author

கவிநுகர் பொழுது-16 கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து

This entry is part 12 of 18 in the series 2 ஜூலை 2017

கவிநுகர் பொழுது-16 —————————————————– தமிழ்மணவாளன் ——————————————————————————————————————————- ( கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து) ——————————————————————————————————————————- ’எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்’, என்பது ஔவை மொழி. ’எண்ணும் எழுத்தும் கவிதையெனத் தகும்’, என்கிறார், தன் புதிய தொகுப்பான, “எண்ணும் எழுத்தும்’, மூலமாக பிருந்தா சாரதி.ஒன்றைச் செய்வது எவ்வளவு சிறப்போ அதனினும் பன்மடங்கு சிறப்பானது அதனைத் தொடங்குவது. பெரிதகன்று வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதியின் பிறப்பு சிற்றூற்றாய் இருப்பினும் அதுவே மூலம். அதுவே வணக்கத்திற்குரியது. அத்தகைய தொடக்கம், இந்த எண் […]

கவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’

This entry is part 4 of 14 in the series 18 ஜூன் 2017

(கவிஞர் கடங்கநேரியானின்,’யாவும் சமீபித்திருக்கிறது’, கவிதைத் தொகுப்பை முன்வைத்து) ஒரு கவிதையை வாசிக்கிற போது எழும் உணர்வும் அனுபவமும் அக்கவிதை நம்மிடத்தில் கடத்தும் விஷயம், கடத்தும் விதம், அதற்கு முன்னரோ அப்பொழுதோ அக்கவிதையின் பொருளோடு நமக்கிருக்கும் தனித்த தொடர்பு ஆகியவையின் பாற்பட்டது. இதில் எழுதியவர் குறித்த எவ்வித அறிதலும் அவசியமில்லை தான்.பிரதி மட்டுமே போதுமானது. பொட்டலம் மடித்து வந்த தாளின் மூளையில் எழுதியவரின் பெயரில்லாத இரண்டு வரிகள் தூங்கவிடாமல் செய்து விடுவதுண்டு. நம் காலத்திற்கு முந்தைய படைப்பாளிகளின் படைப்புகளை […]

‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா

This entry is part 7 of 13 in the series 18 டிசம்பர் 2016

வரும்24-12-2016 அன்று என்னுடைய கவிதை நூல்,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா சென்னை இக்ஸா மையத்தில் நடைபெறுகிறது. தங்களின் வருகை என்னைப் பெருமைப் படுத்தும்.  

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016

This entry is part 11 of 19 in the series 20 நவம்பர் 2016

அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமையாக இருந்த எழுத்தாளர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016 சிறப்பாக நடைபெற உள்ளது.அழைப்பினை அறிவிப்புகள் பகுதிக்கு இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக் குழு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016

மிருகக்காட்சி சாலைக்குப் போவது

This entry is part 12 of 19 in the series 20 நவம்பர் 2016

விலங்குகளைப் பார்ப்பதற்கென்று மெனக்கெட்டு மிருகக்காட்சி சாலைக்குப் போவதென்பதே ஒரு பிரத்யேகமான மனோபாவம் அநேகமாய் மனிதர்களைப் பார்ப்பதற்கு மறுதலிக்கப்பட்ட சமூகத்தில் ஐம்பது ரூபாய் நுழைவுச் சீட்டில் அனுமதிக்கப் படுகிறோம் மிருகங்களைப் பார்க்க உள்நுழைந்து இடப்புறம் திரும்பியதும் வண்ணப் பறவைகள் தமக்குள் குறைபட்டுக் கொண்டிருக்கின்றன மனிதர்கள் தம்மை உற்றுநோக்கல் குறித்து வலைபின்னப்பட்ட ஜீப்பில் ஏறி வலம் வரத் தொடங்குகிறோம் நம்மின் வருகையறியா மிருகங்கள் சந்தோஷமாய் இருக்கின்றன வெகுதொலைவில் விபத்தென அருகில் வரும் ஒன்றிரண்டு முறைத்துப் பார்த்துவிட்டு இடம் பெயர்கின்றன தூரத்துக்கு […]

கவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)

This entry is part 13 of 19 in the series 20 நவம்பர் 2016

தமிழ்மணவாளன் இலக்கிய வகைமைகளில் கவிதை தனித்துவமானது; முதன்மையானதும் கூட.ஏனெனில் கவிதையில் தான் மொழிக்குள் மொழி இயங்குகிறது. சொற்களுக்குள் சொற்கள் பிரத்யேகமான அர்த்தத்தைப் பெறுகின்றன. தனக்கு முன்னும் பின்னுமான சொல்லோடு இணைந்தோ அல்லது விலகியோ முற்றிலும் புதிதான பொருளடர்த்தியைக் கொள்கின்றன.வாசிப்பு மனத்தின் அனுபவ வெளியில் பெரும்பயணத்தை நிகழ்த்துகின்றன. நுட்பமான பகுதிகளில் மெல்ல சென்றடைந்து ரசவாதம் செய்கின்றன.நல்ல இசையைக் கேட்கும் போது எவ்விதம் மனசு பித்து நிலையினை அடைகிறதோ அது போலவே நல்ல கவிதையை வாசிக்கிற போதும் நிகழ்கிறதெனலாம்.இன்னும் சொல்லப்போனால், […]

