நீங்காத நினைவுகள் – 25

This entry is part 9 of 32 in the series 15 டிசம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா
grija (1)கச்சேரி நாள்கள் தொடங்கிவிட்டன. இந்த சபாக்காரர்கள் ஏன் தான் இப்ப்டி ஒரு நடுக்கும் குளிர் காலத்தில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை. இசை மீதுள்ள ஆர்வத்தால் தங்கள் உடல்நிலை பாதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூற்றைக் கூடப் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் மார்கழிக் குளிரில் பாட்டுக் கேட்கக் கூடிவிடுகிறார்கள். கம்பளிச் சட்டை அல்லது போர்வை போன்றவற்றால் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு நெஞ்சின் குறுக்கே அடக்க் ஒடுக்கமாய்க் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து இசையைக் கேட்கிறார்கள். சிலர் தலைகளிலும் கம்பளிச் சால்வைகள் இருக்கும். பாட்டுப் பிடிக்க வில்லையெனில் காதுகளை அவற்றால் மூடிக்கொள்ளத் தோதாக இருக்கும் என்பது நோக்கமாக இருக்கக்கூடும்.
டிசம்பர்க் குளிர் இருமல், சளி, தொண்டைக்கட்டு, உடல் நடுக்கம் போன்ற உபாதைகளை உண்டாக்கும் என்பதால், ரசிகர்களை விடவும் பாடகர்களே அதிகப் பாவம். இந்தக் குறைபாடுகளை யெல்லாம் கூடியவரையில் சமாளித்துக்கொண்டு பாடகர்கள் பாடும் பாட்டில், அவர்கள் படும் பாடு வெளிப்படையாகவே தெரிகிறது. இதனால் அவர்களது பாட்டு அதன் இயல்பான இனிமையோடு ஒலிப்பதில்லை. ஒரு முறை அமரர் செம்மங்குடி சீனிவாச அய்யர், ‘ இந்தக் குளிர்ல சங்கதி எங்கே வருது? சளிதான் வருது’ என்று ஒலிபெருக்கியில் அங்கலாய்த்து அரங்கத்தில் சிர்ப்பலைகலை உற்பத்தி செய்தாராம்.
வெள்ளைக்காரன் காலத்தில் ஏற்பட்ட இந்த வழக்கத்தை நமது தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப, நமது வசதிப்படி மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே? ஏனோ செய்யாது இருக்கிறார்கள். கோடைக்காலத்தில் கச்சேரிகளை வைத்தால், ரசிகர்கள் இருமிக்கொண்டும். நடுங்கிக்கொண்டும் கச்சேரிகளை ஒரு தண்டனையை அனுபவிப்பது போல் அனுபவிக்க மாட்டார்கள். பாடகர்களும் பாட்டில் கவனம் செலுத்துவதற்குப் பதில் தொண்டைக் குறைபாட்டைச் சமாளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக் குறைபாடு நிறைந்த இசையை வழங்க மாட்டார்கள். அதிலும் ஏற்கெனவே குரல் நடுக்கம் உள்ள பாடகர்கள் மேலும் நடுங்கி நம்மைச் சோதிக்க மாட்டர்ர்கள்.
தொலைக்காட்சிச் சேனல்களிலும் மார்கழி மாதத்தில்தான் கச்சேரிகள் ஒளிபரப்பாகின்றன. இத்தகைய ஓர் இசைக் கச்சேரியின் இடைவேளையின் போது, ஒருமிகப் பெரிய பாடகியின் சீடர் – மிக நல்ல குரல்வளமும், கல்வியும், தம் குருவைப்போன்றே மிகத் தெளிவான உச்சரிப்பும் கொண்ட வெண்கலக் குரலார் பின்வரும் கருத்தை வெளியிட்டார்:
‘அந்தக் காலத்தில், சில தமிழ்ப் பற்றாளர்கள் தமிழில் பாடினால் மட்டுமே கச்சேரிக்கு வருவோம். தெலுங்கு, சம்ஸகிருதம் ஆகிய மொழிகளில் பாடினால் கேட்க மாட்டோம் என்று கூறிக்கொன்டு அலைந்தார்கள். இசைக்கு மொழி ஏது? எந்த மொழியில் பாடினால் என்ன? தமிழில் பாடினால் மட்டும்தான் கேட்பேன் என்று இதென்ன அர்த்தமற்ற அசட்டுப் பிடிவாதம்?’ என்று அழுத்தந்திருத்தமாய் அவையோரிடம் முறையிட்டுக்கொண்டார். ரொம்பவே சரி.
ஆனால், அந்தக் காலத்துப் பாடகர்களில் பலரும் ‘தெலுங்கும் சம்ஸகிருதமும் தான் கீர்த்தனைகள் இயற்றுவதற்கு ஏற்ற மொழிகள். அந்த அருகதை தமிழுக்குக் கிடையாது’’ என்று பிதற்றிக்கொன்டு அலைந்தார்களே! அது அவருக்குத் தெரியாதிருக்க நியாயமில்லை. ஏனெனில், அறுபதை அணுகிக்கொண்டிருக்கும் பாடகர் அவர். (அவர் தமிழிலும் பாடுகிறவரே.) ‘நானொரு விளையாட்டுப் பொம்மையா?’ எனும் பாபநாசம் சிவன் அவர்களின் ஒரு பாட்டுப் போதாதா தமிழின் அருகதையை மெய்ப்பிக்க? அந்தக் காலத்துப் பாகவதர்கள் தமிழர்களுக்குப் புரிகிற தமிழில் பாட மறுத்தது மட்டும் நியாயமோ? அது ஏன் அந்தப் பாடகருக்குத் தெரியவில்லை?
மொழியைப்பற்றிப் பேசும்போது இன்னொரு நிகழ்ச்சியைப் பற்றிய நினைவு எழுகிறது.
பல்லான்டுகளுக்கு முன்னால் ஹைதராபாத்தில் உள்ள கிருஷ்ண கான சபாவில் பிரபல தமிழகப்பாடகர் ஒருவர் பாடிக்கொன்டிருக்கையில் ஒர் அசம்பாவிதம் நடந்தது என்று கேள்விப்பட்டபோது திக்கென்று ஆனது. அந்தப் பாடகர் தெலுங்குக் கீர்த்தனைகளைச் சரியாக உச்சரிக்காததால் ஆத்திரமடைந்த சில தெலுங்கர்கள் மேடைமீது வீசத்தகாதவற்றை வீசினார்களாம். பாவம்! அந்தத் தெலுங்கர்களுக்குப் பல தமிழர்கள் தமிழையே சரியாக உச்சரிப்பதில்லை என்பது தெரிந்திருக்கவில்லை!
வடமொழியில் ‘’’வ’’ எனும் எழுத்துக்கு அடுத்ததாய் ஒரு “ச’’ உன்டு. அந்த எழுத்தை மெலிதான ‘’ஸ’’ வுக்கும் ‘’ஷ’’ வுக்குமிடையிலான ஒசையுடன் உச்சரிக்கவேன்டும். நம்முடைய பாடகர்களில் பலர் ‘’என்ன தவம் செய்தனை, யசோதா’’ எனும் பல்லவியில் உள்ள ‘’செ’’, ‘’சோ’’ ஆகிய இரன்டு எழுத்துகளையும் அந்த இரன்டுங்கெட்டான் ஒசையுடன்தான் உச்சரிப்பார்கள். சிலர் ‘’ஷ’’ என்றே உச்சரித்து விடுவதுன்டு. அவர்கள் ‘என்னதவம் ஷெய்தனை, யஷோதா?’ என்று பாடும்போது நாராசமாக ஒலிக்கும். நல்லவேளை! ழ, ள, ல ஆகியவற்றில் பெரும்பாலும் யாரும் குளறுபடி செய்வதில்லை.
ஒரு முறை தெலுங்கும் தமிழும் அறிந்த தோழி ஒருவர் கேட்டார் – “உங்கள் பாகவதர்கள் யாரேனும் தெலுங்கரிடம் உச்சரிப்பைக் கேட்டுத் தெரிந்துகொன்டு பாடக்கூடாதா? இப்படி அபத்தமாய்ப் பாடுகிறார்களே! ‘’எந்தரோ மகானுபாவுலு’’ என்பதில் வரும் ‘’த’’ வை மெலிதாக (dha) உச்சரிக்கவேன்டும். ஆனால் அவர்களோ வன்மையோடு (entharo என்று) அழுத்தந்திருத்தமாய் உச்சரிக்கிறார்களே.. அப்புறம், உங்கள் பாகவதர் ஒருவர் அடாணா ராகத்தில் உள்ள பாடலின் முதல் சொல்லாகிய அனுபம (anupama) என்பதை அழுத்தமாய் உச்சரிக்காமல், மெல்லிய ஒசையுடன் (anubhama) என்று உச்சரித்துள்ளாரே..” என்று. தாய் மொழியாகிய தமிழ் தமிழர்களின் வாய்களில் புகுந்து படுகிற பாட்டில், பிற மொழிகளுக்கு ஏது விமோசனம் என்றுதான் நினைக்கத் தோன்றியது.
மொழி பற்றிப் பேசுகையில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அதே தொலைக்காட்சியில் இசைக்கச்சேரிகள் முடிந்த பின் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் வெளியிடும்போது பற்றிகொண்டு வருகிறது. ஏதோ லண்டனிலோ, நியூயார்க்கிலோ பிறந்து வளர்ந்து தமிழையே அறியாதவர்கள் போல் அவர்கள் விமர்சிப்பது நாராசம். ஏனாம்? தங்கள் கருத்துகளைத் தமிழில் சொன்னால் அவர்களின் நாக்குகள் வெந்து விடுமாமா?
பழக்கக் குறைபாட்டால் ஏதோ ஓரீர் ஆங்கிலச் சொற்கள் இடையிடையே வரலாம். பெரிய குற்றமன்று. ஆனால் ஆங்கிலக் கட்டுரையையேவா வாசிப்பது?

