நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

nissim

நிஸிம் இசக்கியேல். இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாளி. இவரின் Hymns in darkness என்ற புத்தகக் கவிதைகளைக் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன்.

தன்னுடைய லேட்டர் டே சாம்ஸ் என்ற கவிதை நூலுக்காக 1983 இல் சாகித அகாதமி விருது பெற்றவர். சாகித்ய அகாடமி விருது என்றால் உடனே லைப்ரரியில் அவர் சம்பந்தமான புத்தகங்களைத் தேடுவோமே. அப்படித் தேடியதில் கிடைத்த இந்தப் புத்தகத்தை வாசித்துக் குறிப்புகள் எடுத்திருந்தேன்.

மும்பையில் 1924 இல் பிறந்த நிஸிம் இசக்கியேல் மும்பையிலும் பின் லண்டனிலும் கல்வி கற்றுள்ளார்.  காலனித்துவத்துவக் கோட்பாடுகளுக்குப் பின்னான இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருந்தார்.தனது 65 ஆவது வயது வரை பத்ரிக்கைப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். இவருடைய கவிதைகள் என் சி ஈ ஆர் டியிலும் ஐ சி எஸ் சி யிலும் பாடத்திட்டமாக அமல்படுத்தப் பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தனது 80 ஆவது வயதில் 2004 இல் மறைந்தார்.

1976 இல் வெளிவந்த ஹைமன்ஸ் இன் டார்க்னெஸ் ( HYMNS IN DARKNESS ) என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் எனது கருத்துகளோடு அவரது கவிதைகள் சிலவும் பகிர்ந்துள்ளேன்.

மரபைச் சார்ந்தும் மரபை மீறியும் உள்ள கருத்துக்களை வலிமையாகப் பதிவு செய்கிறார். எல்லாவற்றிலும் இவரின் எள்ளல் தன்மை வெளிப்படுகிறது.காதல் , காமம், பெண் உடல் , திருமண உறவு, பந்தம், அதன் நீட்சி போன்றவற்றினைப் பற்றிப் பேசும் கவிதைகளே இத்தொகுதியில் பெரிதும் இடம் பெறுகின்றன.

வயது வந்தோருக்கான கவிதைகள் என்றும் கூறலாம். குட் பை பார்ட்டி ஃபார் மிஸ் புஷ்பா டி.எஸ் என்ற கவிதை தன் தாய்மொழி வேறாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தை உச்சரிக்கும் முறையில் எழுத்தப்பட்ட ஒரு நையாண்டிக் கவிதையாகும்.

THE COUPLE, THE RAILWAY CLERK, THE TRUTH ABOUT THE FOODS, ON BELLASIS ROAD ( ABOUT A WOMAN ) , GOOD BYE PARTY FOR MISS PUSHPA T.S. , ADVICE TO A PAINTER.

THE COUPLE, THE RAILWAY CLERK, THE TRUTH ABOUT THE FOODS, ON BELLASIS ROAD ( ABOUT A WOMAN ) , GOOD BYE PARTY FOR MISS PUSHPA T.S. , ADVICE TO A PAINTER.

எல்லாமே அடல்ட்ஸ் . ஒன்லி – வயது வந்தவர்களுக்கு மட்டும்.

1. PASSION POEMS:-

1. SUMMER :-

TOO WARM

FOR LOVE MAKING

NOT TO WARM

FOR CARESSING.

WE ARE COOL AFTER BATHING

TOGETHER.

(வேனில் காலம்
காதல் செய்வதற்கு ஆகாத

வெக்கையான பொழுது.
மிருதுவாய்த் தடவ ஆகாததல்ல.
இணைந்து குளித்தோம்
குளிர்ந்தோம். )

2. MONSOON:-

YOU ARRIVED

WITH SARI CLINGING

TO YOUR BREASTS AND HIPS

I PUT A KISS UPON YOUR LIPS

NO PART OF YOU

COULD HIDE.

