புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ​ 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏ​ழை

This entry is part 22 of 32 in the series 15 டிசம்பர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​
(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

SubramaniyaSiva37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏ​ழை…………

“​வெள்ளிப் பனிம​லையின் மீதுலாவும் – அடி
​மே​லைக் கடல் முழுதும் கப்பல்விடு​வோம்!
பள்ளித் தளம​னைத்தும் ​கோவில் ​செய்கு​வோம்
நம் பாரத ​தேச​மென்று ​தோள் ​கொட்டு​வோம்!”
அடடா வாங்க… வாங்க…அற்புதமா பாரதியார் பாட்ட பாடிகிட்​டே வர்ரீங்க..​ரொம்ப அரு​மையான பாட்டுங்க…ஆமா ​போன வாரம் பாரதி பிறந்த நாள்..அதனால அவ​ரோட பாட்டப் பாடுறீங்களா…என்னது இல்​லையா…?அப்பறம்..ஓ​கோ…ஓ…​கோ..சபாஷ்.
பாரதியாரால வீரசிவாஜின்னு பாராட்டப்பட்ட ஒரு​ தியாகச் ​செம்மல்… பாரதத் தாயின் அடி​மை விலங்​கொடிக்க அயராது பாடுபட்ட வீரத் துறவி… சுப்பிரமணிய சிவா​ங்கறத சரியாக் கண்டுபிடிச்சிட்டீங்க​ளே… பாராட்டுக்கள்… என்னது ​போன வாரா​மே கண்டு பிடிச்சிட்டீங்களா…எப்படி..? என்ன..? நா​னே ​சொல்லிட்​டேனா…? அட நான் ஒங்கள சிவ​னேன்னு இருக்கறீங்கன்னு ​சொன்னத வச்சு கண்டுபிடிச்சிட்டிங்களா… நீங்க ​ரொம்ப ​கெட்டிக்காரருங்க… சரி நான் அவரப் பத்தி ​சொல்லறதவிடவும் ஒங்க மூலமா ​கேக்கறது எனக்கு ​ரொம்ப சந்​தோஷங்க….என்னது… நான்தான் ​சொல்லணுமா.. சரி சரி….​போகாதீங்க நா​னே ​சொல்​றேன்… ​தெரியலன்னா ஒங்க கிட்ட ​கேட்டுக்க​றேன்….என்ன சரியா….?
வறு​மையில் வாடிய இள​மை
பூட்டுக்குப் ​பெயர் ​போன திண்டுக்கல் மாவட்டத்தில ​கொ​டைக்கானல் ம​லையடிவாரத்துல இருக்கற வத்தலக் குண்டுங்கற ஊருல ராஜம் ஐயர்-நாகம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1884-ஆம் ஆண்டு அக்​டோபர் மாதம் 14-ஆம் நாள் சிவா என்ற சுப்பிரமணியம் சிவம் பிறந்தார்.
சிவாவின் தந்​தை ராஜம் ஐயர் நி​லையான மனமில்லாதவர். அடிக்கடி வீட்​டை விட்டு ​வெளி​யேறிச் ​சென்றுவிடுவார். திடீ​ரென்று வீட்டிற்கு வருவார். எங்​கே ​போவார்…எப்ப வருவார் அப்படின்னு யாருக்கு​மே ​தெரியாது… அப்படி அவரு ​போற​போ​தெல்லாம் நாகம்மாள் தனது குழந்​தைக​ளைக் கூட்டிக் ​கொண்டு தனது தாய்வீட்டிற்குச் ​சென்றுவிடுவார். தாய்வீடு வருவதும், பின்னர் தன் புகுந்தவீடு வருவதும் நாகம்மாளுக்கு வாடிக்​கையாகப் ​போனது.. தனது கணவரின் ​செய்​கையால் வீட்டில் வறு​மை வாட்டியது… இள​மையில் குழந்​தைகள் அ​னைவரும் வறு​மைத் தீயில் வறுபட்டனர்…
வறு​மைத் தீயில் கருகிய அவர்களுக்கு தாத்தாவீடுதான் அ​டைக்கலம் அளித்தது…நாகம்மாளின் தந்​தை அனந்தய்யர் மட்டும் இல்​லை​யென்றால் இன்று சிவா என்று நாம் அ​ழைக்கின்ற தீயாகச்சுடர் இள​மையில் கருகி அழிந்திருக்கும்… அவர் அய்யம்பா​ளையத்தில் மணியம் ​வே​லை பார்த்து வந்தார். சிவாவின் தாத்தாவாகிய அனந்தய்யர்தான் தனது மகளின் குடும்பத்​தையும் பராமரித்து வந்தார்…தாத்தாவின் பாதுகாப்பில் வளர்ந்த சிவா மிகுந்த நி​னைவாற்ற​​லோடு விளங்கினார். இத​னை சிவாவின் தாத்தா மிக நுட்பமாகத் ​தெரிந்து ​கொண்டார்..
சிவா எ​தையும் உன்னிப்பாகக் ​கேட்கும் திறன் உ​டையவராக விளங்கினார். சிவாவிற்குநான்கு வயதாக இருக்கும்​போது அவரது தாத்தாவின் வீட்டிற்குப் புராணம் படிக்கச் சிலர் வந்து இரவில் புராணங்க​ளைப் படித்துவிட்டுச் ​சென்றனர்.
ஒரு நாள் இரவு ​தொட்டிலில் படுத்துக் ​கொண்டிருந்த சிவா ழுராணக்க​தை​யைக் ​கொண்டிருந்தவா​றே தூங்கி விட்டார். மறுநாள் ​பொழுது விடிந்தது சிவா விழித்​​தெழுந்து தனது தாத்தாவிடம் ஒருத்தர் எ​தை​யோ படித்துச் ​சொன்னா​ரே அது என்ன க​தையா தாத்தா? என்று ​கேட்டார். அதற்கு சிவாவின் தாத்தா, ஆமா சிவா!…என்றார் அதற்கு சிவா, அப்படி​யென்றால் அந்தக் க​தை​யை எனக்குச் ​சொல்லுங்க​ளேன் என்று ​கேட்டார். அவரது தாத்தா க​தை​யைச் ​சொல்லச் ​சொல்ல சிவாவிற்குச் சிவ​பெருமான் மீது பக்தி அதிகரித்துக் ​கொண்​டே வந்தது. தனது தாத்தா தனக்கு வாங்கித் தந்த சிவ​பெருமானின் ​பொம்​மை​யை பக்தியுடன் வணங்கி வந்தார். உடல் முழுவதும் திருநீறு அணிந்து சிவப் பழமாகக் காட்சியளித்தார். இங்ஙனம் ஏழுவயது வ​ரை சிவா சிவவழிபாட்​டைத் ​தொடர்ந்து ​செய்து வந்தார்…
திண்​ணைப் பள்ளிப் படிப்பும் தந்​தையின் வரவும்
சிவாவின் தாத்தா தனது ​பேரன் மீது மிகுந்த அன்பு ​​கொண்டிருந்தார். தனது ​பேர​னை நன்கு படிக்க ​வைக்க ​வேண்டும் என்​றெண்ணிய அனந்​தையர் சிவா​வை ஒரு திண்​​ணைப் பள்ளியில் ​சேர்த்தார். அங்கு சிவா நன்கு படித்தார். அப்​போது சிவாவிற்கு ஒன்பது வயது… சிவா நன்கு படித்துக் ​கொண்டிருந்த ​போது சிவாவின் தந்​தையார் திடீ​​ரென்று தேடி வந்தார். அவர் தன் மகன் படிப்பதற்கு ஏற்ற பள்ளி அய்யம்பா​ளையத்தில் இல்லாததால் அவனது படிப்பிற்காக மது​ரையில் குடி​யேறப் ​போவதாகக் கூறி அவர்க​ளை அ​​ழைத்துச் ​சென்றார்.