இசைத்திறன், ரசனை ஆகியவை பற்றிய தம் கருத்தை அதே தொலைக்காட்சி சேனலில் இன்னோர் இசைக் கலைஞர் வெளியிட்டதும் நினைவுக்கு வருகிறது. “கர்நாடக இசையை ரசிப்பதற்குக் கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வருவதில்லையே? ஏன்? கர்நாடக இசை ஏன் அவர்களை அதிகம் சென்றடையவில்லை?” எனும் அவையினருள் ஒருவரின் கேள்விக்கு இடைவேளையின் போது அவ்விசைக் கலைஞர் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளினார்: ‘ கர்நாடக இசை அவாளுக்கு வராது. அதனால அதை ரசிப்பதற்குரிய ரசனையும் அவாளுக்குக் கிடையாது’ எனும் ரீதியில் அவர் வெளியிட்ட கருத்து ஏற்புடையதன்று. அந்த இசைக் கலைஞர் மிக நல்லவர். அறக்கட்டளை யெல்லாம் நிறுவி, ஜாதி மத பேதம் பார்க்காமல் பணி செய்து வருபவர். எனவே, யோசிக்காமல் பேசிய பேச்சு என்றே தோன்றுகிறது. நாகசுர – நாதசுரக் கலைஞர்கள் யார்? நாவிதர்கள் பரம்பரையில் உதிப்பவர்கள் அன்றோ! அவர்கள் ஒன்றும் “அவாள்” அல்லரே!
அடுத்து, இங்கே திருவையாற்றில் ஆண்டுதோறும் நடக்கும் தியாகய்யர் ஆராதனை பற்றியும் சொல்லத் தோன்றுகிறது. தெலுங்கில் கீர்த்தனைகள் இயற்றிய தியாகய்யரை நினைவு கூர்ந்து அவரை ஆராதிக்கும் விழா இது என்பது அனைவர்க்கும் தெரியும். இதில் பங்கேற்கும் இசைக்கலைஞர்கள் ராக ஆலாபனை, கற்பனைச் சுரம் பாடுதல் போன்றவற்றை விஸ்தாரமாகச் செய்திறார்கள். தியாகய்யரைக் கொண்டாடுவதற்காகச் செய்கிற இசைக்கச்சேரிகளில் பாடகர்களின் இந்தத் திறமை வெளிப்பாடு தேவை யற்றது என்று தோன்றுகிறது. அவருடைய கீர்த்தனை பற்றிய சிறப்பையும் அதன் பொருளையும் அவையினர்க்கு முதலில் ஒரு முன்னுரை போல் ஓரிரு நிமிடங்களில் சொல்லிவிட்டு இசைக்கலைஞர்கள் அந்தப் பாட்டை மட்டும் பாடுதல் நன்று அல்லவா? இதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதையாகும். பாடகர்கள் தத்தம் திறமையைப் பறை சாற்றுவதன்று. பக்க வாத்தியங்கள் இருக்கலாம். அவர்களுக்குத் தனியாகப் பாட்டின் இடையே நேரம் ஒதுக்கத் தேவையில்லை. ஆனால் இதைத் திருவையாற்றில் விழா நடத்துபவர்களும் பாடகர்களும் ஏற்பார்களா? தெரியவில்லை.
இறுதியாக, அமரர் இசை விமர்சகர் சுப்புடு அவர்களின் (கடுமையான) ஜோக்குடன் இதை முடிக்கத் தோன்றுகிறது. ஒரு முறை படே குலாம் அலிகான் அவர்கள் சென்னைக்கு வந்து கச்சேரி செய்தார். அதைப் பெரிதும் புகழ்ந்து சுப்புடு ஒரு வார இதழில் விமர்சித்த பின் அதன் இறுதியில் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார்:
‘வட இந்தியாவில் உள்ள பாடகர்கள் தங்கள் குரல் வளத்தை மிகுந்த அக்கறையுடன் பேணிப் பாதுகாக்கிறார்கள். ஆனால் நம்மூர் பாகவதர்களுக்கோ அதில் லவலேசமும் அக்கறையே இல்லை. புகையிலை, வெற்றிலை அடிக்கடி போட்டுக் குதப்பிக் குரலைப் பாழாக்கிக்கொள்ளுகிறார்கள். போதுமான சாதகமும் செய்வதில்லை. இப்படி நான் எழுதுவதைப் படித்த பின் அவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் யாரும் குரல் எழுப்பி என்னோடு சண்டைக்கு வரமாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தான் தொண்டையே கிடையாதே!”

 

Series Navigationஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

32 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //“கர்நாடக இசையை ரசிப்பதற்குக் கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வருவதில்லையே? ஏன்? கர்நாடக இசை ஏன் அவர்களை அதிகம் சென்றடையவில்லை?” எனும் அவையினருள் ஒருவரின் கேள்விக்கு இடைவேளையின் போது அவ்விசைக் கலைஞர் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளினார்: ‘ கர்நாடக இசை அவாளுக்கு வராது. அதனால அதை ரசிப்பதற்குரிய ரசனையும் அவாளுக்குக் கிடையாது’//

    அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
    பழகின பாஷையில படிப்பது பாவமில்ல
    என்னவோ ராகம் என்னன்னவோ தாளம்
    தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
    எல்லாமே சங்கீதந்தான்…ஆஆஆ…
    எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
    சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்

    கவல ஏதுமில்ல ரசிக்கிறேன் கேட்டுப்படி
    சேரிக்கும் சேரவேணும் அதுக்கொரு பாட்டப் படி
    என்னயே பாரு எத்தன பேரு
    தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு
    சொன்னது தப்பா தப்பா…ஆஆஆ…
    சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னுதப்பா
    அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொறத்துல சொன்னதப்பா

    பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
    ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
    ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
    எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

  2. Avatar
    paandiyan says:

    கர்நாடக ராகங்களை ஒட்டிய சினிமா பாடல்கள் மிக பிரபலம். ஆனால் இந்த எலக்கியம் விற்பவனை எந்த லேகியம் விற்பவனும் கூட திரும்பி பார்ப்பது இல்லை . ஏன் அது ?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      தமிழைத்தான் தப்புத்தப்பாக எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால், நீங்கள் சரியாக எழுதினாலும் எனக்குப் புரியமாட்டேன் என்கிறதே! ஒருவேளை என்னிடம்தான் பிர்ச்சினையோ! என்ன சொல்லவருகிறீர்கள் சார்.

  3. Avatar
    rajamani says:

    Saying that music no language, as an excuse, to avoid singing tamil songs, appears to me, as an elitist snobbery. Especially when these songs are mispronounced and not understood. I think the best and quickest way to increase and broaden the Carnatic music base among Tamils, is to sing atleast 50% of a kutcheri in Tamil. I doubt whether there will be any takers though. Sad.

