கனவுகள்

அழகான சிறகு முளைத்து இதயம் அண்டவெளியில் பறக்கும்… அருகே ஒரு வானம் உருவாகும், உனக்கும் அது பிடிக்கும்… இந்த வெளிகளெல்லாம் கடந்து காட்சிகள் புலனாகும்… மொத்தத்தில் மனம் தூய்மையாகும்… காலம் அல்லாத காலம் உருவாகும்… காகிதமில்லாமல் புத்தகம் உண்டாகும்… மரம் செடி…

வருங்காலம்

இப்படியும் சிந்திக்கலாம்..! (சுனாமிஞாபகார்த்தமாக) அதோ – வெகு தூரத்தில்… யாரும் வாழ்ந்திராத தரைகளாக… முருகைக் கற்பாறைகள் ஏதோ ஜெபிக்கின்றன… கள்ளிச் செடிகள் ஏதோ கதை சொல்கின்றன… கடற்கரை மணலில் ஏதேதோ கால் தடங்கள் கண்டு பிடிக்கப் படாமல் உக்கிய என்புத் துண்டுகள்..…

விசித்திரம்

மார்கழி பனிப் புயலில் மெழுகுவர்த்திகள் அணைந்து போகின்றன… எங்கும் குளிர் எதிலும் இருள் அங்கு – மின்னல் கீறுகள்தான் மாயமான வெளிச்சங்கள்.. சுவாச மூச்சுக்கள் தான் சூடான போர்வைகள்.. வீதி விளக்குகளும் விகடமாமக் கோபித்துக் கொள்கின்றன.. மின் விசிறிகளும் சொல்லாமலே அணைந்து…

தீர்க்கப் படாத சமன்பாடுகள்…

மேலும் பூரணப்படுத்தப்படாத பக்கங்கள் இருக்கட்டும் - இன்னும் தீர்க்கப்படாத சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கு… நீருக்குள் பிடித்த நிலா கையில் இருந்து எவ்வளவு தூரம்..? நீங்காத நினைவுகள் இதயத்திலே எந்த பாகம்..? தொலைந்து போன கால வெள்ளம் எந்தக் கடலில் சங்கமிக்கும்? தொல்லை கொடுக்கும்…

ஜுமானா ஜுனைட் கவிதைகள்

1.காலம் ஒரு கணந்தான்…! மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சங்கொடு… “சோனாமாரி”யிலும் அணையாதே! மேக கணங்களாய் உழை… மழைத்துளிகளாக சேவை செய்… பூமியைப்போல பொறுத்திடு… அகழ்வாரை அன்போடு நோக்கு… மின்னலிடம் வெளிச்சங் கேள்… இடியைத் தாங்கும் இதயம் பெறு… காற்றிலே கீதம் அமை… கைப்பிடிக்குள்…

வார்த்தைக்குள் அகப்படவில்லை..!!

பூக்களுக்குள் வாசம் எங்கே தேடினேன் - காம்பு மட்டுமே மீதமாகியது கைகளில்..! வெற்றிகளின் ஓரம் வரை சென்றேன், பெரும் கிண்ணக்குழிகளாய் நின்றன… மழை நாட்களில் “நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்.., வாழ்வின் நிலையாமை புகட்டின… சாலைகள் தோறும் கற்களைப் பார்த்தேன், மனித இதயங்களின்…

கனவு

வெகு தூரப் பயணம்.. இது… ஆனால் ஒரே இடத்தில் இருந்து கொண்டே பயணம் செய்யும் வினோதம்! இங்கு தான் - கண்கள் இரண்டை மூடினாலும் பார்வை வரும்… ஒளி முதல்கள் இல்லாமலே வெளிச்சம் வரும்… வாய் கூடத் திறவாமலே வார்த்தை வரும்……

ஏய் குழந்தாய்…!

பூவில் ஒருபூவாய் அழகிற்கோரணியாய் அடியோ தாமரையிதழாய் அகம்பாவம் அறியாதவளாய் குணம் வெள்ளை நிறமாய் குறுநகையால் வெல்வாய்…! மகிழ்ந்தால் மங்கலப்புன்னகையாய்… மதியால் மாநிலம் காப்பவளாய்… அழுதால் ஆற்றிடை ஆம்பல் மலராய்… அதிர்ந்தால் நாற்றிடை நாதஸ்வரமாய்… அயர்ந்தால் தென்னங்கீற்றிடைப் பூவாய் உறைவாய். சீருடைச் சிப்பிக்குள்…

இயற்கை வாதிக்கிறது இப்படி……

அந்தி வெளிச்சம் வருகிறது..! காற்றே வழிவிடு ஆயிரங்கொண்டலோடி வருகிறது… மின்மினிப் ப+தமாய் சூரியன் மறைகிறான் சிவந்த கனல்களால் விண்ணிலே உரசுகிறான்… மேற்கிலே உலை மூட்டுகிறான் மேக கணங்களும் தீப்பிடிக்கின்றன… அந்தி வெளிச்சம் வருகிறது காற்றே வழிவிடு! அவசரமாய் மறைந்து விடப்போகிறது… கதிரவனின்…

இனிக்கும் நினைவுகள்..

இனிப்பின் சுவை இதுதான்… சின்ன வயதில்… எங்கள் நினைவில்… சவர்க்கார முட்டையூதி சுவரில் வைத்து உடைத்தோம்… பட்டம் செய்து பறக்க விட்டோம் - அதில் நாமும் கற்பனையில் பறந்தோம்… நிலாச்சோறு சமைத்து வேடிக்கை பார்த்தோம் மழையில் நனைந்து ஓடிப்பிடித்தோம் வாழை நாரில்…