Posted inகவிதைகள்
சொந்தங்களும் உறவுகளும்
தத்தம் இல்லங்களில் , நடைபெற இருக்கும் , பேத்தியின் பெயர்சூட்டுவிழா பேரனின் காதுகுத்தல் மகளின் பூப்பு நீராட்டு மகனின் திருமணம் மருமகளின் வளைகாப்பு அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி தாத்தாவின் சதாபிஷேகம் வாரிசின் புதுமனைப்புகுவிழா சகலமும் தடையின்றி முடியும்வரை , கிழம் இருக்கணுமே…