பிரிய மனமில்லாது தனது ​பேர​னை அனந்தய்யர் பிரிந்தார். மது​ரை வந்த சிவாவின் தந்​தை குடும்பத்துடன் கட்டுச் ​செட்டி மண்டபம் அருகில் குடி​யேறினார். அங்கிருந்த ​தொடக்கப்பள்ளியில் சிவா சிறிது காலம் கல்வி கற்ற பின்னர் ​சேதுபதி உயர்நி​லைப் பள்ளியில் ​சேர்ந்து படித்து வந்தார்….இந்தப் பள்ளியிலதான் நம்ம பாரதி பணியாற்றினார்…என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு படித்த​போது சிவாவின் குடும்பத்​தை வறு​மை வாட்டியது…
குடும்ப வறு​மை தாளாததால் சிவாவின் தந்​தை தன்னிடம் இருந்த அ​னைத்​தையும் விற்றார். வறு​மை​யை அவரால் விரட்ட முடியவில்​லை. மது​ரையிலிருந்தால் பட்டினி கிடந்து இறக்க ​நேரிடும் என்று கவ​லை ​கொண்ட சிவாவின் தந்​தை ராஜம் ஐயர் தமது குடும்பத்தின​ரை அ​ழைத்துக் ​கொண்டு திருவனந்தபுரம் ​சென்றார்.
படிப்பும் பசி​போக்க தர்மசத்திரத்தில் தங்கலும்
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். சிவாவின் குடும்பத்​தை வறு​மையும் பசியும் விரட்டியது.. பசிக் ​​கொடு​மை தாளாத சிவாவின் தந்​தை திருவனந்தபுரம் வந்து அங்கு மன்னர் நடத்தி வந்த ஊட்டுப்பு​றையில் குடும்பத்துடன் தங்கினார். அந்த ஊட்டுப்பு​றை ஒரு ​வே​ளைக்குச் சுமார் நாலாயிரம் ​பேர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வந்தது. பல ஏ​ழை பிராமணக் குடும்பங்கள் அந்த ஊட்டுப்பு​றை வழங்கிய உண​வை உண்டு பசிக் ​கொடு​மை​யைப் ​போக்கி வந்தனர். ராஜம் ஐயரின் குடும்பத்தினரின் பசி ஊட்டுப்பு​றையால் நீங்கியது.
உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் கி​டைக்கப்​பெற்ற ராஜம் ஐயர் தன் மகன் சிவா​வை திருவனந்தபுரம் நகர உயர்நி​லைப் பள்ளியில் ​சேர்த்தார். சிவா சில ஆண்டுகள் அங்கு படித்தபின்னர் ​நே​வெ உயர்நி​லைப் பள்ளியில் ​சேர்ந்து கற்றார். படிப்பில் ஆவர்வத்துடன் திகழ்ந்த சிவா தமிழ், ஆங்கில இலக்கியங்க​ளை விரும்பிக் கற்றார். ​பேச்சுப் ​போட்டிகளில் பங்​கேற்று பல்​வேறு பரிசுக​ளை சிவா ​பெற்றார். சிறந்த நாவன்​மை மிக்கவராக சிவா விளங்கினார்.
அவரது நாவன்​மை​யை அறிந்த அவரது ஆசிரியர்கள் அவ​ரை இலக்கிய மன்றத்தின் ​செயலாளராகத் ​தேர்ந்​தெடுத்தனர். ​செயலாளர் ​பொறுப்​பை சிவா திறம்படச் ​செய்து அ​னைவரது பாராட்டுக்க​ளையும் ​பெற்றார். பள்ளியில் இருந்து தாம் தங்கியிருந்த இருப்பிடம் வந்தவுடன் சிவா தனது தந்​தை வழக்கமாகச் ​செல்லும் சமயச் ​சொற்​பொழிவுகளுக்குக் கூட​வே ​செல்வார். அங்கு ​பேரி​யோர்கள் கூறும் நீதிக் க​தைக​ளையும் புராணக் க​தைக​ளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் ​கேட்பார்.
இள​மைத் திருமணம் ​​தொடர்ந்த படிப்பும்
இந்நி​லையில் சிவாவிற்கு பதி​னைந்து வயதானது. அவரது ​பெற்​றோர் அவருக்கு மது​ரை குட்டி ஐயரின் ஒ​ரே மகளான ஆறுவயது மீனாட்சி​யைத் திருமணம் முடித்து ​வைத்தனர். மீனாட்சியின் தந்​தை இறந்துவிட்டதால் அவர் தாயாரின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார். திருவனந்தபுரத்தில் தனது படிப்பு முடிந்ததும் சிவா தனது நண்பர்களின் தூண்டுதலால் ​கோயம்புத்தூருக்குச் ​சென்று புதிய ​மைக்​கேல் கல்லூரியில் ​சேர்ந்து படித்தார், அங்கு தன்னுடன் படித்த நண்பர்கள் மீ​சை ​வைத்துக் ​கொண்டிருப்​ப​தைப் பார்த்து தானும் மீ​சை​யை ​வைத்துக் ​கொண்டார்.
