூலை 2011

வரும்போது மகளுக்கு பலகாரம் வாங்கியாங்க.. ராட்டையில் பட்டு கோர்த்தபடி சொன்னாள். சுற்றுலா வண்டி கும்மாளக்குரலில் குற்றாலத்துக்கு குளிக்கப்போனவனுக்கு சரியா காது கேக்கல போலும். அப்படியே எனக்கும் வயித்துவலி மாத்திரை ஏதாவது வேணும்.. தறியில் நெய்துகொண்டு கேட்டாள். சினிமா கொட்டகை சீட்டி ஒலியில் மறந்து விட்டான் போலும் பாவி மகளை பத்தாவது அனுப்ப பணத்துக்கு வழியில்ல.. சரிகை சிக்கெடுத்தவள் குரலை மேலத்தெரு ராக்கம்மா மடியில் கரைத்து விட்டான் போலும் ஓடிப்போன மகளை எங்காவது பார்த்தீங்களா.. புடவையை நீட்டி மடித்தவள் […]