மாணவத் தற்கொலைகள் தினப்படி செய்தியாகி விட்ட நிலையில் கேள்விப்படும் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் ஆசிரியையை கத்தியால் பலமுறைக் குத்து கொன்ற சம்பவம். யார் காரணம் ? யாரின் பங்கு அதிகம்? பள்ளி நிர்வாகமா, பெற்றோரா, ஆசிரியரா ? என்று திரும்பத் திரும்ப பலராலும் பேசப்பட்டு வரும் விஷயம். மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த செல்ல ஆண் பிள்ளையாக தினம் நூறு ரூபாய் கையில் எடுத்து வரும் ஒரு […]
நாலு நாளாக நிலை கொள்ளாமல் தவித்தார் சங்கரன். மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒன்றுமில்லை. வழக்கமான விசாரிப்புகளுக்காக மகளிடம் தொலைபேசியில் பேசிய போது தொலைபேசியை எடுத்துப் பேசிய பேரனின் குரல், தாத்தா எப்படி இருக்கே என்ற அந்த மழலைக் குரல் தொடர்ந்து அவர் காதில் ரீங்காரமிட்டு ஈர்த்தது. பேரனைப் பற்றி பேசிப் பேசி வாய் ஓயவில்லை. போய் பார்த்து விடுவது என்று தீர்மானித்தார் சங்கரன். பேரனை பார்த்து விட்டுத் தான் மறு வேலை. மனைவி பாரு தயங்கினாள். இது […]
ஜே. ஜே. எனும் தமிழ் படத்தில் நாயகன் நாயகி கைகளில் தவழும் ஒரு நாவல், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் அதிகம் பேசப்பட்ட நாவல், காலச்சுவட்டின் கிளாசிக் வரிசையில் வருகிற நாவல் என்பது தாண்டி நாவல் பற்றிய எந்த விமர்சனக் குறிப்பும் தெரிந்து கொள்ளாமல் வாசிக்க ஆரம்பிக்க, எடுத்த எடுப்பிலேயே சுவாரஸ்யத்துக்குள் இட்டுச் சென்று பிரமிக்க வைத்து சிந்தனையை தூண்டியது என்று சொன்னால் மிகை இல்லை. ஆனால் இப்படி எல்லாம் சொல்லிவிட மாத்திரம் நாவலின் களம் ஒரு […]