  4. Avatar
    IIM Ganapathi Raman says:

    மார்கழி இந்துக்களில் புனித மாதம். இசையும் இந்துமதமும் இணந்தேயிருப்பது. எனவே இசைக்கச்சேரிகள் மார்கழியில் அமைக்கப்படுகின்றன என நினைக்கிறேன். கருநாடக இசைக்கச்சேரிகள் இந்துக்கடவுள்களைப்பற்றித்தான்.

    //கர்நாடக இசை அவாளுக்கு வராது. அதனால அதை ரசிப்பதற்குரிய ரசனையும் அவாளுக்குக் கிடையாது’ //

    சமூஹம் பலதரப்பட்ட மனிதக்கூட்டங்களினால் ஆனது. ஒவ்வொருகூட்டம் தனக்கென தகுதியைத் தன்னையறியாமலே அமைத்துக்கொள்கிறது. இதற்கும் பல காரணிகள்: வருமானம், வாழ்க்கை வசதிகள் (இருக்குமிடம்); மதம் போன்றவை சில. அதன்படி, கீழ்தட்டு வர்க்கத்துக்கு fine arts களை உருவாக்க, இரசிக்க அதன் தகுதி ஒத்துவராது. அஃதை அவர்களும் விரும்புவதில்லை. கரநாடக இசை நுணுக்கங்களைக்கொண்டது. அவை நன்கு தெரிந்தால் இரசிப்பு பன்மடங்காகும். தெரியாமலிருந்தாலும் கூட அந்த இசையை இரசிக்கும் மனம் மேற்சொன்ன தகுதியாலே அமைகிறது. கர்நாடக இசையை தகுதியுடையோரே இரசிககவியலும். கீழததட்டு மக்கள் தாராளமாக கருநாடக இசைக்கச்சேரிகளை தொலைக்காட்சிகளில் கண்டு கேட்கலாம். தடையேதுமிராது. எனினும் எவரும் கேட்பதில்லை. அவர்களே நினைத்தப்பார்க்காத விஷயத்தை எழுத்தாள்ர் போன்றோர் பெரிதுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    கீழ்த்தட்டோ மேற்தட்டோ இரண்டும் சமூஹத்திற்குத் தேவை. கிட்டத்தட்ட வருணஷ்சிர தர்மம்போலத்தான். எல்லாத்தட்டுக்களும் இருக்கும். இருக்கும்போது சமூஹம் அமையும்.

    பிரச்சினை என்னவென்றால், கீழ்த்தட்டிலிருந்து வந்த இளையராஜாவுக்கு அந்தத் திறமையும், தகுதியும் அமையும்போது, வைதிக்கப்பார்ப்பனர்கள் ‘காமதேனுவே ஆனாலும் ப்சுத்தன்மை போகாது’ என்று கண்ணனே சொன்னாலென்னும்போது, நாம் அவர்களை மிரட்டி வாயை அடைகக்த்தான் செய்யவேண்டும்..

    எனினும். தனிமரம் தோப்பாகாது என்பது உண்மை. “கருநாடக இசை அவாளுக்கு வராது. அதனால அதை இரசிப்பதற்குரிய இரசனை (என்ன தமிழோ?) அவாளுக்கு கிடையாது” என்பது மிகச்சரி.

  5. Avatar
    IIM Ganapathi Raman says:

    //‘தெலுங்கும் சம்ஸகிருதமும் தான் கீர்த்தனைகள் இயற்றுவதற்கு ஏற்ற மொழிகள். அந்த அருகதை தமிழுக்குக் கிடையாது’’ என்று பிதற்றிக்கொன்டு அலைந்தார்களே! அது அவருக்குத் தெரியாதிருக்க நியாயமில்லை. ஏனெனில், அறுபதை அணுகிக்கொண்டிருக்கும் பாடகர் அவர். (அவர் தமிழிலும் பாடுகிறவரே.) ‘நானொரு விளையாட்டுப் பொம்மையா?’ எனும் பாபநாசம் சிவன் அவர்களின் ஒரு பாட்டுப் போதாதா தமிழின் அருகதையை மெய்ப்பிக்க? அந்தக் காலத்துப் பாகவதர்கள் தமிழர்களுக்குப் புரிகிற தமிழில் பாட மறுத்தது மட்டும் நியாயமோ? அது ஏன் அந்தப் பாடகருக்குத் தெரியவில்லை?//

    இஃதை ஓரளவுக்கு ஒத்துக்கொள்கிறேன் but with riders. தியாகையர் போன்ற மும்மூர்த்திகளோ, பாபநாசம் சிவனோ இசையை வடித்தார்கள் என்பது முழு உண்மையா? கிடையாது. அவர்கள் இந்து ஆன்மிக வாதிகள். அவர்கள் நோக்கம் இந்துமதக்கடவுள் (அவர்கள் இஷ்ட தெய்வத்தை) ப்பற்றி பக்தியை வெளிபடுத்த இசையைப்பயன்படுத்திக்கொண்டார்கள். அதைக் கேட்டு நாமும் அத்தெய்வத்தின்பால் பக்தி கொள்ளவேண்டுமெனபது அவர்தம் நோக்கம். இசை வழி பக்தி என்பது இந்துமதம். கிருத்துவத்திலுமுண்டு. எனவே பக்தியே இங்கு முமுமுதற்குறிக்கோள். இல்லாவிட்டால் நம் எண்ணம் பழுது. ஆழ்வார் பாசுரங்களை இலக்கியமாக முதலில் கொண்டால் எப்படி பழுதோ அப்படி.

    இராமபகதன் ஒருவனுக்குத் தாய்மொழி தமிழ். தெலுங்கு தெரியாது என்றிருக்கும்போது இராமனின் மீது உருகிப்பாடிய தெலுங்கு கீர்த்தனைகள் அவன் பக்திக்கு ஏதாவது உதவுமா? இசைக்கு மொழியேது என்று சொல்லி இசையை மட்டுமே அவனால் இரசிக்க முடியும். கீர்த்தனைகள் என்றால் Hymns. There are no secular hymns. கீர்த்தனைகள் பக்தியை வளர்க்கவே.

    ஆனால், கருநாடக இசைக்கச்சேரிகள் இன்று பக்தியை வளர்க்கும் மடாலயங்கள் அல்ல. அவர் வெறும் இசை மேடைகள். அங்கு மொழிக்கு முதலிடம் தேவையில்லை என்பது என் கருத்து.

    தமிழில் பாடினால்தான் கேட்பேனென்றால், கலைவாணர் அரங்கம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். முடிந்தவுடன் அங்கு தமிழ்க்கச்சேரிகள் நடாத்தினால் போச்சு. இல்லையா?

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ கச்சேரி நாள்கள் தொடங்கிவிட்டன. இந்த சபாக்காரர்கள் ஏன் தான் இப்ப்டி ஒரு நடுக்கும் குளிர் காலத்தில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை \

    ஏப்போதிருந்து மதராஸில் சப்ஜீரோ டெம்ப்ரேசர் ?

    \ ஆனால், அந்தக் காலத்துப் பாடகர்களில் பலரும் ‘தெலுங்கும் சம்ஸகிருதமும் தான் கீர்த்தனைகள் இயற்றுவதற்கு ஏற்ற மொழிகள். அந்த அருகதை தமிழுக்குக் கிடையாது’’ என்று பிதற்றிக்கொன்டு அலைந்தார்களே! \

    யார்? எப்போது சொன்னார்கள்? தரவுகள் என்ன? பதினெட்டாம் நூற்றாண்டிலா? களப்பிரர் காலத்திலா?

    இப்போது தமிழில் பாடாத பாடகர்களே இல்லை என்பது தான் நிலைமை.

    இதை வாழ்த்துவதற்கு மனது வேண்டும். திருமுறைகள், திவ்யப்ரபந்தம், திருப்புகழ், பாபநாசம் சிவன், கோபால க்ருஷ்ண பாரதியார், அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர் என கலகலக்கிறதே.

    சௌம்யா அவர்கள் சிலப்பதிகாரத்திலிருந்தும் கூட பாடியுள்ளார்.

    குற்றமே சொல்ல வேண்டுமென்றால் என் வீட்டிற்கு அருகில் உள்ள சபையில் இதையெல்லாம் பாடுவதில்லை எனச் சொல்லலாம். உண்மையான அக்கறை இருந்தால் எங்கெங்கு தமிழில் என்னென்ன பாடுகிறார்கள் எனச் சொல்லலாம்.

    கற்பனையாக அரசியல் பேசி ஒட்டு மொத்த கர்நாடக பாடகர் சமூஹத்தையும் வசவிட முனைவதன் மூலம் ஸ்ரீமதி ஜோதிர்லதா கிரிஜா அம்மணியாருக்கு மட்டிலும் தமிழ் மீது கரிசனம் உண்டு என்ற கருத்தை முன்வைக்கலாம்.