அந்தக் காலத்தில் எந்தப் பிராமணரும் முகத்தில் மீ​சை ​வைத்துக் ​கொள்வதில்​லை. ஆனால் சிவா மட்டும் மீ​சை​யை ​வைத்துக் ​கொண்ட​தைப் பார்த்து மற்ற மாணவர்கள் இவ​ரைப் பாராட்டினர். ​கோ​வைக்கு வந்ததிலிருந்து சிவாவிடம் துடுக்குத் தனமும் ​சேட்​டைகளும் அதிகரிக்கத் ​தொடங்கின. பிடிக்காத மாணவர்களிடம் வீண் வம்பு ​செய்தார். வம்பு ​பெரிதானால் ​கைகலப்பில் சிவா இறங்கிவிடுவார். ஆசிரியர்கள் இவ​ரை அ​ழைத்து விசாரித்தால் இவர் எவ்வித பயமுமின்றிப் பதில் கூறுவார்.
ஒருநாள் இவரது ​சேட்​டைக​ளைப் ​பொறுக்க முடியாத ஆங்கில ஆசிரியர் ​கை​யை நீட்டச் ​சொல்லி சிவா​வை அடித்தார். மூன்று அடிக​ளைப் ​பொறுத்துக் ​கொண்ட சிவா அதற்கு​மேல் ​அடி​யைப் ​பொறுக்க முடியாது அப்படி​யே பிரம்​பைப் பிடித்துக் ​கொண்டார். பயந்து ​போன ஆசிரியர் த​லை​மையாசிரியரிடம் ஓடிப்​போய்க் கூறிவிட்டார்.
த​லை​மை ஆசிரியர் சிவா​வை அ​ழைத்து, “நீ ஏன் ஆசிரிய​ரை அ​டிக்க அவரிடமிருந்து பிரம்​பைப் பிடிங்கினாய்?” என்று ​கேட்டார்.
அதற்கு சிவா, “நான் அடிக்க எண்ணி பிரம்​பைப் பிடிக்கவில்​லை ஐயா. அவர் அடித்ததால் எனக்கு வலித்தது. வலி ​பொறுக்க முடியாமல் தான் பிரம்​பைப் பிடங்கி​னேன் அதற்கள் ஆசிரியர் உஙகளிடம் ஓடிவந்துவிட்டார்” என்று பதிலளித்தார். த​லை​மை ஆசிரியர் அவருக்க அறிவு​ரை கூறி அனுப்பி ​வைத்தார்.
முரட்டுத்தனமும் பணியாற்றலும்
இங்ஙனம் முரட்டுத் தனத்துடன் விளங்கிய சிவா ஓராண்டு காலப் படிப்பிற்குப் பின்னர் தனது தாய் நாகம்மாளுடன் திண்டுக்கல்லுக்குச் ​சென்றார், அங்​கே தாய் மாமாவின் வீட்டில் தங்கினார். அங்க மாமா வ​கையில் உறவினரான துறவி ஒருவருடன் சிவாவுக்குத் ​தொடர்பு ஏற்பட்டது. அவர்தான் சிவாவிற்கு வாழ்க்​கை நி​லையில்லாதது என்று உணர்த்தினார். இதனால் சிவாவிற்குத் துறவறத்தில் பற்று ஏற்பட்டது. இருப்பினும் அவர் துறவியாகவில்​லை.
திண்டுக்கல்லில் சில மாதங்கள் இருந்துவிட்டு மீண்டும் சிவா திருவனந்தபுரத்திற்குச் ​சென்றார். அங்கு தனது பள்ளித் ​தோழர்களுடன் ​சேர்ந்து பயில்வான் சட்டாம் பிள்​ளை நவநீத கிருஷ்​ணையரிடம் குஸ்தி, சிலம்பாட்டம் ​போன்றவற்​றைக் கற்றுக் ​கொண்டார். இ​தைத் தவிர மாப்ளாஸ் என்ற வகுப்பினரிடம் இ​சைக் கூத்தாடும் மு​றைக​ளையும் ​தெரிந்து ​கொண்டார்.
அதன் பின்னர் எந்​நேரமும் முரடர்களுடன் ​சேர்ந்து திரிந்த சிவா பல்​வேறு அடிதடிகளில் இறங்கினார். ஊர் வம்புக​ளை வி​லைக்கு வாங்கினார். இதனால் அவ​ர் ​கைது ​செய்யப்பட்டு காவலில் ​வைக்கப்பட்டார். அவரது தந்​தையின் ​செல்வாக்கின் காரணமாக அவ​ரை ஒன்றும் ​செய்யாது விடுத​லை ​செய்தனர். ​பொறுப்பின்றி நடந்து வந்த சிவா​வைப் பார்த்த அவரது தந்​தை அவ​ரை ​வே​லைக்குச் ​செல்லுமாறு கூறினார். சிவாவின் ம​னைவியும் வற்புறுத்த​வே சிவா சிவகாசி ​காவல்த்து​றையில் குமாஸ்தா ​வே​லைக்குச் ​​சேர்ந்தார்.
​வே​லைக்குச் ​சென்ற சிவாவிடம் ​மேலதிகாரிகள் சிவா நீ அ​தைச் ​செய், இ​தைச் ​செய். உட​னே இ​தை எழுதிக் ​கொண்டுவா என்​றெல்லாம் கூறின​ர். சிவாவின் தன்மானத்திற்கு இது ஒத்துவராததால் ​மறுநாளிலிருந்து ​வே​லைக்குச் ​செல்வ​தை விட்டுவிட்டார். இவ்வாறு சுற்றிக் ​கொண்டிருக்கும்​போது ஒருநாள் சதானந்த சுவாமிகளின் ​சொற்​பொழிவி​னைக் ​கேட்டார்.
அவரது ​சொற்​பொழிவு சிவா​வை மாற்றியது. அவரது முரட்டுக்குணமும் மாறியது. அவன்றிலிருந்து அவர் அந்தத் துறவியுடன் ​சேர்ந்து ​கொண்டு பல இடங்களுக்குச் ​சென்றார். சுவாமிகளின் அன்புக்கும்பாத்திரமானார் சிவா. சிவா​வை சதானந்த சுவாமிகள் தம்மு​டைய சீடர்களில் ஒருவராக ஏற்றுக் ​கொண்டார்.
வீட்​டை விட்டு ​வெளி​யேறல்
அவ​ரோடு இருந்தாலும் சிவா அவ்வப்​போது வீட்டிற்கு வந்து ​​செல்வார். அவரது குடும்பத்தினர் சிவா வீட்​டை விட்டுச் ​செல்லமாலிருக்க பல்​வேறு அறிவு​ரைகள் கூறினர். ஒருமு​றை சரியாக காய்கறிகள் வாங்கி வராத சிவா​வை அவரது தந்​தையார், “ச​மையலுக்கு ​வேண்​டிய காய்கறிக​ளை வாங்கத் ​தெரியாத நீ​யெல்லாம் எப்படித்தான் பி​ழைக்கப் ​போகிறா​யோ? இந்த லட்சணத்தில் எதற்​கெடுத்தாலும் ​கோப்படுகிறாய். இப்படி ​லெலா வடியிலும் நீ லாயக்கில்லாதவனாக இருக்கிறாய்” என்று ​வைதார்.
