புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 52

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

emerson(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.

                                    E. Mail: Malar.sethu@gmail.com     

52.அ​​மெரிக்காவின் சிறந்த சிந்த​னையாளராகத் திகழ்ந்த ஏ​ழை……

(நி​றைவுப் பகுதி)

     வாங்க…வாங்க…இப்பத்தான் ஒங்களப் பத்தி ​நெனச்​சேன் …அடுத்த நிமிஷத்துல நீங்க​ளே வந்து நிக்கறீங்க… என்னங்க அது ​கையில ஒரு புத்தகத்த வச்சிப் படிச்சிக்கிட்டு வர்ரீங்க…இங்க ​கொடுங்க நான் பாத்துட்டுத் தர்​ரேன்…என்னது நீங்க​ளே படிச்சிச் ​சொல்றீங்களா… சரி… சரி ​சொல்லுங்க…..

“இயற்​கை​யையும் வாழ்க்​கை​யையும் நமக்கு மகிழ்ச்சியுள்ளதாக ஆக்கும் மனித​னே மனிதன்”

“வீடு தன்​னைக் கட்டிய ​கொத்த​னைத்தான் ​போற்றிப் புகழும்”

“உனக்குப் பின்னால் வரு​வோர்க்குக் க​தை​வைத் திறந்து விடுபவனாக இரு. இந்தப் பிரபஞ்சத்​தைக் குருட்டுப் பா​தையாக்கி விட முயலா​தே!”

இருங்க…இருங்க…இந்தத் தத்துவக் கருத்துக்க​ளை​யெல்லாம் யாருங்க ​சொன்னாங்க…

என்னது நான் ​போனவாரம் ​கேட்டதற்குரிய வி​டை இதுதாங்குறீங்களா…? அப்ப யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா….அட​டே சரியாச் ​சொன்னீங்க…இந்த மாதிரி தத்துவக் கருத்துக்க​ளைச் ​சொன்னவரு அ​மெரிக்காவின் சிறந்த சிந்த​னையாளராகத் திகழ்ந்த எமர்ஸன் தான்… அப்ப அவரப் பத்தி ஒங்களுக்குத் ​தெரியும்னு ​சொல்லுங்க…என்னது அவ​ரோட தத்துவங்களப் பத்தித்தான் ​தெரிஞ்சுக்க முடிஞ்சதா….? அவரப்பத்தி முழு​மையான தகவல்கள் ​வேணுமா…?  நா​னே அவரப்பத்தி விரிவாச் ​சொல்​றேன் ​கேட்டுக்​கோங்க…என்ன சரியா….

வறு​மையில் பிறந்த ​மே​தை

உலக வரலாற்​றை எழுதுபவர்கள் உண்​மையில் பத்​தொன்பதாம் நூற்றாண்​டைப் ​பொன்​னெழுத்துக்ளில் ​பொறிக்க ​வேண்டும். ஏன்னா பத்​தொன்பதாம் நூற்றாண்டின் வரலாற்று நிகழ்ச்சிக​ளைப் ​போன்று உலகம் அதற்கு முன்பு எப்​போதும் காண​வுமில்​லை. ​பெரு​மைப்பட்டுக் ​கொண்டதுமில்​லை…

இந்தியாபில் காந்தி​யையும்(1869-1948), இரவீந்திர​ரையும்(1861-1941), பாரதி​யையுமட்(1882-1921), பிறப்பித்தது. இங்கிலாந்தில் ஜான் ஸ்டூவர்ட்மில்​லையும்(1806-1873), தாமஸ் கா​ர்லை​லையும்( ​டென்னிஸ8னயும்(1809-1892), சார்லஸ் டிக்கன்​ஸையும்(1812-1870), எட்வின் ஆர்ஸில்​டையும்(1832-1904), இத்தாலியில் கரிபால்டி​யையும்(1807-1882), ரஷ்யாவில் கார்க்கி​யையும்((1868-1936), ​​லெர்மான்​டோ​வையும்(1814-1841), ​லெனி​னையும்(1870-1924), ஸ்டாலி​னையும்(1879-1953), அ​மெரிக்காவில் ஆபிரகாம் லிங்க​னையும்(1809-1865), ரால்ப் வால்​டோ எமர்ஸ​னையும்(1803-1882) பிறப்பித்தது. உலகின் ஒவ்​​வொரு து​றையிலும் ஆழ்ந்து சிந்தித்துச் சிந்த​னையின் பல​னை உலகிற்கு உதவும் உத்தமர்க​ளை உலகின் ஒவ்​வோர் பிரிவிலும் பிறப்பித்து விட்டது. அவர்க​ளை​யே வணங்குதற்குரியவர்கள் என்கின்றனர் அறிஞர்கள். நாம் வணங்குவதற்குரிய அத்த​கைய மகா ​மே​தைதான் எமர்ஸன் என்ற ஒப்பற்ற சிந்த​னையாளர்.

“மனிதர்கள் ​பேரா​சையினில் சுய நலத்திற்காகப் பாடுபடும்​பொழுது அறிஞர்கள் தனித்து நின்று உலக நன்​மைக்காகப் பாடுகபடுகின்றனர்” என்ற கீ​தையின் உப​தேசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்தான் எமர்ஸன்.

1803-ஆம் ஆண்டு ​மே மாதம் 25-ஆம் நாள் வில்லியம் எமர்ஸன், ரூத்ஹஸ்கின்ஸ் ஆகி​யோரது மகனாக பாஸ்டனில் எமர்ஸன் பிறந்தார். ​பெற்​றோர் அவருக்கு ரால்ப் வால்​டோ எமர்ஸன் என்று ​பெயர் சூட்டினர். ரால்ப் வால்​டோ என்பதுதான் ​பெயர். எமர்ஸன் என்பது அவரது குடும்பப் ​பெயர். இக்குடும்பப் ​பெய​ரே இறுதியில் நி​லைத்துவிட்டது.

சாதாரண எளிய குடும்பததில் எமர்ஸன் பிறந்தார். அவரது குடும்பம் படு​மோசமான மத​வைராக்கியமும் ​வைதீகத் தன்​மை​யையும் ​கொண்ட குடும்பமாகத் திகழ்ந்தது. ​தெய்வ நம்பிக்​கையும் கட்டுச் ​செட்டான எளிய வாழ்க்​கையும் ​கொண்டவர் எமர்ஸனின் தந்​தை. அவர் பாட்டன் ஒருவர் “தன் சந்ததியினரில் யாரும் பணக்காரனாகாதிருக்க அருள் ​செய்யும்படி ஆண்டவனிடம் பிரார்த்தித்தாராம். ஏ​னென்றால் ​செல்வச் ​செருக்கால் தீ​மை புரிவ​தை​ வாழ்க்​கையில் தன் சந்ததியினர் குறிக்​கோளாகக் ​கொண்டுவிடுவா​ரோ என்று அஞ்சும் உள்ளம் ப​டைத்த அறி​வோனின் பரம்ப​ரையில் வந்தவர்தான் எமர்ஸன்.

கார்க்கிக்கு அன்பிஸா கி​டைத்த​தைப் ​போன்று எமர்ஸனுக்கு அவனது அத்​தை ​மேரிமூடி கி​டைத்தாள். எமர்ஸன் பிறந்த​போது அவளுக்கு வுமார் முப்பதுவயதுதானிருக்கும். அவளுக்கு அவளது ச​கோதரன் வில்லியம் எமர்ஸனிடம் கருத்து ​வேறுபாடு இருந்தாலும் அவ​ளை வில்லியம் தனது வீட்டில் மகிழ்ச்சியாக​வே வர​வேற்பார். அவளுக்கு குழந்​தை எமர்ஸனிடம் அளவு கடந்த அன்பு. அவ​ளே எமர்ஸ​னை அன்புடன் ​பேணி வளர்த்து அறிவூட்டிய அறிவுச் ​செல்வி எனலாம்.