    அதேசமயம் கர்நாடக சங்கீதத்தில் பாடும் அனைத்துப் பாடகர்களும் தமிழ் த்வேஷிகள் என்று ஒட்டு மொத்த சமூஹத்தையும் கருப்பு மசியால் தீட்டவும் முனையலாம். அதற்கு உங்களுக்கு உரிமையும் உண்டு.

    \ ‘நானொரு விளையாட்டுப் பொம்மையா?’ எனும் பாபநாசம் சிவன் அவர்களின் ஒரு பாட்டுப் போதாதா தமிழின் அருகதையை மெய்ப்பிக்க? \

    அப்படியா? அப்படிச் சொன்னவரிடம் நீங்கள் இதைப் பகிர்ந்து கொண்டிருந்தீர்கள் என்றால் உங்கள் திருதாட்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

    எங்கள் வள்ளல் அருணகிரிப் பெருமான்

    சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
    பேசிப் பணிந்துருகு நேசத்தையின்றுதர …… இனிவரவேணும்

    என்று பாடியுள்ளார். வள்ளல் பெருமானின் வார்த்தைகள் இஷ்விந்தர்ஜித் சிங்க் என்ற பஞ்சாபி சர்தாரை சொக்க வைத்து மலை மந்திரில் அவரை கந்தர் அனுபூதியை அற்புதமாகப் பாட வைக்கிறது. அதுமட்டுமா? த்வீபாந்தரங்களில் இருக்கும் சீனர், மலேயர் என ஹிந்து, க்றைஸ்தவர், முஸல்மான் என அனைவரையும் தெய்வத் திருப்புகழ் சொக்க வைக்கும்.

    பெருத்த பாருளீர் வாருமே!!!!! என உலகத்தோர் அனைவரையும் வருந்தி வருந்தி அழைத்து திருப்புகழ்த் தேனமுதை எங்கள் வள்ளல் பெருமான் வழங்கியுள்ளாரே. ஒவ்வொரு டிஸம்பரிலும் யார் யார் என்னென்ன திருப்புகழ் பாடியுள்ளார் ? எத்தையாவது எங்காவது கேழ்க்க முடியுமா? என்று தேடுவது அக்கறை உள்ளவர் செய்ய வேண்டிய கார்யம்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //ஏப்போதிருந்து மதராஸில் சப்ஜீரோ டெம்ப்ரேசர் ? …யார்? எப்போது சொன்னார்கள்? தரவுகள் என்ன? பதினெட்டாம் நூற்றாண்டிலா? களப்பிரர் காலத்திலா?//

      மார்கழி குளிர்காலம் தமிழகத்தில். தமிழகத்தைப்பற்றிப்பேசும்போது, காஷ்மீர் சப் ஜீரோ டெம்பரேச்சர் நினைவுக்கு வரக்கூடாது.

      எழுத்தாளர் பொதுவாகப்பேசுகிறார். எப்போதிருந்து மதராசில் சப்ஜீரோ டெம்பரேச்சர் என்று கேட்கும் கிருஸ்ணகுமார் தமிழகத்தில் வாழும்போதுமட்டுமே தெரியும் மார்கழிக்குளிரைக்கூட தாங்கிக்கொள்ள முடியாமல் தலைமுழுவதும் கம்பளியால் மறைத்துச் செல்பவர்கள் இவர்கள். வடக்கில் வாழந்த எனக்கு அது வியப்புதான். ஆனால், பரிகாசம் பண்ணுவதில்லை. அவரவர் வலி அவரவர்க்கு என்பதை உணர்வதே பொதுவாழ்க்கை நாகரிகம்.

      தரவுகள் கேட்கும் முன் கட்டுரையின் தலைப்பை நன்றாகப்படிக்கவும். இது நீங்காத நினைவுகள் தொடர்ச்சி. நினைவுகள் மட்டுமே. தன் வாழ்க்கையில் வெகு காலத்திற்கு முன் பெற்ற அனுபவங்களை தன் ஆழ்மனத்துக்குள்ளிருந்து மீட்டெடுத்து நமக்குச்சொல்கிறார். தரவுகள் கேட்டால் நினைவுகளை வைத்து எவருமே எதையும் எழுத முடியாது. Life is not arithmetically lived, Rather, it is generally lived Sir.

      காழ்ப்புணர்ச்சிகள் ஏன் என்றுய்த்துணரும்போது தெளிவது: தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்.

      மார்கழி புனிதமாதம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றான் கண்ணன். எனவே மார்கழி நீராடி கண்ணனை வழிபடுவோமென அழைத்தார் ஆண்டாள் நாச்சியார், இப்படிப்பட்ட புனிதகாலத்தில் இந்துக்கள் தங்களை இறைவழிபாட்டில் மட்டுமே ஈடுபடுத்திக்கொள்ளவேண்டுமென்பதற்காக இவ்வுலக இக சுபகாரியங்களைக்கூட தவிர்ப்பர்: நகை வாங்குதல்; மணம் தவிர்த்தல் போன்று. கருநாடக இசைக்கச்சேரி இந்துமதத்திற்க்காகத்தான் முதன்முதலில் எழுந்தது . பின்னர் அது தன்பரிமாணங்களை மாற்றிக்கொண்டிருக்கலாம்.

      இதைத் தன் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், அக்குளிரில் போய் நடுங்கி கச்சேரிகளுக்குப் போகவேண்டுமா என்று கேட்கிறார். சபரிமலைக்கும் மான்சரோவருக்கும் உறையும் குளிரில் செல்வோரைக் கேட்டல் எப்படித் தவறாகுமோ அப்படி இதுவும் தவறாகும் எனபதே காழ்ப்புணர்ச்சியில்லா எதிர்பதிலாக எழத்தாளரின் முன் வைக்கமுடியும்.

  7. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ எனும் அவையினருள் ஒருவரின் கேள்விக்கு இடைவேளையின் போது அவ்விசைக் கலைஞர் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளினார்: ‘ கர்நாடக இசை அவாளுக்கு வராது. அதனால அதை ரசிப்பதற்குரிய ரசனையும் அவாளுக்குக் கிடையாது’ எனும் ரீதியில் அவர் வெளியிட்ட கருத்து ஏற்புடையதன்று. அந்த இசைக் கலைஞர் மிக நல்லவர் \ \ அறக்கட்டளை யெல்லாம் நிறுவி, ஜாதி மத பேதம் பார்க்காமல் பணி செய்து வருபவர். எனவே, யோசிக்காமல் பேசிய பேச்சு என்றே தோன்றுகிறது. \

    குற்றத்தை பெயர் சுட்டிச் சொல்லுங்கள்.

    குணத்தையும் கூட

    செம்பை வைத்யநாத பாகவதர் அவர்கள் ஜோசப் பாகவதரின் திருக்குமாரரான ஜேசுதாசை மெருகேற்றியுள்ளாரே?

    சித்ரா விச்வேஸ்வரன் ஜாதி என்ன மாற்று மதத்தைச் சார்ந்த ஜாகிர் ஹுஸைனை மெருகேற்றியுள்ளாரே?

    செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யர் க்ருஹத்தில் இருக்கும் சித்திரங்களில் ஒன்று ஸ்ரீ இளையராஜா அவர்களுடையது.

    பத்மா சுப்ரமண்யம் குடும்பத்தினர் எத்தனையெத்தனை பேர்களுக்கு ஜாதி பார்த்தா கலைகளை வழங்கினார்கள்.

    வீரராகவ ஐயங்கார் என்ற அன்பர் ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை ; இருபது வருஷம் ஆண்டனி ஜோஸஃப் என்ற அன்பருக்கு தமிழும் சம்ஸ்க்ருதமும் வைஷ்ணவமும் சொல்லிக்கொடுத்தது அந்த சிஷ்யரின் ஜாதி பார்த்து இல்லை. “பவானீவ பவம் ப்ரபும்” என்ற படிக்கு அவர் அடியொற்றி சாது சேவை செய்யும் அவர் தர்ம பத்நி ஸ்ரீமதி ஃபாத்திமாஜோஸஃப் இப்பணியைச் சிரமேற் கொண்டு செழிப்பது சமூஹத்தில் ஜாதி பார்த்து இல்லை. ஜீயர் ஸ்வாமிகள் ஜோஸஃப் அவர்களை ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமிகள் என்றும் வைணவச் சுடராழி என்று விதந்தோதியதும் ஜாதி பார்த்து இல்லை.

    மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை உ.வே. சாமிநாதைய்யருக்கு தமிழ் போதித்தது ஜாதி பார்த்து இல்லை.

    தஞ்சை நால்வருக்கு முத்துஸ்வாமி தீஷிதர் சங்கீதம் போதித்தது ஜாதி பார்த்து இல்லை.

    அடுக்கிக் கொண்டே போகலாம்.

    ஸ்ரீரங்கத்தில் ராமசாமி நாயக்கர் சிலையை துஷ்டர்கள் அலங்கோலப் படுத்தினார்கள் என்பதற்கு பதிலாக மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் நாலணா லாபத்துக்குப் பூணூல் விற்கும் ஒரு நபர் மீது வீரு கொண்டு தாக்குதல் நிகழ்த்தினார்கள் என்று வாசித்தது நினைவுக்கு வருகிறது நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கும் பாங்கைப் பார்க்கையில்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      திரு அந்தோணி ஜோசப் ஒரு உபன்யாசகர் மற்றும் புதுச்சேரி பலகலைக்கழகத்தில் தமிழாசிரியர். அவர் மனைவி திருமதி ஃபாத்திமா ஜோசப் ஒரு தமிழாசிரியர். இவர்களுக்கும் கருநாடக இசைக்கும் என்ன தொடர்பு?

    2. Avatar
      C.N.Muthukumaraswamy says:

      முத்துசுவாமி திக்ஷிதரின் சாஹித்தியங்களைப் பிரபலப்படுத்தியது நாதஸ்வரக்காரர்களே. பிராமணர்கள் ஆல்லர் என்பது பலருக்குத் தெரியாது.

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ சிலர் ‘’ஷ’’ என்றே உச்சரித்து விடுவதுன்டு. அவர்கள் ‘என்னதவம் ஷெய்தனை, யஷோதா?’ என்று பாடும்போது நாராசமாக ஒலிக்கும். \

    உண்மையே. ஒப்புக்கொள்கிறேன். நாரசமாகத் தான் இருக்கிறது.

    ஏன் ஸ்பஷ்டமாக ‘ச’ வை உச்சரிப்பவர்கள் இருக்கிறார்களே.

    நெய்வேலி சந்தானம், விஜய் சிவா, சௌம்யா …….. இவர்களை விதிவிலக்காக போற்றுவதற்குப் பணம் காசு வேண்டுமோ?

    \ ஒரு முறை தெலுங்கும் தமிழும் அறிந்த தோழி ஒருவர் கேட்டார் – “உங்கள் பாகவதர்கள் யாரேனும் தெலுங்கரிடம் உச்சரிப்பைக் கேட்டுத் தெரிந்துகொன்டு பாடக்கூடாதா? \

    மறுபடியும் கிசு கிசு.

    மதிப்பிற்குறிய ஸ்ரீமதி ஜோதிர்லதா கிரிஜா அம்மணி அவர்களிடமிருந்து கிசு கிசு பாணியில் அவதூறுகளைக் கேழ்ப்பது கூட ச்லாக்யமாக இல்லை தான்.

    பெரிய வித்வான் கள் ஸ்பஷ்டமான உச்சரிப்பில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். தமிழ்த் தொலைக்காட்சியில் நெய்வேலி சந்தானம், சௌம்யா, பாபநாசம் ரமணி, கணேஷ் சங்கர் – போன்றோர் போட்டி நிகழ்ச்சிகளில் பார்க்கும் மிக முக்யமான விஷயம் – தமிழாகட்டும் மாற்று பாஷைகளாகட்டும் – பாடகர்களின் உச்சரிப்பு.

    குறைகளாகட்டும் குணங்களாகட்டும். பொதுப்படுத்தாதீர்கள்.

    எந்த பாஷையையும் வெறுப்பது உங்கள் உரிமை. எல்லா பாஷைகளையும் போற்றுவது கூட பலரின் உரிமை.

    \ மொழி பற்றிப் பேசுகையில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அதே தொலைக்காட்சியில் இசைக்கச்சேரிகள் முடிந்த பின் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் வெளியிடும்போது பற்றிகொண்டு வருகிறது. \

    இந்த விஷயத்திலும் நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன். ஏன் தில்லி – மதறாஸ் வரும் போதும் போகும் போதும் ரயிலில் ஆங்க்லத்தில் கதைக்கும் கும்பல் என்றால் அது தமிழர்களின் கும்பல் மட்டிலுமே. மலயாளி மலயாளித்தில் தெலுகுக் காரர்கள் தெலுகில் பாங்க்ளாகாரர்கள் பாங்க்ளாவில் –மிகப்பல தமிழ்க்காரர்கள் என்றென்றும் உகப்பு தரும் ஆங்க்லத்தில். இதை எடுத்துச் சொன்னால் அவ்வளவு தான். சமுத்ரத்தில் தள்ளிவிட்டுவிடுவார்கள்.

    \ ஆனால் நம்மூர் பாகவதர்களுக்கோ அதில் லவலேசமும் அக்கறையே இல்லை. புகையிலை, வெற்றிலை அடிக்கடி போட்டுக் குதப்பிக் குரலைப் பாழாக்கிக்கொள்ளுகிறார்கள். \

    கஜல் மற்றும் டும்ரி சங்கீதத்தின் முடிசூடா சக்ரவர்த்தினியாக விளங்கிய மோ(ஹ்)தர்மா பேகம் அக்தர். அவர்களை பான் விதா இல்லாது பார்க்க முடியாது. கூடவே உயர்ந்த ரக சிகரெட். ஈடு இணையில்லாது கஜலில் வாழ்ந்த வரை கோலோச்சியவர் அந்த அம்மணி.

    உலகத்தில் நாம் பார்ப்பவற்றில் எத்தனையோ நல்ல விஷயங்கள் நாம் போற்ற வேண்டிய விஷயங்கள் கூட உள்ளன. அவற்றைப் பற்றியும் மேலான எழுத்தாளர்கள் எழுதித் தீர்க்கலாம்.

    வள்ளல் அருணகிரிப் பெருமானின் தேனினுமினிய தெய்வத் தமிழிலான திருப்புகழ்

    ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
    மாத வர்க்கதி பாதக மானவர்
    ஊச லிற்கன லாயெரி காளையர் …… மறையோர்கள்

    ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
    ஆர்த னக்குமு தாசின தாரிகள்
    ஓடி யுத்தம ரூதிய நாடின …… ரிரவோருக்

    கேது மித்தனை தானமி டாதவர்
    பூத லத்தினி லோரம தானவர்
    ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை …… யிகழ்வோர்கள்

    ஏக சித்ததி யானமி லாதவர்
    மோக முற்றிடு போகித மூறினர்
    ஈன ரித்தனை பேர்களு மேழ்நர …… குழல்வாரே

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      அவரின் நினைவலைகளில் ஏதேனும்அவரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது என்று நாம் உணர்வோமானால் அஃதை இங்கு எடுத்தியம்பலாம். நம்மை உயர்வுபடுத்திக்கொள்ள அன்று. அவரை இழிவுபடுத்தவுமன்று. மாறாக, நமக்குத் தெரிந்ததை பொதுவில் வைப்பது மட்டுமே. கேட்பவர் கேட்கட்டும். ஒருவேளை அவர்கூட ஏற்றுக்கொள்ளலாம். No man is perfect. No woman either :-)

      எனவே, எழுத்தாளருக்கு நாம்

      //குறைகளாகட்டும் குணங்களாகட்டும். பொதுப்படுத்தாதீர்கள்.//

      என்று சட்டாம்பிள்ளைத்தனமாகச் சொல்லக்கூடாது.

      நினைவலைகள். எனபது அவரின் ஆட்டோபயாகிரஃபி. அதில் எதை எப்படிச் சொல்லவேண்டுமென்பது அவரின் ஏகபோக உரிமை. இதில் தலையிட வேண்டுமா?

      குறைகளாகட்டும்; குணங்களாகட்டும். பொதுப்படுத்தலாம். குறிப்பிட்டும் சொல்லலாம். நெஞ்சுக்கு நீதி. அது போதும்.

      கிருஸ்ணகுமார்!

      ஸ்ரீமதி ஜோதிர்லதா கிரிஜா என்றழைத்தல் தவறு. அவர் மணமாகாதவர் என்பதைவிட மணமென்னும் சிறையிலடைபட்டு தன் சுதந்திரத்தை இழக்கவிரும்பாதவர் எனபதே சரி.