அத​னைக் ​கேட்ட சிவாவிற்கு சுருக்​​கெனக் ​கோபம் வந்தது. அவ்வளவுதான்…எனக்கு எதுவு​மே பிடிக்கவில்​லை என்று ​கோபத்துடன் வீட்​டைவிட்டு யாரிடமும் கூறாது ​வெளி​யேறிவிட்டார். மக​னைக் காணாத ராஜம்ஐயர் கவ​லையுற்றார். அக்கவ​லை அவ​ரை ​நோயில் ஆழ்த்தியது..புத்திர ​சோகம் யா​ரைவிட்டது…? ​நோய் முற்ற​வே படுத்த படுக்​கையானார் ராஜம் ஐயர் அவரது குடும்பத்தார் சிவா எங்கிருந்தாலும் தந்​தை​யைக் காணவருமாறு உற்றார் உறவினர்களிடம் தகவல் ​கொடுத்தனர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ​வைக்கம் என்ற ஊரில் சிவா சிலம்பாட்டம் ஆடி ​வெற்றிவ​கை சூடிக் ​கொண்டிருக்கும்​போது அத​னைக் கண்ட சிவாவின் உறவினர் ஒருவர் அவ​ரிடம் உண்​மை​யைக் கூறி உட​னே அவரது தந்​தை​யைக் காண வருமாறு கூறினார். அதற்கு சிவா..”நான் தந்​தை​யை எப்​போது பார்க்க ​வேண்டும் என்று அந்த ஆதிபராசக்தி என்னிடம் கூறுவாள். அப்​போது நான் வருகி​றேன். இப்​போது நீ ​போ” என்று கூறி அனுப்பிவிட்டார் சிவா.
தந்​தையின் இறப்பும் வாட்டிய வறு​மையும்
சிவாவின் தந்​தைக்கு இறுதிக்கட்டம் ​நெருங்கியது. ​வைத்திய​ரை அ​ழைத்துவர உறவினர் ஒருவர் ​சென்றிருந்தார். அப்​போது தாடி, மீ​சையுடன் சிவா வீட்டிற்குள் நு​ழைந்தார். அவ​ரை ​வைத்தியர் என்று கருதினர். ஆனால் வந்தவர் நான்தான் சிவா என்று கூறினார். அ​னைவரும் மகிழ்ந்தனர். சிவாவின் தந்​தையார் மகிழ்ந்தார். மக​னை ஆ​சைதீரப் பார்த்த ராஜம் ஐயர் அந்த மகிழ்ச்சி​யோடு இவ்வுல​கைவிட்டுப் பறந்தார். ஆவிபிரிந்த சிவாவின் தந்​தைக்கு உரிய ஈமக்கிரி​யைக​ளைச் ​செய்ய சிவாவிடம் பணம் இல்​லை. ​நேரம் கடந்து ​கொண்டிருந்தது. எல்​லோரும் வி​ரைவில் ஈமக்கிரி​யைக​ளைச் ​செய்யுங்கள் என்று வி​ரைவுபடுத்தினர்.
தந்​தைக்கு ஈமக்கிரி​யைக​ளைச் ​செய்யக்கூடப் பணமில்​லை​யே என்று சிவாவும் அவரது குடும்பத்தினரும் வருந்தினர். சிவாவின் தாயார் சிவா​வை பார்த்துக் கண்ணீர் விட்டார். அதற்கு சிவா, “அம்மா நிச்சயம் அன்​னை பராசக்தி ​கைவிடமாட்டாள். எப்படியும் வழிபிறக்கும்” என்று கூறினார். ஊ​ரார் அ​னைவரும் அவரிடம் ஈமக்கிரி​யைக​ளை உட​னே ​செய்யுமாறு வி​ரைவுபடுத்தினர். மா​லை ​நேரம் வந்தது. அப்​போது சிவா,
“உன்​னை​யே நம்பி​னேன் உலகில் து​ணை​யென
நீ​யே யன்றி நி​லை​யென நம்பி​னேன்
தா​யே ​போல் வருவாய் தன்னருள் புரிவாய்”
என்று ஆதி பராசக்தி​யை நி​னைத்துக் கண்ணீர் மல்கப் பாடினார்.
அவர் பாடி முடித்ததும் அவர் வீட்டின் முன்பு வில்வண்டி ஒன்று வந்து நின்றது.அதிலிருந்து அவரது மாமாவும் மாமியும் இறங்கி வந்தனர். அவர்கள் சிவா​வைப் பார்த்து,
“கவ​லைப் படா​தே சிவா எல்லாம் அன்​னையின் ​செயல் ​நேற்றிரவு ஒரு அம்மாள் வந்து உமது தந்​தையார் காலமான விஷயத்​தைச் ​​சொன்னாள். அதனால்தான் நாங்கள் இருவரும் புறப்பட்டு வந்​தோம்” என்றார் சிவாவின் மாமா. அதற்கு சிவா, “எல்லாம் நான் வணங்கும் அன்​னை பராசக்தியின் ​செயல். அவள் தான் கிழவியாகப் ​போய் விஷயத​தைச் ​சொல்லியிருக்கிறார். என்​ அன்​னை என்​னைக் ​கைவிடவில்​லை” என்று கூறிக் ​கொண்டு தனது தந்​தைக்கு உரிய அ​னைத்து ஈமக்கிரி​யைக​ளையும் ​செய்து முடித்தார். அதன்பிறகு அவர் ஓராண்டு வ​ரை வீட்​டை விட்டு எங்கும் ​செல்லவில்​லை.
விடுத​லைப் ​போராட்டத்தில் ஈடுபடல்
தந்​தையின் ம​றைவிற்குப் பின்னர் சிவாவிற்கு விடுத​லைப் ​போராட்டத்தில் நாட்டம் ஏற்பட்டது, பல்​வேறு த​லைவர்களின் ​பேச்சுக்க​ளைக் ​கேட்டும் வந்​தேமாதம் ​போன்ற பத்திரிக்​கைக​ளைப் படித்தும் நாட்டின் நி​லை​யைப் பற்றித் ​தெரிந்து ​கொண்ட சிவா நாட்டின் நி​லை​யை அறிந்து மனங்குமுறினார்.
