அலைகளாய் உடையும் கனவுகள்

This entry is part 11 of 44 in the series 16 அக்டோபர் 2011

சங்கர பாலசுப்பிரமணியன்

தன் சுய பிம்பத்தை
நீரில் பார்த்து
கொத்துகிறது பறவை ஒன்று

அலைகளாய் சிதறிச் செல்லும்
பிம்பங்கள்
மறுபடியும் கூடுகின்றன

இரவு வரை
கொத்திக் கொண்டேயிருக்கும்
பறவை
பிம்பத்தை அழித்து விட்ட
மகிழ்வில் பறந்து செல்கிறது
களிப்பில்

அதற்குப் புரியவில்லை
பிம்பத்தை அழித்தது இருள் என்று

அதற்குப் புரிவதேயில்லை
பிம்பத்தை அழித்தது இருள் என்று

நானும்
பறவையைப் போல
உடைத்துக் கொண்டே இருக்கிறேன்

என் வாழ்வின் கனவுகளை

அலை அலையாய்
உடைந்து செல்லும் கனவுகள்
என் மரணம் வரையில்
கூடிக் கொண்டே இருக்கின்றன

வாழ்வின் அதிக நேரங்களை
கனவுகளை சிதைப்பதிலேயே
கரைத்து விடுகிறேன்

பின்
இருளில் கரைந்து விடுகிறேன்

Series Navigationஇதுவும் அதுவும் உதுவும்வீடு
author

சங்கர பாலசுப்பிரமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *