நட்பு அழைப்பு. :-

This entry is part 21 of 33 in the series 11 செப்டம்பர் 2011

கோமாதாக்கள் கூட்டுறவு
சங்கங்களுக்கு பால் கறக்கின்றன.

கோவர்த்தனகிரிகள் கூறாகி
கிரைண்டர் கல்லும்., தரையுமாய்.

யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில்
கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு.

வெண்ணை தின்னும் ஒபீஸ்
கண்ணன்கள் கான்வெண்ட் பார்க்குகளில்

கோபர்களும் கோபிகைகளும்
கணினி மையங்களில் கருகும் கடலையில்.

கலியுகக் கண்ணன் முகநூல் ராதையுடன்
நட்புத் தேடி ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்டில்..

Series Navigationகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்எனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *