கடற்கரைச் சிற்பங்கள்

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

image

வடிக்கப் படுகின்றன

நவீன சிற்பங்கள் கடற்கரையில்,

பிரம்மனின் படைப்பு

இலக்கணத்தை

வெற்றி கண்டதாக !

 

பிஞ்சு விரல்களின்

மண் பூச்சுக்களில்

வர்ணம் தீட்டிக் கொள்ள

முற்படும் மனங்கள்

அத்தனையும்!

 

சுற்றுப்புறம்

ஸ்தம்பிக்கக் கூடும்

அழகியலாய் வடிக்கப்படும்

கற்பனைக் கவிதை களுக்காக !

 

ஒரு மலையைக்

கட்டியெழுப்ப

மழலை விரல்களுக் குத்தான்

ஆகாய பெலன் !

கட்டிய பின் பொங்கிவரும்

குறுஞ் சிரிப்பில்

தோய்ந்து போகிறதே

என் இதயம்.

 

ஏதேனும் ஒரு

மழலையின் இதயம்

பரிதவிக்கக் கூடும்

விரல் ஸ்பரிசித்த

தன் படைப்பு களுக்காக !

தனித்து விடப்பட்ட

சொப்பு களுக்காக !

 

உயிரையும் வதைக்கும்

கண்ணீர் துளிகள்

மிச்ச மிருக்கலாம்,

மழலையை கடந்து விட்ட

நமக்குள்ளும்

மழலையாய்

அப்போதைய நினைவுகள் !

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் தமிழ்ச்செல்வி ,

    ///ஒரு மலையைக்

    கட்டியெழுப்ப

    மழலை விரல்களுக் குத்தான்

    ஆகாய பெலன் !///

    வார்த்தைகள் வந்து விழுகின்றன….
    அருமையான கவிதை..
    அன்புடன்

    ஜெயஸ்ரீ ஷங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *