author

ஒரு பூ ஒரு வரம்

This entry is part 23 of 42 in the series 22 மே 2011

ஒரு பூ சோலையை கொண்டாடியது. அது மலர்ந்தும் மலராத தருணங்களில் மண் வயசுக்கு வந்தது . அந்தப் பூ ஊசித் தட்டான் ,வண்ணத்து பூச் சிகளை அருகழைத்து முகவரி சொல்லிக் கொண்டிருந்தது . யாரும் விலாசம் மறந்து விட லாகாது ….. மறக்காமல் வாசனையையும் பரிசளித்தது , கொஞ்சம் தேனையும். இதழ்களின் நுனியில் பனித்துளி பரவசமானபோது சூரியன் தாகம் தனித்து கொண்டான் அடர்ந்த வெறுமைகளில் அலைக் கழிந்த பேருக்கு அன்னமாக ….இனிக்கும் கனியாக அவதானிக்க இருந்தது . […]