ரால்ப் வால்​டோ எமர்ஸன் பள்ளிச் சிறுவனாக இருந்த​போது ​வெளியில் யாருடனும் ​சேரமாட்டார். அவர் தாய் ரூத்தான் குழந்​தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்க​ளைக் கற்றுக் ​கொடுப்பதில் அதிக கவனம் எடுத்து வந்தாள். அவள் எமர்ஸ​னை ​வெளியில் ​போய் வி​ளையாடச் ​சொன்னால் தீய குழந்​தைகளுடன் ​சேர்ந்து அவரும் தீயவராகிவிடுவார் என்று அஞ்சி ​தெருவில் ​போய் வி​ளையாடக்கூட அனுமதிக்கமாட்டாள். அத்த​கைய கடும் கட்டுப்பாட்டுக்குள் வாழ​வேண்டியவராக இருந்தார் எமர்ஸன்.

எமர்ஸன் கண்ட இருள் உலகம்

எமர்ஸன் ​பெர்​றோர்களின் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடந்தாலும் அவர் சிறுவயதி​லே​யே மிகுந்த துன்பங்களுக்கு ஆளாகிவிட்டார். அவர் மூன்று வயதுக் குழந்​தையாக இருந்த​போது அவரது மூத்த ச​கோதரன் ஜான்கிளார்க் எமர்ஸன் இறுந்து ​போனான். அதன்பின்னர் நான்கு ஆண்டுகள் கூட ஆகாத நி​லையில் அவனது தந்​தை வில்லியம்ஸ் எமர்ஸன் இறந்தார். இவ்விறப்பு எமர்ஸனின் குடும்பத்​தைத் துன்பக் குழிக்குள் அழுத்தியது. எமர்ஸனின் தந்​தையார் இறந்த​போது எமர்ஸனுக்கு எட்டுவயது.

தந்​தையின் அகால மரணம் அப்​பொழுது எமர்ஸனுக்குத் துக்கத்​தைத் தரவில்​லை. அவரும் பத்துவயதான அவரது ச​கோரதரன் வில்லியமும் சவஊர்வலத்​தை ​வேடிக்​கை பார்த்துக் ​கொண்​டே ​சென்றனர். வில்லியம் எமர்சன் இறந்த அ​தே ஆண்டில் எமர்சனின் தாய் ரூத் ​பெண் குழந்​தை ஒன்​றைப் ​பெற்​றெடுத்தாள். அக்குழந்​தைக்கு ​மேரி கா​ரோ​லைன் எமர்ஸன் என்று ​பெயரிட்டு எமர்சனது தாய் வளர்த்தாள். அந்​தோ பரிதாபம்! அக்குழந்​தையும் மூன்றுவருடங்கள் இருந்துவிட்டு இறந்துவிட்டாள். இறப்புத் துன்பம் எமர்ச​னையும் அவரது குடும்பத்​தையும் துரத்தியது.

குடும்பத் த​லைவ​னை இழந்த நி​லையில் எமர்சனது குடும்பம் த​லைவனில்லாக் கப்ப​லைப் ​போன்று தத்தளித்தது. வில்லியம் எமர்சன் இறந்தவுடன் அவர் மத​போதகராகஇருந்து ​தொண்டாற்றிய ​தேவாலயம் அவரது குடும்பத்திற்குத் தற்காலிக உதவியாக வாரத்திற்கு 25 டாலர்கள் ​கொடுத்து வந்தது. அதன் பின்னர் ஆண்டு ஒன்றிற்கு 500 டாலர்கள் வீதம் ஏழு ஆண்டுகள் ​கொடுத்துவந்தது. ஓராண்டு மட்டும் அத்​தேவாலயத்திற்குச் ​சொந்தமான வீட்டில் தங்க அனுமதித்தது.

இந்த உதவி​யைத் தவிர குடும்பத் த​லைவ​னை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ​​வேறு கதி ஒன்றும் இல்​லை. எமர்ஸனின் தாய் மிக்க சிக்கனமாக​வே குடும்பம் நடத்தினாள். அவள் என்னதான் கட்டுச்​செட்டாகக் குடும்பம் நடததினாலும் அந்தச் ​சொற்ப வருவாயைக் ​கொண்டு அவர்களால் குடும்பம் நடத்த முடியவில்​லை. அவள் பலரிடமும் உதவி ​கேட்டாள். யாரும்  உதவ முன்வரவில்​லை. கான்கார்டுக்குப் ​போய் தன் பாட்டனிடம் தனது நி​லை​யை எடுத்துக் கூறினாள் எமர்ஸனின் தாய். அவளது கண்ணீர்க் க​தை​யைக் ​கேட்ட அவர் அவளின் குழந்​தைகளுள் ஒன்​றை மட்டும் தன்னிடம் அனுப்பிவிடுமாறு கூறினார். அதன்படி எமர்ச​னை அவரது தாய் பாட்டனிடம் வளர்க்குமாறு அனுப்பிவிட்டு வந்தாள்.

அப்​போதும் எமர்சனின் குடும்பம் வறு​மையிலிருந்து விடுபடவில்​லை. அவரது குடும்பத்​தை வறு​மை துரத்தியது. அக்குடும்பம் வறு​மையிலிருந்து தப்பிப்பதற்கு வழியில்லாததால் வீட்டிலிருந்த இருநூறுக்கும் ​மேற்பட்ட நூல்க​ளை விற்றனர். ஒரு சில புத்தகங்கள் மட்டு​மே எஞ்சியிருந்தன. அவ்வாறு விற்றும் குடும்ப வறு​மை ஓயவில்​லை. வறு​மையின் ​கொடு​மை ​தொடர்ந்தது. இந்நி​லையில் எமர்சனின் அத்​தை அக்குடும்பத்திற்கு ​வேண்டிய உதவிக​ளைச் ​செய்து வந்தாள்.

வறு​மையிலும் படித்தல்

எமர்ச​னை வறு​மை நி​லையிலும் அவரது தாய் அவரது ஒன்பதாவது வயதில் பாஸ்டனில் உள்ள ​பொது இலத்தின் பள்ளிக்குப் படிக்க அனுப்பினாள். அப்பள்ளியில் மாணவர்க​ளை நிர்வாகம் கடு​மையாகத் தண்டித்தது. எமர்சன் அப்பள்ளியில் படித்த​​போது ஆசிரியரிடம் கடு​மையாக அடிவாங்கினார். எமர்சன் பல நாள் பள்ளிக்கு வராது பிற பிள்​ளைகளுடன் ​சேர்ந்து ஊர்சுற்றிவிட்டுக் கடற்க​ரைக்குப் ​போய் கிளிஞ்சல், வழங்கற்கள் ஆகியவற்​​றைப் ​பொறுக்கிக் ​கொண்டு வந்து வி​ளையாடுவார்.

பள்ளியில் படிக்கும்​போது எமர்சனுக்குப் ​போட்டுக் ​கொள்ளக்கூட ஒரு சட்​டையில்​லை. இருந்த ஒ​ரே ஒரு சட்​டை​யை அவரும் அவரது ச​கோதரனும் மாற்றி மாற்றிப் ​போட்டுக் ​கொண்டு பள்ளிக்குச் ​சென்றனர். அத​னைக் கண்டு மற்ற மாணவர்கள் அவர்களிருவ​ரையும் ​கேலி ​செய்தனர். எமர்சனும் அவரது ச​கோதரரும் ஏ​​ழைகள் என்பதால் பணக்கார வீட்டுப் பிள்​ளைகள் அவர்களுடன் ​சேர்வதில்​லை. இந்த நிகழ்வு எமர்சனின் மனதில் பலவிதமான எண்ணங்க​ளைத் தூண்டிவிட்டது. அவற்​றை மனதிற்குள்​ளே​யே அடக்கிக் ​கொண்டு எமர்சன் படித்தார்.

இந்நி​லையில் ​கோவிலுக்குப் புதிய மத​போதகர் வந்துவிட்டதால் வீட்​டைக் காலி​செய்யுமாறு ​கோவில் நிர்வாகத்தினர் வற்புறுத்தினர். எமர்சனின் தாய் மீண்டும் தனது உறவினர்களிடம் ​கை​யேந்தி உதவி ​கோரத் ​தொடங்கினாள். யாரும் உதவி ​செய்யக் கூடிய நி​லையில் இல்​லை. இந்த ​நேரத்தில் உள்நாட்டில் ​போர்​மேகங்கள் சூழ்ந்ததால் நி​லை​மை மிகவும் ​​மோசமாகியது.

வி​லைவாசி உயர்வால் உதவியின்றித் தவித்த எமர்சன் குடும்பம் வாழ வ​கையின்றித் தவித்தது. இந்தச் சமயத்தில் எமர்சனின் மூத்த ச​கோதர​னை ​மேல்ப்படிப்பிற்காகக் ​கேம்பிரிட்ஜுக்கு எமர்சனின் தாயார் படிப்பதற்கு அனுப்பினாள். அத்த​னை துன்பங்க​ளையும் ​பொறுத்துக் ​கொண்டு தனது குழந்​தைகள் கல்வி கற்க ​வேண்டும் என்ற ஒ​ரே குறிக்​கோ​ளை மட்டும் அத்தாயார் த​லையாய ​செயலாகக் ​கொண்டிருந்தாள்.

​கேம்பிரிட்ஜ் ​போய்ச் ​சேர்ந்த எமர்சனின் மூத்த ச​கோதரன் அங்குள்ள நி​லை​மைக​ளை விளக்கமாகக் கடிதத்தில் விவரித்து  எழுதினார். அத​னைக் கண்ட எமர்சனின் தாய் கண்ணீர் வடிக்கவில்​லை. தன் மக​னை ஆசிர்வதித்து,

“மக​னே உன்னிடம் எனக்கு நல்ல நம்பிக்​கையுண்டு. உன் எதிர் காலத்​தை நிர்ணயிக்கும் எஜமானன் நீதான். உன் ​பெயர் புகழ் சூடி வாழகின்ற காலம் முழு​மையும் உயர்ந்த நி​லையில் இருப்பதற்கு உன்​னை நீ தயார் ​செய்து ​கொள்வாய் என்று எண்ணுகி​றேன். துன்பங்களால் மனம் உ​டைந்து விடா​தே மக​னே!” என்று அறிவு​ரை கடிதம் எழுதினாள். எமர்சனின் மூத்த ச​கோதரன் அன்​னையின் ஆ​ணை​யைச் சிர​மேற்​கொண்டு பயின்றான்.

பாத்தீங்களா…! எமர்சனின் தாய் மிகச் சிறந்தவளாக விளங்கிய​தை….அதனாலதான் தா​யைக் கடவுளாக எல்லா உயிர்களும் ​நெனக்குது…. தாய்​மை எவ்வளவு உயர்ந்தது என்ப​தை எமர்சனின் தாயின் ​செயல்கள் நமக்குப் புலப்படுத்துதுங்க… எமர்சன் தனது ச​கோதர​னைவிட மிகவும் நன்கு பயின்றார். அவர் 1817-ஆம் ஆண்டில் தனது 14-ஆவது வயதில் ஹார்வார்ட் கல்லூரியில் ​சேர்ந்து 1821-ஆம் ஆண்டில் பட்டம் ​பெற்றார்.

எமர்சனின் பள்ளி வாழ்க்​கையும், கல்லூரி வாழ்க்​கையும் மிதமிஞ்சிய வறு​மை​யும் துன்பங்களும் நி​றைந்ததாக இருந்தது. அவற்​றை​யெல்லாம் அனுபவித்துக் ​கொண்​டே ​எமர்சன் கல்வி கற்றார். கல்வித் ​தொடர்பான ​செலவுகளுக்காக நண்பர்களிடமும் ​தேவாலயங்களிலிருந்தும் உதவில் பல ​பெற்றார் எமர்சன். “எண்​ணோடு எழுத்தின் வனப்​பே வனப்பு” என்பதற்​கேற்ப துன்பங்க​ளைப் ​பொருட்படுத்தாது எமர்சன் கரும​மே கண்ணாகக் ​கொண்டு கல்வி பயின்றார்.

கை​கொடுத்த காதல் திருமணம்

கல்வி கற்று முடித்த எமர்சன் தனது அண்ணன் நடத்தி வந்த பள்ளியில் அவருக்கு உதவியாக மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தினார். ஆனால் எமர்சனுக்கு அப்பணியில் மனம் ​​செல்லவில்​லை. மன​மொப்பாம​லே​யே அப்பணி​யை எமர்சன் ​செய்தார். பட்டம் ​​பெற்றும் எமர்ச​னைப் பார்த்து வாழ்க்​கை ​கேலி ​செய்து ​கொண்டிருந்தது.

இருப்பினும் எமர்சன் மனம் தளராது வாழ்ந்தார். இந்நி​லையில் இள​மையின் வயத்திலிருந்த எமர்சன் தனது இருபத்​தைந்தாம் வயதில் எல்லன் லூயிஸா தக்கர் என்ற அழகான ​பெண்​ணைக் காதலித்து மணந்து ​கொண்டார். எமர்ச​னை மணந்த காதல் ம​னைவிக்கு அப்​போது 17 வயது. அவள் மிகுந்த அழகானவளாகவும் அறிவாற்றலிலும் நற்குணங்களும் நி​றைந்தவளாகவும் விளங்கினாள். அவர்களது முதல் சந்திப்பி​லே​யே அவர்கள் ஒருவர்பால் ஒருவர் காதல் ​கொண்டு விட்டனர்.

காதல், ஒருவ​னை எப்படி ​வேண்டுமானாலும் மாற்றும் வல்ல​மை உ​டையது. ஒன்று​மே இல்லாத ஏ​ழையான எமர்ச​னை காதல் மிகுந்த உயரத்​தை எட்டச் ​செய்தது. எமர்சனின் இதயத்தில் அழகு ராணியாகக் ​கொலுவீற்று அவனின் ஆத்மா​வை​யே ஆட்டி​ வைக்கும் எல்லனின் உருவத்​தைத் தவிர அவர் எங்கும் எதிலும் ​வே​றொன்றும் காணமுடியாதபடி அக்காதல் ​செய்தது. காதல் அவரது உள்ளத்​தே ஆயிரமாயிரம் ​பொற்கனவுக​ளை உருவாக்கிக் ​கொண்டிருந்தது. எமர்சன் அவற்றி​னைக் கவி​தைகளாக எழுதி அதற்கு, ”கனவுகள்” என்று மகுடம் சூட்டினார்.

அந்தக் கனவில் “உலகம் அயர்ந்து தூக்கிக் ​கொண்டிருக்கும்​போது அவர்கள் இருவர் மட்டும் தனித்திருக்கின்றனர். சலனமின்றி ஓ​கெ ​கொண்டிருக்கும் அகன்ற ஆற்றின்க​ரையினூ​டே அவர்கள் இன்பத்தில் தி​ளைத்துப் ​போய் ​மெளமானச் ​செல்கின்றனர்.

காதல் எமர்ச​னைக் கவிஞனாக்கியது. அவர் தன் காதலியன் ​பொருட்டுப் பல காதற் கவி​தைக​ளை எழுதினார். அவளுக்கும் பல காதற் கடிதங்கள் எழுதினார். அவரது ஒவ்​வொரு கடிதங்களிலும் தனது காத​லைப் பற்றி விவரித்தார். தனது காதலிக்கு,

“உன் காதலால் நான் ​மையலாகிவிட்​டேன்!

“உன் ​பேரழகு என்னுள்​ளத்​தே

காதல் ​நே​யை உண்டு பண்ணிவிட்டது!”

