ஆர் சீனிவாசன் மூன்று நிமிடங்கள். திகில் நிறைந்த மூன்று நிமிடங்கள். அம்மூன்று நிமிடங்களில் பல விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் கனவு நினைவாகலாம் அல்லது இதற்கு முன் நடந்ததைப்போலத் தோல்வியைத் தழுவலாம். மூன்றே நிமிடங்கள். விண்கலம் நிலவின் பரப்பிற்கு மேல் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது விண்வெளிவீரர்கள் குமார் மற்றும் குப்தா தங்கள் விண்வெளி உடைக்குள் பதட்டத்துடன் விண்கலத்தின் கணினியை நோக்கினர். அனைத்து அமைப்புகளும் சரியாகத்தான் இயங்கிக்கொண்டிருந்தன. “இறங்கும் செய்முறையைத் துவக்கலாம். வெற்றி கைகூடட்டும். நன்றி ” என […]