author

கனவுகள்

This entry is part 19 of 31 in the series 19 பிப்ரவரி 2012

அழகான சிறகு முளைத்து இதயம் அண்டவெளியில் பறக்கும்… அருகே ஒரு வானம் உருவாகும், உனக்கும் அது பிடிக்கும்… இந்த வெளிகளெல்லாம் கடந்து காட்சிகள் புலனாகும்… மொத்தத்தில் மனம் தூய்மையாகும்… காலம் அல்லாத காலம் உருவாகும்… காகிதமில்லாமல் புத்தகம் உண்டாகும்… மரம் செடி கொடிகளில்லாமல், உனக்காய் காற்றுக் கூட வரும் சுவாசிக்க… உடல் நொந்திடாமல் தென்றல் வீசிடும் இதமாக… மனிதரில் பல ரகம், உனக்காய் தனியொரு கிரகம் உருவாகும்… உள்ளம் தனி உருவமாக வெளியே வந்து தோன்றிடுமே… மொத்தத்தில் […]

வருங்காலம்

This entry is part 10 of 29 in the series 25 டிசம்பர் 2011

இப்படியும் சிந்திக்கலாம்..! (சுனாமிஞாபகார்த்தமாக) அதோ – வெகு தூரத்தில்… யாரும் வாழ்ந்திராத தரைகளாக… முருகைக் கற்பாறைகள் ஏதோ ஜெபிக்கின்றன… கள்ளிச் செடிகள் ஏதோ கதை சொல்கின்றன… கடற்கரை மணலில் ஏதேதோ கால் தடங்கள் கண்டு பிடிக்கப் படாமல் உக்கிய என்புத் துண்டுகள்.. 8.31ல் நின்றுவிட்ட கடிகாரங்கள்… என்றோ பசுமை பேசி பாழடைந்த கிராமங்கள்… இன்னும் கண்ணீர் விடுகின்ற சுறாமீன் முட்கள்… இன்னமும் மூச்சுவிடும் கடல் நீர்த்துளிகள்… எல்லாமே என்ன மாயைகள்…? சென்ற தலைமுறையின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம் […]

விசித்திரம்

This entry is part 6 of 39 in the series 4 டிசம்பர் 2011

மார்கழி பனிப் புயலில் மெழுகுவர்த்திகள் அணைந்து போகின்றன… எங்கும் குளிர் எதிலும் இருள் அங்கு – மின்னல் கீறுகள்தான் மாயமான வெளிச்சங்கள்.. சுவாச மூச்சுக்கள் தான் சூடான போர்வைகள்.. வீதி விளக்குகளும் விகடமாமக் கோபித்துக் கொள்கின்றன.. மின் விசிறிகளும் சொல்லாமலே அணைந்து போகின்றன.. மார்கழிப் பனிப் புயலில் எவைதான் எஞ்சுகின்றன…? உறக்கங்கள் மட்டும் தான்! கனவுகளைத் தேடி ஆன்மாக்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன., கார்கால மின்னல் வெளிச்சங்களில் எப்படித்தான் தேடிப்பார்க்கப் போகின்றனவோ…? ஜுமானா ஜுனைட், இலங்கை.

தீர்க்கப் படாத சமன்பாடுகள்…

மேலும் பூரணப்படுத்தப்படாத பக்கங்கள் இருக்கட்டும் – இன்னும் தீர்க்கப்படாத சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கு… நீருக்குள் பிடித்த நிலா கையில் இருந்து எவ்வளவு தூரம்..? நீங்காத நினைவுகள் இதயத்திலே எந்த பாகம்..? தொலைந்து போன கால வெள்ளம் எந்தக் கடலில் சங்கமிக்கும்? தொல்லை கொடுக்கும் சுவாச காற்று வளியில் என்ன சதவீதம்..? ஒரு துளிக்கண்ணீர் விழுந்துடைந்தால் இதயத்தில் எத்தனை சுமை நீங்கும்..? ஓருயிர் செற்று மடிகையிலே எத்தனை கண்ணீர் துளி சேரும்..? தீர்வு கிடைக்கும் வரை அப்படியே இருக்கட்டும் அவை […]

ஜுமானா ஜுனைட் கவிதைகள்

This entry is part 41 of 44 in the series 16 அக்டோபர் 2011

1.காலம் ஒரு கணந்தான்…! மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சங்கொடு… “சோனாமாரி”யிலும் அணையாதே! மேக கணங்களாய் உழை… மழைத்துளிகளாக சேவை செய்… பூமியைப்போல பொறுத்திடு… அகழ்வாரை அன்போடு நோக்கு… மின்னலிடம் வெளிச்சங் கேள்… இடியைத் தாங்கும் இதயம் பெறு… காற்றிலே கீதம் அமை… கைப்பிடிக்குள் உலகம் எடு… கால வெள்ளத்தோடு கல்லாக உருளாதே, பாறையாய் நில்லு., சந்தோஷச் சிறகில் பறவையாய்ப் பற… பனித்துளியாய் வாழ இலையிடம் இடங்கேள்… சூரியன் சுட்டாலும் அழியாமல் வாழ்… தேனீயாய் சுற்று… எறும்பாய் உழை… தென்றலாய் […]

வார்த்தைக்குள் அகப்படவில்லை..!!

This entry is part 34 of 45 in the series 2 அக்டோபர் 2011

பூக்களுக்குள் வாசம் எங்கே தேடினேன் – காம்பு மட்டுமே மீதமாகியது கைகளில்..! வெற்றிகளின் ஓரம் வரை சென்றேன், பெரும் கிண்ணக்குழிகளாய் நின்றன… மழை நாட்களில் “நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்.., வாழ்வின் நிலையாமை புகட்டின… சாலைகள் தோறும் கற்களைப் பார்த்தேன், மனித இதயங்களின் மறு வடிவம் யாம் என்றன.. கண்ணாடி தேசத்திற்குள் நுழைந்தேன், என் நிழலைத் தவிர மற்றெல்லா நிழல்களும் ஒளிந்து கொண்டன…. உண்மை கொண்டு உலகைநோக்கினேன், பார்வைக்கு முன்னாலுள்ளதெல்லாம் பூஜ்ஜியமாகின.. பார்வை தாண்டி நோக்கும் போது பௌதிகஅதீதம் […]

கனவு

This entry is part 45 of 54 in the series 4 செப்டம்பர் 2011

வெகு தூரப் பயணம்.. இது… ஆனால் ஒரே இடத்தில் இருந்து கொண்டே பயணம் செய்யும் வினோதம்! இங்கு தான் – கண்கள் இரண்டை மூடினாலும் பார்வை வரும்… ஒளி முதல்கள் இல்லாமலே வெளிச்சம் வரும்… வாய் கூடத் திறவாமலே வார்த்தை வரும்… ஓராயிரம் குண்டுகள் வெடிக்கும் ஆனால் ஒரு சலனமும் இருக்காது… ஒரு மொட்டு மலர்ந்து விட்டால் எத்தனை கோடி சப்தங்கள் இங்கே…! தொலை தூரப் பயணம்… இங்கே தொடுவானில் தொங்கு பாலம் தொங்கும்… அதிலே… “குதி”யிலாமல் […]

ஏய் குழந்தாய்…!

This entry is part 36 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

பூவில் ஒருபூவாய் அழகிற்கோரணியாய் அடியோ தாமரையிதழாய் அகம்பாவம் அறியாதவளாய் குணம் வெள்ளை நிறமாய் குறுநகையால் வெல்வாய்…! மகிழ்ந்தால் மங்கலப்புன்னகையாய்… மதியால் மாநிலம் காப்பவளாய்… அழுதால் ஆற்றிடை ஆம்பல் மலராய்… அதிர்ந்தால் நாற்றிடை நாதஸ்வரமாய்… அயர்ந்தால் தென்னங்கீற்றிடைப் பூவாய் உறைவாய். சீருடைச் சிப்பிக்குள் முத்தாய்… தேரிடைப் பூவுக்குள் தேனாய்… நேர்த்தியாய் பாடசாலையில் பயில்வாய் சீரிய குழந்தாய் சுறுசுறுப்பாய்..! ஜுமானா ஜுனைட், இலங்கை.

இயற்கை வாதிக்கிறது இப்படி……

This entry is part 43 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அந்தி வெளிச்சம் வருகிறது..! காற்றே வழிவிடு ஆயிரங்கொண்டலோடி வருகிறது… மின்மினிப் ப+தமாய் சூரியன் மறைகிறான் சிவந்த கனல்களால் விண்ணிலே உரசுகிறான்… மேற்கிலே உலை மூட்டுகிறான் மேக கணங்களும் தீப்பிடிக்கின்றன… அந்தி வெளிச்சம் வருகிறது காற்றே வழிவிடு! அவசரமாய் மறைந்து விடப்போகிறது… கதிரவனின் தோல் உரிந்து விட்டதோ? கடலும் படம் எடுக்கிறது ஓசை படாமல் ஒப்பாரி வைக்கிறது… அந்தி வெளிச்சம் வருகிறது… ஆனால் சூரியன் மறைகிறது… சூரியன் மறையும் போதும சுகமான வெளிச்சங்கள்… ஜுமானா ஜுனைட், இலங்கை.

இனிக்கும் நினைவுகள்..

This entry is part 7 of 47 in the series 31 ஜூலை 2011

இனிப்பின் சுவை இதுதான்… சின்ன வயதில்… எங்கள் நினைவில்… சவர்க்கார முட்டையூதி சுவரில் வைத்து உடைத்தோம்… பட்டம் செய்து பறக்க விட்டோம் – அதில் நாமும் கற்பனையில் பறந்தோம்… நிலாச்சோறு சமைத்து வேடிக்கை பார்த்தோம் மழையில் நனைந்து ஓடிப்பிடித்தோம் வாழை நாரில் பூக்கள் தொடுத்து வீணை செய்து கீதம் இசைத்து கூட்டாய் விளையாடினோம்.. முற்றத்து மணலில் வீடு கட்டி உள்ளே சென்றோம் உடைந்ததுவே… வெள்ளத்தில் காகிதக் கப்பல் விட்டு நாமும் சென்றோம் கற்பனையிலே… என்ன சொல்ல, என்ன […]