ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அந்தத் தீப்பொறி விழுந்தது இவன் நட்பின் இனிய பசுமையான மென் பிரதேசங்கள் எரிந்து கருகின இடைவெளி அந்த நண்பர்களைக் கடுமையாக அமைதிப்படுத்திவிட்டது ஒரு மலரின் எல்லா இதழ்களும் மீண்டும் கூம்பி மொட்டானதுபோல் அவர்கள் மௌனமானார்கள் அன்பு கெட்டிதட்டிப்போய் ஆழ்ந்த மௌனத்தில் உறைந்து கிடக்கிறது ஆனாலும் இப்போதும் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள் உயிர்ப்பில்லாமல் …
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவன் பாதையெங்கும் முட்கள் காடாய் வளர்ந்துள்ளன ஆயிரம் கவிதைகள் படித்து ரசித்த பின்னர் நான்கு வரிகள் கூட அவனிடம் இல்லை அவன் எழுதும் கவிதைகளில் அழகு நடனமாடும் ஆனால் சொற்கள் அவன் மனம் தங்காமல் வெறுமை கொண்டு நிற்கும் கட்டுரை எழுதி முடித்த பின்னர் எல்லா சொற்களும் வடிந்து கழுவிய தரை போலாகிவிடும் திரும்பிப் பார்க்கையில் அவன் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவன் பணிநிறைவு பெற்றுச் சில மாதங்கள் ஓடிவிட்டன ஒவ்வொரு நாளும் கனக்கின்றன அவனுக்கு … இருளில் நீந்தி நீந்தி மனக்கரங்கள் சோர்ந்தன எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமைகள் ஆயின நட்பின் திசையில் ஒரே மயான அமைதி ஒளி மலையாய் எதிர் நிற்கும் பகலை எவ்வளவு நேரந்தான் மென்று கொண்டிருப்பது ? புத்தக வாசிப்பில் மட்டும் மங்கலான ஒளி அவனுக்கு வழி காட்டுகிறது. […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மூன்று வயது பார்த்திவ் தன் ஆறு வயது அண்ணன் பார்கவ்வோடு பேசிக் கொண்டிருந்தான் ” நம்ம வயத்தில ஒரு சிங்கம் இருக்கு … அது நம்ம தூங்க ஆரம்பிச்ச உடனே தொண்டையில வந்து ஒக்காந்துக்கிட்டு இந்த ஆரம்பிக்கும் … “ ” தப்பு … தப்பு … நம்ம வயத்தில ஒரு பூதம் இருக்கு … […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பின்னால் கிடக்கும் செவ்வக வெளியில் ஆழ்ந்த இருட்டு ஆக்கிரமிக்கிறது ஐந்தாறு அகல் விளக்குகளின் வெளிச்சம் ஆறுதல் அளிக்கிறது அவ்வப்போது சில தீக்குச்சிகளின் உரசலில் தற்காலிக வெளிச்சம் மனம் நிரப்பும் இழந்ததால் இறந்தகாலமான அற்புதக் கணங்கள் மிதக்கும் இடங்களில் மனம் லயிக்கிறது உயிரின் கரைந்த இம்மிகள் விரவி நிற்கும் பகுதியில் என்னை நிலைநிறுத்த கால்பாவ முடியாமல் தவிக்கிறேன்.
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் விடியற்காலை மழையில் சகதியானது எங்கள் வீட்டு வாசல் இது அறியாமல் பாரிஜாத மலர்களைத் தூவியிருந்தன இரண்டு மரங்கள் பூமி மெல்லிய பூமெத்தையானது தனியழகுதான் காலை வாசல் பெருக்கும் போது கூடை மலர்களும் குப்பையாகி வாழ்விழந்து நிறம் மாறி மனம் வருந்தின !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் இரவு பகல் பாராமல் நின்று கொண்டிருக்கும் உங்களுக்குக் கால் வலி வேரில் தெரியும்தானே உங்கள் இலைக் குழந்தைகளின் எண்ணிக்கையை எப்போது உணரப் போகிறீர்கள் மனிதர்களுக்கு உங்கள் மௌனமொழி விளக்கம் என்ன ? எங்களுக்கு நிழல் தரும் பெருமையை நினைத்துப் பார்ப்பதுண்டா ? ஆக்சிஜன் தருவதற்கு வசூல் ஏதும் செய்யாத அதிசய மருத்துவர்கள் நீங்கள் உங்களுக்குத் தண்ணீர் தேவைப்படும் தருணத்தில் கூட மௌனம் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கிடைத்தவற்றின் பட்டியல் சிறியதாகவும் கிடைக்காதவற்றின் பட்டியல் பெரியதாகவும் அருகருகே நின்று அவனைப் பாடாய்ப் படுத்துகிறது பெரிய பட்டியலின் வரிகளில் அடிக்கடி அவன் மனம் தாவித்தாவி விழுகிறது அதில் புரண்டு புரண்டு கடைசியில். சலித்துப் பெருமூச்சில் கரைகிறது சிறு பட்டியல் அடிக்கடி ஏங்குகிறது தாவும் மனத்தைச் சபித்தபடி … நிகழ்காலப்புள்ளி. புறக்கணிக்கப்படுகிறது விதி எழுதிய முதல் பட்டியலைவிட மனம் எழுதிய இரண்டாம் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அப்பாவின் முதுமையின் கடைசி நாட்களில் கைவிரல்கள் பழைய மாதிரி கையெழுத்திட முடியவில்லை இன்னும் நாட்கள் சென்றால் அஞ்சலகக் கணக்கிலுள்ள இருநூறு ரூபா இல்லை என்றாகிவிடும் அப்பாவின் கணக்கை மூடியதில் அச்சிறு தொகை இப்போது என் கையில் … தொகை சிறியது என்னும் வருத்தம் கொஞ்சம்கூட எனக்கில்லை என் சேமிப்பில் இணைந்துவிட்ட அத்தொகை என் பொக்கிஷம் இன்றும் என்றும் … […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அந்த வெற்றிடத்தை அவள் ஆக்கிரமிப்பாளென அவன் நினைக்கவில்லை காதல் இருகரங்களையும் நீட்டி அழைத்த போது அவன் இறுக்கமான மௌனத்தை அவள் பின்னர் பாராட்டினாள் அவள் பேச்சில் பொய்கள் உண்மை போல் அலங்கரித்துக் கொண்டு புன்னகைக்கும் அவள் பொய்மைக்கு அவன் உண்மையின் மரியாதையையே கொடுத்தான் காதலின் முடிவுரையை ஒரு நாள் எழுதப்போகும் காலத்தின் மனம் அறியாமல் மலர் தூவிய பாதையில் இவர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் !
பின்னூட்டங்கள்