என்​றெல்லாம் மனம் விட்டு கவி​தைகள் எழுதினார் எமர்சன். ஆனால் அவரகளது காதல் ​தெய்வீகமானதாகும். அந்தக் காத​லைப் பற்றி, “எங்கள் காதல் ஆத்மீகமானது. காதல் அவசியம்தான். நாங்கள் அநித்தியமான உடலழ​கைக் காதலிக்கவில்​லை. ஆத்மீகப் ​பொருள்க​ளை​யே நாங்கள் காதலித்து வந்​தோம்” என்று எமர்சன் குறிப்பிடுகிறார்.

எமர்சன் தனது காதலி​​யை மணந்ததால் அவர் பயனுள்ள மனிதனாக மாறினார். ஆம்! காதல் அவ​ரை சமுதாயத்திற்குப் பயன் வி​ளைவிக்கும் மனிதனாக ஆக்கியது. தனது காதல் ம​னைவிக்குப் பல்​வேறு புதிய உ​டைக​ளையும் புதிய நூல்க​ளையும் வாங்கிக் ​கொடுத்தார். தன் இ​ளைய ச​கோதரனுக்கும் உதவி ​செய்து வந்தார். தானும் பல்​வேறு நூல்க​ளைத் ​தொடர்ந்து படித்தார்.

​கோ​லோரிட்ஜின்,”நண்பனும் காம்பியின் மனித அ​மைப்பு விதிகளும்” எமர்சனுக்கு மிகவும் பிடித்த நூலாகும். அவர் அவற்​றைப் படித்துவிட்டுத் தன் அத்​தையுடனும், தன் ச​கோதரர்களுடனும் விவாதித்து அக்கருத்துக்களின் உண்​மை​யை அறிய முயன்றார். இதற்கு அவரது காதல் ம​னைவி மிகுந்த உதவியாக இருந்தாள். அவள் எமர்சனுடன் எதிர்நின்று சரிக்குச் சரியாக விவாதிப்பாள். எமர்சன் கருத்துக்கள் சரியாக இருந்தால் அத​னை ஏற்றுக் ​கொண்டு அவ​ரைப் பாராட்டுவாள். இவ்வாறு இ​ணைபிரியாத காதலர்களாக இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

விதியின் சதி

எமர்சன் தனது ம​னைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வாழ்க்​கையில் யார் கண்பட்ட​தோ ​தெரியவில்​லை. அவர்களிருவரின் வாழ்விலும் விதி வி​ளையாடத் ​தொடங்கியது. ஒன்ற​ரை ஆண்டுகள்கூடச் சரியாக நி​றைவ​டையவில்​லை. எமர்சனின் காதல் ம​னைவி காச​நோயால் ​பெரிதும் பாதிக்கப்பட்டாள். எமர்சன் காதல் ம​னைவி​யைக் காப்பாற்றப் ​பெரிதும் ​போராடினார். எவ்வளவு ​பெரிய சிகிச்​சைகள் ​செய்தாலும் அவரால் அவரது ம​னைவி​யைக் காப்பாற்ற முடியவில்​லை. 1831-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் நாள் எமர்ச​னை இவ்வுலகில் தவிக்கவிட்டுவிட்டுச் விண்ணுலக​டைந்தாள். எமர்சன், எல்லன் காதல் வாழ்​க்கை​யைக் காலன் துண்டித்தான்.

தனது காதல் ம​னைவியின் பிரிவால் எமர்சன் ஏங்கித் தவரித்தார். அவருக்கு உயிர் வாழ்வ​தே மிகவும் துன்பமாக இருந்தது. அவ​ளை அவளது விருப்பப்படி​யே ராக்ஸ்பரியில் அவளது தந்​தையின் கல்ல​றைக்குப் பக்கத்தில் அடக்கம் ​செய்தார்கள். எமர்சன் நீண்ட காலம்வ​ரை ஒவ்​வொரு நாள் கா​லையிலும் காதல் ம​னைவியின் கல்ல​றையின் முன் ​போய் நின்று தன் காதல் ம​னைவி​யை வழிபட்டு வந்தார்….

பாத்துக்​கோங்க……. எவ்வளவு உயர்ந்த பண்பாளராக விளங்கினாருன்னு… விரும்பிய காதல் வாழ்க்​கை அ​மைந்துவிட்டால் அதுமாதிரி ​​சொர்க்கம் ஏதுமில்​லைங்க…அ​தைவிட அது அழியற​போது ஏற்படுத்துற வலி தாங்க முடியாதுங்க….அந்த வலிதான் எமர்சன மிகப்​பெரிய சிந்தனாவதியாக ஆக்கிவிட்ட​தோன்னு நமக்கு எண்ணத்​ தோணுதுங்க….. இள​மையிலிருந்​தே துன்பத்திற்குள்ளான எமர்சன் சிறிது காலம்தான் ​சொர்க்கத்​தை அனுபவித்தார். அடுத்த கட்டத்தில் அவர் நரக ​வேத​னைகளுக்கு ஆளானார்….இதுதான் விதி என்பது….

சிந்த​னையாளர் எமர்சன்

இதய அரசியான எல்லனின் பிரிவு எமர்ச​னைத் மீளாத் துயரத்தில் மூழ்கடித்துவிட்டது. அவனது சிந்த​னைகள் எல்ல​னைப் பற்றி​யே சுழன்று ​கொண்டு வந்தது. அவர் மத​போதகராக இருந்து பணி ​செய்வது பிடிக்காததாக இருந்து வந்தது. அப்பணியில் அவர் மனம் ஒட்டவில்​லை. தத்துவ ஆராய்ச்சிகளில் எமர்சன் தனது மனத்​தைத் திருப்பினார். தனது  ச​கோதரனுக்கு, “நான் அற நூல்களின் உண்​மைக​ளை அறிய முயன்று ​கொண்டிருக்கின்​றேன். அ​வைதான் நான் பிறந்தது முதல் இந்நாள்வ​ரை என்​னை எப்​போதும் மயக்கிக் ​கொண்டு வருகின்றது….” என்று தனது மனநி​லை​யை விவரித்துக் கடிதம் எழுதினார்.

எமர்சன் முழு​நேரமும் மத​போதகராக​வே இருந்தார். அவ்வாறிருந்தாலும் குருட்டுத்தனமான ​போக்குகளுக்குத் த​லையாட்டும் ​பொம்​மையாக அவர் இருக்கவில்​லை. சமயச் ​சொற்​பொழிவுகளின்​போது வழக்கமாகக் கூறும் உ​ரைகளுடன் அவவப்​போது அவர் உள்ளத்தில் ​தோன்றும், “நன் மனிதன் தன்​னை​யே வணங்குவான். தன் மனச்சான்​றை வணங்குவான்” என்பன ​போன்ற உண்​மைக​ளையும் ​சேர்த்து சமயக் கூட்டத்தாரி​டை​​யே ​சொல்வார். தனது ஒவ்​வொரு ​சொற்​பொழிவிலும் எமர்சன் தன்னம்பிக்​கை​யைப் பற்றி அதிகம் வலியுறுத்திக் கூறுவார்.

இவரது புதிய கருத்துக்கள் மற்ற மதகுருக்கள் யாருக்கும் பிடிக்கவில்​லை. மற்றவர்களுக்குப் பிடிக்கவில்​லை என்றாலும் எமர்சன் தனது கருத்துக்க​ளைத் துணிந்து கூறி வந்தார். அவருக்கு மத​போதகராக இருக்கப் பிடிக்கவில்​லை. ம​னைவி இறந்த ஒரு ஆண்டு காலத்திற்குள்ளாக​வே அவரது மனநி​லையில் ​பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

மத​போதகர் பணி​யை விட்டுவிட எமர்சன் துணிந்த​போது அவரது அத்​தை ​மேரிமூடி தடுத்தார். ஆனால் எமர்சனது கருத்து அதற்கு மாறாக இருந்தது. “இந்தத் ​தொழில் ப​ழை​மையாகி விட்டது. இந்தப் புதிய சகாப்தத்தி​லேயும் கூட நாம் நம் மூதா​தையர்க​ளைப் ​போன்று ​செத்துப்​போன சம்பிரதாயங்களுக்குப் வழிபாடு ​செய்து வருகின்​றோம்” என்று எமர்சன் நி​னைத்தார். கவிஞர் ​கோல்ரிட்ஜின் வி​மோசனத் தத்துவமும் க​லைஞர் ஸ்வீடன் பரக்கின் அற்புதக் கண்​ணோட்டமும் கவிஞர் ​வேர்ட்ஸ்​வொர்த்தின் ஞான ஒளிவீசும் கவி​தைகளும் அறிஞர் கார்​லைலின் நூல்களும் எமர்ச​ன் உள்ளத்​தைப் ​பெரிதும் பண்படுத்தின.

