author

2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

This entry is part 13 of 18 in the series 23 ஏப்ரல் 2017

பவள சங்கரி அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற சூன் திங்கள் 9,10,11 (2017) ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். இம்மாநாடு வெற்றி பெறத் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது பங்களிப்பையும் அளித்திட இருகரம் குவித்து வேண்டுகிறோம். மாநாட்டில் கருத்தரங்கம், சொல்லரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடக நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடும் கலந்துரையாடல் போன்ற மிகச் சிறப்பான நிகழ்வுகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் கட்டுரை படைக்க […]

வந்துவிடு வனிதா.. !

This entry is part 2 of 23 in the series 27 நவம்பர் 2016

  சன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் சுழட்டியடித்தது. அவளுடைய தலை சன்னலில் முட்டியிருந்தது. சன்னல் தூரிகையின் நெடி மூக்கில் நுழைந்து ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.அவள் களைப்பாகவும் இருந்தாள்.   தெருவில் சிலர் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.கோடிவீட்டு கோதண்டம் தன் வீடு நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். சரக் .. சரக் என்று கான்கிரீட் தரையில் உராய்ந்துகொண்டு சென்ற அவருடைய சப்பாத்து அடுத்து வந்த மண் தரையில் […]

பெண்கள் நிலை – அன்றும் இன்றும்!

This entry is part 1 of 12 in the series 22 மே 2016

பவள சங்கரி  பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சில துறைகளைத் தவிர வேறு எதிலும் தலையிடுவது என்பது அரிதாக இருந்த காலமும் ஒன்று இருந்தது என்று நினைவுகூரும் அளவிற்கு இன்று பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை என்ற நிலையே உள்ளது. இன்று தொழில் நிமித்தம் உலகம் முழுதும் தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக இருப்பினும் அதனை உடைத்தெறிந்துவிட்டு முன்னேற்றப் பாதையை […]

மீகாமனில்லா நாவாய்!

This entry is part 10 of 19 in the series 25 ஜனவரி 2015

மிதமான சாரலில் இதமாய் நனைந்தபடி நடமிடும் அழகில் இலயித்த வான்மேகம் வளமாய் பொழிந்து வசமாய் வீசிடும் வளியின் வீச்சில் வெகுதூரம் விரைந்தோடி மௌனலையினூடே கிழித்துச்செல்ல எத்தனிக்கும் மீகாமனில்லா நாவாய்  நீராழியலையின் மிதவையாய்  வெள்ளத்தினூடே ஓயாமல்  காற்றின் திசையில் சிறகடித்தபடி  ஆழிப்பேரலையின் அதிர்வில் திசைமாறி மதங்கொண்ட களிறே போலோடியது நீரடிப்பதால் அழுவதில்லை மீன்கள் பேரிடியால் வீழ்வதில்லை நீரலைகள் குத்தீட்டியால் குத்திக் கிழித்தாலும் குழம்பித் திரியா வான்மேகங்கள் முகமூடியணியும்  விடையறியா வினாக்கள் அக்கரை செல்ல அக்கறையாய் கலங்கரை விளக்கை நாடும் […]

அமர காவியம்!

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

காதல் என்பது நீ காதலிக்கும் அந்த ஒருவருக்கானதேயல்ல உன்  தனித்தன்மையை உணரச் செய்து உன் சுகதுக்கம் என எதையும் எவருடன் பகிரமுடிகிறதோ எவருடன் நீ நீயாகவே இருக்க முடிகிறதோ எவரால் உன் வாழ்க்கையில்  மாற்றம் ஏற்படுகிறதோ எவரால் அப்படியொரு காதலை உணர்த்த முடிகிறதோ அந்த ஒருவருக்கே உரித்தானது அது! வானத்தில் எழுதிவைத்தேன் உன் பெயரை மேகம் வந்து மறைத்துவிட்டது. கடலோரத்தில் மணல்மேட்டில் எழுதிவைத்தேன் அலைவந்து மொத்தமாக அடித்துச்சென்றது. இருதயத்தில் பொரித்து வைத்தேனதை இரும்பாக நிலைத்து நிற்கிறது அங்கே! […]

ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று.  அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடு நாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்திலென்ன இருக்கிறது? மீனாம்பா? – அட, போ! மீனாம்பாள் இறந்துபோய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே? …..  ஐயோ எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள்?  ….. ” என்பதாக ஒரு க்ஷணத்திலே […]

ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி

This entry is part 12 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடு நாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்திலென்ன இருக்கிறது? மீனாம்பா? – அட, போ! மீனாம்பாள் இறந்துபோய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே? ….. ஐயோ எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள்? ….. ” என்பதாக ஒரு க்ஷணத்திலே […]

உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

1911, டிசம்பர் 6ம் தேதி மகாகவி பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு நூல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் தடை செய்யும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எழாமல் இல்லை. இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் 1912 ம் ஆண்டுக்குப் பிறகு பாரதியாரின் படைப்புகள் ஒரு கட்டுக்குள் வந்திருக்கிறது. தம் வாழ்நாளில் எஞ்சிய அந்த ஒன்பது ஆண்டுகள், வறுமையின் கொடுமையில் சிக்கி, சின்னாபின்னமாகிவிட்டது. இந்த காலகட்டத்தில் மகாகவி […]

சுருதி லயம்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

    ”நன்னா யோசனை பண்ணி சொல்லும்மா சுருதி. உண்மையிலேயே நோக்கு என்னைப் புடிக்கலையா. நம்மளோட காதலுக்கு ஆயுசு இவ்ளோதானா? என்ன ஆகிப்போச்சின்னு இப்படி கடந்து துடிச்சிண்டிருக்கே. நானும் உனக்குப் புடிச்சா மாதிரி இருக்கணும்னுதான் முயற்சி பண்றேன். ஆனா என்னமோ தெரியல, இந்த மனசு ஒரு நிலைக்கு வரமாட்டீங்குது. எவ்வளவோ கட்டுப்பாடா இருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆனா என்னோட தொழில் என்னை அப்படி இருக்க உடமாட்டீங்குதுடி. புரிஞ்சிக்கோம்மா.. இனிமேல் சத்தியமா குடிச்சுட்டு வரமாட்டேன் .. இந்த ஒரு தரம் […]

டாப் டக்கர்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

பவள சங்கரி மச்சி, எங்கடா இருக்கே, சீக்கிரம் வாடா.. ஷாப்பிங் போகணும்னு சொன்னேனில்ல.. எங்கடா, இப்பதான் டூட்டி முடிச்சு வெளியே கிளம்பறேன். வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும். பீக் ஹவர்.. பஸ் கிடைச்சி வரணுமே.. அப்புடி என்னடா அவசரம் உனக்கு.. வீக் எண்ட் போலாமே மச்சி…” “இல்லடா, என்னோட போன் ரொம்ப மக்கர் பண்ணுது.. உடனடியா வாங்கியாகணும். முக்கியமான டேட்டாஸெல்லாம் அழிஞ்சி போச்சுன்னா என்ன பண்றதுன்னு பயமா இருக்குடா.. இன்னைக்கு சம்பளம் வாங்கினேன். அதான் […]