AS YOU DRIED.

( மழைக் காலம்
ஸ்தனங்களிலும் இடையிலும்
புடவை நீரொட்டிக் கிடக்க
வந்தாய் நீ.
உன் உதட்டில் ஒரு முத்தமிட்டேன்.
உன் எந்த உறுப்பும்
ஒளிய முடியாது
நீ உலரும்   போது  )

3.  THE SANSKRIT POET:-

HOW FREELY THEY MENTION

BREASTS AND BUTTOCKS

THEY ARE MY POETIC ANCESTORS.

WHY AM I SO INHIBITED ?

{சமஸ்கிருதக் கவிஞர்
எவ்வளவு இலகுவாக அவர்கள்
மார்பகங்களையும் பின்புறங்களையும்
குறிப்பிட்டுச் செல்கிறார்கள்.
அவர்கள் என் கவிதை முன்னோடிகள்.
எனக்கு ஏன் இந்த மனத் தடை?. }

4. ON GIVING REASONS:-

SHE GAVE ME

SIX GOOD REASONS

FOR SAYING NO

AND THEN

FOR NO REASON AT ALL

DROPPED ALL HER REASONS

WITH HER CLOTHS.

(  காரணங்களைக் கையளித்தல் பற்றி
வேண்டாம் என்று சொல்வதற்கு
ஆறு சரியான  காரணங்களை
அவள் சொன்னாள்.
அதன் பிறகு
எந்தக் காரணமுமே இன்றி
களைந்தால்  காரணங்களை
அவள்  உடைகளோடு சேர்த்து . )

5. NAMES:-

I REMEMBER

NOTHING

EXCEPT THAT SHE

UTTERED MY NAME

OVER AND OVER AGAIN

AND I

HERS.

( பெயர்கள்
எனக்கு எதுவும்
நினைவிலில்லை
அவள் என் பெயரைத்
திரும்பத் திரும்ப
உச்சரித்துக் கொண்டிருந்ததும்
நான் அவள் பெயரை
உச்சரித்துக்கொண்டிருந்ததும் தவிர )

நான் மிகவும் ரசித்த கவிதை இது.

6. A MARRIAGE :-

KRISHNA’S TRICKS

ARE NOT FOR HIM.

NOR RADHA’S WILES

FOR HER.

THEY HAVE A DIFFERENT TRUTH

WITHIN A KINGDOM OF THEIR  OWN.

I ENVY THEM.

(  திருமணம்  :-
கிருஷ்ணனின் குறும்புகள்
அவனுக்கானதல்ல
ராதையின் தந்திரமும்
அவளுக்கானது அல்ல.
தங்களுக்குமட்டுமேயான இராஜ்ஜியத்தில்
அவர்களின் யதாரத்தமே வேறு..
அவர்களைப் பார்த்துப் பொறாமையுறுகிறேன். )

திருமண பந்தத்தில் உழலும் கணவன் மனைவிக்குள்ளாக  நிகழும் வெறுப்பு வேதனை மண்டிய இழப்பையும், வாக்குவாதங்களையும் புரிந்து கொள்ளாத தன்மையையும் திருமண வாழ்வின் தெளிவின்மையையும்  நிம்மதியின்மையையும் நிரந்தரமற்ற தன்மையையும் பகிர்ந்து செல்லும் கவிதைகள் சில.

7.  QUARREL.

ALL NIGHT I TALKED TO YOU

A TROUBLED DREAM

OF MANY WORDS

AND NOT A SINGLE KISS

LET US NOT QUARREL AGAIN

SO I MAY NEVER DREAM

IN ARGUMENTS ALONE.