இந்நி​லையில் அறிஞர் கார்​லைல் எழுதிய கட்டு​ரை ஒன்று எமர்சனுக்குப் படிக்கக் கி​டைத்தது. அதில் இடம்​பெற்றுள்ள, “மனசாட்சிக்கு வி​ரோதமாக எந்த ஒரு காரியமும் ​செய்வது நல்லதுமல்ல. வி​வேகமுமல்ல. நான் அப்படித்தான் நடக்கின்​றேன். மனசாட்சிக்கு வி​ரோதமாக நான் ஒன்றும் ​செய்ய மாட்​டேன். ஆண்டவன் எனக்​கே து​ணைபுரிவாராக” என்ற வாசகத்​தை எமர்சன் தனது ​நோட்டுப் புத்தகத்தில் குறித்து ​வைத்துக் ​கொண்டார். அவர் ​மேலும் துணிந்து தன் சிந்த​னைக​ளை ​வெளியிடத் ​தொடங்கினார்.

இதனால் ​வைதீகமத குருமார்கள் எமர்ச​னை ​வெறுக்கத் ​தொடங்கினர். இதனால் எமர்சன் பிடிக்காத மத​போதகர் பணி​யை உதறிவிட்டு 1832-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று ​வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணத்​தை ​மேற்​கொண்டார். ஐ​ரோப்பிய நாடுக​ளைச் சுற்றிப் பார்த்து தன் மனங்கவர்ந்த அறிஞர்க​ளையும் சிந்த​னையாளர்க​ளையும் எமர்சன் கண்டு உ​ரையாடினார். லண்டன் மாநகரத்திற்குச் ​சென்று கவிஞர் ​கோல்ட்ரிட்​ஜையும் ​வேர்ட்ஸ்​வொர்த்​தையும் சந்தித்து அவர்களது நட்​பையும் அன்​பையும் ​பெற்றார்.

அ​மெரிக்கர்கள் நீக்​ரோக்க​ளை அடி​மைப்படுத்துவ​தை எமர்சன் எதிர்த்தார். நீக்​ரோக்களின் விடுத​லைக்குப் பாடுபடும் இயக்கங்களுடன் அவரும் ​சேர்ந்து அருந்​தொண்டாற்றினார். ஆனால் அந்த ஒரு ​போராட்ட​மே அவரது வாழ்வின் குறிக்​கோளாக இருந்துவிடவில்​லை. “அந்த நீக்​ரோக்க​ளைக் காட்டிலும் படு​மோசமான ​வேறு அடி​மைகள் உள்ளனர். அவர்க​ளை​யே நான் விடுவிக்க ​வேண்டும் என்ப​தை நான் உணர்​வேன். சி​றைப்பட்டுக் கிடக்கும் சிந்த​னைகளும் ஆத்ம உர்ச்சிகளு​மே அவர்கள்பால் மக்காளட்சிக்கு மிக முக்கிமானவர்கள். அவர்கள்பால் அன்புள்ளவர்களில்​லை. அரைக​ளைப் பாதுகாப்பவர்கள் இல்​லை. அவர்களுக்குக் காவற்காரர்கள் யாருமில்​லை. ஆனால் நான் தான்” என்றுதம் உள்ளக் கருத்​தைத் தயங்காது எமர்சன் கூறினார்.

மறுமணம்

ஐ​ரோப்பியச் சுற்றுப் பயணத்திற்கப் பின்னர் ஓராண்டு காலம்வ​ரை எமர்சனின் வாழ்க்​கை ஓரிடத்திலும் நி​லையில்லாதவாறு இருந்தது. அவரது அன்​னையார் அப்​போது நியூ​டோன் அருகில் வசித்து வந்தார். அவர் பாஸ்டனில் தம் இருப்பிடத்​தை ஒவ்​வொருஇடமாக மாற்றிக் ​கொண்​டே இருந்தார். இதற்குச் சுற்றுப் பயணத்தால் ஏற்பட்ட கடன் ​தொல்​லைக​ளே காரணமாகும். கடன்காரர்கள் ​​தொல்​லைகள் ​கொடுக்க​வே தன்னு​டைய வீட்டில் இருந்த தளவாடப் ​பொருட்க​ளை விற்றுக் கடன்க​ளைத் தீர்த்தார்.

ஐ​ரோப்பிய நாடுகளில் தாம் கண்ட அனுபவங்களின் பயனாக எமர்சன் “இயற்​கையின் பயன்கள்” என்ற ​பொருள் குறித்து ​சொற்​பொழிவாற்றினார். ​அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் மனிதனுக்கும் உலகிற்கும் உள்ள உற​வைப் பற்றி ஒரு ​சொற்​பொழிவி​னையாற்றினார். அதன் பின்னர் 1834-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் நாள் பாஸ்டன் ​மெக்கானிக் இன்ஸ்டியூஷன் எனும் நிறுவனத்தில் “தண்ணீர்” என்ற த​லைப்பில் ஒரு ​சொற்​பொழிவாற்றினார்.  அத​னை அடுத்து ​மே மாதம் பாஸ்டன் இயற்​கை வரலாற்றுக் கழகத்தின் ஆண்டு விழாவின்போது அறிவியல் கல்வியின் முக்கியத்துவத்​தை எடுத்து​ரைத்தார்.

ஒருநாள் பாஸ்டன் ​தேவாலயத்தில் எமர்சன் ​சொற்​பொழிவாற்றினார். அவரது ​சொற்​பொழிவில் மன​தைப் பறி​கொடுத்த ​லைடியா ஜாக்சன் என்ற ​பெண் அவ​ரைப் பற்றி விசாரித்துத் ​தெரிந்து ​கொண்டாள். அதன் பின்னர் 1834-ஆம் ஆண்டு ஒரு நாள் அவளின் ​சொந்த ஊரான பி​ளைமவுத்தில் அவரது ​சொற்​பொழி​வைக் ​கேட்கும் வாய்ப்பு அவளுக்குக் கி​டைத்தது.

எமர்சன் பி​ளைமவுத்தில் தளபதி ரசல் வீட்டி​ல் தங்கியிருந்தார். அப்​பொழுது ரசலின் குழந்​தைகள் அவருடன் நன்கு ​நெருங்கிப் பழகினர். அக்குழந்​தைகள் ​லைடியாவுக்கு ​நெருங்கிய நண்பர்களாவர். இதனால் அவள் எமர்ச​னை அடிக்கடி சந்திக்க ​நேர்ந்தது. இருவரும் ஒருவருக்​கொருவர் காதலித்தனர்.

எமர்சன் மீண்டும் பி​ளைமவுத்திற்குச் ​சென்று ​சொற்​பொழிவு ஒன்றி​னை நிகழ்த்தச் ​சென்ற​போது ​லைடியாவிற்கு அவர் கடிதம் ஒன்​றை எழுதினார். அக்கடிதத்​தைக் கண்ட ​லைடியாவும் கடிதம் எழுதினாள். ​லைடியா எமர்ச​னைவிட எட்டுமாதங்கள் மூத்தவளாக இருந்தாள். இருப்பினும் இருவரும் ஒத்த அன்பு​டையவர்களாக இருந்ததால் காதல் கனிந்து அவர்களிருவருக்கும் திருமணம் நடந்​தேறியது.