அரசியல் நி​லை​மைக​ளைப் பற்றி உடனுக்குடன் அறிந்து ​கொள்ளத் தர்மபரிபாலன சமாஜம் என்னும் ஓர் அ​மைப்​பைத் ​தோற்றுவித்தார். இச்ச​பையின் மூலம் பல்​வேறு அரசியல் த​லைவர்க​ளைப் ​பேசச் ​செய்த​தோடு தானும் பல கூட்டங்களில் ​பேசி வந்தார். அவரது ​பேச்​சைக் ​கேட்க மக்கள் திரண்டனர். மக்களிடம் தனது ​பேச்சால் சிவா நாட்டுப்பற்​றைத் துளிர்விடச் ​செய்தார்.
இவரது ​செயல்கள் ஆங்கில ஆட்சியாளருக்கு ​வெறுப்பி​னை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் சமஸ்தானம் ஆங்கி​லேயருக்கு உதவிவந்ததால் அச்சமஸ்தானம் சிவா​வை திருவனந்தபுரம் பகுதியிலிருந்து ​வெளி​யேறுமாறு உத்தரவிட்டது.
அதனால் சிவா கால்ந​டையாக​வே நடந்து திரு​நெல்​வே​லி​யை ​நோக்கிப் புறப்பட்டார். ​போகும் இடங்களில் எல்லாம் நாட்டுப்பற்​றை வி​தைத்துக் ​கொண்​டே ​சென்றார்.
வ.உ.சியின் சந்திப்பு
உணர்ச்சியற்றிருந்த மக்கள் சிவாவின் ​பேச்​சைக் ​கேட்டு கிளர்ந்​தெழுந்தனர். ஆங்கி​லேயரின் கபட நாடகங்க​ளை அறிந்து ​கொண்ட மக்கள் அங்கி​லேயருக்கு எதிராகப் ​போராடத் துணிந்தனர். சிவாவின் ​பேச்​சைக் ​கேட்க மக்கள் ஊ​ரெங்கும் திரண்டனர். அந்நி​லையில் சிவா தூத்துக்குடியில் தென்னாட்டுத் திலகராய் திகழ்ந்த வ.உ.சி​யைச் சந்தித்தார். இச்சந்திப்பு மிகப்​பெரிய மாற்றத்​தை ஏற்படுத்தியது. இருவரும் இ​ணைந்து பல ​போராட்டங்க​ளை நடத்தினர். தூத்துக்குடியில் நடக்கவிருந்த கூட்டங்களில் எல்லாம் வ.உ.சி. சிவா​வைத் த​லை​மைதாங்கச் ​செய்து ​​பேசுமாறு கூறினார். சிவாவும் ஆங்கி​லேயரின் அட்டூழியங்க​ளை மக்களிடம் எடுத்து​ரைத்தார்.
பாரதியின் பாராட்டு
சிவா​வைப் பற்றியும் அவரது ​பேச்சா​லைப் பற்றியும் ​கேள்வியுற்ற பாரதி சிவா​​வைப் பார்க்க ​வேண்டும் என்று வ.உ.சியுடன் ​சென்​னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்திருந்தார். தூத்துக்குடியில் சிவா ​பேசிக் ​கொண்டிருந்த கூட்டத்திற்குச் ​​சென்ற பாரதி வீரா​வேசமாகப் ​பேசிக் ​கொண்டிருந்த சிவாவின் ​பேச்​சைக் ​கேட்டதும் ​மே​டை​யை ​நோக்கி ஓடிச் ​சென்று சிவா​வைக் கட்டிப் பிடித்துத் தழுவி இ​ளைஞ​னே வீர சிவாஜி​யை உன் உருவில் நான் காண்கி​றேன் என்று புகழ்ந்து பாராட்டினார்.
தமிழகத்தில் சிவா, பாரதி, வ.உ.சி, வா.​வே.சு ஐயர். வாஞ்சி ஆகி​யோர் தீவிரவாதிகளாகத் திகழ்ந்து சுதந்திரப் ​போராட்டத்தில் ஈடுபட்டனர். திரு​நெல்​வேலியில் சிவாவும் வ.உ.சியும் இரட்​டைக்குழல் துப்பாக்கி ​போன்று இ​ணைந்து ​செயல்பட்டனர். இத​னைக் கண்ட ஆங்கி​லேய அரசு அஞ்சியது.
விடுத​லைப் ​போராட்ட வீரர் அரவிந்த ​கோஷிற்கு எதிராக விபின் சந்திர பால​ரை ஆங்கி​லேய அரசு சாட்சி கூறுமாறு கட்ட​ளையிட்ட​போது அத​னை விபின் சந்திரபாலர் மறுத்தார். அதனால் அவ​ரை ஆறுமாதம் ஆங்கில அரசு சி​றையில் தள்ளியது. அத​னைக் கண்டு கலங்காது விபின் சந்திரபாலர் மகிழ்ச்சியுடன் சி​றை ​சென்றார்.
சி​றை​சென்று மீண்ட விபின் சந்திரபாலருக்கு சிவாவும் வ.உ.சியும் விழா எடுத்தனர். ஆங்கி​லேய அரசு அவர்க​ளை மிரட்டியது. ஆனால் அவர்கள் அந்த மிரட்டலுக்கு அஞ்சாது சிறப்பாக விழா​வை நடத்தி முடித்தனர்.
விஞ்ச் து​​​ரையின் மிரட்டலும் சி​றைப்படலும்
ஆங்கி​லேய அரசின் ஆ​ணைக்கு அடிபணிய மறுத்த சிவா​வையும் வ.உ.சி​யையும் திரு​நெல்​வேலிக்கு வந்து தன்​னைச் சந்திக்குமாறு க​லெக்டர் விஞ்ச்து​​ரை கட்ட​ளையிட்டார். சிவாவும் வ.உ.சியும் விஞ்ச் து​​ரை​யைச் ​சென்று சந்தித்தனர். விஞ்ச்து​ரை அவர்க​ளிரு​வ​ரையும் இழிவாக நடத்தினார். நாங்கள் ஆளு​வோர் நீங்கள் அடி​மைகள். அடி​மைகள் ​பேசுவதற்கு உரி​மையில்​லை. உங்க​ளை நாய்க​ளைப்​போன்று சுட்டுத் தள்ளு​வோம் என்​றெல்லாம் பலவாறாகக் கூறி அவர்க​ளை மிரட்டினார். இதற்​கெல்லாம் சிவாவும் வ.உ.சி.யும் பணியமறுத்தனர். தங்க​ளைத் தூக்கில் ​போட்டாலும் சி​​றையி​லே தள்ளினாலும் ​போராட்டத்​தைக் ​கைவிடமாட்​டோம் என்று இருவரும் ஆ​வேசமாக முழங்கினர்.