( சச்சரவு
இரவு முழுவதும் உன்னோடு பேசிக்கொண்டிருந்தது
வார்த்தைகளால் நிறைந்த
ஒரு துன்பமான கனவைப் போலிருக்கிறது.
ஒற்றை முத்தம் கூட இல்லை.
இனி நாம் சண்டையிட வேண்டாம்.
அதனால் வாக்குவாதங்கள்  மட்டுமே நிறைந்த
கனவுகள் வராதிருக்கட்டும். )

பெண்ணின்மேல்/ மனைவியின் மேல் வெறுப்பு மண்டிய கவிதைகள் இவை இரண்டு,. சிறு கோபமும் ஒளிக்காத வன்மமும் வெளிப்படும் வார்த்தைகள்.

8. THE LOSS.

I HAVE LOST MY REASONS

LET IT GO.

DID I CREATE THIS WOMAN

UNTAMABLE AND YET

WILLING TO BE TAMED.?

ONLY SHIVA, MEDITATING

COULD BE IMMOVABLE

IN HER MOVING PRESENCE

AS FOR ME

I HARDLY MEDITATE AT ALL.

( இழப்பு
நான் என் காரணங்களை இழந்துவிட்டேன்.
அது போகட்டும்.
அடக்கவே முடியாத
ஆனால்
அடக்கியாளப்பட விரும்பும்
இந்தப் பெண்ணை நான் உருவாக்கினேனா.
தியானத்திலிருக்கும் சிவன்மட்டுமே
அசைவற்று இருக்க இயலும்
இவளுடைய நகர்வின் இருப்பின்
என்னைப் பொறுத்தவரை
தியானிப்பது கடினம். )

முத்தாய்ப்பாக இருளின் கீதங்களில் நெகிழ வைத்த கவிதைகள் இரண்டு.

9. THE RAILWAY CLERK :-

….. ……………..

ALSO  I HAVE GOOD FRIENDS

THAT IS ONLY CONSOLATION.

( ரயில்வே க்ளர்க்
எனக்கு நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள்.
அதுதான் என்னுடைய ஒரே ஆறுதல் )

10. THE COUPLE:-

HIS LOVE IS SMALL

A FLICKERING LAMP

WHILE HERS LIGHTS UP

THE UNIVERSE.

HOW ON EARTH

ARE THEY TO SEE EACH OTHER

IN ITS NORMAL DARKNESS ?

ONLY THE GODS

CAN HELP THEM NOW.

(தம்பதியர்
அவனது அன்பு
சிறுவிளக்குப் போல ஒளிர்கிறது.
அவளது அன்போ
பிரபஞ்சத்தையே  ஒளியூட்டுகிறது.
உலகின் இயல்பான இருண்மையில்
எப்படி ஒருவரை ஒருவர் நோக்குவார்கள்.
கடவுளர்கள்தான்  அவர்களுக்கு
இப்போது உதவ முடியும். )

Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    I I M Ganapathi Raman says:

    //1976 இல் வெளிவந்த ஹைமன்ஸ் இன் டார்க்னெஸ் ( HYMNS IN DARKNESS ) //

    ஹைமன்ஸ் என்றால் Hymen. பொருள் வேறு.
    Hymns என்ற சொல்லின் ஆங்கில உச்சரிப்பு ஹிம்ஸ். உச்சரிப்பு தவறானால் விபரீத பொருளைத் தருமென்பதை Hymen என்ற பதத்தின் பொருளை அகராதியில் படித்துத் தெரிந்து அதிர்ச்சியடைந்து கொள்க :-) நன்கு தெரிந்தே எழுதவும்.

    //இவருடைய கவிதைகள் என் சி ஈ ஆர் டியிலும் ஐ சி எஸ் சி யிலும் பாடத்திட்டமாக அமல்படுத்தப் பட்டிருந்தன.//