திருமணம் முடிந்த பின்னர் எமர்சன் அவளது ​பெய​ரை லிதியா என்று திருத்தி ​வைத்தார். அவள் அவர்மீது அளவற்ற அன்​பைப் ​பொழிந்தாள். அவள் சிறந்த ​பெண்ணரசியாக எமர்சனுக்​கேற்ற இல்லத்தரசியாகத் திகழ்ந்தாள்.  லிதியா எமர்சனுடன் ஐம்பத்​தேழு ஆண்டுகள் கான்கார்டில் வாழ்ந்தாள்.

எழுத்தாளர் எமர்சன்

கான்கார்டு என்பது மிக்க அழகிய கிராமம். அது பாஸ்டன் நகரத்தின் ஒரு பகுதியாக​வே நி​னைக்கத் ​தோன்றும் அளவிற்குச் சிறந்து விளங்கியது. அக்கிராமத்தில் எமர்சன் தனது ம​னைவியுடன் இனி​மையாக வாழ்ந்தார். 1841-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று தம் கட்டு​ரைக​ளை வனாந்தரக் கட்டு​ரைகள் என்ற த​லைப்பில் மார்ச் மாதம் ​முதன் முதலில் புத்தகமாக வெளியிட்டார்.

1847-ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது மு​றையாக எமர்சன் ஐ​ரோப்பிற்குச் சுற்றுப் பயணம் ​மேற்​கொண்டார். சுற்றுப் பயணத்​தை முடித்துக் ​கொண்டு 1848-ஆம் ஆண்டு ஜூ​லை மாதம் மீண்டும் தாயகம் திரும்பி வந்தார்.  இந்நி​லையில் தாம் ​பெற்ற பிள்​ளை எமர்சன் உலகம் புகழும் அறிஞனாகத் திகழ்வதைக் கண்டு ​பெருமகிழ்ச்சியுடன் அ​மைதியுடன் வாழ்ந்து வாந்த எமர்சனு​டைய தாய் ரூத் 1853-ஆம் ஆண்டின் இறுதியில் தனது 84-ஆவது வயதில் திடீ​ரென்று இறந்துவிட்டாள். எமர்சனுக்கு இது ​பெரும் வருத்தத்​தை ஏற்படுத்தியது.

எமர்சனின் நூல்கள்

எமர்சன் எழுதிய நூல்க​ளையும் கட்டு​ரைக​ளையும் கவி​தைக​ளையும் ​​தொகுத்து 12 ​தொகுதிகளாக ​வெளியிட்டுள்ளனர். எமர்சனின் முதல் நூல் இயற்​கை என்பதாகும். எமர்சன் எழுதிய கட்டு​ரைகளின் முதல் ​தொகுதி 1841-ஆம் ஆண்டு ​வெளியிடப்பட்டது. இரண்டாவது ​​தொகுதி 1844-ஆம் ஆண்டில் ​வெளியிடப்பட்டது.முதல் ​தொகுதியில் வரலாறு, தன்னம்பிக்​கை, பரிகாரம், ஆத்மீகச் சட்ங்கள், அன்பு, நட்பு, வி​வேகம், வீரம், பரமாத்மா, வட்டங்கள், அறிவு​டை​மை, க​லை ஆகிய 12 ​பொருள்கள் பற்றிய 12 கட்டு​ரைகள் இடம்​பெற்றுள்ளன.

இரண்டாவது ​தொகுதியில் கவிஞன், அனுபவம், குணம், பழகும் மு​றைகள், ​வெகுமதி, இயற்​கை, அரசியல், யதார்த்தவாதியும் சம்பிரதாயவாதியும், புதிய இங்கிலாந்தின் சீர்திருத்தக்காரர்கள் ஆகிய 9 ​பொருள்கள் பற்றிய கட்டு​ரைகள் இடம்​பெற்றுள்ளன.

1850-ஆம் ஆண்டில் பிரதிநிதித்துவ மனிதர்கள் அல்லது மனிதப் பிரதிநிதிகள் என்ற நூல் ​வெளிவந்தது. 1856-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் நாளன்று ஆங்கி​லேயர் தன்​மைகள் என்ற நூல் ​வெளிவந்தது.1871-ஆம் ஆண்டில் தனி​மையும் சமூகமும் என்ற நூல் ​வெளிவந்தது. இந்நூல்கள் மனிதகுல ​மேம்பாட்டிற்கு உதவும் ஏணிப்படிகளாக விளங்குகின்றன.

வீட்டில் தீ

எமர்சனு​டைய அறிவாற்​ற​லைக் கண்ட ஹார்வார்ட் பல்க​லைக்கழகம் எமர்சனுக்கு டாக்டர் ஆப் லாஸ் என்ற ​கெளரவப் பட்டத்​தை வழங்கியது.   அ​மெரிக்காவில் உள்ள ​செயின்ட் லூயி தத்துவக் கழகம் எமர்சனுக்கு மிகச் சிறப்பான வர​வேற்பளித்தது. அதன் பின்னர் சில மாதங்களுக்குப் பின்னர் எமர்சனின் ​மே தினம் உள்ளிட்ட கவி​தைகள் நூலாக ​வெளிவந்தது.

எமர்சன் ஒரு​போதும் தனது சுதந்திரப் ​போக்​கை விட்டுக் ​கொடுத்து விடவில்​லை. அவர் தம் சிந்த​னைக​ளைப் ப​றைசாற்றப் பயப்படவுமில்​லை. மூட நம்பிக்​கைக​ளையும் மதக்​கோட்பாடுக​ளையும் எதிர்ப்ப​தைத் தன் வாழ்வின் குறிக்​கோளாகக் ​கொண்டார் எமர்சன்.

1872-ஆம் ஆண்டு ஜூ​லை மாதம் 24-ஆம் ​தேதி கா​லை எமர்சன் தனது படுக்​கையில் தூங்கிக் ​கொண்டிருந்த​போது வீடு தீப்பற்றிக் ​கொண்டது. அந்தத் தீயின் சப்தத்​தைக் கண்டு எமர்சன் திடுக்கிட்டு எழுந்தார். அந்தச் சத்தம் அப்​போது அவருக்கு ம​ழை ​பெய்யும் சத்தத்​தைப் ​போன்று ​கேட்டது. அவர் அ​றைக்குள்தான் ம​ழை​பெய்கிற​தோ என்று ஒரு கணம் நி​னைத்தார். அதன் பின்னர் தான்தமது இல்லம் தீப்பற்றி எரிவது அவருக்குத் ​தெரிந்தது.

அத்தருணத்தில் அவரது மகள் எல்லன் ​வெளி​யே ​​சென்றிருந்தாள். அவரது ம​னைவி லிதியா ​வெளியில் ஓடிவந்து உதவி ​கோரினாள். எமர்சனும் ​வெளியில் ஓடிவந்தார். பின்னர் வீட்டிற்குள் ஓடிச் ​சென்று தாம் எழுதி ​வைத்திருந்த ​கை​யெழுத்துப் பிரதிக​ளை எல்லாம் எடுத்துக் ​கொண்டு ஓடிவந்தார். மற்றவர்கள் வந்து மற்ற ​பொருள்க​ளை தீக்கி​ரையாகாது எடுத்தனர். பலரும் அந்நிகழ்விற்காக வருந்தினர். எமர்சன் காப்பீடு ​செய்திருந்ததால் அந்தத் ​தொ​கை அவருக்குக் கி​டைத்தது. அத்​தொ​கை யா​னைப் பசிக்குச் ​சோளப் ​பொறி ​போன்றிருந்ததால் எமர்சன் மிகுந்த துயருற்றார்.

