எஸ்ஸார்சி ‘சார் இருக்காரா’ வாயிலில் ஓர் கூப்பிடும் குரல். அவன் மனைவி எட்டிப்பார்’த்தாள். யாரோ ஒரு இளைஞன் யூனிகான் வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான். வீட்டினுள்ளே ஏதோ காரியமாக இருந்த அவன் வீதிப்பக்கமாக ‘யாரு’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து வந்தான். ‘யாரோ புதுசா வந்திருக்காங்க பாருங்க’ மனைவி சொல்லிவிட்டு […]
எஸ்ஸார்சி எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின் நடமாடும் சாட்சியாய் நமக்கு முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால் ,அவர் எழுத்தாளர் பாவண்ணன். அவரின் இயற்பெயர் பாஸ்கரன். தமிழ் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 1958 அக்டோபர் 20 அன்று ஒரு மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்.பலராமன் சகுந்தலா இவர்கள் பாவண்ணனின் பெற்றோர். இன்று தமிழ் தெரிந்த எல்லோராலும் பேசப்படுகின்ற ஒரு உயர்ந்த இலக்கியப்படைப்பாளியாய் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராய் விளங்குபவர். வளவனூர் […]
[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14 பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.மகாத்மா காந்தி முடிவிலாக் […]
–எஸ்ஸார்சி கோதுமையை ரேஷன் கடையில் வாங்கினான்.. அதனை ச்சலித்தாயிற்று புடைத்தாயிற்று கோதுமையில் உருண்டை உருண்டையாய் இருந்த சிறு சிறு மண்கட்டி மட்டும் போகவில்லை. அது எப்படிப்போகும் அவனுக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை. அண்டை வீட்டு முத்துலட்சுமி யோசனை சொன்னார். ’கோதுமையை ’தண்ணீல நல்லா அலசுங்க. மங்கட்டி கரைஞ்சிடும். பெறவு தண்ணீல ரெண்டு வாட்டி அலசுங்க மண்ணு கரைஞ்சிபோயிடும்’ . அந்தப்படிக்கு அலசிய கோதுமையை வெயிலில் உலர்த்தினான் ஆயிற்று’ […]
எஸ்ஸார்சி குயவன் களிமண்ணை சுழலும் அச்சக்கரத்தில் எடுத்து எடுத்துவைப்பான் எவ்வளவு வைப்பான் எப்போது வைப்பான் எதனைச் செய்வான் சட்டியா பானையா அதனதன் மடக்கா, எரிஅகலா, இறைத் தூபமா தண்ணீர்க் குடமா இல்லை மாட்டுக்த் தொட்டியா சாலா சாலும்கரகம்தானா யார் அறிவார்?. அந்தச்சக்கரம் அமர்ந்த களிமண் எதுவாக உருப் பெறும் எப்படி அதன் வடிவம் இருக்கும், அக்குயவன் சுழலும் சக்கரத்தை எதுவரை சுழற்றுவான் எப்போது நிறுத்துவான் யாருக்குத்தெரியும். அனைத்தும் அவன் விருப்பம். மனிதர்கள் அந்தக்குயவனின் கைக்கு அகப்படக்காத்திருக்கும் […]
–எஸ்ஸார்சி இங்கு புறம் என்று கூறும்போது புற நானூறு பற்றித்தான் குறிப்பிடுகிறேன். தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் போற்றத்தக்க உயரிய பண்பாடு மிக்கவர்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள். இதனை உள்ளங்கை நெல்லிக்கனியென நமக்குக்காட்டுவது புறநானூறு என்று சொன்னால் மிகையாகாது. திருக்குறள் அறம் பொருள் இன்பம் பற்றிப்பேசுகிறது. தொல்காப்பியர் பொருள் அதிகாரத்தில் நல்ல பல வரையறைகளைத்தருகிறார்.ஆயினும் நம் மனதோடு ஒட்டிப் பேசுகிற சூழல் புறநானூற்றுப்பாடல்களில் மட்டுமே வாசகனுக்கு அனுபவமாகிறது .நமது பாட்டனோ பூட்டனோ […]
என் வீட்டின் அடுத்தமனை காலிமனை வீடு அங்கு எழும்பாதவரை தேவலாம் எனக்கு வீசி எறிய நித்தம் சிலதுகள் என் வசம் ஆகத்தான் வேண்டும் காலி மனை மாமரம் ஒன்றுடன் தென்னை மரமொன்று வளர்ந்தும் நிற்கிறது அக்காலி மனையில். நல்ல காரியம் சுற்றுப்பட்டில் யார் வீடாயிருந்தாலும் மாமரத்துக்கிளை இலைகள் மொத்தமாய் ஒடிபடும் வண்டி ஏறிப்போகும். யார் வீட்டு எழவோ பச்சை மட்டை இத்தென்ன தருவதுதான் காய்கள் காய்த்தும் தென்னை மரத்துக்குப் போணி மட்டும் ஆகவில்லை பாடைகட்ட […]
எஸ்ஸார்சி ’மிகையின் தூரிகை’ என்கிற தலைப்பில் பாவண்ணன் கதைகளில் தொன்மம் தழுவிய சில படைப்புகள் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. எஸ். ஜெயஸ்ரீ மற்றும் கே. பி. நாகராஜன் தொகுத்திருக்கிறார்கள். இருவருமே பாவண்ணன் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட இலக்கிய விரும்பிகள். . பெருமைக்குரிய சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. பாவண்ணன் தமிழ் எழுத்துலகில் பேசப்படுகின்ற படைப்பாளி. சிறந்த மொழிபெயர்ப்பாளர். பல்வேறு பெருமைக்குறிய நிறுவனங்களின் விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றவர். […]
எஸ்ஸார்சி கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏறி அமர்ந்துகொண்டேன். எக்மோரிலிருந்து திருநெல்வேலிக்குப்பயணம். என் ஆறு வயது பேத்தி சேரன்மாதேவியில் அவளது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்தாள். சென்னைப்புற நகர்ப் பள்ளி ஒன்றில்தான் அவளைச் சேர்த்து இருந்தார்கள். ரெண்டாம் கிளாஸ் படிக்கும் அவளுக்கு பள்ளிக்கூடம் எல்லாம் மூடி வருடம் ஒன்றுக்கு மேல் ஆயிற்று.. கொரோனாவின் கோர ஆட்சி தொடர்ந்துகொண்டு இருந்தது. சேரன்மாதேவியில் தங்கியிருக்கும் பேத்தியை நேரில் பார்த்துவிட்டு வந்தால் தேவலாம் என்று எனக்கு ஒரு யோசனை. சிறப்பு ரயில் என்று ஒன்றோ இரண்டோ சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச்சென்றும் திரும்பிக்கொண்டிருந்தது. . […]
–எஸ்ஸார்சி அதிகாலையிலேயே மொட்டை மாடியில் இருக்கும் சிண்டெக்ஸ் தண்ணீர்த் தொட்டி காலியாகியிருப்பது தெரிந்தது. அவன் நீர் மோட்டார் சுவிட்சைப்போட்டான். சப்தம் வித்தியாசமாக வந்தது. இப்படியெல்லாம் வந்ததே இல்லை. ஹூம் ஹூம் என்று ஒரே ஹம்மிம்ங் ஓசை. ஏதோ கோளாறு அது மட்டும் தெரிந்தது. உடனேயே மோட்டார் நின்றும் விட்டது. மோட்டார் அருகே சென்று தொட்டு தொட்டுப் பார்த்தான். ஒன்றும் விளங்கவில்லையே. உள்ளே எங்கேனும் பியரிங்லில் பிடிப்பு இருந்தாலும் மோட்டார் ஓடாதுதான். ஆக தேங்காய் எண்ணெய் […]
பின்னூட்டங்கள்