தமிழ்மணவாளன் கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 13 நவம்பர் 2016

1 துயரத்தையப் பறவையின் காலில் கட்டிப் பறக்க விட்டேன் கண் மறையும் தூரம் கடந்தவுடன் ஆசுவாமாகிறேன் அனிச்சையாய் எனக்குத் தெரியும் உயரப் பறக்கையில் உதறிவிடும் அதை துயரத்தைப் பறக்க விடக்கூடாதென இப்போது தான் புரிகிறது நம் காலடியில் புதைத்து விட வேண்டும் பறவை சுமந்து போய் போட்ட இடத்தில் நாகவிருட்சமாகி கண்காணா இடமிருந்து காவு கேட்கிறது யாவற்றையும் 2 நேற்றைய திரைக்கதை கலந்துரையாடலில் கம்பன் ஏனோ அதிகம் இருந்தான் முடிந்த முன்னிரவில் குளத்தூர் தாண்டி வேகமாய் வந்தபோது […]

மனிதம் உயிர்த்த பெரு மழை

This entry is part 7 of 19 in the series 30 அக்டோபர் 2016

முகுளத்தில் அடிபட்டு மூர்ச்சையான குழந்தை மூன்று நாள் கழித்து கண் விழிக்கும் வேளை கவலையுற்று நிற்கும் தாயென வெள்ளம் வடிந்த இரண்டாம் நாள் சென்னையைக் கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தது அந்திப்பொழுது இனி இழப்பதற்கொன்று மில்லை உயிரைத் தவிரவென பிழைத்திருந்தோர் நினைத்திருந்த வெறுமையின் நசநசப்பில் உப்புக்காற்று சுயமிழந்தது இறுதி மூச்சு வெளியேறும் கணத்தின் நாசியென செயலிழக்கும் மனத்தின் அச்சம் அகலாது துக்கத்தின் விசாரிப்புகளில் விக்கித்துப் போன இரவில் மனிதம் மெல்ல உதிக்கத் தொடங்கியது ஒளியை வழங்கும் சூரியனாக கரங்கள் […]

கவி நுகர் பொழுது-12 பொம்பூர் குமரேசன் ( பொம்பூர் குமரேசனின்,’அப்பாவின் வேட்டி’, கவிதை நூலினை முன்வைத்து)

This entry is part 18 of 19 in the series 30 அக்டோபர் 2016

  பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொம்பூர் குமரேசனின்,’ அப்பாவின் வேட்டி’, கவிதைத் தொகுப்பு குறித்து உரையாற்றினேன். அப்பேச்சின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம். ‘நறுமுகை’, சார்பாக ஜெ. ராதாகிருஷ்ணன் நூலினைப் பதிப்பித்திருக்கிறார்.   ’அப்பாவின் வேட்டி’, என்கிற தலைப்பே ஒரு அணுக்கத்தை உண்டு பண்ணுகிறது. ஒப்பீட்டளவில் அம்மாவின் அன்பைப் போல, பொதுவாக அப்பாவின் அன்பு சிலாகித்துப் பேசப்படுவதில்லை. அது ஒரு மழை மறைவுப் பிரதேசம் போல. அம்மாவின் அன்பெனும் பெருமலையின் மறைவில் […]

தமிழ்மணவாளன் கவிதைகள்

This entry is part 2 of 15 in the series 23 அக்டோபர் 2016

      1.ரயில்வே ட்ராக் அருகே அறை எடுத்துத் தங்குவது ஏசி குளிர் தாளாமல் கதவைத் திறந்து வெளியில் வர மதுரையிலிருந்து ஒரு பிரமாண்டமான சாரைப்பாம்பு ஊறும்   இந்நேரத்திலும் என்னைப் பார்த்து புன்னகைக்க ஒருவன் நிற்கிறான் கதவோரம்.   இரண்டாயிரம் பேர் இருப்பரா?   மக்கள் போகிறார்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாய்.   இனி அவன் முகத்தில் முழிக்கவே கூடாதென கண்ணில் நீர்நிரப்பி எவளேனும் படுத்திருக்கக் கூடும் மிடில் பர்த்தில்   உயிர்பிழைக்கும் […]