பலரும் உதவிகள் ​செய்தாலும் அச்சம்பவம் அவரது உள்ளத்​தைக் ​கெடுத்த​தோடல்லாமல் உடல் நலத்​தையும் ​கெடுத்தது. அந்த நி​லையிலும் அவர் ஐ​ரோப்பிய சுற்றுப் பயணம் ​மேற்​கொள்ள வி​ழைந்தார். 1872-ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்துக்கு மூன்றாவது மு​றையாகப் பயணம் ​செய்தார். இத்தாலி, எகிப்து, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் அ​மெரிக்க ​மே​தையான எமர்சன் பயணித்துச் ​சொற்​பொழிவுகள் ஆற்றினார்.

சிந்த​னையாளரின் இறுதிநாள்கள்

பல நாடுக​ளையும் சுற்றிப் பார்த்துவிட்டுத் தாயகம் திரும்பிய எமர்ச​னை பாஸ்டன் நகரில் உள்ள கான்கார்டு ​கோவில் மணிகள் 15 நிமிடங்கள் ​சேர்ந்தாற்​போன்று அடிக்கவும் அங்கிருந்து அவர் கான்கார்டுக்குப் புறப்பட்டு வரும் வண்டி​யைப் பற்றியும் மணிகள் அடித்து மக்களுக்கு அறிவிக்கத் திட்டமிட்டிருந்தனர்.

பு​கைவண்டி நி​லையத்தில் எமர்ச​னை வர​வேற்க மக்கள் அதிகளவில் கூடிவிட்டனர். அவ்வளவு மக்கள் கூட்டத்​தைக் கண்ட எமர்சனின் மகள் எல்லன் வியப்புற்றாள். பள்ளிச் சிறுவர் சிறுமியரும்கூட கூட்டத்தில் நி​றைந்து காணப்பட்டனர்.

குழந்​தைகள் வாழ்க தாயகம் என்ற வர​வேற்புப் பாட​லைப் பாடினர். கூட்டம் பு​கைவண்டி நி​லையத்திலிருந்து புறப்பட்டு ஊர்வலமாகச் ​சென்றது. அவர்களிடம் எமர்சன் வி​டை​பெற்றுக் ​கொண்டு வீட்டுக்குள் ​சென்ற பின்னரும் ​நேடு​நேரம் வ​ரையிலும் கூட மக்கள் அவ்விடத்​தைவிட்டுக் க​லைந்து ​செல்லவில்​லை. ​எமர்சனு​டைய இல்​லத்​தை அவர்கள் அ​னைவரும் வணங்கிச் ​சென்றனர்.

1874-ஆம் ஆண்டு எமர்சன் தனது க​​டைசி மகன் எட்வர்ட்டுக்கு அன்னிகீயஸ் என்ற ​பெண்​ணைத் திருமணம் ​செய்து ​வைத்தார். எமர்சனுக்கு 70 வயதுக்கு ​மேலும் ஆனது. அவ்வளவு வயதிலும் எமர்சன் ​பொதுநலத்​தொண்​டைத் ​தொடர்ந்து ​செய்து வந்தார். ஹார்வார்டில் உள்ள இறந்த இராணுவ வீர்களின் குடும்பங்களுக்கு நிதி வசூலித்து உதவிகள் பல ​செய்தார். கல்லூரிகளுக்கும் நன்​கொ​டைகள் வழங்கினார்.

அவரால் முன்​போல எழுத முடியவில்​லை. எமர்சனின் சிந்த​னைகள் உலகம் எங்கும் பரவி ஒளிர்ந்தன.​ஜெர்மன் நாட்டுப் பத்திரிக்​கைகள் அவரது பு​கைப்படங்க​ளை ​வெளியிட்டு அவரது தத்துவத்​தையும் அவ​ரைப் பற்றியும் புகழ்ந்து எழுதின. அவரது நூல்கள் ஆங்கிலம், பி​ரெஞசு, ​டேனிஷ் ஸ்வீடிஸ் உள்ளிட்ட ​​மொழிகளில் ​மொழி​பெயர்க்கப்பட்டன.

1880-ஆம் ஆண்டின் இறுதியில் எமர்சனின் உடல்நலம் குன்றத் ​தொடங்கியது. எமர்சன் சிறிது ​நேரம் ​தொடர்ந்தாற்​ போன்று ​பேசுவதற்குக்கூட ஆற்றலற்றவரானார். அந்நி​லை ஏற்படுவதற்கு முன்னதாக​வே அவர் தாம் ​செய்ய ​வேண்டிய ​செயல்க​ளை ஒன்​றையும் மறவாது ​செய்தார். தம் ​சொத்துக்க​ளைத் தம் ம​னைவிக்கும் தம் பிள்​​ளைக்கும், இரு ​பெண்களுக்குமாகப் பரித்து எழுதி ​வைத்தார். அச்​சொத்துக்கள் ம​னைவி லிதியாவின் ​மேற்பார்​வையிலிருந்து வருவ​தென்றும் அவளுக்குப் பின்னர் மகள் எல்லன் ​மேற்பார்​வையிலிருந்து வருவ​தென்றும் 1876-ஆம் ஆண்டி​லே​யே உயில் எழுதி ​வைத்துவிட்டார்.

1881-ஆம் ஆண்டில் அந்த உயிலில் ​மேலும் சில திருத்தங்க​ளைச் ​செய்தார். எமர்சனின் இறுதி நாளன்று கூட அவர் படுத்த படுக்​கையாகக்கூடக் கிடக்கவில்​லை. ​நெருப்பின் அருகில் அவர் குளிர் காய்ந்து ​கொண்டு அமர்ந்திருந்தார். சாவு அவருக்கருகிலிருந்து கு​டைபிடித்துக் ​கொண்டிருப்ப​தை அவரது ம​னைவி​யோ, மக​னோ, மக​ளோ மற்றவர்க​ளோ அறியவில்​லை. எமர்சன் இயற்​கை ​தேவனான எம​னைக் கண்டு ​கொண்டார். 27.08.1882-ஆம் நாளன்று இரவு ஒன்பது மணிக்கு எமர்சன், எமன் என்ற இயற்​கை​யோடு இரண்டறக் கலந்தார்.

அவரது இறப்​பை அறிவிக்கத் ​தேவாலயத்தின் மணிகள் 79 மு​றை ஒலித்து. அந்த மாக சிந்​த​னையாளரின் மரணச் ​செய்தி​யைக் ​கேட்டு வான​மே துன்புற்ற​தைப் ​போன்று ம​ழை ​பொழிந்தது. அந்த உயர்ந்த சிந்த​னையாளரின் உடலுக்கு அஞ்சலி ​செலுத்த மக்கள் நாலா தி​சைகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் வந்து ​குவிந்தனர். அவர் உடல் யூனிட்​டேரியன் சர்ச்சில் உயர்ந்த இடத்தில் அடக்கம் ​செய்யப்பட்டது. மற்றவர்களின் ​மேம்பாட்டிற்காக அல்லும் பகலும் பாடுபட்ட உன்னதச் சிந்த​னையாளரான எமர்சன் அருவமாக இன்றும் அவரது சிறந்த கருத்துக்களின் வாயிலாக வாழ்ந்து ​கொண்​டே இருக்கின்றார். உலகம் உள்ளளவும் அவர் மக்களின் இதயங்களில் என்​றென்றும் நிரந்தரமாக வாழ்ந்து ​​கொண்டிருக்கின்றார் என்பது நிதர்சனமான உண்​மையாகும்.

“அடி​மைத்தன​மே இருக்கக் கூடாது. அதனால் தீண்டப்படும் ஒவ்​வொன்றும் நஞ்சாய் நாசம​டையும்!”

“உடல் அழகு அழிகிறது அல்லது ம​றைகிறது. அறிவின்அழகு கால நி​லைக​ளையும், வய​தையும் ​பொறுத்தது. அதன் மதிப்பில் குறுகி நிற்கிறது. ஆந்தத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் உ​டையதாக இருக்கிறது. ஆனால் ஒழுக்கத்தின் அழ​கோ கவர்ச்சிகரமானது. அழிவற்றது. பரிபூரணமானது!”

