author

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-14 சிசுபால வதம் இரண்டாம் பகுதி

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

சிசுபால வதம் இரண்டாம் பகுதி இன்று கூட நமது தேசத்தில் பெரிய மனிதர்களுக்கு மாலை அணிவித்து பூர்ணகும்ப மரியாதை அளிக்கப் படுவது ஒரு வழக்கமாகவே உள்ளது. தனிநபர் மரியாதைக்காக தேர்வு செய்யப் படும் மனிதர் அவருடைய பிறப்பின் காரணமாக தேர்வு செய்யப் படுவதில்லை. சமூகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கே காரணமாக அமைகிறது. ஒரு சபையில் அனைவரும் ஒரே இனத்தை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களுள் வயது முதிர்ந்தவர் தேர்வு செய்யப் படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் இந்த முறைமை […]

அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1

This entry is part 10 of 32 in the series 15 டிசம்பர் 2013

அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1 யுதிஷ்டிரரின் ராஜசூய யாகம் தொடங்கியது. பல்வேறு தேசங்களிலிருந்து மன்னர்களும் மக்களும் குவியத் தொடங்கினர். சாதாரண குடிமகனிலிருந்து வேள்விக்கு வந்திருந்த முனிவர்கள் வரை அனைவருக்கும் வேள்வி எவ்வித தடங்கலும் இன்றி முடிய வேண்டுமே என்பது கவலையாக இருந்தது. அப்படி ஒரு மகா வேள்வி நடந்து முடிவதற்கு பாண்டவர்கள் தமது நட்பு மன்னர்களுக்கென்று சில பொறுப்புகளை ஒப்படைத்திருந்தனர். துச்சாதனுக்கு விருந்து மேற்பார்வை; வரவேற்புக் குழுவின் தலைவராக சஞ்சயன். கிருபருக்கு பரிசுப் பொருட்களின் மேற்பார்வை.; துரியோதனனுக்கு […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்

This entry is part 6 of 26 in the series 8 டிசம்பர் 2013

அத்தியாயம் 12 ஜராசந்த வதம் கானடவப்ரஸ்தத்தில் யுதிர்ஷ்டிரரின் சபை கூடியது. அந்த சபையில் குடும்ப அங்கத்தினர், நண்பர்கள் மற்றும் மகரிஷிகளான தௌமியரும் த்வைபாயனரும் கூட இருந்தனர். அவர்களுடைய ஒருமனதான தீர்மானம் என்னவென்றால் தன்னை சக்கரவர்தியாக பிரகடனப் படுத்திக் கொள்ள யுதிஷ்டிரர் ராஜசூய யாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.   ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதி இன்றி மிகுந்த பொருட் செலவில் அத்துனை பெரிய யாகத்தை புரிய யுதிஷ்டிரர் தயங்கினார். ஸ்ரீ கிருஷ்ணரை அழைத்து வர ஆள் அனுப்புகிறார். ஸ்ரீ கிருஷ்ணரும் […]

கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 11 காண்டவ வனம்

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன்   மகாபாரதத்தில் நாம் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரை ஹஸ்த்தினாபுரத்தின் அருகில் காண்டவம் என்ற பிரதேசத்தின் எல்லையில் இருந்த பெரிய காட்டின் அருகில் பாண்டவர்களுடன் சந்திக்கிறோம். காண்டவ வனம் எரிக்கப் படும் கதைகளை நாம் கேட்டால் அவற்றில் பாதி வெறும் கற்பனை என்பது தெளிவாகும்.உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம். சுவேதகி என்றொரு அரசன் இருந்தான். அவன் யாகங்கள் புரிவதற்கு மிகவும் விருப்பம் கொண்டவன். ஒரு முறை அவனது யாக குண்டத்தில் எவ்வளவு […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்

This entry is part 7 of 24 in the series 24 நவம்பர் 2013

அடுத்து நாம் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்கும் இடம் சுபத்ராவின் ஹரணத்தில்தான். ஒரு ஹரணத்தில் அன்று தான் செய்ததை இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ணரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒரு ஆடவன் தான் விரும்பும் பெண்ணை மணந்து கொள்வதற்காக அவளை கவர்ந்து செல்வதற்கு ஹரணம் என்று பெயர். ராக்ஷச மணம் என்பது இவ்வாறு விருப்பப்பட்ட பெண்ணை ஹரணத்தில் கவர்ந்து சென்று செய்து கொள்ளும் திருமணமாகும். தேசங்கள் தோறும் சமூக சட்டங்கள் மாறுகின்றன. இவற்றைக் கடந்து மனித […]

அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம்

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம் மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் முதன் முதலில் தோன்றிய இடம் திரௌபதியின் சுயம்வரமண்டபமாகும். இது மகாபாரதத்தின்  மூல நூலிலிருந்து வந்தது என்பதற்கு காரணங்கள் உள்ளன. இருப்பினும் திரௌபதி யாககுண்டத்தில் அக்னியிலிருந்து தோன்றியவள் என்பதையோ அவளுக்கு ஐந்து கணவன்மார்கள் என்பதையோ என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் திரௌபதி துருபத ராஜனின் மகள் என்பதை நம்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதே போல் அவளுடைய சுயம்வரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடும் வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்று அர்ஜுனன் […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-8 துவாரகா வாசம்.

This entry is part 22 of 34 in the series 10 நவம்பர் 2013

அத்தியாயம்-8 துவாரகா வாசம். ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையின் தனிப் பெரும் அரசர் இல்லை. நமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி துவாரகை பல சிற்றரசர்களால் ஆளப்பட்ட ஒரு சமஸ்தானம் ஆகும்.. அதனால்தான் அங்கு வலிமையான மன்னர்கள் இருந்தனர். அந்த சமஸ்தானத்தில்  மூத்த மன்னர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டன. இந்த ஒரு காரணத்தால்தான் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனை வென்றாலும் கூட மூத்த மன்னரான ஸ்ரீ கிருஷ்ணரின் தாத்தாவான உக்கிர சேனனுக்கு  மகுடம் சூட்டப் படுகிறது. அரசு மேற்பார்வை என்று வரும்பொழுது எவரிடம் […]

திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்

This entry is part 28 of 29 in the series 3 நவம்பர் 2013

சத்யானந்தன் செப்டம்பர் 5, 2000 இதழ்: கட்டுரை : இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்: சின்னக் கருப்பன் – கண்ணப்பன் என்பவர் ஆரம்பித்துள்ள ஜாதிக் கட்சி பற்றிக் கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உள்ள ஜாதிக் கட்சிகளைப் பட்டியலிடுகிறார். சி.க. திரு.வி.க. அவர்களையும் ஜாதி நோக்கில் குறுக்க முயலும் ஒரு ஜாதியைச் சாடுகிறார். (< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200090515&edition_id=20000905&format=html> ) நகைச்சுவையும் வித்தியாசமானவையும்: “அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கை ” – ஆசை. ஆசைத்தம்பி- “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்னும் […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7 ஜராசந்தன்

This entry is part 27 of 29 in the series 3 நவம்பர் 2013

அத்தியாயம் 7 ஜராசந்தன் இந்தியாவின் வரலாற்றை நோக்கும்பொழுது பண்டைய காலத்தில் சக்ரவர்த்தி என்ற பெயரில் ஒரு பெரு மன்னனும் அவனுக்குக் கீழ் குறுநில மன்னர்களும் இருந்து வந்திருக்கின்றனர். இந்த குறுநில மன்னர்கள் பெரும்பாலும் சக்க்ரவர்த்திகளுகுக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பர்.ஒரு சிலர் கப்பமும் கட்டாமல் அதே சமயம் மன்னருக்கும் அஞ்சாமல் வலம் வருவர். இந்த ஒரு சிலரே பெரிய யுத்தம் வரும்பொழுது மகாராஜா அல்லது சக்ரவர்த்திக்கு துணை புரிவார்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் ஜராசந்தன் ஒரு பெரிய சக்கரவர்த்தியாக […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்

This entry is part 23 of 31 in the series 20 அக்டோபர் 2013

அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமனும் பிருந்தாவனத்தில் இரண்டு வலிமையுள்ள வாலிபர்களாக வளர்ந்து வரும் செய்தியும், பூதனை மற்றும் அரிஷ்டன்  ஆகிய தனது விசுவாசமான ஊழியர்கள் இவர்கள் இருவரால் அழிக்கப் பட்டனர் என்ற தகவலும் கம்சனை சென்றடைகிறது. தேவரிஷியான நாரதர் கம்சனிடம் சென்று கிருஷ்ணனும் பலராமரும் வசுதேவருடைய பிள்ளைகள் என்ற உண்மையை சொல்லி விடுகிறார்.மேலும் எட்டாவதாக பிறந்த சிசு வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்ததல்ல என்றும் அந்த சிசு நந்தகோபருக்கும் யசோதைக்கும் […]