  9. Avatar
    Padmini Gopalan says:

    Every art has two branches ; one is popular art and the other serious art.The difference between them may not be very pronounced sometimes.Serious art does not attract the masses.For instance a serious movie-it is called ‘art film’- is generally not very popular.Classical music falls under the category of serious art

  10. Avatar
    paandiyan says:

    //காழ்ப்புணர்ச்சிகள் ஏன் என்றுய்த்துணரும்போது தெளிவது: தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்//

    இது உங்களுக்கும் பொருந்தும் தான?

    ஆசிரியர் அப்படி சொல்லி இருக்கின்றார் , இப்படி சொல்லி இருக்கின்றார் என்றால்? உங்களிடம் சொல்லிவிட்டா அவர் எழுதுகின்றார்?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      எழுத்தாளர் எதுவும் சொல்லிவிட்டுப்போகட்டும். அக்கருத்துகளைச் சொல்லவே கூடாதென்றல்லவா வரிந்து கட்டிக்கொண்டு கிருஸ்ணகுமார் தடுக்கப்பார்க்கிறார்? தனிநபர் தாக்குதலில் இறங்கிவிட்டால் பயந்து நிறுத்திவிடுவார்கள் என்று நினைக்கிறார்.

  11. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ தரவுகள் கேட்கும் முன் கட்டுரையின் தலைப்பை நன்றாகப்படிக்கவும். இது நீங்காத நினைவுகள் தொடர்ச்சி. நினைவுகள் மட்டுமே. \

    ரெவரெண்டு ஜோ அவர்கள் சமூஹத்திற்கு

    நினைவுகளின் வாயிலாக கிசு கிசு போன்ற த்வனியில் தவறான ஒரு பிம்பத்தை முன்வைக்க விழைந்தால் தரவுகள் அவசியம் கேழ்க்கப்படும்.

    \ கருநாடக இசைக்கச்சேரி இந்துமதத்திற்க்காகத்தான் முதன்முதலில் எழுந்தது . \

    ம்……….கடவுளே !!!!!!!!!!! நெம்ப கஸ்டம்.

    \ திரு அந்தோணி ஜோசப் ஒரு உபன்யாசகர் மற்றும் புதுச்சேரி பலகலைக்கழகத்தில் தமிழாசிரியர். அவர் மனைவி திருமதி ஃபாத்திமா ஜோசப் ஒரு தமிழாசிரியர். இவர்களுக்கும் கருநாடக இசைக்கும் என்ன தொடர்பு? \

    ரெவரெண்டுவாள் பேஷா சொல்லிட்டேள் போங்கோ.

    கர்நாடக சங்கீதத்திற்கும் ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களுக்கும் உள்ள தொடர்பு சொல்லப்படவில்லை.

    என்னன்னல்லாமோ *அவாளுக்கு* வராது என லிஸ்டெல்லாம் போட்டு உண்மைக்குப் புறம்பாகக் கலக்குகிறார்கள் இல்லையா?

    அந்த லிஸ்டில் ஜோஸஃப் ஸ்வாமின் அவர்கள் இரண்டு தசாப்தம் கற்ற ஒப்புயர்வற்ற வித்யையும் அடங்கும்.

    வித்யார்த்தியின் லக்ஷணம் வித்யையில் அபரிமிதமான பிடிமானம். அப்படி ஒரு பிடிமானம் இருந்தால் வித்யார்த்தி ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களாக இருந்தால் என்ன ஜாகிர் ஹுஸைன் ஆக இருந்தால் என்ன — முருகப்பெருமான் அருளால் வித்யை பூர்ணமாக சித்திக்கும்.

    காழ்ப்பு, கசப்பு – இதெல்லாத்தையும் வைத்து என்ன செய்வது.

    நான் அறிந்ததெல்லாம் – சரி, தவறு – அவ்வளவே.

    நான் ஒப்புக்கொண்ட விஷயங்களையும் பகிர்ந்துள்ளேன். மாறுபட்ட விஷயங்களையும் குறிப்பாகப் பகிர்ந்துள்ளேன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //ரெவரெண்டு ஜோ அவர்கள் சமூஹத்திற்கு
      நினைவுகளின் வாயிலாக கிசு கிசு போன்ற த்வனியில் தவறான ஒரு பிம்பத்தை முன்வைக்க விழைந்தால் தரவுகள் அவசியம் கேழ்க்கப்படும்.//

      இதுதான் காழ்ப்புணர்ச்சி. என் புனைப்பெயர்கள் பல. புனைட்பெயர்களை வைத்து கிண்டலடித்தல் கீழ்த்தரமான செயலாகும். இங்கே காழ்ப்புணர்ச்சியெனலாம். இப்படி ஒருவர் பல புனைப்பெயர்களில் எழதும்போது நீங்கள் ஏதெனுமொருமுறையில் தனிநபராக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அவர் என்ன உங்கள் சாப்பாட்டைப்பிடிங்கிவிட்டாரா அல்லது உங்கள் சொத்தில் பங்கு கேட்டுவிட்டாரா? தொடர்ந்து திரும்ப திரும்ப இப்படி காழ்புணர்வுடன் எழுதும்போது கதனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறாரெனத் தெரிகிறது! இவ்வளவு கோபமும் காழ்ப்புணர்வும் பின்னூட்டமிடுபவர்கள் மேல் ஏன்? உங்கள் பாதிப்பு மர்மத்தை வெளியில் சொல்லிவிடுங்கள். பொதுமனற இணையதளத்தில் எவரெவரோ வந்து அவருக்குத் தோன்றியதை எழுதிவிட்டுப்போகும்போது படித்து எதிர்கருத்துக்களை விரும்பினால் போட்டுவிட்டுப்போவதல்லாமால் ஏன் இந்த தனிநபர் தாக்குதல் ஒவ்வொருவர் மீதும்? கருத்தைக் கருத்தால் எதிர்நோக்க ஏனிந்த பயம்? தனிநபர் தாக்குதல் பயத்தில் அறிகுறிகள். அதாவது மற்றவர்கள் கருத்துக்களைக் கண்டு பயப்படுகிறீர்கள்.

      கேள்வி எனபதை திருப்புகழில் கேழ்வி என்றா அருணகிரி வள்ளல்பெருமான் எழுதினார்? திருப்புகழைப்படித்துவிட்டு பிடிவாதமாகத் தமிழைப் பழிப்பது திருப்புகழைப்பழிப்பது என்று தெரியவில்லையா?

      நினைவலைகள் அவர் எழுதுவது எனக்கும்தான் பிடிக்கவில்லை. பல ஈவேராத்தங்களை எதிர்கருத்து நானும்தான் போடவில்லையா? நினைவலைகளுக்கு எப்படி தரவுகள் கொடுக்கமுடியும்? ஓவ்வொருவரும அனுபவங்களைப்படும்போது, பின்னர் ஒருகாலத்தில் தான் திண்ணையில் நினைவலைகள் எழுதுவோம் ஒருவேளை. அப்போது கிருஸ்ணகுமார் தரவுகள் கேட்பார் என்று உஷாராக நோட்டில், அநத நாள் கிழமை, திதி, நட்சத்திரமெல்லாமா குறித்துவைத்துக்கொள்ளமுடியும்? Please apply your common sense.Mr.

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ தரவுகள் கேட்டால் நினைவுகளை வைத்து எவருமே எதையும் எழுத முடியாது. \

    ரெவரெண்டு ஜோ அவர்கள் பூர்வ அவதாரத்தில் அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் சம்பந்தமாக இந்த மாதிரி எழுதி நான் பார்த்ததில்லை.

    ம்………வித்யா ததாதி விநயம். விநயாத் யாதி பாத்ரதாம்……..

    என்பது எந்த அவதாரம் எடுத்தாலும் தொடருமானால் ச்லாகிக்கத் தகுந்ததே.

    நல்லது தொடர்வது நல்லதற்கே. வாழ்த்துக்கள்.

  13. Avatar
    ஷாலி says:

    திரு.க்ருஷ்ணாஜியும், கணபதி ராமன் அவர்களும் ஏகப்பட்ட கர்நாடக சங்கதியை எடுத்து விடுகிறார்கள்.நமக்கு அந்தளவுக்கு வெவரம் பத்தாது.நமக்கு தெரிந்த சங்கீதம் இந்தப்பாடல்களே!கேட்டுப்பாருங்க!