“உள்ளுணர்ச்சியின் உத்​வேகமின்றி எ​தையும் யாரும் உருவாக்க முடியாது”

“கற்ப​னை என்பது எல்லா அம்சங்களிலும் உட்புகுந்து வாழ்​வை உன்னதமாக்குகிறது”

“கடவு​ளை ​வெளியுலகத்தில் எங்கும் காண முடியாது! நம் வீட்டிற்குள்தான் அவன் எப்​போதும் வாசம் ​செய்கிறான்!”

இ​வை​யெல்லாம் எமர்சனு​டைய உயர்ந்த சிந்த​னைகள்…இந்தச் சிந்த​னைகள் உல​கை விழிப்ப​டையச் ​செய்தன..ஒங்களுக்குள்ளும் இ​வை ஒரு மாற்றத்​தைச் ​செய்யும்… எமர்ச​னோட வாழ்க்​கை நம் ஒவ்​வொருவருக்கும் ஒரு உந்து சக்தியா இருந்து வழிகாட்டுது..

வறு​மை​யை நி​னைச்சு மூ​லையில முடங்கிப் ​போகாம எமர்சன் பல அறிஞர்க​ளோட நூல்க​ளைப் படிச்சிக்கிட்​டே இருந்தாரு. வறு​மைக்கு வறு​மையக் ​கொடுத்தாரு…உலக​மே ​போற்றுகின்ற உயர்ந்த சிந்த​னையாளரா ஆனாரு…இதுக்​கெல்லாம் அவ​ரோட உ​ழைப்பும் விடாமுயற்சியும்தான் காரணம். எனக்கு,

“வறு​மை நி​லைக்குப் பயந்து விடா​தே

திற​​மை இருக்கு மறந்துவிடா​தே”

அப்படீங்குற பட்டுக்​கோட்​டையாரின் பாடல்வரிகள்தான் நி​னைவுக்கு வருது.

உங்களுக்குள்​ளே பல திற​மைகள் ஒழிஞ்சிக்கிட்டு இருக்குது..அவற்​றைக் கண்டுபிடிச்சி ​வெளியில ​கொண்டாங்க…அந்தத் திற​மைதான் ஒங்க​ளோட ​செல்வம்…ஒங்கள ஒலகத்துல உயர்த்தும் கருவி…அத​னைப் புரிஞ்சுக்​கோங்க…

ஏ​தோ ஒரு முக்கியமான காரணத்துக்காகத்தான் இ​றைவன் உங்க​ளைப் ப​டைச்சிருக்காரு…உங்க மூலமா சில ​சிறந்த செயல்க​ளைச் ​செய்யப் ​போறாரு. இதுதான் உண்​மை. அந்த நல்ல ​செயல்களுக்கு உங்கள நீங்கத் தயார்ப்படுத்திக்​கோங்க… வாழ்க்​கை வசந்தமா மாறும்…

“வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு”

இந்தக் கருத்​தை மனசுல வச்சுக்​கோங்க… என்ன சரியா…..?

வறுமை கனவுகளை சிதைக்கும். ஆனால் அத​னைக் கண்டு நீங்கள் துவண்டு விடாதீர்கள். மாறாக கடின உழைப்பினால் மீண்டும் பலருக்கு அந்த கனவுகளை நீங்கள் ஏற்படுத்த கூடும் !! 

வறுமையால் பண்பட்டு மேலே வந்தவனே உண்மையில் வாழ்கையை உண்மையாக வாழ்ந்தவனாகிப் போகின்றான்! அவனுக்கு வாழ்கையின் வலியும்உழைப்பின் அர்த்தமும் தெரியும்! வளரும் பருவத்தில் வறுமை கொடியது எனினும் அது பல வரலாற்றுச் சாத​னையாளர்க​ளை உருவாக்கிக் கொடுத்துச் சென்றுள்ளது.

“உழைப்பு…!
ஒழுக்கம்..!

தன்னம்பிக்கை..!
சோதனையிலும் மனம் தளராத நிதானம் (​பொறு​மை) ..!

விடாமுயற்சி….!”

இவை எல்லாம் வறுமை எனும் நோய்க்கு மருந்தாகும்.

இந்த 52 வாரமா நான் ஒங்க​ளோட பயணிச்சிருக்​கேன்… பல ​மே​தைகளின் வாழ்க்​கைய ​தெரிஞ்சிக்கிட்​டோம்.. இ​வை நம் வாழ்க்​கைப் பயணத்துல ஒரு உத்​வேகத்​தைக் ​கொடுக்கும்….. இவங்க மட்டுமில்ல இன்னும் எத்த​னை எத்த​னை​யோ அறிஞர்கள் சமுதாயப் புரட்சியாளர்கள் இந்த மாதிரி ​நெ​றையப் ​பேரு இருக்காங்க…. அவங்க​ளோட வரலாற்​றை​யெல்லாம் நீங்களாத் ​தேடிப் படிச்சுப்பாருங்க… எல்லாரு​டைய வரலாறும் ​சொல்ற அரு​மையான அறிவு​ரை இதுதான்…ஆமாங்க.. அறிவால எல்லாம் சாதிக்கலாங்கற கருத்துத்தான்… அது…

இத்த​கைய ​மே​தைகள் எல்லோரையும் நினைவு கூர்வதின் மூலம் இன்றைய சமுகத்தில் தன்னொளி பரவும். வறுமையை வென்று சாதித்து வரலாற்றின் பக்கங்களில் தங்களையும் தங்களின் தாய்த் திருநாட்டையும் உயர்த்தி பிடித்தபிடிக்க இருக்கின்ற அனைவருக்கும் இந்தத் ​தொட​ரைக் காணிக்​கையாக்குகின்​றேன்… “ஓர் எழுத்தாளன் ஒரு புத்தகத்​தைத் ​தொடங்கி ​வைக்கிறான்…. வாசகன் அத​னை முடித்து ​வைக்கிறான்” என்பார் சாமு​வேல் ஜான்சன்.

இந்தக் கட்டு​ரைக​ளை எல்லாம் படிச்சுப் பாத்துட்டு ​நேரிலும், ​கைப்​பேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தங்களின் கருத்து​ரைக​ளை வழங்கிய வாசகர்களுக்கும், இத்​தொட​ரை ​வெளியிட்டு இ​ளைஞர்களின் வாழ்வில் ஒளி​யேற்றிய திண்​ணை ஆசிரியர் அவர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் எனது இதயம் நி​றைந்த நன்றிக​ளைத் ​தெரிவித்துக் ​கொள்கி​றேன்… இ​ளைஞர்கள் இ​தைப் படிச்சிட்டு உயர்ந்த நி​லை​யை அ​டையணுங்குறதுதான் இத்​தொட​ரை எழுதியதன் ​​​நோக்கம். அப்படி யாராவது முன்​னேறுவதற்கு இத்​தொடர் உந்து சக்தியா இருந்துச்சுன்னா என்​னோட ​நோக்கம் நி​றை​வேறிடுச்சுன்னு மிகுந்த மகிழ்ச்சிய​டை​வேன்… இந்தத் ​தொடர் இத்துடன் நி​றைவுறுகிறது. அ​னைவருக்கும் வணக்கம்… மீண்டும் சு​வையான ஒரு ​தொட​ரை வாசகர்களுக்காக எழுத இருக்கின்​றேன். அந்தத் ​தொடரில் அ​னைவ​ரையும் சந்திக்கின்​றேன்… நன்றிகள் பலப்பல…

“மண்ணில் நல்ல வண்ணம்

வாழலாம் ​வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு

யாது​மோர் கு​​றைவி​லை

கண்ணில் நல்லஃதுறும்

கழுமல வளநகர்ப்

​பெண்ணில் நல்லா​ளொடும்

​பெருந்த​கை இருந்த​தே”

வணக்கம்.

Series Navigation
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *