குறிக்கப்பட்ட
ஒரு நாளை நோக்கிய பயணத்தில்
காலத்தின் சுமையில்
கனம் கூடிப் போவதும்
இருப்பது போலவும்
கிடைக்காமல் போகாதெனவும்
இல்லாமல் இருக்காதெனவும்
கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில்
காலத்தின் இருப்பில்
கவனம் கூடிப் போவதுவும்
இதுவும்
கடந்து போகுமென
இதயம்
கிடந்து துடித்தாலும்
காலத்தின் கடப்பில்
பிடி நழுவிப் போவதுவும்
இதோ
இந்த நொடியில்
தீர்ந்துவிடப் போகிறது
அடுத்தது நாம்தான்
என்கிற
அனுமானங்கள்
அடுத்தடுத்த நிமிடங்களில்
சுமையேற்றி வதைப்பதுவும்
என
நிகழ்காலம்
நிழல்போலத் தெளிவின்றிப் போனதால்
சுவாசிக்கக்கூட
பிரயாசைப் பட வேண்டியிருக்கும்
எந்த
உபகரணம் கொண்டும்
இயல்பு
மாற்றிவிட வியலாதது
காத்திருப்பும் கணங்களும்!
-சபீர் அபுஷாருக்
- காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
 - முள்வெளி அத்தியாயம் -11
 - தங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்
 - தடயம்
 - நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..
 - காத்திருப்பு
 - சந்தோஷ்சிவனின் “ உருமி “
 - வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15
 - தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)
 - மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
 - நான் செத்தான்
 - நச்சுச் சொல்
 - மாறியது நெஞ்சம்
 - பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)
 - ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!
 - எஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “
 - பஞ்சதந்திரம் தொடர் 46
 - காத்திருப்பு
 - இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை
 - சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்
 - விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு
 - 2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்
 - மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28
 - கேரளாவின் வன்முறை அரசியல்
 - துருக்கி பயணம்-4
 - அத்திப்பழம்
 - கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?
 
உன் கவிதையில் கனம் கூடி வருகிறது. அழகான கவிதை.
/எந்த
உபகரணம் கொண்டும்
இயல்பு
மாற்றிவிட வியலாதது
காத்திருப்பும் கணங்களும்!/
என்னால் முழுமையாக உடன் பட முடியா விட்டாலும் சிந்தனையை தூண்டும் வரிகள்.