சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)

அட(ய்)யும் சக்கை பிரதமனும் கழிக்கா(த்)த கேரளக்காரன் உண்டோ? சோவின் நாடகமும் நையாண்டியும் களிக்காத தமிழ்ப் பாமரன் உண்டோ? டி.வி. வரதராஜனின் யுனைட்டெட் விஷ¤வல்ஸ் குழு மீண்டும் மேடையேற்றிய நாடகம். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்குப் பிறகு ( 1971 ) மீண்டும் மேடையேற்றுவதால்,…

சத்யசிவாவின் ‘ கழுகு ‘

வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வு செய்ததற்காக, இயக்குனரைப் பாராட்ட வேண்டும். இன்னொரு மைனாவாக வேண்டிய படம். மலைப்பாதைகளில் எடுக்கப் பட்டதால், கொஞ்சம் சறுக்கி விட்டது. படத்தில் இன்னொரு வருடும் அம்சம், பிஜ்லி பட்டாசுகள் போல் ஆங்காங்கே தெறித்து விழும் மெல்லிய நகைச்சுவை.…

ஜி.கிச்சாவின் ‘ மாசி ‘

தெருவோர ஜூஸ் கடைகளில், நெல்லைப் பழரசம் என்று ஒன்று தருவார்கள். சிகப்பு கலரில், கொழகொழவென்று, பெரிய கண்ணாடி டம்ளரில் இருக்கும் அது. பாயசத்துக்கு முந்திரி போல், நடுவில் ஒரு சில பைன்னாப்பிள் துண்டுகள் பல்லில் சிக்கும். சாப்பிட்டால் கொஞ்ச நேரத்துக்கு ‘…

இந்த வார நூலகம்

உயிர்மை மார்ச் இதழில், சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘ மூன்று பெண்கள் ‘ கதை. ஒரு நூறு வருட நம்பிக்கையை முன்வைத்து பின்னப்பட்டிருக்கிறது கதை. அதாவது, குழந்தையின்மை காரணமாக, தத்து கொடுக்கப்படும் பெண் குழந்தைகளுக்கும், குழந்தையில்லை என்பது மையக்கரு. நூறு வருடங்களுக்கு முன்,…

செல்வாவின் ‘ நாங்க ‘

அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்தியவர், இந்தப் படத்தில் பத்து புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மீண்டும் பாலபாரதியின் இசை. கமலும் ரஜினியும் ஆசி வழங்கி இருக்கிறார்கள். நடித்தவர்களெல்லாம், சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகள். எல்லாமே புதுமையாக இருக்கிறதா? ஆனால் புதுமை எல்லாம் இதோடு ஸ்டாப். படத்தில்? 1985…

தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட, உலகத் திரைப்படங்களின் திரையிடலில், கொஞ்சம் புரொஜெக்டர் சொதப்பியதால், இம்முறை திரையிடும் முன்பு, ஒரு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டார்கள். அப்படி ஓட்டிய குறும்படம் பொன். சுதா இயக்கிய, எழுத்தாளர் அழகியபெரியவனின் சிறுகதையான ‘ நடந்த கதை ‘ கீழத்தெரு தலித்துகளால்…

ஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )

சின்ன வயதில் மைடியர் குட்டிச்சாத்தான் பார்த்து ரசித்த இனிய நினைவுகளோடு பார்க்கப் போன படம். கொஞ்சம் வேர்வுல்ப், கொஞ்சம் கிங்காங், எழுபதுகளில் காட்டப்பட்ட கிராமம், பெல் பாட்டம், பியட் கார், சின்ன வயது ஹாரிஸ் ஜெயராஜ் போல ஒருவன், சின்ன வயது…

பின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .

எம் ஜி சுரேஷை, ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னர், இலக்கியக் கூட்டங்களில் பார்த்துப் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. அவர் அதிகம் உலகத் திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார். நன்றாக ஊதியம் வரக்கூடிய வங்கி வேலையை விட்டு விட்டு, புத்தகம் எழுதுவதில்…

வசந்தபாலனின் ‘ அரவான் ‘

வெயில், அங்காடித்தெரு இயக்குனர். சு.வெங்கடேசனின் கதை. பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கிறது படம். கள்ளர்களையும் காவல்காரர்களையும் மையமாகக் கொண்ட கதை. வேம்பூர், மாத்தூர், மதுரைக் கோட்டை, காவானிகாவல் என்று பழக்கத்தில் இல்லாத பெயர்களில் ஊர்கள். கதை நடைபெறும் காலம், பதினெட்டாம் நூற்றாண்டு. மன்னராட்சிக்…
கன்யாகுமரியின் குற்றாலம்

கன்யாகுமரியின் குற்றாலம்

நானொன்றும் இசை நிபுணன் இல்லை. எனக்கு சில ராகங்களின் பெயர்கள் தெரியும் அதுவும் பாப்புலரான சினிமாப்பாட்டுகளை வைத்து, பத்திரிக்கை செய்திகளின் அடிப் படையில், அவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன். ‘ மன்னவன் வந்தானடி ‘ கல்யாணி என்று படித்ததாக ஞாபகம். பூபாளம் உதயத்திற்கும்,…