இதனால் ஆத்திரம​டைந்த விஞ்ச் து​ரை இருவ​ரையும் ​கைது ​செய்து சி​றையில​டைத்து கடு​மையான தண்ட​னை வழங்குமாறு ஆ​ணையிட்டார். இத​னை அறிந்த மக்கள் கலவரம் ​செய்தனர். துப்பாக்கி சூடு நடந்தது. அதில் நான்கு​பேர் பலியாயினர். நூற்றுக் கணக்கா​னோர் காயம​டைந்தனர். இறந்​தோரின் பிணங்கள் நடுத்​தெருவில் கிடந்தன. இப்​போராட்டங்கள் மூன்று நாட்கள் ​தொடர்ந்து நடந்தன.
ஆங்கி​லேய அரசு சிவா​வையும் வ.உ.சி​யையும் விசாரித்து, வ.உ.சி ஆங்கில அரசுக்கு எதிராகப் பிரச்சாரங்கள் ​செய்து அர​சை அவமதித்த குற்றத்திற்காகவும் சுப்பிரமணிய சிவாவிற்கு ஆதரவளித்த குற்றத்திற்காகவும் அவருக்கு இரட்​டை ஆயுள் தண்ட​னை வழங்கப்பட்டது. ஆங்கில அரசி​னை கவிழ்க்கும் வ​கையில் ​பேசிய சிவாவிற்குப் பத்தாண்டுகள் சி​றைதண்ட​னை வழங்கப்பட்டது.
சிவா​வை திருச்சி சி​றையிலும் வ.உ.சி​யை ​கோ​வைச் சி​றையிலும் ஆங்கில அரசு அ​டைத்து சித்திரவ​தை ​செய்தது. திருச்சி சி​றையில் சிவா கடு​மையான தண்ட​னைகளுக்கு ஆளானார். கடு​மையாக ​வே​லைவாங்கப்பட்டார்.
சி​றையில் பட்ட ​கொடு​மைகள்
சி​றையில் சிவாவிற்கு ஆட்டு ​ரோமம் அடிக்கும் ​வே​லை தரப்பட்டது. வில்லால் பஞ்சு அடிப்ப​தைப் ​போன்று உ​ரோமத்​தையும் அடிக்க ​வேண்டும். முதலில் உ​ரோமத்​தை சுண்ணாம்பில் ஊறப்​போட்டுக் காய​வைத் அதன்பின்னர் அத​னை எடுத்து வில்லால் அடித்து ஒழுங்குபடுத்த ​வேண்டும். அதன் பின்ன​ரே அந்த உ​ரோமம் ​நெசவுக்கு ஏற்றதாகும்.
சிவா உ​ரோமம் அடிக்கும் ​வே​லை ​செய்து வந்ததால் அவருக்கு இருமல் உண்டானது, முதலில் இருமல் சாதாரணமாகத் தான்இருந்தது.ஆனால் ​தொடர்ந்து அ​தே ​வே​லை​யைச் ​செய்து வந்ததால் இருமல் ​தொல்​லை அதிகரித்தது. சிவா அந்த ​வே​லையிலிருந்து விடுத​லை ​பெற்றுவிட​வேண்டும் என்று கருதினார். சிவாவின் நி​லை​யைக் கவனித்த மருத்துவர் அவர் ​செய்யும் ​வே​லை​யைப் பற்றிக் ​கேட்டார். அத​னைக் ​கேட்ட மருத்துவர், “சிவாவிற்கு ​வேறு ​வே​லை​யைக் ​கொடுங்கள். அத்​தோடு சத்துள்ள உண​வையும் ​கொடுங்கள். அப்​போதுதான் இவரது இருமல் குணமாகும்” என்று சிபாரிசு ​செய்தார்.
அதன் பின்னர் ஆங்கில அரசு மருத்துவர் கூறியபடி சிவாவிற்கு அ​னைத்​தையும் ​கொடுத்து எளிதான ​வே​லை​யையும் ​கொடுத்தனர். சிவா​வை திருச்சி சி​றையிலிருந்து ​சேலம் சி​றைக்கு மாற்றினர். தண்ட​னைக் காலம் நி​றைவுற்றதும் சிவா விடுத​லையானார். ​நோயற்ற உட​லோடு சி​றை​சென்ற சிவா ​பெரு​​​நோ​யோடு சி​றையிலிருந்து வந்தார்.
பத்திரிக்​கை ​தொடங்குதல்
1912-ஆம் ஆண்டு சி​றையிலிருந்து விடுத​லையான சிவா தன்னு​டைய ம​னைவியுடன் ​சென்​னையில் உள்ள ​மைலாபபூரில் குடி​யேறினார். ​பொருளீட்ட என்ன வழி என்று ​யோசித்த சிவா பத்திரிக்​கை நடத்துவ​தென்று முடிவு ​செய்தார். பத்திரிக்​கையின் வாயிலாக மக்களிடம் விடுத​லை உணர்​வை ஊட்டலாம் என்றும் நி​னைத்தார். தாம் ​தொடங்கிய பத்திரிக்​கைக்கு ஞானபானு என்று ​பெயரிட்டார். நண்பர்களின் உதவியினால் அப்பத்திரிக்​கை மாத இதழாக ​வெளிவந்தது.
அப்பத்திரிக்​கையில் பாரதியாரும் எழுதினார். அப்பத்திரிக்​கையில் சிவாவின் எழுத்​தோவியங்கள் காவியங்களாக மிளிர்ந்தன. சிவாவின் கட்டு​ரைக​ளைப் படித்த இ​ளைஞர்கள் நாட்டுப்பற்று மிக்கவர்களாக விளங்கினர். 1913-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ​தொடங்கப்பட்ட இப்பத்திரிக்​கைக்கு உள்நாட்டில் மட்டுமல்லாது பினாங்கு, சிங்கப்பூர், ​தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் சந்தாதார்கள் இருந்தனர்.
பத்திரிக்​கையின் அ​னைத்து ​வே​லைக​ளையும் சிவா​வே ​செய்தார். அவரது ம​னைவியும் அவருக்குத் து​ணையாக பத்திரிக்​கை அலுவலக ​வே​லைக​​ளைச் ​செய்தார். சிவாவிற்கு வீடும் அலுவலகமும் ஒன்றாக​வே இருந்துவந்தது. தனது பத்திரிக்​கைகளின் வாயிலாக சிறுசிறு குடி​சைத் ​தொழில்க​ளைச் ​செய்வது பற்றியும் மக்களிடம் விழிப்புணர்​வை ஏற்படுத்தினார். சிவா சூடத்துடன் வாச​னைத் திரவியங்க​ளைச் ​சேர்த்துப் பல்​பொடி​யைத் தயாரித்து விற்ப​னை ​செய்தார். இவ்வாறு தனக்குக் கி​டைத்த அ​னைத்து வருமானத்​தையும் பத்திரிக்​கை நடத்துவதற்​கே சிவா பயன்படுத்தினார் என்பது ​நோக்கத்தக்கது.