    //மார்கழி புனிதமாதம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றான் கண்ணன். எனவே மார்கழி நீராடி கண்ணனை வழிபடுவோமென அழைத்தார் ஆண்டாள் நாச்சியார்,//

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
    சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்…

    மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா – இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2)
    வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

    இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
    உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
    இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
    நீ மட்டும் என்னுடல் காண்பாயா
    கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
    சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

    சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
    நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
    நம்பிக்கை வளர்த்துவிடு
    நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
    ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி…ஆஆஆ… ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்.
    ——————————————————————————–

  14. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ //குறைகளாகட்டும் குணங்களாகட்டும். பொதுப்படுத்தாதீர்கள்.//

    என்று சட்டாம்பிள்ளைத்தனமாகச் சொல்லக்கூடாது.

    நினைவலைகள். எனபது அவரின் ஆட்டோபயாகிரஃபி. அதில் எதை எப்படிச் சொல்லவேண்டுமென்பது அவரின் ஏகபோக உரிமை. இதில் தலையிட வேண்டுமா?

    குறைகளாகட்டும்; குணங்களாகட்டும். பொதுப்படுத்தலாம். குறிப்பிட்டும் சொல்லலாம். நெஞ்சுக்கு நீதி. \

    ரெவெரெண்டு ஜோ இப்போது நீங்கள் செய்வது தான் (வெட்டியான) சட்டாம்பிள்ளைத் தனம்.

    எழுத்தாளர் என்னத்தை வேண்டுமானாலும் எழுதிப்போவது அவர் உரிமை தான். உரிமையே தான்.
    யாரும் இங்கு அந்த உரிமையில் தலையிடவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறேன்.

    சொந்தக் காழ்ப்புக் கருத்தாக்கங்களை நினைவலைகளாக பதிவு செய்வது அவர் உரிமை என்றால் பரிச்சயமான குறிப்பான மாற்றுக்கருத்துக்களை பகிர்வது வாசகரின் உரிமையும் கூட.

    குறைகளைத் தரவுகள் இல்லாது பொதுப்படுத்துதல் என்பது எழுத்தாளரின் மட்டற்ற காய்தல் உவத்தலின் பாற்பட்டு என்று மட்டிலும் அறியப்படும்.

    தரவுகளின் பாற்பட்ட விஷயங்கள் யதார்த்தத்தை படம் பிடிப்பதாக அமையும்.

    \ ஸ்ரீமதி ஜோதிர்லதா கிரிஜா என்றழைத்தல் தவறு. அவர் மணமாகாதவர் …….\

    அம்மணி அவர்கள் விவாஹமானவரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அறியாது தவறான அடைமொழியை யாம்உபயோகித்த படிக்கு சுஸ்ரீ கிரிஜா அம்மணிக்கு எமது க்ஷமாயாசனங்கள்.

  15. Avatar
    IIM Ganapathi Raman says:

    //குறைகளைத் தரவுகள் இல்லாது பொதுப்படுத்துதல் என்பது எழுத்தாளரின் மட்டற்ற காய்தல் உவத்தலின் பாற்பட்டு என்று மட்டிலும் அறியப்படும்.//

    அப்படி அறியப்படாது. வீண் பயம் வேண்டாம். நினைவலைகள் என்பது தனிநபர் விடயங்கள். அனுபவங்கள் அவற்றின்பால் வரும் வந்த தனிநபர் உணர்வுகள். அவற்றில் காயதலும் உவத்தலும் கண்டிப்பாக இருக்கும். உண்மையில் அப்படி அவரின் காய்தலையும் உவத்தலையும்தான் இரசிக்கிறார்கள். Everyman in his humour ! காய்தலும் உவத்தலும் இருப்பவரே மானிடர். இல்லாத்வர்கள் மரம்.

    அவரின் நினைவலைகளைத் திண்ணை வாசகர்கள் இரசித்துப்படிக்கிறார்கள் என்பது என் கணிப்பு. உங்களைப்போல அலறவில்லை. மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்ற உணர்வுடையோர் தாங்களும் நிம்மதி இழந்து பிறர் நிம்மதியையும் கெடுத்தார்.

  16. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ரெவரெண்டு ஜோ :-

    எழுத்தாளர் எதுவும் சொல்லிவிட்டுப்போகட்டும். அக்கருத்துகளைச் சொல்லவே கூடாதென்றல்லவா வரிந்து கட்டிக்கொண்டு கிருஸ்ணகுமார் தடுக்கப்பார்க்கிறார்?

    க்ருஷ்ணகுமார் :-

    எழுத்தாளர் என்னத்தை வேண்டுமானாலும் எழுதிப்போவது அவர் உரிமை தான். உரிமையே தான்.
    யாரும் இங்கு அந்த உரிமையில் தலையிடவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறேன்.

    \ அவரின் நினைவலைகளைத் திண்ணை வாசகர்கள் இரசித்துப்படிக்கிறார்கள் என்பது என் கணிப்பு. உங்களைப்போல அலறவில்லை. \

    ஆமாம். அவருடன் உடன்படும் விஷயங்களை நான் பகிர்கையில் அது உங்களுக்கு அலறலாகத் தெரியாது. வெட்டியாக விதண்டாவாதம் செய்து ஸ்துதிபாடுதல் என்று இறங்கி விட்டால் அறிவு பூர்வமான விவாதம் சாத்யமில்லை தான்.

    யாரையோ ஒரு சங்கீத வித்வானை பெயர் குறிக்காது எழுத்தாளர் தூஷணை செய்ய முனைந்து அதனையே ஒட்டு மொத்த சங்கீத வித்வான் களின் பேரில் ஆரோபிக்க முனைவதில் அவருக்கு விருப்பம். அதில் உங்களுக்கும் விருப்பமிருப்பதால் தூஷணை தூஷணையுடன் இணைகிறது. இதில் காய்த்தல், உவத்தல், மனிதன், மரம் என்றெல்லாம் தூஷணைக்குப் பட்டுக்குஞ்சலம் வைப்பதில் உவகையும் கொள்ளலாம்.

    இதுவரை கர்நாடக சங்கீத வித்வான் கள் இதை உபாசனையாகவே செய்துவந்துள்ளார்கள்.

    இப்படி ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்களை நிந்தனை செய்வதில் உகக்கும் கூட்டணிக்கு எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானின் *நெருப்பென்றிருக்கும்* *திருப்புகழ்* வாசகங்களே உத்தரமாகட்டும்.

  17. Avatar
    IIM Ganapathi Raman says:

    சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட புனைப்பெயர்களில் எழுதுவது (ஒரே நேரத்திலன்று) உங்களைத் தனிப்பட்ட முறையில் எப்படி பாதிக்கிறது என்பதையும் தெரிவிக்கவும். நீங்கள் உண்மையிலே மனவேதனைப்படுகிறீர்கள் என்றால் அதற்கு நான் காரணமாக இருப்பதை நான் தவிர்க்கமுடியும் அல்லவா? சொல்லுங்கள்.

  18. Avatar
    sarojaramanujam says:

    சித்தூர் சுப்ரமணிய பிள்ளை, மதுரை சோமு, இப்படி பலர் உண்டு. கண்ணன் குழலிசையில் மயங்கியது உஅயர் ஜாதியினரா? யாகம் செய்துகொண்டிருந்த அந்தணர் அல்ல. அவர்களின் மனைவியர், கோபியர், இடையர், மரம் செடி கோடி , மிருகங்கள் , பறவைகள் இவைதான்.பெரியாழ்வார் திருமொழி ‘நாவலம் பெரிய தீவினில் வாழும்—‘ காண்க.

  19. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ரெவரெண்டு ஜோ

    யாரொருவரும் புனைப்பெயரில் எழுதுவது எனக்கு ஆக்ஷேபகரமானது அல்ல.

    ஒரே நபர் பல புனைப்பெயர்களில் எழுதுவது ஆக்ஷேபகரமானது. இது unethical ஆன விஷயம். இந்த விஷயத்தை நான் மட்டிலும் அல்ல மிகப்பலபேரும் — நகைக்கத் தகுந்த ஒரு செயல்பாடாக இழித்துரைத்துள்ளார்கள்.

    இணையத்தில் நான் கிட்டத்தட்ட என்னுடைய இந்த பெயரிலேயே பல தளங்களிலும் ஒரே பெயரில் ஒரே மாதிரியான கருத்தையே பதிவு செய்து வருகிறேன்.

