காத்திருப்பு

காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய தூசுப் படலத்தினுள் சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும் அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன பகல் முழுதும் தீக் கண்களால் பார்த்திருந்த வெயில் மேகக் கூட்டத்துக்கு மேலும் நீர் கோர்த்தது கதவுகளைத் திறந்தேதான் வைத்திருக்கிறேன் எந்த ஓவியனாவது வந்து…

சேட்டைக்காரக் கறுப்புப் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

அவள் கல்வி கற்பதுவும் நான் கல்வி கற்கும் நிலையத்திலேயேதான். முதலில் அவளை ஒரு கறுப்புப் பெண்ணாக அறிந்து கொண்டேன். பின்பு அவளது நடத்தைகளை ஆராய்ந்து 'சேட்டை'ப் பகுதியையும் சேர்த்துக் கொண்டேன். ஆகவே அவள் சேட்டைக்காரக் கறுப்புப் பெண்ணாகவேயானாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை.…

சித்திரவதைக் கூடத்திலிருந்து

  அடுத்த கணம் நோக்கி எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை   எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும் அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியவில்லை சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே எண்ணங்கள் காணாமல் போயின…

நினைவுகள் மிதந்து வழிவதானது

    இருளின் மொழியைப் பேசும் தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும் வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய வனத்தின் நீரூற்றுக்கள் பெரும்பாலும் மௌனமானவை எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில் பரவியணைக்கப் போதா நீர் நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில் யாது பயன்   காலம் காலமாக…

துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்

  1. நானொரு கப்பற்படை மாலுமி எனது விழிகளைச் சாப்பிட்டன மீன்கள் பார்ப்பதும் அழுவதும் என்னைப் பற்றியதாகவே உள்ளன எனது வாழ்க்கையில் நான் உயர்ந்திருந்தேன் என்னை நீங்கள் நம்பாவிடில் எனது ஆடைகளைப் பாருங்கள்   உயிரற்ற ஏனையவர்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லையென்பதால்…

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்

வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும் சிலவேளை வீழ்வதாய்ப் போக்குக் காட்டும் ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும் இடித்திடித்துக் கொட்டிய நேற்றின் இரவை நனைத்த மழை உனதும் எனதுமான…

ஈரக் கனாக்கள்

ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும் நீர்ப்பாம்புகளசையும் தூறல் மழையிரவில் நிலவு ஒரு பாடலைத் தேடும் வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில் மூங்கில்கள் இசையமைக்கும் அப் பாடலின் வரிகளை முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும் ஆல விருட்சத்தின் பரந்த கிளைக் கூடுகளுக்குள் எந்தப் பட்சிகளின் உறக்கமோ கூரையின்…

சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

பாகங்களாக உடைந்திருக்கிறது அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு தென்படும் முழு நிலவு விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன வனத்தின் எல்லை மர வேர்களை தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில் இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள் காற்று அணைக்கப் பாடுபடும் அந்த…

நீ, நான், நேசம்

நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான…

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா

'ஓ பரமபிதாவே' துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று ஆச்சியின் அழுகை ஓலம் ஆஸ்பத்திரி வளாகத்தை அதிரச் செய்திருக்கக் கூடும் சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை கண்டிக்கு அனுப்பியிருந்தது…