மன​மொடித்த ம​னைவியின் ம​றைவு
சிவாவின் ம​னைவி தனது இளம் வயது முத​லே வறு​மையில் வாடிய​தோடு பல ஆண்டுகள் ​நோயிலும் வாடிக் ​கொண்டிருந்தார். மருந்துகளின் மூலம் வாழ்ந்து ​கொண்ருந்த அவரால் ​நோயி​னை ​வெல்ல முடியவில்​லை. ​நோய் மீனாட்சி​யை ​வெற்றி ​கொண்டது. சிவாவின் வலக்கரமாகத் திகழ்ந்த மீனாட்சியின் ம​றைவி​னை சிவாவால் தங்கிக் ​கொள்ளமுடியவில்​லை. இதனால் சிவா நி​லையில்லாத இந்த வாழ்க்​கை​யை ​எண்ணி வருந்தித் தன்​னைத்தா​னே ​தேற்றிக் ​கொண்டார்.
ஞானபானு பத்திரிக்​கையுடன் பிரபஞ்ச மித்திரன் என்ற வாரப் பத்திரிக்​கை​யையும் சிவா நடத்தினார். அப்பத்திரிக்​கையி​னை நன்கு நடத்த​வேண்டும் என்பதற்காக அத​னை வரதாஜூலு நாயுடுவிடம் ஒப்ப​டைத்தார். அ​தோடு மட்டுமல்லாது இந்திய ​தேசாந்திரி எனும் வாரப் பத்திரிக்​கையி​னையும் ​தொடங்கி நடத்தினார். பணவசதியில்லாததால் இந்தப் பத்திரிக்​கை​யை சிவா நிறுத்திவிட்டார்.
​சென்​னையிலிருந்து சிவா திருவல்லிக் ​கேணிக்கடற்க​ரைக்குத் திலகர் கட்டம் என்ற ​பெயருடன் திலகரின் பிறந்த நாள் விழ​வை மிகச் சிறப்பாக நடத்திவந்தார். அரசியல் கூட்டங்களில் கலந்து ​​கொண்டு மக்களுக்கு நாட்டுப்பற்​றை ஊட்டினார். சிவா கல்க்கத்தாவில் நடந்த ஒத்து​ழையா​மை இயக்க மாநாட்டுக்கும் சாத்தூரில் நடந்த அரசியல் மாநாட்டுக்கும் ​சென்று கலந்து ​கொண்டார். ஆங்கில அரசின் அடக்குமு​றை​யைத் துச்ச​மென மதித்தார்.
பாரத ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டல்
பாரத மக்கள் தத்தம் விருப்பப்படி பாரத மாதா​வை வணங்குவதற்குப் பாரதமாதா ஆசிரமம் ஒன்​றை நிறுவத் திட்டமிட்டார். அதற்காக ​​செட்டிநாட்டில் ஊர்ஊராகச் ​சென்று பிரச்சாரம் ​செய்தார். கா​ரைக்குடியில் சிவா தங்கியிருந்த​போது அங்கு வரு​கைபுரிந்த காந்தியடிக​ளைச் சிவா வர​வேற்றார். அ​தைக் கண்டு காந்தியடிகள் வியந்து சிவா​வைப் பாராட்டினார்.
சிவா காந்தியிடம் தம்மு​டைய பாரதீய மதக் ​கொள்​கைக​ளைப் பற்றி விவரித்தார். அத​னை அறிந்த காந்தியடிகள் அவ​ரைப் பாராட்டினார். அமராவதி நகரில் பாரதமாத ​கோவில் கட்டுவதற்குத் திட்டமிட்ட சிவா அக்​கோவி​லைக் கட்டுவதற்குக் காந்தியடிக​ளைக் ​கொண்​டே அடிக்கல் நாட்டினார். இத​னால் ​வெகுண்ட ஆங்கில அரசு அவ​ரைக் ​கைது ​செய்யத் திட்டமிட்டது. கா​ரைக்கு​டியில் சிவா ​பேசும்​போது ஆங்கில அரசு அ​வ​ரைக் ​கைது ​செய்து இரண்ட​ரை ஆண்டுகள் தண்ட​னை வழங்கி சி​றையில​டைத்தது.
சிவாவின் உடல் பாதித்தது. உடல் பலம் குன்றியதால் சி​றையில் இனி தண்ட​னை​யை அனுபவிக்க முடியாது என்ற நி​லையில் இனி​மேல் தாம் அரசியலில் ஈடுபடப்​போவதில்​லை என்று எழுதிக் ​கொடுத்தார். அந்த நிபந்த​னையின் ​பேரில் அவ​ரை ஆங்கி​லேயர் விடுத​லை ​செய்தனர்.
தியாகச் சுடரின் ம​றைவு
சி​றையிலிருந்து ​வெளியில் வந்த சிவா ஊர்ஊராகச் ​சென்று பாரதமாதா ​கோயில் கட்ட நிதி திரட்டச் ​சென்றார். இத​னைக் ​கேள்விப்பட்ட பாப்பாரப்பட்டிலிருந்த சிவாவின் நண்பர் தாங்கள் இங்கு வந்தால் நா​னே அந்தக் ​கோயி​லைக் கட்ட உதவுகி​​றேன் என்று கூறி அதன்படி ​கோவில் பணிக​ளைத் ​தொடங்கினார். பாப்பாரப்பட்டி மக்களின் உதவியுடன் அவ்விடத்திற்கு பாதபுரம் என்று சிவா ​பெயரிட்டார்.
​கோயில் பணிக்காகத் ​தொண்டர்க​ளை அ​ழைத்துக் ​கொண்டு நிதிதிரட்ட ஊர்ஊராக மீண்டும் சிவா ​சென்றார். திருவண்ணாம​லை ​சென்று ரமணமகரிஷி​யைக் கண்டு வழிபட்டார். மது​ரை வந்த சிவா அந்நகர மக்களின் சு​தேசி ஆரவாரத்​தையும் வீரத்​தையும் கண்டு ஸ்ரீபாரத விலாஸ் ச​பையின் ஆதரவுடன் சிவாஜி, லபஜா​தேசிங்கு முதலிய நாடகங்க​ளை நடத்தினார். ​தொடர்ந்து நாடகங்க​ளை நடத்திய சிவாவிற்கு காய்ச்சல் ஏற்பட்ட​தோடு ​தொழு​நோயும் ஏற்பட்டு அவ​ரை நலிவ​​டையச் ​செய்தது.