    \ உங்களைத் தனிப்பட்ட முறையில் எப்படி பாதிக்கிறது என்பதையும் தெரிவிக்கவும். நீங்கள் உண்மையிலே மனவேதனைப்படுகிறீர்கள் \

    ஜோ, கமான்……. Don’t be childish. தனிப்பட்ட முறையில் பாதிக்க என்ன இருக்கிறது. ஒருவரை ஒருவர் பரஸ்பாரம் லவலேசமும் அறியோமே. நாம் ஒத்துப்போவது மாறுபடுவது செயல்பாடுகள் சார்ந்து. உங்களுடைய மேலான வாசிப்பு விதிவிலக்காக எப்போதேனும் சரியான விவாதத்தில் செல்லும் போது அதில் உள்ள கருத்துக்கள் சார்ந்து என் கருத்துக்களை மேம்படுத்திக்கொள்கிறேன். நீங்கள் விதண்டா வாதம் செய்யும்போது அதை இடித்துரைக்கிறேன். thats it.

    Whats unethical to me is unethical to a good lot of people. If you feel your stand as ethical, you should never mind others calling it unethical, nor get perturbed over it. Like in the past five years, many people have complained about my mixed language style. For your information, a good lot of people have also appreciated my style. I never mind others complaining about my style and I continue to pen my opinions in a style in which I am comfortable, only taking care the message does not get lost (the real concern of well intended people).

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //யாரொருவரும் புனைப்பெயரில் எழுதுவது எனக்கு ஆக்ஷேபகரமானது அல்ல.//

      Matter is over. Leave it. Let anybody writes in whatever nick they desire. Don’t interfere.

  20. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ அவரின் நினைவலைகளைத் திண்ணை வாசகர்கள் இரசித்துப்படிக்கிறார்கள் என்பது என் கணிப்பு. உங்களைப்போல அலறவில்லை. \

    ரெவரெண்டு ஜோ

    நகைக்கத் தக்க விவரணம்.

    எதிர்ப்புக்கருத்துக்கள் பகிருவது அலறல் என்றால் எதிர்க்கருத்துக்கள் பகிருவது ரசனையின்மை என்றால், இதே அம்மணி சாயிபாபா பற்றிய நினைவலைகள் பகிர்ந்த போது நீங்கள் ஜல்லியடித்ததை அலறல் என்று சுட்டலாமா? அதை நீங்கள் ரசிக்கவில்லை என்று பேத்தலாமா?

    திண்ணை வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் சர்வே எடுத்தீர்களா? வாசகர்கள் இன்ன நினைக்கிறார்க்ள் என்று கூற.

    என்னுடைய கருத்துக்கள் (நான் ஒரு ஹிந்து என்ற நிலையில் இருப்பவை கூட) என் கருத்துக்கள் மட்டிலும். நான் எனது சமுதாயம் சார்ந்தோ அல்லது ஒரு குழுமம் சார்ந்தோ எப்போதும் கருத்துக்கள் முன்வைப்பதில்லை.

    நகைக்கத் தக்க விஷயம் நான் என் கருத்துக்களை ஹிந்துத்வன் என்றோ அல்லது ஹிந்து சமூஹம் சார்ந்தோ வைக்காத போதிலும் நீங்கள் நான் ஹிந்துத்வனாகக் கருத்துக்கள் வைப்பதாகவும் ஒட்டு மொத்த ஹிந்து சமூஹம் சார்பாக நான் கருத்துக்கள் முன்வைப்பதாக கதைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் கருத்துக்களை ஏதோ ஹிந்து சமூஹத்தைச் சார்ந்த கருத்தாகத் திணிக்க முயல்கிறீர்கள் மட்டற்ற ஆப்ரஹாமிய சார்பு இருந்த போதிலும் என் பார்வையில் மட்டற்ற ஹிந்துக்காழ்ப்புகளை நீங்கள் பகிரும் போதிலும் கூட.

    நகை முரண்.

    என்னுடைய கருத்துக்கள் என்னுடையவை மட்டிலும். உங்களுடைய கருத்துக்கள் உங்களுடையவை மட்டிலும்.

    விதிவிலக்காக நீங்கள் அர்த்தமுள்ள கருத்துக்கள் முன்வைக்கையில் இன்னமும் ச்லாகிக்கும் உங்கள் அன்பார்ந்த

    க்ருஷ்ணகுமார்

  21. Avatar
    IIM Ganapathi Raman says:

    //ரெவரெண்டு ஜோ//

    என்னைக்கிருத்துவப்பாதிரியாக வேடமளித்து பொதுமன்றத்தில் இழிவுபடுத்து எனத் திருப்புகழில் ஏதாவது சொல்லியிருக்கிறதா? நான் கிருத்துவபாதிரி என்று எப்படி சொல்கிறீர்கள்? உங்களை ஒரு இசுலாமியானாக பிறர் இழிவுபடுத்தும் நோக்கத்தில் அழைத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

    இப்படி இங்கு வந்து முன்பின் தெரியாத நபர்களுக்கு பொய்யான மத முத்திரை தருவது கற்றவன் செய்யும் செயலா?

    Thinnai editors should control this person.

  22. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜோ

    காஷ்மீரத்தில் என்னை *ஜெனாப்* என்று தான் விளிப்பார்கள். முதலில் எனக்கு தாடி ஏதும் வளர்ந்து விட்டதோ தலையில் பனிக்குல்லாய் தானே வைத்துள்ளேன்; Skull cap இல்லையே என்று ப்ரமித்த நாட்களுண்டு. அதே போல் இப்படி சொல்பவர் அத்தனை பேரும் முஸல்மான்களாக இருப்பார்களோ என்றும் நினைத்ததுண்டு; என்னைப் பகடி செய்கிறார்கள் என்றும் நினைத்ததுண்டு. ஆனால் பழகப்பழக அந்தப்பகுதி வாழ் ஹிந்துக்கள் மற்றும் முஸல்மான்கள் அனைவருமே பொதுவிலே அனைவரையும் அன்போடு விளிக்கும் முறைமை என்று அறிந்த பின் தான் – வார்த்தைகளில் என்ன உள்ளது – காணப்பட வேண்டியது அன்பே என்பது புரிந்தது.

    மிகவும் சாந்தமாக ஒரு க்ஷணம் யோசித்துப் பாருங்கள் —

    அமரர் மலர்மன்னன் மஹாசயர் அவர்களுடைய ஜாதி சான்றிதழ் ஏதும் நீங்கள் பார்த்திருப்பீர்களா? இல்லை தானே? பின் அவரது கருத்துக்களை அவர் பார்ப்பனர் என்பதால் தான் பகிர்கிறார் என்று அவரது கடைசீ மூச்சு வரை பிறாண்டிக்கொண்டே இருந்தமை சரியா?

    \ இப்படி இங்கு வந்து முன்பின் தெரியாத நபர்களுக்கு பொய்யான மத முத்திரை தருவது கற்றவன் செய்யும் செயலா? \

    உங்களுடைய கேழ்வியை சற்று மாற்றிக் கேழ்க்கிறேன்.

    இப்படி இங்கு வந்து முன்பின் தெரியாத நபர்களுக்கு *ஜாதி முத்திரை* தருவது கற்றவன் செய்யும் செயலா?

    ஒரு க்றைஸ்தவப் பேரான ஜோ ரேயன் ஃபெர்னாண்டோ என்பதை உபயோகித்தமையில் உங்களுக்கு தயக்கம் இருந்ததில்லையா அன்பரே? அப்படி ஒரு பேரை உபயோகித்தவரை க்றைஸ்தவர் என்று சொன்னால் மட்டிலும் ஏன் வருத்தம் வர வேண்டும். ரெவரெண்டு என்பது ஒருவரை மிகவும் மதிப்புடன் விளிக்கும் சொல் தானே. அதுவும் தாங்களே தாங்களாகவே க்றைஸ்தவ பேரில் பரிச்சயம் கொடுத்த படிக்கு. இதில் இழிவு எங்கே வந்தது.

    உங்களை க்றைஸ்தவப் பெயரில் பரிச்சயம் செய்து கொண்டதில் வராத இழிவு உங்களை அன்பு மிக மதிப்பு மிக ரெவரெண்டு என்று அழைத்ததில் எப்படி வரும்.

    கோபமெல்லாம் படாதீர்கள். ஒரு க்ஷணம் அமரர் மலர்மன்னன் மஹாசயரை மனதில் இருத்தி நீங்கள் உங்கள் செயல்பாடுகளை அவதானித்துப் பாருங்கள்.

    மிக்க அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *