அணைப்பு

சுப்ரபாரதிமணியன் எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான நாளாக இருக்கும் என்று அம்மினி காலையிலேயே நினைத்திருந்தாள். அது எப்படி மோசம் என்று அவளுக்குத் தெரியவில்லை. சமிக்ஞை சொல்லும்…

சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா

சுப்ரபாரதிமணியன் திரைப்பட விழாக்கள் அதன் கவர்ச்சியையும் இயல்பையும் இழந்து கொண்டிருக்கின்றன. உள்ளங்கையில் குறுந்தகடுகள் குவிகையில் திரைப்பட விழாக்களுக்குச் செல்வது அவசியமற்றது, தேவையில்லாதது என்று தோன்றினாலும் திரைப்பட விழாக்களில் அதிகமாகிக் கொண்டிருக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாகக் கூடிக் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் 5…

அமராவதிக்குப் போயிருந்தேன்

சுப்ரபாரதிமணியன் அமராவதிக்குப் போயிருந்தேன் அமராவதியும் ஜீவனில்லாத நதியாகி விட்டது. ஆனால் தாராபுரம் பகுதி அமராவதி பகுதிக்குப் போகையில் ஆறுதலாக இருக்கும். சாயக்கழிவு, வீட்டுக்கழிவு எதுவும் கல்க்காமல் சற்றே சுத்தமாக அமராவதி காணப்படும். இவ்வாரம் சக்தி விருது அளிப்பதற்காக –பெற்றவர் சவுதாமின், ஓய்வு…

ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்

சுப்ரபாரதிமணியன் தமிழ்ச்சூழலில் அறிவியல் நூல்கள் பெரும்பாலும் விளக்க நூல்களாகவே அமைந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அறிவியல் துறைகளில் பணிபுரிவோர் தங்களின் அனுபவங்களை பதிவு செய்வது குறைவு, அவர்களுக்கும் இலக்கியம், நுண்கலைகளுக்கும் தொடர்பும் இரசனையும் வெகு குறைவாகவே இருக்கிறது . அவர்கள்…

ஒரு கோடி மெழுகுவர்த்திகள்

சுப்ரபாரதிமணியன் வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது .. அவள் நின்றிருந்த சூப்பர்மார்க்கெட் “மாலி”ன் இரண்டாம் தளம் முழுவதும் இருட்டாகி விட்டது. “ உலகம் இருண்டு விட்டது “…

தாய்மொழி வழிக்கல்வி

” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக் குரல்…
படிக்கலாம் வாங்க…   “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..”     ஆயிஷா நடராசனின்  “ இது யாருடைய வகுப்பறை “ :  நூல்

படிக்கலாம் வாங்க… “ வகுப்பறை வாழ்விற்கானப் பந்தயமா..” ஆயிஷா நடராசனின் “ இது யாருடைய வகுப்பறை “ : நூல்

  கல்வித்துறை சம்பந்தமான பல நூறு விதை   நெல்களின் தொகுப்புகளிலிருந்து புது பரிமாணமான விதைனெல்லாய் இத் தொகுப்பை ஆயிஷா நடராசன் கட்டமைத்திருக்கிறார்.உலக வகுப்பறைகளை ஒரு பார்வை பார்த்து மூச்சுவிட்டுக்கொண்டு  நம்மைப் பற்றியும் கொஞ்சம் யோசித்திருக்கிறார்.ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் அந்த உறவு…

கோர்ட்..மராத்தியத் திரைப்படம்: சிறந்த படத்திற்கான இவ்வாண்டின் தேசிய விருதுபெற்றது

சுப்ரபாரதிமணியன் அமைதி .. அமைதி .. கோர்ட் நடக்கிறது சுப்ரபாரதிமணியன் நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் மீது சாட்டப்பட்ட குற்றத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். குற்றம்: சாக்கடைசுத்தம் செய்யும்தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக. எப்படித்தூண்டினார் : அவர் மேடையில் பாடல்கள் பாடியது மூலமாக.உணர்ச்சிப்…
போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்

போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்

சுப்ரபாரதிமணியன் போபாலில் விச வாயு நினைவுச் சின்னம் பற்றி விசாரித்தபோது பலரும் போபால் நினைவு மருத்துவமனையைப் பற்றியே சொன்னார்கள். போபால் நினைவுச்சின்னம் பார்க்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. கெடுபிடிகள்.. அசுரன் பிடித்த நகரம் போல் சோபை இழந்து இருக்கிறது பழைய போபால்... யூனியன்…

ஹைதராபாத் பயணக்குறிப்புகள்: சுப்ரபாரதிமணியன்

மற்றும் சிலர்: * என் முதல் நாவல்.திமுக ஆட்சிக்கு வந்த பின் வேலை இழந்த இந்தி ஆசிரியர் ஹைதராபாத்திற்கு பிழைக்க வந்த கதை. நர்மதா..மருதம் இரு பதிப்பகங்கள் 3 பதிப்புகள் வெளியிட்டுள்ளன. அதன் ஆதரசம் போஜராஜன் என்பவர் அவரை 23 ஆண்டுகளுக்குப்பின்…