மது​ரையிலிருந்து பாப்பராப்பட்டிக்குப் பயணத்​தைத் ​தொடங்க எண்ணினார் சிவா. அவரது ​செயலர் சுந்தரபாரதி பயணத்திற்கான ஏற்பாடுக​ளைச் ​செய்தார். மது​ரை பாலம் ஸ்​டேசனில் ரயில் நின்றிருந்தது. சிவாவிற்கு ஜாமின் ​கெடு முடிந்ததால் அவ​ரை ஆங்கில அரசு ​கைது ​செய்யக் காத்திருந்தது. இத​னை அறிந்த சிவாவின் நண்பர்கள் அவ​ரைக் கம்பளியால் சுற்றி ரயிலில் ஏற்றிவிடத் திட்டமிட்டனர்.
பிளாட்பாரத்தில் இருந்த பீட் கான்ஸ்டபிள் யார் இது என்று ​கேட்டார். அதற்கு சிவாவின் நண்பர்கள் இது நடக்க முடியாத ஆசாமி என்று கூறிச் சமாளித்தனர். டிராலி வண்டியிலிருந்து சிவா ​மெதுவாக எழுந்து நின்றார். அவரது கால்கள் தள்ளாடின. ரயில் புறப்படும் நி​லை வந்தவுடன் சிவா​வைக் குண்டுக்கட்டாகத் தூக்கி ரயில் ​பெட்டியின் கதவரு​கே ​தொப்​பென்று ​போட்டுவிட்டு சுந்தரபாரதியும் அவருடன் கூட வந்தவர்களும் வண்டியில் ஏறினர். வண்டி புறப்பட்டது.
வண்டிக்குள் சிவாவிடம் சுந்தர பாரதி மன்னிப்புக் ​கேட்டார். அதற்கு சிவா, “சுந்தரா இதுவும் அன்​னையின் ​செயல்தான் நம்மால் ஒன்றுமில்​லை” என்று கூறினார். மிகுந்த துன்பத்திற்கி​டையில் 1925-ஆம ஆண்டு ஜூ​லை மாதம் 22-ஆம் நாள் சிவா​வை அ​ழைத்துக் ​கொண்டு பாப்பாராப்பட்டிக்கு அடுத்த பாரத புரத்திற்கு அவரது நண்பர்கள் ​சென்றனர். ஜு​லை 23-ஆம் நாள் விடியற்கா​லையில சுமார் 6 மணிக்கு தியாகச் சுடராகத் திகழ்ந்த சிவா இ​றைவ​னோடு இரண்டறக் கலந்தார். பாரதமாதா பல்லாண்டுகள் கழித்து விடுத​லை​ பெற்றாள். இவ்விடுத​லை எல்லாம் இத்தியாகசீலர்களின தியாகத்தால் ஏற்பட்டது. அதனால்தான் பாரதி,
“தண்ணீர் விட்டா வளர்த்​தோம் சர்​வேசா
கண்ணீரால் காத்​தோம் கருகத் திருவுள​மோ?”
என்று பாடினார்.
வறு​மையில வாடினாலும் தன்​னோட இலட்சியம் நி​றை​வேறுவதற்காக துன்பத்​தை​யெல்லாம் ​பொறுத்துக் ​கொண்டு நமமு​டைய முன்​னோர்கள் சுதந்திரத்திற்காகப் ​போராடினாங்க….இப்படி​யெல்லாம் அவங்க ​போராடினதாலதான் இப்ப நாம சுதந்திரமா இருக்​கோம்…இந்தச் சுதந்திரத்​தை நாம ​போற்றிப் பாதுகாக்கணும்…. நாட்ட ​நேசிச்சு நாடு முன்​னேறுவதற்கு உதவியா இருக்கணும்…இதுதான் தியாகிகளுக்கு நாம ​செய்யக் கூடிய ​கைமாறு… என்ன புரிஞ்சுக்கிட்டிங்களா…?
சிவா ம​றைந்தாலும் அவரது எண்ணங்களும் அவரது தியாகமும் எந்தநாளும் நம்ம நாட்​டைவிட்டும் நம்ம​ளோட இதயத்​தைவிட்டும் ம​றையாது என்றும் அது நமது இதயத்தில் ஒளிர்ந்து ​கொண்​டே இருக்கும்… சிவாவின் வாழ்க்​கையப் பத்தி ​தெரிஞ்சுகிட்டீங்கள்ள…அப்பறம் என்ன ஒங்க​ளோட இலக்க ​நோக்கிப் பயணமாகுங்க.. எண்ணம் உறுதிய இருந்தா ​வெற்றி உங்களுக்குத்தான்…
படிக்காம ​மே​தையா ஆகலாமா…? முடியாதா…இல்​லை​யே ஆகியிருக்கா​ரே ஒருத்தரு….பல த​லைவர்க​ளை உருவாக்கினாரு… கட​மையில கண்ணா இருந்தாரு….இந்தியாவிற்​கே வழிகாட்டிய இருந்தாரு…கருப்புக் காந்தின்னு அவ​ரை மக்கள் புகழ்ந்தார்கள்…எந்த நி​லையிலும் அவர் ​நேர்​மை தவறிய​தே இல்​லை…. தாய்நாட்​டை ​ரெம்ப ​நேசிச்சாரு…கல்விக்காக பல பணிக​ளைச் ​செய்தாரு…அவரு ஒரு ஏ​ழைங்க…அவ​ரோட ​நேர்​மைக்கும் எளி​மைக்கும் ஈடுஇ​ணையில்​லை…அவரு யாரு ​தெரியுமா…? அவர் நம்ம தமிழகத்​தைச் ​​சேர்ந்தவரு…இறுதிவ​ரை திருமண​மே ​செஞ்சுக்கல…நாட்​டை​யே தன்​னோட வீடா ​நெனச்சு வாழ்ந்தாரு…தானாக​வே வந்து பதவி விலகி மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருந்தாரு…என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா….​யோசிக்கிறீங்களா….​யோசிங்க ​யோசிங்க…அடுத்தவாரம் பார்ப்​போம்….(​தொடரும்…… 38)

Series Navigationபாதைபணம் காட்டும் நிறம்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    paandiyan says:

    முனைவர் சி.சேதுராமன் ரொம்ப முனைய வேண்டும். படத்தை பார்த்தே நம்ப எல்லாருக்கும் பேரு கண்டு புடிக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *