கால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்

புதுக்கவிதையில் சமுதாய சிந்தனைகளைத் தூண்டிய தொகுப்பு “நெருஞ்சி”. இதன் ஆசிரியர் கால காலன். எல்லாந்தந்த தாய்க்கும் தந்தைக்கும் படைத்திருக்கும் இவர் தனது சொந்தப் பதிப்பகத்திலேயே இதை வெளியிட்டிருக்கிறார். விலை ரூ 75. 75 கவிதை கொண்ட இந்த கவிதைத் தொகுப்பு சமுதாயத்தின்…

”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.

”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” என்ற நூல் படித்தேன். நாம் சாதாரணமாக சென்று அவசரம் அவசரமாக ஒரு சரித்திரச் சின்னத்தைப் பார்த்து வருகிறோம். அதற்கு எல்லாம் இப்படி ஒரு வழிகாட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே எனத் தோன்றச் செய்த…

சந்திரலேகா அல்லது நடனம்..

தன் கோப்பையின் தேநீரை அவள் துளித்துளியாய்ப் பருகிக் கொண்டிருந்தாள். யாருடன் அருந்துவது., யாருக்குப் பகிர்வது., யாருடையதை எடுத்துக் கொள்வது எனத் தீர்மானித்தபடியே. சூடாகத் தேநீரும் பாலும் கலக்கும் போது ஆவிகள் நடனமிடுவது பிடிக்கும் அவளுக்கு. இயல்பாய் இருக்கும் அவள் நடனத்தைப் போல…

அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..

நல்லா குண்டாயிட்டே நீ என தோழிகள் கலாய்க்கிறாங்களா.. எந்தக் கடையில அரிசி வாங்குறேன்னு யாரோ ரெண்டு பேர் எதுத்தாப்புல பேசிக்கிட்டே போறாங்களா.. விளம்பரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் சிக் சிக்னு சிக்கன் மாதிரி சுத்துறாங்களா... சே இந்த ஹிந்தி ஹீரோயின் எல்லாம்…

அசூயை

பின்னெப்போதும் இருந்திருக்கவில்லை அந்த உணர்வு. புரவி பிடறி சிலிர்க்க ஓடியபோதும் வியர்த்திருந்தது. காணாத ஒன்றைக் கண்டதாய் பொய்ப்பித்தது கண். நினைவுகள் தப்பிய நேரத்தில் வேர் பிடித்திருந்தது பயம். கண்ணேறு., காத்து கருப்பு., மோஹினி எல்லாம் சுத்தினபடி. ஒரு ஆழப்பாயும் வெறுப்பு கத்தியில்லாமல்…

குளம்

பற்களான படிக்கட்டுக்களோடு பாசம் புதையக் காத்திருந்தது குளம். தட்டுச் சுற்றான வேட்டியுடன் தலை குப்புறப் பார்த்தபடி இருந்தான் அவன். விரால் மீன்களாய் விழுந்து துள்ளியபடி இருந்தார்கள் சிறுவர்கள். இரவுக்குள் ஒளிய நினைத்து கருக்கத் துவங்கியது தண்ணீர். மொழியற்றவனைப் பார்த்து நாவசைத்துப் பாடத்துவங்கியது…

மூளையும் நாவும்

வார்த்தைகளைக் கோர்த்துச் சித்திரங்கள் வரைவது பிடித்தமானது அவளுக்கு. வரையும்போதே வண்ணங்கள் சிதறி விழுகின்றன மண்ணாய் அங்குமிங்கும். மூளை மூடாமல் திறந்து கிடக்கிறது மண்டையோட்டுக்கான வண்ணம் போதாமல். கார்டெக்ஸும் மெடுல்லாக்களும் பற்களாக மாறி துண்டாக்குகின்றன் பேசத்தெரியாத நாக்கை. வரைந்து முடித்தபின் மூளையும் நாவும்…

இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்

என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் மொழிபெயர்ப்பில் அந்த மொழி சிதைவுறாமல்., சொல்லவந்த கருத்துக்கள் பிழைபடாமல் சொல்வது கடினம். ஒரு மொழிபெயர்ப்பாளன் வாசகர்க்கும், அந்த நூலை…

மழை

புலிக்குட்டிகளாய் உருண்டு புரள்கிறது மாநகரச் சாலைப்பள்ளத்தில் மழைநீர். குளித்த எருமைகளாய் அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில் கட்டிக்கிடக்கின்றன வண்டிகள். சிறிதாய்ப் பெய்த மழையில் மிதக்கும் நகரம் ஆகிறது மாநகரம். கார் வைத்திருப்பவர்களைக் கப்பல் வைத்திருப்பவர்களாகவும்., வண்டி வைத்திருப்பவர்களை ஓடக்காரர்களாகவும் ஆக்குகிறது மழை. அடித்து அடித்து…

ஓய்வும் பயணமும்.

நடைப்பாதைப் பயணத்தில் வெள்ளையடிக்கப்பட்ட மதகடியில் ஓய்ந்தமர்ந்தேன். கரண்டுக் கம்பங்களில் காக்கையும் மதகடி நீரில் கொக்கும் வயல் வரப்புக்களில் நாரையும் நெத்திலிகள் நெளிந்தோட குட்டிச் சோலையாய் விளைந்து கிடந்தது வாய்க்கால். தேன்சிட்டும் மைனாவும் ரெட்டை வால் குருவியும் குயிலோடு போட்டியிட்டு தட்டாரப்பூச்சிகளும் வண்ணாத்திப்…