9 குறுங்கவிதைகள்
மரக்கிளைகளின் வழி
வெளிச்ச விழுதாய்த்
தொங்குகிறது சூரியன்…
******************************
வெளிச்ச விழுதுகளில்
குருவிகளாய் ஊஞ்சலாடியபடி
இறங்குகின்றன இலைகள்
******************************
மழையும் எப்போதாவது
நீர்விழுதாய் ஊஞ்சலாடுகிறது
மரக்கிளையைக் கட்டியபடி..
******************************
வெய்யில் புள்ளி வைத்து
நாள் முழுக்கக் கோலமிட்டபடி
இருக்கிறது மரம்.
******************************
விடியலின் பூக்களாய்
பூமியின் மீது
பூத்துக் கொண்டிருக்கிறது பனி..
******************************
சூரியன்காந்தப்பூ ஈர்க்க
அதை நோக்கி
முகம் மலர்கிறது பூமி..
******************************
மஞ்சள் இறக்கைகளோடு
பூமியின் மீது
பறக்கிறது சூரியன்..
******************************
கிரண நாவுகளால்
கடலைக் குடித்து
மேகக் குடலில்
சேகரம் செய்கிறது சூரியன்.
******************************
மலையின் புறத்து
கதிர் ஆடை மாற்றி
இரவாடைக்குள்
புகுகிறது சூரியன்..
—
மழையாய் பாடுதல்.:-
மழையை உறிஞ்சிச்
சுவைத்துக் கொண்டிருந்தேன்..
நீர்ச்சுவை என் மொட்டுக்களில்
தாமரைத் தண்டாய்.
குழந்தையின் எச்சில் போல
சுவையற்றிருந்தது அது.
நீர்க்கதிரைச் பாய்ச்சி
நிலத்தை உழுது கொண்டிருந்தது.
எண்ணெய் தேய்த்துப் பாசிகட்டிய
குழந்தையின் மணத்தை ஒத்திருந்தது.
காய்ந்திருந்த பழைய விதைகளும்
நீருஞ்சிப் பெருக்கத்துவங்கின.
மண்புழுக்களும் என்னோடு சேர்ந்து
சேற்றை ருசித்துக் கொண்டிருந்தன.
ஒரு பட்டன் தவளையைப்போல
திடீர் விதையாய் முளைத்திருந்தேன்.
உழன்று உழன்று செம்புலச் சேறாய்க்
குழன்றபடி ஓடினேன் பூமியையும் ருசித்து.
தாகம் அடங்கி மரங்களில் இலைகளில்
வரவை எழுதினேன், சொட்டுக் கையெழுத்தில்.
தாழ்வாரங்களிலிருந்து க்ரீடம் அணிந்த
குட்டி ராணி்கள் குதித்தபடி இருந்தார்கள்.
மழையின் சலசலப்பு அடங்கியதும்
சில்வண்டுகளைப் போல பாடத்துவங்கினேன்.
எப்போதும் பாடும் பாடலை
அது ஒத்திருந்து கொஞ்சம் முற்றியதாய்.
—
தோழிகளால் வளர்ந்தவன்.
இளவேனிற் காலத்தின்
வளர் சிதை மாற்றங்களில்
இலைகளாய் துளிர்க்கும்
பிறப்பின் முதல் தோழியிடம்
அழுதபடியே வந்தேன்.
அணைத்து உச்சி மோர்ந்தாள்
பால்யத்தில் மொக்குவிட்ட
பள்ளித்தோழியிடம்
பலதும் சொல்லி சீண்டுவேன்
பதிலாய்ச் சிரித்துக்
கற்பி்த்தாள் பொறுமையை.
பூத்துவிட்ட பின்னாலே
கல்லூரி பாவையவள்
கைபிடித்து சுற்றினாள்
தட்டாமாலையாய்..
உலகமெல்லாம் என்
உள்ளங்கையில் குவித்து..
திருமண மாலையாகி
சீராக்க வந்தாள்
என் மீதியான துணைவி
சேர்ந்தலைந்தோம்
துன்பம் போன்ற இன்பத்திலும்..
புதுசான மொக்காய்
பொக்கைவாய்சிரிப்பில்
பூங்கொத்தாய் விரிந்தாள்
எனை ஆளவந்த தேவதை..
மீண்டும் துளிரானேன்
அவளோடு வளர..
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3
- தோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)
- கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)
- ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு
- நினைவுகளின் சுவட்டில் – (74)
- ஜென் ஒரு புரிதல் பகுதி 6
- தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்
- ஐ-போன் வியாதி
- வாக்குறுதியின் நகல்..
- நான்(?)
- ஒன்றாய் இலவாய்
- சிறு கவிதைகள்
- ஆதி
- பாசாவின் உறுபங்கம்
- எங்கோ தொலைந்த அவள் . ..
- சொல்வலை வேட்டுவன்
- குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி
- அறப்போராட்டமாம் !
- பூனையின் தோரணை
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- நானும் ஸஃபிய்யாவும்
- காற்றும் நிலவும்
- பொம்மை ஒன்று பாடமறுத்தது
- ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.
- வெறுமை
- எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)
- சகிப்பு
- கூடு
- மறைபொருள் கண்டுணர்வாய்.
- காலம்
- பிரசவ அறை
- தொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்
- பேசும் படங்கள்
- மகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு
- கலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்
- புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்
- பழமொழிகளில் வரவும் செலவும்
- சொல்
- பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2
- இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 44
ma’am no words to say….
Kurung kavithaikal mikavum nandraaka uLLathu. VaazthukkaL.
வெய்யில் புள்ளி வைத்து
நாள் முழுக்கக் கோலமிட்டபடி
இருக்கிறது மரம்.
— very nice words !! portrayed the scene very well thenu :)
விமர்சனங்களுக்கு நன்றி ஷம்மு., சாமி., சித்ரா.
எதிர்பார்க்கவில்லை 3 கமெண்ட்ஸை.. இன்ப அதிர்ச்சிதான்.. வாரம் தோறும் வெளியிட்டு ஊக்குவிக்கும் திண்ணைக்கும் நன்றி..:)
மிக அருமை….
இன்னும் ஆழமான அவதானிப்புகளொடு உங்களிடமிருந்து
கவிதைகள் வர வாழ்த்துக்கள்…
வரும் என்கிற நம்பிக்கையில்…
நன்றி…
கவிதை அனைத்தும் ரொம்ப நல்லாருக்கு…!
நன்றி அரவிந்த்., ராம்