    இதையும் நன்கு தெரிந்தே எழுதவும். NCERT, ICSC போன்றவை உயர்நிலைப்பள்ளிகளுக்கு. அவர்கள் ஆங்கிலப்பாட நூலில் எசக்கியேலின் ஓரிரண்டு கவிதைகள் மட்டுமே வைக்கப்படும். இஃதில்லையென்றால் அது. எ-கா:. மிஸ் புஷபா கவிதையும் தேள் கொட்டிய இரவில் கவிதையும். மற்றபடி இவரின் கவிதைகள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மாணவர்களுக்கு அங்கு இந்திய ஆங்கில இலக்கியம் என்று தனிப்பாட்ப்பிரிவு வருகிறது. அதில் இவரின் கவிதைகளைக் காணலாம். கல்லூரியில் முதலாமாண்டு ஆங்கில இலக்கியமல்லா மற்றப்பிரிவு மாணவர்களுக்கு (தமிழகத்தைப்பொறுத்தவரை) தேள் கவிதை மட்டுமே கொடுக்கப்பட்டதை நான் பார்த்தண்டு. It’s a great poem: sustained suspense till the last line. அந்த வரி:

    //நல்லவேளை! தேள் என்னைக் கொட்டிவிட்டு என்பிள்ளைகளை விட்டு விட்டது!//

    என்று தாய் பெருமூச்சு விடுவது.

    தேள் கவிதையைப்பற்றித் கட்டுரையாளர் எழுதாமல் விட்டது வியப்பைத்தருகிறது. Better late than never. Can read it now, can’t you?

    The sexual poems are playing to the gallery Madam. செக்ஸைப்பற்றி எழுதிவிட்டால் பரபரப்பான கவிஞராகிவிடலாம் எனபது நம் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் மட்டுமல்ல எசக்கியேலும் நினைத்துவிட்டார். But I like the poem MARRIAGE. It is not sexy only in the sense it deals with intimacy between a couple. ஆனால், இதைமாதிரி நிறைய படித்திருக்கிறேன்.

  2. Avatar
    Thenammai Lakshmanan says:

    மதிப்பிற்குரிய கணபதி ராமன் அவர்கட்கு,

    திருத்தியமைக்கு நன்றி.

    இது நான் கல்லூரிப் பருவத்தில் படித்தது. என் 1984 ஆம் வருட டைரியில் குறிப்புகள் எடுத்து வைத்துள்ளேன். அதிலிருந்து இவற்றை ஞாபகத்தில் சேகரித்து அனுப்பினேன். பொதுவாக நான் செக்ஸ் கவிதைகள் எழுதுவதில்லை. மேலும் அதனால் பெரிய ஆளாகிவிடலாம் என்றும் நினைக்கவில்லை. இது ஆர்வக் கோளாறு.

    படித்ததில் குறிப்பெடுத்ததை பல வருடங்களுக்குப் பிறது போன வாரம் படிக்க நேர்ந்தது. அதில் இருந்ததை நான் அப்படியே அனுப்பி இருந்தேன்.

    மேலும் நீங்கள் குறிப்பிட்ட கவிதையையும் படித்திருப்பேன். தற்போது புத்தகம் கைவசமில்லை. இது எல்லாம் டைரிக் குறிப்புகள். ஆசிரியைகள் எதைப் படித்தாலும் குறிப்பு எடுத்து வைக்க சொல்வார்கள் இல்லையா அந்தப் பழக்கத்தில் வந்தது. இந்தப் புத்தகத்தின் அட்டைப் படம் கூட ஞாபகத்தில் இல்லை.

    சரியான விஷயங்களை சரியான நேரத்தில் தெளிவுறுத்தியமைக்கு நன்றி கணபதி இராமன் சார். :)

  3. Avatar
    I I M Ganapathi Raman says:

    //பொதுவாக நான் செக்ஸ் கவிதைகள் எழுதுவதில்லை. மேலும் அதனால் பெரிய ஆளாகிவிடலாம் என்றும் நினைக்கவில்லை. இது ஆர்வக் கோளாறு.//

    உங்களை நான் குறிப்பிடவில்லை. பல எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறேன்.

    நான் குறிப்பிட்ட எசக்கியேலின் கவிதை தேள் கொட்டிய இரவில் Night of the Scorpion என்ற கவிதை. அது மிகச்சிறந்த கவிதை. இணையதளங்களில் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *